மீனே மீனே மீனம்மா என் விழியைத்தொட்டது நீயம்மா!!
விதவிதமான பல வண்ணங்களில், சிறிதும் பெரிதுமாக நம் கண்மீன்களைக் கவர்ந்து அங்கும் இங்குமாக சுழலவைத்தது, சிகாகோ நகரின் டவுன்டவுனில் நான் கண்ட அக்குவேரியம்.
அங்கு வரிசையில் காத்திருக்கும் நேரத்தில் போரடிக்காமலிருக்க பெரியபெரிய ட்ரம்கள் ஒலிக்க ட்ராகன் ஷோ ஒன்றை நடத்தி, நாம், 'புரிச்..புரிச்!' என்று முணுமுணுக்காதபடி பார்த்துக்கொண்டார்கள். கொழுத்தும் பன்னிரெண்டு மணி வெயிலில் உச்சி காயவில்லை,
பாதங்கள் சுடவில்லை. "ஏய்! அதான் தலையில் ஸ்கார்ப் கட்டியிருந்தாய், காலில் ஷூ போட்டிருந்தாயே!" 'சேரி..சேரி! அடங்கு! வெயில் இதமாக இருந்தது என்று சொல்ல வந்தேன்.' என்று மனசாட்சியை அடக்கிவிட்டு வரிசையில் நகர்ந்து உள்ளே நுழைந்தோம்.
விதவிதமான பல வண்ணங்களில், சிறிதும் பெரிதுமாக நம் கண்மீன்களைக் கவர்ந்து அங்கும் இங்குமாக சுழலவைத்தது, சிகாகோ நகரின் டவுன்டவுனில் நான் கண்ட அக்குவேரியம்.
அங்கு வரிசையில் காத்திருக்கும் நேரத்தில் போரடிக்காமலிருக்க பெரியபெரிய ட்ரம்கள் ஒலிக்க ட்ராகன் ஷோ ஒன்றை நடத்தி, நாம், 'புரிச்..புரிச்!' என்று முணுமுணுக்காதபடி பார்த்துக்கொண்டார்கள். கொழுத்தும் பன்னிரெண்டு மணி வெயிலில் உச்சி காயவில்லை,
பாதங்கள் சுடவில்லை. "ஏய்! அதான் தலையில் ஸ்கார்ப் கட்டியிருந்தாய், காலில் ஷூ போட்டிருந்தாயே!" 'சேரி..சேரி! அடங்கு! வெயில் இதமாக இருந்தது என்று சொல்ல வந்தேன்.' என்று மனசாட்சியை அடக்கிவிட்டு வரிசையில் நகர்ந்து உள்ளே நுழைந்தோம்.
உள்ளே நுழைந்து வலம் வர ஆரம்பித்தோம். 'ஏன் இடம் வர ஆரம்பிக்கக் கூடாதா?' 'ஏய்! மறுபடி அடங்கு!!'
உள்ளே நுழைந்ததும்.......
"வாவ்!" சினிமாவில் வருவது மாதிரி ஏதோ ஒரு மந்திர மோதிரத்தை விரலில் அணிந்து கொண்டவுடன் சமுத்திரத்தின் அடியில் எவ்வித சிரமுமில்லாமல் போய் அங்குள்ள காட்சிகளைக் காண்பது போல் உணர்ந்தேன். உங்களையும் அழைத்துச் செல்லவா? இதோ! மோதிரம்! அணிந்து கொள்ளுங்கள். என்னோடு வாருங்கள்.
கழுத்தில் என் ப்ளாஷ் லைட் அடித்தும் அசராத மீனினம்!
"வாவ்!" சினிமாவில் வருவது மாதிரி ஏதோ ஒரு மந்திர மோதிரத்தை விரலில் அணிந்து கொண்டவுடன் சமுத்திரத்தின் அடியில் எவ்வித சிரமுமில்லாமல் போய் அங்குள்ள காட்சிகளைக் காண்பது போல் உணர்ந்தேன். உங்களையும் அழைத்துச் செல்லவா? இதோ! மோதிரம்! அணிந்து கொள்ளுங்கள். என்னோடு வாருங்கள்.
கழுத்தில் என் ப்ளாஷ் லைட் அடித்தும் அசராத மீனினம்!
ஜாஸ் படத்தில் நாம் பார்த்து மிரண்ட சுறாக்கள்!! இங்கு சின்ன சைசில்!
