Friday, June 24, 2011

நொங்கு பச்சை புலாவ் சமையல் குறிப்பு

நுங்கு உபயோகித்து மற்றொரு சமையல் குறிப்பு.

பச்சை புலாவ் பற்றி முன்பே குறிப்பு தந்திருக்கிறேன். இருந்தாலும் மறுபடி ஒரு செய்முறை விளக்கம் தருகிறேன். அரை மணி நேரம் ஊற வைத்த பிரியாணி அரிசி, கொத்தமல்லி, புதினா அரைத்த விழுது, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை ஜூஸ், பட்டாணி, தோலுறித்து நறுக்கிய நுங்கு துண்டுகள்.

பாத்திரத்தில் எண்ணை ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு, பட்டாணி சேர்த்து வதக்கி, அத்துடன் பிரியாணி அரிசி, பச்சை விழுது சேர்த்து நன்கு வதக்கி அளவான தண்ணீர்(விரும்பினால் சிறிது தேங்காய் பால்) விட்டு கலக்கி மூடி வைக்கவும். முக்கால் பதம் வந்ததும் ,


நுங்கு சேர்த்து கலக்கி, லைம்ஜூஸ் விட்டு கலக்கி, ஸ்டவை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். பொல பொலன்னு வந்ததும்.......

நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து உதிர உதிர பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி மேஜைக்கு கொண்டு சேர்க்கவும்.

இதுக்கு தொட்டுக் கொள்ள மாம்பழ ரைத்தா. கட்டித்தயிரில் சீவிய மாம்பழம், சிறிது மிளகாய்பொடி, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்த மாம்பழப் பச்சடி சூப்பரயிருக்கும்.


புல்லா...ஒரு கட்டு கட்டியாச்சா? அப்புரம்?

வெத்தலை போட வேண்டியதுதான். அதிலும் ஒரு சமாச்சாரம் சொல்லவா?

நுங்கை துண்டுகளாக நறுக்குமுன் அதன் மேல் தோலை உரித்து எடுத்திருப்போமில்லையா? அதை தூரப் போட வேண்டாம். அதன் தோல் ஒருவித துவர்ப்பு ருசியுடனிருக்கும்.

அதை வெற்றிலையோடு 'பாக்குக்குப்' பதிலாக வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மடித்து வாயில் அதக்கி மென்றால் பாக்கைவிட கூடுதலாகவே சிவக்கும். (சர்க்கரை வியாதிக்கு அருமையான மருந்தும் கூட).

என்ன..? பாக்கு பொட்டலம் தட்டை விட்டு கீழே இறங்கிடுச்சு?
கோச்சுக்கிச்சாம்!!!!!!!!
கோச்சுக்காதடா செல்லம்.....நுங்கு சீசன் முடிந்தததும் நீதான் கதி!!!!!

Thursday, June 23, 2011

நொங்கு நொங்குன்னு நொங்கணும் சமையல் குறிப்பு

மாம்பழம் போல சம்மரில் மட்டுமே கிடைக்கும் ஓர் அருமையான இயற்கையின் அன்பளிப்பு 'நுங்கு'

'பனைமரமே பனைமரமே, ஏன் வளர்ந்தாய் பனைமரமே!' என்றொரு சிறுவர்களுக்கான பாடல் உண்டு. அதில் பனைமரத்தின் உச்சி முதல் பூமிக்குள் புதைந்த உள்ளங்கால் வரை அனைத்தும் பல வகையில் பயன் படக் கூடியவை என்பதை தெரிவிக்கும்.

அவற்றுள் உண்ணக்கூடியவை பதநீர், நுங்கு, பனங்கிழங்கு. பனங்கிழங்கு பொங்கல் சமயங்களில் கிடைக்கும்.

பதநீரும் நுங்கும் வெயில் காலங்களில் அபரிமிதமாக கிடைக்கும்.
திருநெல்வேலிக்கு இச்சமயங்களில் சென்றால், நான் விரும்பிக் கேட்பது 'பதநீரும் நுங்கும்தான்'.

சைக்கிளில் வைத்து விற்பனை செய்வார்கள். பாத்திரத்தில் வாங்கி வருவதாக சொல்வார்கள். ஹூஹும்.....அதிலென்ன சுவாரஸ்யம்?

சைக்கிளை வீட்டு வாசலுக்கே வரவழைத்து, பனை ஓலையை கப் மாதிரி வளைத்து அவ்வோலையாலேயே கட்டி, அதில் ஒரு டம்ளர் பதநீரும் அதில் ஒரு நுங்கை ஸ்லைஸ் ஸ்லைஸாக சீவிப் போட்டு அருந்தத் தருவார். ஆஹா....'பிடித்தவர்களுக்கு' அது தேவாமிர்தம்தான்!

