Sunday, November 8, 2009

சித்துசிறுக்குன்னு ஒரு கொலு - இந்த வருடம்

இந்த வருட கொலுவும் சித்துசிறுக்குத்தான், அதற்கான பதிவும் சித்துசிறுக்குத்தான். அன்னை ஆதிபராசக்தியின் உருவச் சிலையை பிரதானமாக வைத்து நான் அமைத்த இக்கொலு சித்துதானே? சிறுக்குதானே?

துர்காதேவியும் முக்கியமானதால் தேவி அவளும் வந்தமர்ந்து கொண்டாள்.

எல்லாமே ரொம்ப சிம்பிளாக இருந்துவிட்டால்....வரும் விருந்தினருக்கு வித்தியாசமாக ஏதாவது இருக்க வேண்டுமே? அதுக்காக ரூம் போட்டெல்லாம் யோசிக்கவில்லை. இருக்கும் ட்ராயிங் ரூமிலேயே
உக்கார்ந்து யோசித்ததில் கிடைத்ததுதான் இந்த ஐடியா! பழங்கள், காய்கறிகளில் கார்விங்க் செய்து விதவிதமான வடிவங்களை வடிவமைக்கும் கேட்டரிங் கம்பெனி ஒன்றிற்கு போன் செய்து ரெண்டு மூணு பீஸ்கள் செய்துதருவீர்களா என்று கேட்டதற்கு, ஒரு பீஸ் கூட செய்துதருவோம் என்ற பதில் கிடைத்தது. சும்மா விடலாமா?

மஞ்சள் பூசனிக்காயில் சரஸ்வதி.

தர்பூசனிப்பழத்தில் வெண்தாமரை, செய்துதரக் கேட்டேன்.



ஒரு நாள்தான் வாடாமல் இருக்குமென்பதால் நவராத்திரி ஒன்பதாவதுநாள் காலை வந்து சேர்ந்தது, பூசனிக்காயில் சரஸ்வதியும் தர்பூசனிக்கனியில் வெள்ளைத் தாமரையும் அழகாக வந்து சேர்ந்தது.


ஏடடுக்கி அலங்கரித்த அம்மன் பாதங்களில் கம்பீரமாக வீற்றிருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, எதிர்பார்த்த பாராட்டையும் வாங்கித்தந்தது.

துள்சியின் பதிவில் சிறப்புக் கவனத்தையும் பெற்றது.



எங்கம்மா மகராசி, என் வீட்டில் ஆட்சி செய்யும் ஆதிபராசக்தி!!!

தீப ஒளியில் அவளின் அருளாட்சி!

சங்கீத சௌபாக்யமே....என்றும் குன்றாத பெறும் பாக்யமே!!!!


பி.கு:
படங்கள் அப்லோடிங் பிரச்சனையால் சற்று தாமதமன பதிவு. பரவாயில்லைதானே?

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...