அதே சுறாக்கள்...குட்டி குட்டியாக, சிறுவர் சிறுமிகளாக செல்லமாக வலம் வருகின்றன.
பார்த்தேயிராத ஒருவகை நீர்வாழ் ஜந்து!
கடல் தாவரங்களிடையே உலா வரும் மீன்கள்!
அதே! அதே!
எந்த விட்டலாச்சார்யா அல்லது தோட்டா தரணி கடலுக்குள் இத்தனை அழகான குகையை அமைத்துக் கொடுத்தாரோ? மீன்கள் உல்லாசமாக நீந்திவருகின்றன.
சின்ன மீன்களெல்லாம் மேலே நீந்த, பெரிய மீன் நீரின் ஆழத்தில் நீந்துவது அவைகளின் பாதுகாப்புக்கா? அல்லது தனது பகலுணவுக்கா?
குச்சி குச்சி ராக்கம்மா!
இது அக்கல்லின் மேல் வழிந்து வழிந்து நகர்வது பார்க்க நம் கைகளில் வழிவது போலிருக்கும். இதே போல் ஒரு பந்து கூட இருக்கும்.
மீன்களோடு ஆமையும் புகுந்து விளையாடுகிறது.
இரண்டு ராட்சத நண்டுகள் அசையாமல் வெகுநேரம் இருந்தன. பொம்மையோ என்று எண்ணி
ரங்ஸை கண்ணாடிக்குப் பின் நிற்க வைத்து எடுத்தது. காரணமில்லாமல் எடுப்பேனா? அவரது ஸோடியாக் சைன் கான்சர்! அதான்.
அம்மாடீ!!!திடீரென்று அவைகள் இரண்டும் நகர ஆரம்பித்த போதுதான் உயிருள்ளவைகள் என்று புரிந்தது.
கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு என்று அறிஞர் அண்ணா சொன்னதைக் கேட்டிருக்குமோ? எப்படி தீட்டியிருக்கிறது பாருங்கள்!!
நீரின் 'உள்ளே வெளியே'
சுவாரஸ்யமான பகுதி இதுதான். மீன்களுக்கு பகலுணவு கொடுக்கவேண்டாமா? அவைகள் பசித்திருக்குமே! நீர்மூழ்கி ஜாக்கெட்டுகள் அணிந்த பெண் ஒருவர் அந்த பிரம்மாண்டமான தொட்டிக்குள் மூழ்கி தன் கையில் மாட்டியுள்ள பையிலிருந்து இறந்த மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து நீட்ட ஆவலுடன் வளைந்து நெழிந்து வந்து கவ்விக்கொண்டு போகும் அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.
கையிலிருக்கும் மீனை லாவகமாக கவ்விக் கொண்டு போகிறது பசித்த ஒரு மீன்.
உணவை வாங்கிக்கொண்டு போகும் மீனை வாஞ்சையோடு தடவிக்கொடுக்கிறார்.
எங்கெங்கு நோக்கினும் மீன்கள்தான். நம் காலுக்கடியிலும் மீன்கள்!!
தலைக்கு மேலும் மீன்கள்!!
பாறைகளுக்கிடையே மதிய ஓய்வெடுக்கும் நீரினங்கள்.
வண்ண வண்ண மீன்கள் காணக்காண திகட்டாது.
இறுதியாக மனிதனோடு சகஜமாக உறவாடும் டால்பின்கள். அவைகள் செய்யும் விளையாட்டுக்கள்!!
பயிற்சியாளரின் விசிலுக்கு பதில் விசில் கொடுக்கிறது. அவர் கை சொடுக்கியபடியெல்லாம் சுழல்கிறது.
தண்ணீரிலிருந்து தாவி மறுபடி தண்ணீருக்குள் பாய்ந்து வரும் போது என் காமிராவுக்குள் பிடிபடாத வேகம். எனவேதான் தண்ணீர் மட்டும் தெரிகிறது.
இனி நீங்கள் உங்கள் கையிலிருக்கும் மோதிரத்தைக் கழற்றி விட்டால் சமுத்திரத்திலிருந்து வெளியே வந்து நமது சொந்த இடமான நிலத்தில் நிற்பீர்கள்!! பத்திரமாக கூட்டிப்போய் பத்திரமாக வெளியே கொண்டுவந்து விட்டேனா?