ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!!
தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம்.
விருத்தனாக வந்து வள்ளியிடம் தேனும் தினைமாவும் உருட்டி உருட்டி தின்று விக்கலெடுத்தானல்லவா...முருகன்? அந்த தினை!!
சோளம் , கம்பு, கேழ்வரகு இவற்றிலெல்லாம் கூழ், களி, சோறு எல்லாம் செஞ்சு சாப்பிட்டாச்சு. மிஞ்சியது தினை....அதை சும்மா விடலாமா?
திருநெல்வேலியில் நாட்டுமருந்து கடையில் தினைமாவு என்று ஒரு பாகெட்டில் பாத்தேன்.
இது எப்படி நம் கண்களில் இதுவரை படாமல் போயிற்று? உடனே ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டேன். 'என்ன செய்யப் போகிறாய்? ஜம்பமாக வாங்கிக் கொண்டாய்?' என்றது மனது. 'ஏதாவது செய்வேன் பொறுத்திருந்து பார்!' என்று அடக்கினேன். 'என்னண்ணே போ!'என்று சுருண்டது.
பச்சரிசி மாவு...தினைமாவு சம அளவில் எடுத்து தண்ணீர் கலந்து தோசைமாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊத்திக் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை , கொத்தமல்லி, உப்பு சேர்த்து தாளித்து கரைத்து வைத்துள்ள மாவை கடாயில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். மாவு வெந்து சுருண்டு வந்ததும் இறக்கி வைத்து, ஆறியதும் சிறிது எண்ணெய் விட்டு கையில் ஒட்டாத பதத்தில் பிசைய வேண்டும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து எண்ணெய் தடவிய இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
மென்மையான கொழுக்கட்டைகள்....இட்லிப் பொடி அல்லது தேங்காய்சட்னியோடு சினேகமாக கைகோத்துப் போகும்.
முக்கியமா இன்னொன்று!!!யாரும், "வாயில் என்ன?" என்று கேட்குமுன் விழுங்கிவிடுங்கள்!!!சேரியா?
தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம்.
விருத்தனாக வந்து வள்ளியிடம் தேனும் தினைமாவும் உருட்டி உருட்டி தின்று விக்கலெடுத்தானல்லவா...முருகன்? அந்த தினை!!
சோளம் , கம்பு, கேழ்வரகு இவற்றிலெல்லாம் கூழ், களி, சோறு எல்லாம் செஞ்சு சாப்பிட்டாச்சு. மிஞ்சியது தினை....அதை சும்மா விடலாமா?
திருநெல்வேலியில் நாட்டுமருந்து கடையில் தினைமாவு என்று ஒரு பாகெட்டில் பாத்தேன்.
இது எப்படி நம் கண்களில் இதுவரை படாமல் போயிற்று? உடனே ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டேன். 'என்ன செய்யப் போகிறாய்? ஜம்பமாக வாங்கிக் கொண்டாய்?' என்றது மனது. 'ஏதாவது செய்வேன் பொறுத்திருந்து பார்!' என்று அடக்கினேன். 'என்னண்ணே போ!'என்று சுருண்டது.
பச்சரிசி மாவு...தினைமாவு சம அளவில் எடுத்து தண்ணீர் கலந்து தோசைமாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊத்திக் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை , கொத்தமல்லி, உப்பு சேர்த்து தாளித்து கரைத்து வைத்துள்ள மாவை கடாயில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். மாவு வெந்து சுருண்டு வந்ததும் இறக்கி வைத்து, ஆறியதும் சிறிது எண்ணெய் விட்டு கையில் ஒட்டாத பதத்தில் பிசைய வேண்டும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து எண்ணெய் தடவிய இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
மென்மையான கொழுக்கட்டைகள்....இட்லிப் பொடி அல்லது தேங்காய்சட்னியோடு சினேகமாக கைகோத்துப் போகும்.
முக்கியமா இன்னொன்று!!!யாரும், "வாயில் என்ன?" என்று கேட்குமுன் விழுங்கிவிடுங்கள்!!!சேரியா?