கொழும்பில் ஆச்சி பத்தோடு பதினொன்றாய் போய் இறங்கினார். முதலில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் உணர்ந்தவர், கணவரோடு இருப்பதால் கண்ணைத் திறந்து பசுஞ்சோலையில் இருப்பதாய் எண்ணிக் கொண்டார்.
அவர்கள் இருவரும் குடித்தனம் போட்ட இடம் சோணாத்தெரு என்ற இடம். அக்காலத்தில் சிலோனுக்கு வியாபர நிமித்தமாய் போகும் தென்னிந்தியர்கள், தனித்தனியாய் இருக்காமல் ஐந்தைந்து குடும்பமாய் ஒரே இடத்தில் வாழ பழகிக்கொண்டார்கள்.
காரணம் இடம் புதிது, மக்கள் புதிது.
ஒரு பாதுக்காப்பு கருதி இம்மாதிரி ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
ஐந்து குடும்பம் ஒரே பெரிய வீடு, பெரிய ஹால், தனித்தனி அறைகள், பொது சமையலறை.
சொந்த ஊரிலிருப்பதைவிட அயல் நாட்டில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஒருமைப்பாடு வெகு இயல்பாய் அமைந்துவிடும்.
அவ்வாறே ஐந்து குடும்பத்து ஆண்களும் காலையில் வேலைக்குச் சென்றவுடன் மனைவியர் எல்லோரும் தாங்கள் தாங்கள் சமைத்தவற்றை சமையலறையில் ஒன்றாகக் கூடி ஒருவருக்கொருவர் பரிமாறி உண்டு மகிழ்வர்.
கேட்கவே சுவாரஸ்யமாய் இருக்கிறதல்லவா...?
அடிப்படையில் சிங்களத்து மக்கள் மிகவும் நல்லவர்கள், அன்பானவர்கள். சுயநலமிக்க அரசியல்வாதிகளால் வேறுபட்டு கிடக்கிறார்கள் என்பது ஆச்சி அனுபவத்தில் உணர்ந்து சொன்னது.
ஒருநாள் இரவு நல்ல தூக்கத்தில், ’டொங்’ என்ற சத்தம் கேட்டு விழித்த ஆச்சி...தாத்தாவை எழுப்பி ஏதோ சத்தம் கேக்குது, என்னான்னு பாருங்கள் என்றிருக்கிறார். அயர்ந்த தூக்கத்தில் கண்ணகளைத் திறக்காமல், ஒண்ணும் இருக்காது ஏதாவது பூனையாயிருக்கும்..பேசாமல் படு.
சிறிது நேரம் கழித்து மறுபடியும் அதே சத்தம். ஆச்சி விடாப்பிடியாக தாத்தாவை எழுப்பவும் தாத்தா மற்றவர்களையும் எழுப்பி பார்க்க யாரோ இருவர் ஜன்னல் வழியாக குதித்து தப்பி ஓடுவதைப் பார்த்திருக்கிறார்கள். ஜன்னல் கம்பிகளை உடைத்து அவை கீழே விழுந்த சத்தம்தான் அந்த ரெண்டு, ‘டொங்..டொங்!’
மறுநாள் தாத்தா அங்கிருந்த டீ கடை அருகில் நின்றிருந்த போது அங்கிருந்த இருவர் பேசிக் கொண்டது எதேச்சையாக அவரது காதில் விழுந்தது. “டே! நல்ல வேளைடா! அந்த வீட்டு பெண் சத்தம் போட்டு எல்லோரையும் எழுப்பியிருக்காவிட்டால் தப்பான ஆளை போட்டிருப்போம்ல!”
மேலும் அவர்கள் பேசியதிலிருந்து தாத்தா புரிந்து கொண்டது...அந்த வீட்டில் முன்பு குடியிருந்தவர் வாங்கிய கடனை பல முறை கேட்டும் திருப்பிக் கொடுக்காமல் வீட்டைக் காலி செய்துவிட்டு சென்று விட்டார். கடன் கொடுத்தவர் இவர்களை ஏவி அவரை கொலை செய்ய அனுப்பியிருக்கிறார்.
தாத்தாவுக்கு எப்படியிருந்திருக்கும்? மேலெல்லாம் நடுங்கியபடி வீடு வந்து ஆச்சியிடம், “நாச்சியார்! நீ மட்டும் அன்று வம்படியாக என்னை எழுப்பியிருக்காவிட்டால்....என்ன ஆயிருக்கும்!!!”
பெண்களுக்கே உரிய நுண்ணறிவு!!!
பிற்பாடு தாத்தா வியாபரத்தில் நல்லபடியாக முன்னேறி.....என்ன வியாபாரம் என்று சொல்லலையே!! பேரீச்சம் பழம் இறக்குமதி, ஏற்றுமதி.
அரபுநாடுகளிலிருந்து மூட்டை மூட்டையாக இறக்குமதி செய்து பிற இடங்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, பார்த்த பெரும் லாபத்தை தங்கக்கட்டிகளாக மாற்றி......
