Monday, June 29, 2009

என் கேள்விகளுக்கு என் பதில்கள்!! 32 கேள்விகள்.

ஏதானாலும் என்னை இழுத்துவிடுவது அன்பு சீனாவுக்கு மிகவும் பிடிக்கும். சமீப சந்திப்பில் புதுகைத் தென்றலுக்கும் சகோதர பாசத்தில் சகாதேவனுக்கும் என் ஞாபகம் வந்துவிட்டது. மூவரின் அன்பு கிடிக்கிப்பிடியில் இடுங்கிவிட்டேன். பிடி அன்புப் பிடியாதலால் விலக்க மனமில்லை. சொந்த வேலையில் சிறிது நாட்கள் பிஸியாக இருந்ததால் கணினியும் என்னைப்பார்த்து, "னீ உன் வேலையை கவனி!" என்று சொல்லிவிட்டது.

ஹப்பா! இன்றுதான் நேரம் வாய்த்தது. அதுவும் ஒரு மணி நேரம்தான். 'என்ன? நேரப்படிதான் எல்லாம் செய்வாயோ?' என்றது மனசாட்சி..தன் செவ்வாய் திறந்து. ஹி..ஹி..ச்சும்மா எல்லாம் ஒரு பில்டப்தான்.
வாருங்கள் கேள்விகளுக்குப் போவோம். கேள்வியை நீ கேட்கிறாயா..அல்லது நான் கேட்கவா?
'மடச்சி! ரெண்டுமே நீதாண்டி!' என்றது மறுபடியும் உட்குரல். சேரி...சேரீ..!


1. உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அந்தக்காலத்தில் நாமிருவர் நமக்கிருவர் தத்துவமெல்லாம் கிடையாது. முதல் ரெண்டு ஆண்பிள்ளைகளுக்கும் அப்பா தாத்தா, அம்மா தாத்தா பெயர்கள்...அடுத்து ரெண்டு பெண்பிள்ளைகளுக்கும் அப்பா ஆச்சி, அம்மா ஆச்சி பெயர்களை எழுதி வாங்கிக் கொண்டேதான் பிறப்பார்கள். அடுத்தடுத்து வரும் பிள்ளைகளுக்கு தெய்வங்களின் பெயர்கள். நம் நாட்டில் சாமி பேர்களுக்கா பஞ்சம்? அந்த வகையில் மூன்றாவதாகப் பிறந்த எனக்கு அம்மா ஊரான ஆழ்வார்குறிச்சியில்(சிவசைலம்) கோயில் கொண்டிருக்கும் பரம கல்யாணி அம்மனின் பேரைத்தான் நான் கொண்டிருக்கிறேன். ரொம்பப் பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்போது?
மூன்று வருடங்கள் முன்பு அருமை சின்னக்காவின் திடீர் மறைவின் போது. இப்போதும் இரவில் கண்மூடினால் 'ஹ..லோ!' என்று அழைத்து கண்களுக்குள் வந்து நிற்பாள்.

3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என்னக்குப் பிடிக்காம..? தலையெழுத்து எப்படியோ? கையெழுத்து நல்லாவே இருக்கும். கான்வெண்டில் ஹாண்ட்ரைட்டிங் என்று ஆங்கிலமும் தமிழும் நோட்டு நோட்டாக கை ஒடிய எழுதியது வேறு எதற்காம்?

4. பிடித்த மதிய உணவு என்ன?
பூண்டு போட்டு வத்தக் குழம்பு, சௌசௌ கூட்டு, தயிர்சாதம் பழங்கறி,சுண்டக்கீரை + மாம்பழம்!!ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

5. நீங்கள் வேறு யாருடனும் உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
மாட்டேன். அலைவரிசை ஒத்துப் போகுதா என்று கொஞ்சம் நிதானிப்பேன். காரணம் நட்பல்லவா? அது வைரம் மாதிரி பழுதோ தோஷமோ இல்லாமலிருக்கணும். என்ன நாஞ் சொல்றது?

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் முழங்கால் நனைய நிற்கத்தான் பிடிக்கும். அருவி? ஆஹா!!உச்சரிக்கும் போதே முதுகில் தொம்தொம் என்று விழுகிறதே!குற்றாலம், மணிமுத்தாறு திற்பரப்பு இந்த அருவிகளில் எல்லாம் குளிக்கப் பிடிக்கும். சீசனை மிஸ் பண்ணுகிறேனே!!

7. முதலில் ஒருவரை பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகத்தை. பின் கண்களை அவை சொல்லிவிடும் அவரது நடைஉடை பாவனைகளை.

8.உங்க கிட்டே உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காதது என்ன?
யாருக்கும் உதவி என்றால் ஓடுவது. பேசவேண்டிய நேரத்தில் பேசாமல், பிறரை எந்தவிதத்திலும் காயப்படுத்திவிடுமோ என்று நான் காக்கும் மௌனம்.

