இப்ப எனக்கொரு உண்மை புரிஞ்சாகணும்...ஆமா!
இன்னா பிரியணும்? சொல்லுமே! பிரியவெக்கரேன்.
சில விஷயங்களை இந்த சினிமா டைரக்டர்கள் ஏன் கவனத்தில் கொள்வதில்லை? இல்லை, உதவி டைரக்டர்களும் எடுத்து சொல்வதில்லை...பயமா?
கண்ணை உறுத்தும் இம்மாதிரியான சில சமாச்சாரங்களை பகுந்துக்கிறேன்.
அறுபதுகளிலிருந்து இன்றுவரை மனதில் உறுத்திக் கொண்டும் ஓடிக்கொண்டுமிருக்கிறது.
காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையா சிலித்துக்குவாரே...."
என் பணமென்ன? என் அந்தஸ்தென்ன? என்று. அப்படிப் பேசும் போது அவர் தன் பிள்ளைகளுடன் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அவ்வளவு
அந்தஸ்து உள்ளவரது சாப்பாட்டு மேஜையில் விதவிதமான பாத்திரங்களில் உணவு பாதார்த்தங்கள் இருக்குமா? இருக்காது. ஷூட்டிங்க்குக்காக ஏதோ ஒரு ஹோட்டலில் வாங்கி வந்த பெரிய டிபன் கேரியர் பாத்திரங்களே மேஜை மேல் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். அது, அப்போதே என் கண்களை உறுத்தியது.
உங்கள் கண்களை...?
அடுத்து.....வீடுகள், அது பங்களாவானாலும் சரி நடுத்தர வர்க்கத்து வீடானாலும் சரி குடிசையானாலும் சரி, எது வேணானாலும் நுழையலாம் என்பது போல் திறந்தேயிருக்கும்.
வில்லன்கள் தடாலடியாக நுழைந்து கொலை செய்யவோ அல்லது தனியேயிருக்கும் ஹிரோயினை நாசம் செய்யவோ ஏதுவாயிருக்கும்.
இருவர் பேசும் ரகசியங்களை ஒட்டுக்கேக்கவும் இன்னும் எதுஎதுக்கோ வாக்காயிருக்கும். காலிங்பெல் என்பதே காலாவதியகியிருக்கும்.
குறைந்த பட்சம் நான்கு பேர் உள்ள வீடாயிருக்கும். ஆனால் நார்மலாகவோ அல்லது கொடுமைக்கார மாமியாராலோ, கிணற்றடியில் கழுவ பரத்திக் கிடக்கும்
பாத்திரங்களோ?...
நம்ம கடோத்கஜன் சாப்பிட்டு முடித்த பாத்திரங்கள் போல் அண்டா குண்டாவாக இருக்கும். கொஞ்சம் லாஜிக்கை யோசித்துப் பார்த்தால் அது ஓங்கி உதைத்திருக்காது?
காதலர் இருவர் ரெஸ்டொரண்ட்க்குப் போவார்கள். ஒரு இட்லி வடையோ, சட்னி சாம்பாரோ.... ஒரு ஃபலூடாவோ அட! ஒரு சாதாரண ஐஸ்கிரீமோ ஆர்டர் செய்வார்களோ என்று பார்த்தால்...பிஸ்சாத்து,
' கூல்ட்ரிங்!' என்று கேட்பார்கள். ஃபாண்டாவோ பெப்ஸியோ பாட்டிலை உடைத்து வைக்கோலைப் போட்டுத் தருவான் சர்வர்.
அடப்பாவிகளா! இதை எந்த பெட்டிக்கடையிலும் கேட்டாலும் தருவான்களே!!
சரி வீடுகளுக்குப் போனால் உபசாரம் என்ற பேரில் காலி தம்ளாரையோ கப் ன் சாசரையோ காபி என்று நீட்டுவார்கள். அதை சிப்பிவிட்டு எடுக்கும் போது
உதடு காய்ந்தவாறு இருக்கும், தொண்டையில்
ட்ரக் இறங்கிய சுவடே தெரியாது.அட்லீஸ்ட் தண்ணீரையாவது ரொப்பிக் கொடுக்கக் கூடாதா?