”தங்கக்கட்டிகளா..?” ஆச்சரியத்தில் வாய் திறந்தேன். அதாவது தங்க பிஸ்கட்டுகள்!!!
தங்க பிஸ்கட்டுகளாக ஆச்சியிடம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைப்பாராம். கொண்டுபோய் ஊரில் பீரோவில் பத்திரமாக வை என்று சொல்லி.
இப்படி ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு வரும் போதும் ’வெட்டி எடுத்த தங்கக் கட்டிகளாக’ கொண்டு வந்து பத்திரப் படுத்துவாராம். அக்காலத்தில் சேமிப்பு என்பது நிலத்திலும் பொன்னிலும் தவிர போட வழி கிடையாது விவரமும் பத்தாது.
இந்த சேமிப்பைப் பற்றி ஆச்சி சொன்னதுதான் சுவாரஸ்யம்!
“எனக்கு, எதுக்கு இப்படி தங்கத்தை சேர்க்கிறார் என்று கேட்டதுக்கு சொன்னதைச் செய்!” என்று மட்டும் பதில் வரும்.”
ஆனா பிற்காலத்தில் ஓர் ஆண் குழந்தைக்குப் பிறகு பிறந்த ஆறு பெண் குழந்தைகளையும் இந்த தங்க பிஸ்கட்டுகளை வைத்தே நல்ல படியாக ஆளாக்கி சிறப்பாக திருமணமும் செய்து வைக்க முடிந்தது!”
என்னவொரு முன்யோசனை!!! நாமெல்லாம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு பிஸ்கட்டாக கடித்து சாப்பிட்டிருப்போம்!!!
தாத்தாவின் பொறுப்புணர்வும் ஆச்சியின் சிக்கனமும் சேர்ந்து ஒரு பெரிய குடும்பத்தையே கரையேற்றியிருக்கிறது.
தங்கமான பெண்மணிதான் நாச்சியாராச்சி!!!!!
முற்றும்.
Tuesday, May 31, 2011
Sunday, May 22, 2011
ஆச்சியின் நினைவுகள் பின்...பின்னோக்கி பாகம் இரண்டு
நாச்சியார் ஆச்சியின் திருமணத்துக்குப் பிறகு ஓர் ஆண் குழந்தைக்குத் தாயான பின், தாத்தா இருவரையும் தன் பெற்றோர் பொறுப்பில் விட்டுவிட்டு வியாபாரம் செய்ய சிலோனுக்கு கிளம்பிப் போனார்.
இப்போது பிழைப்புக்காக வளைகுடா நாடுகளுக்குப் போவது போல் அப்போது அதே பிழைப்புக்காக சிலோனுக்குப் போவார்கள். இதனால் அந்நாடும் இங்குள்ள குடும்பங்களும் செழித்தன.
கொழும்புக்குச் சென்ற தாத்தாவிடமிருந்து வாரா வாரம்ஆச்சிக்கு கடுதாசி வரும். ஆச்சியின் மாமனார் அதைப் படித்துப் பார்த்துவிட்டு அதை பரண் மேல் சொருகி வைத்து விட்டு தன் மனைவியைக் கூப்பிட்டு, 'கடுதாசி வந்திருக்கு. அவளைப் படித்துப் பாத்துக்கச் சொல்' என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பிவிடுவாராம்.
மருமகளுக்கு வந்த கடிதத்தை, அதுவும் அவள் கணவனிடமிருந்து வந்த கடிதத்தைப் படிப்பது அநாகரிகம் என்றெல்லாம் அப்போது கவலைப் படுவதில்லை. காரணம் பெண்களுக்கு அநேகமாக படிப்பறிவு இல்லாததும் ஒரு காரணமாயிருக்கலாம்.
அதுவும் போக தாத்தாவுக்கும், 'மானே! தேனே! பொன்மானே!' என்றெல்லாம் காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதவும் தெரியாத காலம் என்றும் சொல்ல முடியாது. இதுக்கு காலமெல்லாம் தேவையில்லை..சங்க இலக்கியங்களில் எழுதாத காதல் கடிதங்களா, தூதா என்ன. ஆனாலும் தன் வீட்டு நிலவரம் தெரிந்த காலம் என்று சொல்லலாம்.
அதனால் ஜஸ்ட் மேட்டர் மட்டும்தான்!!
பல முறை ஆச்சியின் மாமியார் அத்தகவலை....பரண் மேல் கடுதாசியிருக்கும் தகவலை சொல்லவே மாட்டாராம். தனக்கு படிக்கத்தெரியவில்லயே என்ற கடுப்பாயிருக்கும்.
இவராகவே பரணிலிருக்கும் கடிதத்தை எடுத்து படித்துப் பார்த்துக் கொள்வாரம்.
ஆச்சி......அந்தக் காலத்து மூணாங்கிளாஸாக்கும்...!!!!
ஒரு முறை, ஒரு மாதமாகியும் சிலோனிலிருந்து கடிதமே வரவில்லை. தவித்துப் போன ஆச்சி , என்னவோ ஏதோ என்று, ஒருவருக்கும் தெரியாமல், கட்டிய கணவனுக்கு, என்னாச்சு? என்று (வி)சாரித்துவிட்டு தன்னையும் குழந்தையையும் அழைத்துப் போகுமாறு கடிதம் எழுதி போஸ்டும் பண்ணிவிட்டார்!