பல சமயங்களில் எனக்கு காலை உணவே அதுதான்.

இங்கு சென்னையில் நுங்கு ஆங்காங்கே நடைபாதையில் குமித்து வைத்து சீவி சீவி விற்பார்கள். ஆரம்பத்திலெல்லாம், ஏற்கனவே சீவி வைத்திருக்கும் நுங்குகளை வாங்கி
வருவேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் பத்து நுங்குகளுக்கு ரெண்டு அல்லது மூன்று முத்தலாயிருக்கும், கடிக்கவே முடியாது.

அதை என்ன செய்வது என்று யோசித்த பொழுது கிடைத்த ஐடியாதான், நுங்கை வைத்து கிரேவி செய்து பார்க்கலாம் என்று.


சீவி எடுத்த நுங்கு, அதிலுள்ள ஜூஸ் வெளிவராமல். கூட, மேலாக சீவிய நுங்கும்.

தோலுரித்து துண்டுகளாக்கப் பட்ட நுங்கு.

வழக்கம் போல் வெங்காயம்,தக்காளி, இஞ்சி பூண்டு, எல்லாப் பொடிகள், அரைத்த முந்திரி விழுது சேர்த்து துணைக்கு பட்டாணியும் நுங்கும் சேர்த்து கலக்கி தேவையான அளவு இறுகி வரும் வரை கொதிக்க வைத்த 'நுங்கு கிரேவி'

சப்பாத்தி, டால் உடன் நுங்கு கிரேவி அமர்களமாயிருக்கும்.

இப்போதெல்லாம் பொறுமையாக நின்று உடனுக்குடன் நுங்குவின் உள்ளே உள்ள ஜூஸ் வடியாமல் வெட்டித்தர வேண்டும், அதுவும் இளம் நுங்காக இருக்க வேண்டும் என்ற கண்டிஷனோடுதான் நுங்கு வாங்குகிறேன்.

நீங்களும் அப்படியே வாங்குங்கள். சேரியா?

Wednesday, June 22, 2011

கத்தரிக்காய் க்ரேவி அல்லது காரக் குழம்பு சமையல் குறிப்பு

ரொம்ப நாளாச்சு..சமையல் பதிவு போட்டு. அதா வந்துட்டேன் கரண்டியும் கடாயுமாக. இப்பெல்லாம் டிவியில் எந்த சானலை, எந்த நேரம் போட்டாலும் யாரவது ஒருத்தர், கரண்டியும் கடாயுமாக வர ஆரம்பிச்சுட்டாங்க.

கத்திரிக்காயில் ஒரு கார கிரேவி அல்லது குழம்பு செய்யப் போறேன். வர்றீங்களா?

தேவையானவை:

பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ நாலாக வகுந்தது
வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, பட்டை, சோம்பு
கரைத்த புளித் தண்ணீர் சிறிய கப்
தேங்காய், கசகசா அரைத்த விழுது



கடாயில் எண்ணை ஊற்றி பட்டை சோம்பு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


நன்கு வதங்கியதும் வகுந்து வைத்துள்ள கத்தரிக்காயை போட்டு நன்கு பிரட்டி, மூடி போட்டு மூடி வைக்கவும். அதிலுள்ள நீரிலேயே கத்தரிக்காய் நன்கு வெந்ததும் சிறிது நேரம் பிரட்டி கொடுக்கவும். கொஞ்சம் ப்ரை ஆனதும்,


புளித்தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய், கசகசா விழுதை சேர்த்து தேவையான அளவு கெட்டியானதும்,


பொடியாக அரிந்த கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை கூடும்.


சூடான சாதத்தோடு அருமையாயிருக்கும். மேலும் புலாவ், சப்பாத்திகூடவும்
சந்தோஷமாக சொந்தம் கொண்டாடும்.
brinjal நல்ல பிriஞ்சaகவும் காரலில்லாமலும் இருக்கணும்.

Tuesday, June 14, 2011

திரைப்படத் தலைப்பு ஜூன் 2011 புகைப்படப் போட்டி

அழகான தலைப்பு...ஆர்வத்தைத் தூண்டும் தலைப்பு. கைவசம் இருந்த படங்களிலிருந்து சிலவற்றை பார்வைக்குத் தந்திருக்கிறேன். சேரியா?
உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.


பஞ்சவர்ணக்கிளி

என் வீடு

அழியாத கோலங்கள்

கலைக்கோயில்

ரோஜாக்கூட்டம்

மல்லுவேட்டி மைனர்
நன்றி!!!!!!!

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...