ஆபீஸில் வேலை செய்யும் நாயகனுக்கு நாயகியோ அல்லது வேலையாளோ ஐந்தடுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு கொண்டு போவார்கள். இது மாதிரி சமயங்களில் நாம் என்ன செய்வோம்?
கேரியரில் இருக்கும் குழம்பு, ரசம் இவைகள் சிந்தாமல் மெதுவாக தூக்கி மேஜைமேல் வைப்போம். ஆனால்...இங்கோ? அனாயாசமாக சொய்ய்ய்ய்ய்ய்ன்னு தூக்கி மேஜைமேல்
'டங்' என்று வைக்கப்படும். 'டங்' என்றால் காலிப் பாத்திரம் என்று அர்த்தம். கேலிக்கூத்து என்றால் இதுதானோ?
படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் கோபித்துக்கொண்டோ....கெட்வுட் என்று சொல்லப் பட்டோ வீட்டைவிட்டு வெளியேறுகிறது என்று வைத்துக்கொள்வோம், ஒரு சின்ன சூட்கேஸ் அல்லது ஒரு ஒரு பை எடுத்து கட்டிலில் மேல் போட்டு பீரோவில் ஹங்கரில் தொங்கும் நாலு பாண்ட் சட்டையோ அல்லது நாலு புடவையோ(ஜாக்கெட் வேண்டாம் போல) அள்ளி திணித்துக்கொண்டு
ஜிங்ஜிங் என்று வெளியேறிவிடுவார்கள். மற்ற இன்னர் உடுப்புகள், பெஸ்ட் பிரஷ் மற்றும் கை செலவுக்குப் பணம் இதெல்லாம் பின்னாலேயே யாராவது கொண்டு வருவார்களோ?
வெளியூரிலிருந்து ரெண்டு மூணு லக்கேஜ்களோடு வருவார்கள். அவற்றைத் தூக்கி வரும் அழகைப் பாக்கணுமே!!! உள்ளே காற்றுதான் இருக்கும் போல. எவ்வளவு சுலபமாக எடுத்து வருவார்கள்!!!!டைரக்டர் கொஞ்சம் கவனம் செலுத்தி, கனமாக இருப்பது போல் தூக்கி வரச் சொல்லியிருக்கலாமில்ல? உதாரணம்
..."புதிய வானம் புதிய பூமி...", மலையாளக் கரையோரம் தலையாட்டும் குருவி..."இன்றைய இளம் தலைமுறை டைரக்டர்கள் இவற்றையயெல்லாம் பாத்து என்னைப் போல் நொந்து போயிருப்பர் போலும். இப்போது போலித்தனம் இல்லாமல் எல்லாம் இயல்பாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் வெளிவந்த
"சுப்ரமணியபுரம்" . எழுபதுகளை கவனத்தில் கொண்டு என்ன அழகாக உடைகள், பேச்சு, சுவற்றில் ஒட்டியிருக்கும் தங்கம் தியேட்டர் போஸ்டர், இடயில் சிறுவன் ஓட்டிச் செல்லும் மூணுசக்கர சைக்கிள், கதாநாயகி அணிந்திருக்கும் டாலர் செயின் என்று பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார்கள். படம் பாத்ததும் என் மனதில் இருந்த உறுத்தல்கள் எல்லாம் போயே போச்! சினிமா இனி இயல்பாயிருக்கும் என்ற நம்பிக்கையும் வந்தாச்!
சினிமா பத்திய ஒரு கேள்வி..... கேக்கலாமா?
1950-களிலிருந்து இன்று வரை படத்தின் டைட்டில்களில் தவறாமல் இடம் பெறும்....."டெக்னீஷியன்கள்" பெயர்கள்,
(திரை மறைவில் படம் நன்றாக ஓட இவர்களது பணி இன்றியமையாதது) குறைந்த பட்சம் மூன்று
(எனக்கு அவ்வளவுதான் தெரியும்) பேர்களைச் சொல்லமுடியுமா? இவர்களது பணியின் முக்கியத்துவம் இப்போதுதான் உணரப்படுகிறது. விருதுகளும் வழங்கப் படுகின்றன.
எனக்குத் தெரிந்ததை நாளை சொல்லவா?