மறுவாரம் சிலோனிலிருந்து பதில் கடிதம் வந்தது. தனக்கு டைபாயிட் காய்ச்சல் வந்ததையும் அதனால்தான் கடிதமே எழுதவில்லை என்றும் அடுத்த வாரம் வந்து உன்னையும்
குழந்தையையும் அழைத்துப் போகிறேன், தயாராய் இரு என்று அதன் சாராம்சம் இருந்தது.
வழக்கம் போல் மாமனார் அதைப் படித்துவிட்டு பரணில் சொருகாமல், நாச்சியாரை அழைத்து, 'நீ அவனுக்கு கடுதாசி எழுதினாயா? ஏன் சொல்லவில்லை?' இது என்ன அனா.பினா.தனம் என்பது போல் கேட்டிருக்கிறார்.
அதுக்கு மாமியார் என்ன சொன்னார் தெரியுமா?
"இதுக்குத்தான் ஆனா ஆவன்னா தெரியாத பொண்ணை கட்டி வெச்சுருக்கணும்ங்றது!" என்று தம் கடுப்பைக் காட்டிக் கொண்டாராம்.
இது ஒரு வகையான மாமியார் கடுமை என்று சொல்லலாமா?
மோவாய்கட்டையில் இடித்துக் கொண்டு சொல்லும் விதம் அக்கால பி.ஸ். ஞானம், சுந்தரிபாய், பி.எஸ். சரஸ்வதி முதலியோரை நினைவுபடுத்துகிறதல்லவா?
மூணாங்கிளாஸுக்கே இந்த வரத்து என்றால்...?
குழந்தையை தங்களிடம் விட்டு விட்டு அவளை மட்டும் கூட்டிச் செல் என்ற உத்தரவையும் மீறி நாச்சியார் ஆச்சி தன் குழந்தை தன்னிடம்தான் இருக்க வேண்டும் என்று கைக்குழந்தையோடு பிடிவாதமாக கணவனோடு சிலோனுக்கு மிதந்தார்.......கப்பலில்.
இன்னும்..
இப்போது பிழைப்புக்காக வளைகுடா நாடுகளுக்குப் போவது போல் அப்போது அதே பிழைப்புக்காக சிலோனுக்குப் போவார்கள். இதனால் அந்நாடும் இங்குள்ள குடும்பங்களும் செழித்தன.
கொழும்புக்குச் சென்ற தாத்தாவிடமிருந்து வாரா வாரம்ஆச்சிக்கு கடுதாசி வரும். ஆச்சியின் மாமனார் அதைப் படித்துப் பார்த்துவிட்டு அதை பரண் மேல் சொருகி வைத்து விட்டு தன் மனைவியைக் கூப்பிட்டு, 'கடுதாசி வந்திருக்கு. அவளைப் படித்துப் பாத்துக்கச் சொல்' என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பிவிடுவாராம்.
மருமகளுக்கு வந்த கடிதத்தை, அதுவும் அவள் கணவனிடமிருந்து வந்த கடிதத்தைப் படிப்பது அநாகரிகம் என்றெல்லாம் அப்போது கவலைப் படுவதில்லை. காரணம் பெண்களுக்கு அநேகமாக படிப்பறிவு இல்லாததும் ஒரு காரணமாயிருக்கலாம்.
அதுவும் போக தாத்தாவுக்கும், 'மானே! தேனே! பொன்மானே!' என்றெல்லாம் காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதவும் தெரியாத காலம் என்றும் சொல்ல முடியாது. இதுக்கு காலமெல்லாம் தேவையில்லை..சங்க இலக்கியங்களில் எழுதாத காதல் கடிதங்களா, தூதா என்ன. ஆனாலும் தன் வீட்டு நிலவரம் தெரிந்த காலம் என்று சொல்லலாம்.
அதனால் ஜஸ்ட் மேட்டர் மட்டும்தான்!!
பல முறை ஆச்சியின் மாமியார் அத்தகவலை....பரண் மேல் கடுதாசியிருக்கும் தகவலை சொல்லவே மாட்டாராம். தனக்கு படிக்கத்தெரியவில்லயே என்ற கடுப்பாயிருக்கும்.
இவராகவே பரணிலிருக்கும் கடிதத்தை எடுத்து படித்துப் பார்த்துக் கொள்வாரம்.
ஆச்சி......அந்தக் காலத்து மூணாங்கிளாஸாக்கும்...!!!!
ஒரு முறை, ஒரு மாதமாகியும் சிலோனிலிருந்து கடிதமே வரவில்லை. தவித்துப் போன ஆச்சி , என்னவோ ஏதோ என்று, ஒருவருக்கும் தெரியாமல், கட்டிய கணவனுக்கு, என்னாச்சு? என்று (வி)சாரித்துவிட்டு தன்னையும் குழந்தையையும் அழைத்துப் போகுமாறு கடிதம் எழுதி போஸ்டும் பண்ணிவிட்டார்!