9. உங்க சரிபாதி கிட்டே உங்களுக்கு பிடித்த விஷயம் எது. பிடிக்காத விஷயம் எது?
அவர் சேர்த்து வைத்திருக்கும் நண்பர்கள் கூட்டம். வெளியே கிளம்பியதும் பர்ஸை சாவியை தேடுவது.

10. யார் பக்கத்தில் இல்லாததற்கு வருந்துகிறீர்கள்?
என் அம்மாதான்!!

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
க்ரீம் கலரில் ஆஷ் கலரில் பிரிண்ட் போட்ட புடவை. அஃகோர்ஸ்! மேட்சிங் ப்ளவுஸ்.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க?
மானிட்டரைப் பார்த்து தட்டிக் கொண்டிருக்கிறேன். இன்று வாங்கிய எம்.எல். வசந்தகுமாரியின் சினிமா பாடல்கள் அடங்கிய சிடி. பாடல், 'பத்துவிரல் மோதிரம் எத்தனை ப்ராகாசம்...'

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பச்சை நிறமே பச்சை நிறமே!!!

14. உங்களுக்கு பிடித்த மணம்
பன்னீர் ரோசாவின் நறுமணம். ஸ்ப்ரே செய்யும் பாட்டிலில் பன்னீர் கொஞ்சம் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறேன். தேவைப்படும் போது முகத்தில் ஸ்ப்ரே செய்து புத்துணர்ச்சி பெறுகிறேன்.

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? அவர்களை ஏன் பிடிக்கும்? அழைக்க காரணம் என்ன?
யாரைத்தான் சொல்லுவதோ..? அநேகமாக எனக்குத்தெரிந்த பதிவர்கள் அனைவரும் பதில் சொல்லிவிட்டார்கள். திரும்ப அழைத்தால், சத்யராஜ் மாதிரி இருந்த இடத்திலிருந்தே அடிப்பார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் பாத்து நான் அழைப்பது,
ஸ்க்கிரிபிளிங் வித்யா
செல்வி சங்கர்
தமிழ்பிரியன்
இவர்களையெல்லாம் எனக்குப் பிடிக்கும். அம்புட்டுத்தான்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் பிடித்த பதிவு எது?
சீனா அவர்கள பின்னூட்டங்கள் இட்டே பேர் வாங்கியவர்.
புதுகைத் தென்றல் ஸேம் ப்ளட்.
சகாதேவன் நல்ல தகவல்களைத் தேடித்தேடி பொறுக்கியெடுத்து பதிபவர்.

17. உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
ஃப்ரீசெல், ஸ்க்ராபிள், கார்ட்ஸ்.

18.நீங்கள் கண்ணாடி அணிபவரா?
கழற்றாமல் இருப்பவர். (கேப்பீகளே! தூங்கும் போதும் குளிக்கும் போதும் மட்டும் கழற்றுபவர்)

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சிரித்து சிரித்து கண்கள் பனித்து வயிறு வலிக்கும் படியான சுத்தமான வசனங்கள் உள்ள படங்கள்(கலாட்டா கல்யாணம், மற்றும் க்ரேஸி மோகன் வசனமெழுதிய படங்கள். இவர் படங்களில் வசனங்களை ஃபாலோ செய்யாவிட்டால் சிரிக்க முடியாது.)

20. கடைசியாக பார்த்த படம் எது?
அபியும் நானும். மனதை வருடிச் சென்ற படம்.

21. உங்களுக்கு பிடித்த பருவ காலம் எது?
தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலம்.

22. இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் எது?
நான் ஒரு கூட்டுப் புழுங்க. புத்தகப் புழு இல்லை. கேட்டதற்காக...இன்று வந்த மங்கையர்மலர்.

23. உங்கள் டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
நினைக்கும் போதெல்லாம்.

24. உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
மெல்லிய குழலோசை. ஒரு தகர துண்டை சுவற்றில் இழுக்கும் போது வரும் சத்தம். ஐயோ! உடம்பெல்லாம் அதிருமில்ல.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா, கனடா.

26.உங்களுக்கு தனித்திறமை ஏதாவது இருக்கிறதா?
கொஞ்சம் வரைவேன், கொஞ்சம் பெயிண்ட் செய்வேன், கொஞ்சம் வீணை வாசிப்பேன். ஆனா முழுசா ஒண்ணுமேயில்லையே!?

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியத ஒரு விஷயம்
நாட்டு நடப்பு

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்
வெளியேயும் அதுதானிருக்கு. அது ஒரு முரட்டு சாத்தான்.

29. பிடித்த சுற்றுலா தலம்.
கொடைக்கானல். மிதமான குளிர்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
காலம் கடந்த கேள்வி. இப்போது போல் கடைசி வரை இருந்தாலே போதும்.

31. மனைவி/கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்
ஷாப்பிங்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
கிடைத்ததில் திருப்தி, நன்றே வரினும் தீதே வரினும் இரண்டையும் ஒன்றாகப் பாவித்து மன அமைதியோடு வாழ்வதுதான் "வாழ்வு"

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...