மறுவாரம் சிலோனிலிருந்து பதில் கடிதம் வந்தது. தனக்கு டைபாயிட் காய்ச்சல் வந்ததையும் அதனால்தான் கடிதமே எழுதவில்லை என்றும் அடுத்த வாரம் வந்து உன்னையும்
குழந்தையையும் அழைத்துப் போகிறேன், தயாராய் இரு என்று அதன் சாராம்சம் இருந்தது.
வழக்கம் போல் மாமனார் அதைப் படித்துவிட்டு பரணில் சொருகாமல், நாச்சியாரை அழைத்து, 'நீ அவனுக்கு கடுதாசி எழுதினாயா? ஏன் சொல்லவில்லை?' இது என்ன அனா.பினா.தனம் என்பது போல் கேட்டிருக்கிறார்.
அதுக்கு மாமியார் என்ன சொன்னார் தெரியுமா?
"இதுக்குத்தான் ஆனா ஆவன்னா தெரியாத பொண்ணை கட்டி வெச்சுருக்கணும்ங்றது!" என்று தம் கடுப்பைக் காட்டிக் கொண்டாராம்.
இது ஒரு வகையான மாமியார் கடுமை என்று சொல்லலாமா?
மோவாய்கட்டையில் இடித்துக் கொண்டு சொல்லும் விதம் அக்கால பி.ஸ். ஞானம், சுந்தரிபாய், பி.எஸ். சரஸ்வதி முதலியோரை நினைவுபடுத்துகிறதல்லவா?
மூணாங்கிளாஸுக்கே இந்த வரத்து என்றால்...?
குழந்தையை தங்களிடம் விட்டு விட்டு அவளை மட்டும் கூட்டிச் செல் என்ற உத்தரவையும் மீறி நாச்சியார் ஆச்சி தன் குழந்தை தன்னிடம்தான் இருக்க வேண்டும் என்று கைக்குழந்தையோடு பிடிவாதமாக கணவனோடு சிலோனுக்கு மிதந்தார்.......கப்பலில்.
இன்னும்..
Thursday, May 19, 2011
ஆச்சியின் நினைவுகள்....பின்..பின்னோக்கி பாகம் ஒன்று
நாச்சியார் ஆச்சியின் பூப்பூவாய் மலர்ந்த நினைவுகள்!!!
இன்றைய காலகட்டத்தில் கால் கட்டு போடும் விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமை மணப் பெண்களின் கைகளுக்குப் போய்வீட்டது. அது சரியா..?தவறா...? தெரியவில்லை. அது பற்றி பிறகு பேசுவோம்.
சென்ற தலை முறையில், "இதுதான் பெண், கழுத்தில் கட்டு. இதுதான் மாப்பிள்ளை கழுத்தை நீட்டு" என்பார்கள். அதுங்களும் கண்களை மூடிக் கொண்டு கழுத்தில் கட்டும், கழுத்தை நீட்டும்.
அதற்கும் முந்தைய தலைமுறை, தலையெடுக்குமுன்பே, அதாவது விவரம் தெரியுமுன்பே திருமணம் என்பது நடந்துவிடும். நான் சந்தித்த ஆச்சியின் தாயார்!! , அவரது கல்யாணத்தைப் பற்றி தன் மகளிடம் விவரித்திருக்கிறார்....அதை எங்களிடமும் சொன்னார் வெகு சுவாரஸ்யமாக.
அந்த பெரியாச்சிக்கு ஒன்பது வயதில் திருமணம் நடந்ததாம். அப்போதெல்லாம் திருமணம் முடிந்து மருமகளை 'பல்லாக்கில்' வைத்துத்தான் புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்வார்களாம்.
அப்படி பல்லாக்கில் செல்லும் போது அச்சின்னஞ்சிறுமியின் மனவோட்டத்தை யாராவது எண்ணிப்பார்த்திருப்பார்களா? அதை ஆச்சி அருமையாக சுவையாக நம் கண் முன் கொண்டுவந்தார்.
அவள் பல்லக்கில் செல்லும் போது நினைத்தாளாம்,"நம்மை சமைக்கச் சொன்னால் என்ன செய்வது? எனக்குத்தான் சமைக்கவே தெரியாதே!" என்று தானே தனக்குள் கேள்வியையும் கேட்டுக் கொண்டு பதிலையும் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாளாம்.
எப்படி? "ம்..தெரியாது என்று சொல்லிவிடலாம்!" என்று தன்னைத்தானே தேத்திக் கொண்டு கணவன் வீடு புகுந்தாளாம்.
ஹௌ ஸ்வீட்....!!!!!
பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பமாகின்றன பாருங்கள்!!!!
இது ஆச்சியின் அம்மாவோட கதை.
இப்ப நாச்சியார் ஆச்சி கதைக்கு வருவோமா? பலபல சுவாரஸ்யங்கள், சம்பவங்கள் நிறைந்தது.
நம்ம ஆச்சிக்கும் பதினோரு வயதில் திருமணம் ஆயிற்று. மணமகன் சொந்தத்திலேயே.
நிச்சயம் ஆனதும் மாப்பிள்ளை(தாத்தா) ஆச்சி வீட்டுக்கு வந்திருக்கிறார்.
சொந்தமே என்றாலும் கட்டிக்கப் போறவளை பார்க்கக்கூடாதாம். அதனால் அந்தப்புரத்தை பெரிய திரைச்சீலையால் மூடிவிடுவார்களாம். ஆச்சியா கொக்கா? திரைப் போட்டு மறைத்தாலும் அக்காதலி திரையிடுக்கு வழியே தன் வுட்பீயை பார்த்து மகிழ்ந்தார்.
ஆச்சியும் திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்துவிட்டார். வீடு தூத்துக்குடி அருகே கடற்கரையை ஒட்டிய ஒரு கிராமம்.
அக்காலத்தில் நல்ல தண்ணீர் கடற்கரை அருகே ஊத்து தோண்டிதான் உபயோகிப்பார்களாம்.
வீட்டு தேவை போக ஊத்து ஓடையிலிருந்து தண்ணீர் ஊற ஊற மொண்டு குடங்களில் வீடுவரை ஆட்கள் ரிலே ரேஸ் மாதிரி கை மாத்தி கை மாத்தி வீட்டுக்கு வெளியே உள்ள பெரிய அண்டாவில் நிரப்புவார்களாம்...எதுக்கு? போவோர் வருவோர் தாகம் தணிக்க.
என்ன ஒரு மனிதாபிமானம்!!!! எவ்வளவு கடினமான வேலையை வெகு சுலபமாக முடித்திருக்கிறார்கள்!!!! காரணம், அன்று ஊர் கூடி தேர் இழுத்திருக்கிறார்கள். இன்று வீடு கூடி ஒரு நடை வண்டியை இழுக்கக் கூட
ஆளும் இல்லை அம்பும் இல்லை.
ஆச்சியின் மருமகள் சுபா, ‘அத்தே! அப்படியெல்லாம் அந்தக்காலத்தில் செய்த புண்ணியத்தால்தான் நாமெல்லாம் நல்லாருக்கோம். இல்லையாத்தே!!’ என்று பெருமிதப்பட்டுக்கொண்டார். ஞாயம்தானே!!!!
வீட்டில் காலைப் பலகாரமாக இட்லி சுடமாட்டார்களாம்.
ஒன்லி தோசைதான்!!
அதுவும் கல் காயுமுன்னால் மாவை ஊற்றினால்...’என்ன செவிட்டு தோசை சுடுறாயா?’ என்று கேலி வேறு. கல் காய்ந்ததும் மாவை ஊத்தினால்,' சொய்ங்..'ன்னு சத்தம் வந்தால்தான் நல்ல தோசை!!!!!
அந்த தோசையும் ஒரு பாதி பொன் முறுவலாக மறு பாதி சாதாவாக சுடணும். அதுக்குத் தகுந்தாற் போல் விறகு அடுப்பில் எரியும் தீயை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். மறு புறம் திருப்பி உடனே எடுத்துவிட வேண்டும். அது என்ன தோசையோ?
தலைப் பொங்கல்! பொறந்த வீட்டிலிருந்து பொங்கப் பொடியாக சகலமும் வரும். அத்தோடு வெத்தில பாக்கு வைத்து தரும் ஒத்தை ரூபா அத்தனை சந்தோஷம் தரும்.
பொங்கலன்று வீடு முழுக்க கோலமிட்டு அடுப்பில் மூன்று பானைகள் ஏத்தி, ஒவ்வொன்றும் அஞ்சு படி, முன்று படி, ரெண்டு படி என்று.....கவனம்! படி!!!, கிலோ அல்ல!!! என்று அரிசி களைந்து போட்டு பால் பொங்க பொங்க பொங்கலிட்டு முடிந்ததும், ஆச்சியின் மாமியார், ஆச்சி சிறுமியாயிற்றே என்று, ‘நீ பானைகளை தூக்காதே நான் வந்து தூக்குகிறேன்.’ என்று சொல்லியிருக்கிறார்.
அவர் வருமுன்னே மூன்று பானைகளையும் தூக்கி பூஜை நடக்குமிடத்தில் விளக்கு முன்னே கொண்டு போய் வைத்திருக்கிறார்.
வந்து பாத்து திகைத்த மாமியார்......”எட்டு யானைகளையும் ஒரு குட்டியையும் அவ நெஞ்சில் நிறுத்தலாம்!” என்றாராம் ஆச்சியின் பலத்தை மெச்சியபடி.
மெச்சினாரா...குதர்க்கமாக சொன்னாரா? அவருக்கு விளங்கவில்லை.
அதென்ன கணக்கு...? எட்டு யானை ஒரு குட்டி!!!
துள்சி! உங்களுக்குத் தெரியுமா?
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்....தயவு செய்து!!!
இன்னும் வரும்.
இன்றைய காலகட்டத்தில் கால் கட்டு போடும் விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமை மணப் பெண்களின் கைகளுக்குப் போய்வீட்டது. அது சரியா..?தவறா...? தெரியவில்லை. அது பற்றி பிறகு பேசுவோம்.
சென்ற தலை முறையில், "இதுதான் பெண், கழுத்தில் கட்டு. இதுதான் மாப்பிள்ளை கழுத்தை நீட்டு" என்பார்கள். அதுங்களும் கண்களை மூடிக் கொண்டு கழுத்தில் கட்டும், கழுத்தை நீட்டும்.
அதற்கும் முந்தைய தலைமுறை, தலையெடுக்குமுன்பே, அதாவது விவரம் தெரியுமுன்பே திருமணம் என்பது நடந்துவிடும். நான் சந்தித்த ஆச்சியின் தாயார்!! , அவரது கல்யாணத்தைப் பற்றி தன் மகளிடம் விவரித்திருக்கிறார்....அதை எங்களிடமும் சொன்னார் வெகு சுவாரஸ்யமாக.
அந்த பெரியாச்சிக்கு ஒன்பது வயதில் திருமணம் நடந்ததாம். அப்போதெல்லாம் திருமணம் முடிந்து மருமகளை 'பல்லாக்கில்' வைத்துத்தான் புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்வார்களாம்.
அப்படி பல்லாக்கில் செல்லும் போது அச்சின்னஞ்சிறுமியின் மனவோட்டத்தை யாராவது எண்ணிப்பார்த்திருப்பார்களா? அதை ஆச்சி அருமையாக சுவையாக நம் கண் முன் கொண்டுவந்தார்.
அவள் பல்லக்கில் செல்லும் போது நினைத்தாளாம்,"நம்மை சமைக்கச் சொன்னால் என்ன செய்வது? எனக்குத்தான் சமைக்கவே தெரியாதே!" என்று தானே தனக்குள் கேள்வியையும் கேட்டுக் கொண்டு பதிலையும் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாளாம்.
எப்படி? "ம்..தெரியாது என்று சொல்லிவிடலாம்!" என்று தன்னைத்தானே தேத்திக் கொண்டு கணவன் வீடு புகுந்தாளாம்.
ஹௌ ஸ்வீட்....!!!!!
பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பமாகின்றன பாருங்கள்!!!!
இது ஆச்சியின் அம்மாவோட கதை.
இப்ப நாச்சியார் ஆச்சி கதைக்கு வருவோமா? பலபல சுவாரஸ்யங்கள், சம்பவங்கள் நிறைந்தது.
நம்ம ஆச்சிக்கும் பதினோரு வயதில் திருமணம் ஆயிற்று. மணமகன் சொந்தத்திலேயே.
நிச்சயம் ஆனதும் மாப்பிள்ளை(தாத்தா) ஆச்சி வீட்டுக்கு வந்திருக்கிறார்.
சொந்தமே என்றாலும் கட்டிக்கப் போறவளை பார்க்கக்கூடாதாம். அதனால் அந்தப்புரத்தை பெரிய திரைச்சீலையால் மூடிவிடுவார்களாம். ஆச்சியா கொக்கா? திரைப் போட்டு மறைத்தாலும் அக்காதலி திரையிடுக்கு வழியே தன் வுட்பீயை பார்த்து மகிழ்ந்தார்.
ஆச்சியும் திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்துவிட்டார். வீடு தூத்துக்குடி அருகே கடற்கரையை ஒட்டிய ஒரு கிராமம்.
அக்காலத்தில் நல்ல தண்ணீர் கடற்கரை அருகே ஊத்து தோண்டிதான் உபயோகிப்பார்களாம்.
வீட்டு தேவை போக ஊத்து ஓடையிலிருந்து தண்ணீர் ஊற ஊற மொண்டு குடங்களில் வீடுவரை ஆட்கள் ரிலே ரேஸ் மாதிரி கை மாத்தி கை மாத்தி வீட்டுக்கு வெளியே உள்ள பெரிய அண்டாவில் நிரப்புவார்களாம்...எதுக்கு? போவோர் வருவோர் தாகம் தணிக்க.
என்ன ஒரு மனிதாபிமானம்!!!! எவ்வளவு கடினமான வேலையை வெகு சுலபமாக முடித்திருக்கிறார்கள்!!!! காரணம், அன்று ஊர் கூடி தேர் இழுத்திருக்கிறார்கள். இன்று வீடு கூடி ஒரு நடை வண்டியை இழுக்கக் கூட
ஆளும் இல்லை அம்பும் இல்லை.
ஆச்சியின் மருமகள் சுபா, ‘அத்தே! அப்படியெல்லாம் அந்தக்காலத்தில் செய்த புண்ணியத்தால்தான் நாமெல்லாம் நல்லாருக்கோம். இல்லையாத்தே!!’ என்று பெருமிதப்பட்டுக்கொண்டார். ஞாயம்தானே!!!!
வீட்டில் காலைப் பலகாரமாக இட்லி சுடமாட்டார்களாம்.
ஒன்லி தோசைதான்!!
அதுவும் கல் காயுமுன்னால் மாவை ஊற்றினால்...’என்ன செவிட்டு தோசை சுடுறாயா?’ என்று கேலி வேறு. கல் காய்ந்ததும் மாவை ஊத்தினால்,' சொய்ங்..'ன்னு சத்தம் வந்தால்தான் நல்ல தோசை!!!!!
அந்த தோசையும் ஒரு பாதி பொன் முறுவலாக மறு பாதி சாதாவாக சுடணும். அதுக்குத் தகுந்தாற் போல் விறகு அடுப்பில் எரியும் தீயை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். மறு புறம் திருப்பி உடனே எடுத்துவிட வேண்டும். அது என்ன தோசையோ?
தலைப் பொங்கல்! பொறந்த வீட்டிலிருந்து பொங்கப் பொடியாக சகலமும் வரும். அத்தோடு வெத்தில பாக்கு வைத்து தரும் ஒத்தை ரூபா அத்தனை சந்தோஷம் தரும்.
பொங்கலன்று வீடு முழுக்க கோலமிட்டு அடுப்பில் மூன்று பானைகள் ஏத்தி, ஒவ்வொன்றும் அஞ்சு படி, முன்று படி, ரெண்டு படி என்று.....கவனம்! படி!!!, கிலோ அல்ல!!! என்று அரிசி களைந்து போட்டு பால் பொங்க பொங்க பொங்கலிட்டு முடிந்ததும், ஆச்சியின் மாமியார், ஆச்சி சிறுமியாயிற்றே என்று, ‘நீ பானைகளை தூக்காதே நான் வந்து தூக்குகிறேன்.’ என்று சொல்லியிருக்கிறார்.
அவர் வருமுன்னே மூன்று பானைகளையும் தூக்கி பூஜை நடக்குமிடத்தில் விளக்கு முன்னே கொண்டு போய் வைத்திருக்கிறார்.
வந்து பாத்து திகைத்த மாமியார்......”எட்டு யானைகளையும் ஒரு குட்டியையும் அவ நெஞ்சில் நிறுத்தலாம்!” என்றாராம் ஆச்சியின் பலத்தை மெச்சியபடி.
மெச்சினாரா...குதர்க்கமாக சொன்னாரா? அவருக்கு விளங்கவில்லை.
அதென்ன கணக்கு...? எட்டு யானை ஒரு குட்டி!!!
துள்சி! உங்களுக்குத் தெரியுமா?
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்....தயவு செய்து!!!
இன்னும் வரும்.
Sunday, May 15, 2011
இது என்ன ’சரிவா?’
மேலே உள்ள படத்தில் இருப்பது என் அப்பா வழி ஆச்சி, பொன்னம்மாள். இந்த ஆச்சியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.......பின்ன..? எட்டாவதா பொறந்துட்டு அப்பா ஆச்சியை பாக்கணும் அம்மா ஆச்சியைப் பாக்கணுமின்னா முடியுமா? இருந்தாலும் அடிமனதின் ஆஆஆழத்தில், ஒரு ஆச்சியையும் பாக்கலையே...பேசலையே...பழகலையே...கதை கேக்கலையே என்ற ஆதங்கம் இருந்து கொண்டேயிருந்தது.
அந்தக் குறை சமீபத்தில் தூதூதூரத்து சொந்தத்தில் ஓர் ஆச்சி மூலம் நிறைவேறியது. பார்த்தேன், பேசினேன், பழகினேன், கதை கேட்டேன். கதையின்னா கதை...ஒங்கவீட்டு எங்கவீட்டு கதையில்லை. ரொம்ப சுவாரஸ்யமான சந்திப்பு.
அண்ணன் மருமகளோடு பேசிக் கொண்டிருக்கையில், ‘பெரியம்மா! ஆச்சி வீட்டுக்கு ஒரு நாள் போயிருந்த போது, என் கையில் அணிந்திருந்த ப்ரேஸ்லெட் மாதிரியான வளையலைப் பார்த்துதுட்டு, “இது என்ன சரிவா?” என்று கேட்டார்கள். ஒண்ணும் புரியவில்லை எனக்கு. விவரம் கேட்ட போது கற்கால....அக்கால அணிகலன்களில் வளையலுக்குப் பேர் ‘சரிவு’ என்றார். எனக்கு ஒரே சிரிப்பு!’ என்றாள்.
சிரிப்பு வரவில்லை எனக்கு. ஆஹா....! ஆசைப்பட்ட பாட்டி...அதுவும் பழங்கதை சொல்லும் பாட்டி. எவ்வளவு விவரங்கள் கொட்டிக் கிடக்கும்!!! தகவல் களஞ்சியமல்லோ?
சும்மா விடலாமா?
’ உன் ஆச்சியை சந்திக்க விரும்புகிறேன். எனக்கு ஓர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடு.’ அதாவது தொண்ணூறுகளில் நல்ல நினைவாற்றலோடு....அதுவும் தன் குழந்தைப்பருவ காலம் தொட்டு திருமண பருவம் வரை ரசனையோடு சொல்லும் பாட்டி!!
‘பெரியம்மா! அப்பாயிண்ட்மெண்டெல்லாம் வேண்டாம். ஒரு நாள் நாம் போகலாம்.’
அப்பாயிண்ட்மெண்ட் என்று நான் சொன்னது....ஓய்வாயிருக்கும் போது. ஆச்சிக்கு யாராவது பேசக்கிடைத்தால் போதும்.
போச்சுடா! பெரிசு அறுக்க ஆரம்பிடுச்சு, என்றில்லாமல் என்னை இழுக்க ஆரம்பிடுச்சு, அவர் சொன்ன சின்ன தகவல், ‘இது சரிவா?’ மனம் சரிய ஆரம்பிடுச்சு!!!
"சிரமதில் திகழ்வது சீவகசிந்தாமணி
செவிதனில் மிளிர்வது குண்டலகேசி
திருவே நின் இடையணி மணிமேகலையாம்
கரமதில் மின்னுவது வளையாபதியாம்
கால் தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்”
என்று தமிழ் இலக்கியத்தால் தமிழன்னை மேனியெங்கும் அணிகலன் பூட்டி அழகு பார்த்தது தமிழ்நாடு. அத்தமிழ்நாட்டுப் பெண்டீர் பழங்காலத்தில் தாம் அணிந்து மகிழ்ந்த அணிகலன்கள் பேரெல்லாம் வழக்கொழிந்து போயின. இம்மாதிரி ஆச்சிகளால் மீண்டும் உயிர் பெற்று நாமெல்லாம் அறியக் கிடைத்தன....ஒரு மணி நேர சுவாரஸ்யமான கலந்துரையாடல் மூலம்.
ஆச்சியின் மருமகளும் அழகாக அவ்வப்போது,’ அத்தே! அதுக்கு ஏதோ சொல்வீங்களே?...அத்தே! இதை மறந்துட்டீங்களே!’ என்று அடியெடுத்துக் கொடுத்தார்..மாடிப்படி மாது,’நாயர் வாட்சை விட்டுட்டீங்களே!’ என்பது போல்.
ஆச்சியின் நகைப் பெட்டகத்தை திறந்து பார்த்தபோது, பெரும் புதையலே கிடைத்தது.
சரிவு என்றால் கையில் அணியும் வளையல். கையை மேலே தூக்கினால் முழங்கையை நோக்கி சரியும், கீழே இறக்கினால் மணிக்கட்டை நோக்கி சரிவதால் அந்தப் பேரோ?
வெத்தலை கோர்வை - வெற்றிலை போல் தங்கத்தில் செய்து கோத்த காசு மாலை போன்றது
சுத்துரு - தாலி.
அலங்கார தாயத்து கொடி இடுப்பில் அணிவது.
பாதசரம் - தண்டை கணுக்காலில் அணிவது
பீலி - மெட்டி. கால் விரல்கள் ஐந்திலும் அணிவார்களாம்.
பாம்படம், முடிச்சு, தண்டட்டி, பூடி, பிச்சர்கல், சர்பைப்பூ இவை அனைத்தும் காதுகளிலும் காது மடல்களிலும் அணியும் அணிகலன்கள்.
வங்கி, நாகொத்து(வங்கியின் முகப்பில் நாகம் இருக்கும்), பாட்லா இவை முழங்கைக்கு மேல் அணிபவை.
புறாக்கூண்டு அட்டியல்...புறாக்கூண்டு போல், பின்னிய கழுத்தணி. அதாவது நெக்லேஸ்.
வகுப்பு சுட்டி, நெத்திச்சுட்டி, நிலா பிறை இவை இக்கால மணப்பெண் அணியும் தலை அணிகலன்கள்.
கண்டசரம், கெச்சப்பரம் நீண்ட சடை பின்னலின் அழகுக்கு அழகு சேர்ப்பவை.
சவடி, இது ஐந்து சரம் சங்கிலி.
ஆஹா..!இவற்றையெல்லாம் கேட்கையில் நகை ஆசை இல்லாத எனக்கே அவற்றையெல்லாம் பார்க்கவேண்டும், அணிந்தும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுகிறதே!
மேலே உள்ள படத்திலுள்ள ஆச்சி இவற்றையெல்லாம் அணிந்துள்ளார்கள் போலிருக்கிறதே!!
தங்கத்தை தவிர வேறு சேமிப்பு இல்லாத அக்காலத்தில் அத்தனை நகைகளையும் கட்டித்தங்கத்தில் செய்திருப்பார்களாம். அக்கால மகளிர், வீட்டு பெரியவர்கள் ஆசைக்கிணங்க அத்தனை நகைகளையும் அணிந்திருப்பார்களாம்(மூக்கால் அழுதுகொண்டே). அதற்கெல்லாம் நல்ல திமுசு கட்டை போன்ற உடலமைப்பு வேண்டும்.
இக்கால மெல்லிடையார்களை அத்தனையையும் அணியச்சொன்னால்....அணிந்த பின் ’பொத்’தென்று சரிந்து விடுவார்கள்!!!!
ஓஹோ...! இதுதான் சரிவா?
பி.கு.
இன்னும் வேறு தகவல் அடுத்த பதிவில்.
Subscribe to:
Posts (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...