வேறு பொழுதுபோக்குகள் ஏதும் இல்லாத காலகட்டத்தில் சினிமாவும் ரேடியோ சிலோனுமே கதி என்றிருந்த பல பேரில் நானும் ஒருத்தி. அனேகமாக எங்கள் அண்ணாச்சி எல்லா படங்களுக்கும் அழைத்துப் போய்விடுவார். அப்பாவோடு சினிமா போன ஞாபகமில்லை.
அதுவும் திருநெல்வேலி ஜங்ஷனில் மேம்பாலம்(டபுள்டக்கர்) வாராத முன்பு ரயில்வே கேட் மூடிவிடக்கூடாதே என்ற பதைப்போடு போனதெல்லாம் ஒரு சுவாரஸ்யம்!!
1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
சுமார் ஏழு அல்லது எட்டு வயதில்.
1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
சரியாக நினைவில்லையே!! ஆங்! ஔவையார்! 1953-54ல் வெளியானது. அப்போதெல்லாம் ஜெமினி தயாரிப்புகளெல்லாம் எங்க ஊர் பாலஸ்-டி-வேல்ஸ் தியேட்டரில்தான் வெளியாகும்.
எங்க குடும்பம் மொத்தத்துக்கும் ஒரு ஸ்பெஷல் ஷோ ரிலீஸுக்கு முன் போட்டுக் காட்டினார்கள்.
சினிமாவுக்கே வராத எங்க தாத்தா, அப்பா உட்பட ஒரு குடும்ப ஷோ பார்த்தது நன்றாக நினைவிருக்கு. அதே படத்தை எக்ஸ்க்ளூஸிவிலி லேடிஸுக்காகவும் அதாவது பெண்களுக்கு மட்டுமாக ஒரு ஷோ நடத்தினார்கள். படம் முடிந்து போகும் போது பெண்கள் எல்லோருக்கும் ரிப்பன், சீப்பு, கண்மை, சாந்துபொட்டு எல்லாம் நவராத்திரிக்குக் கொடுப்பது போல் காம்பிளிமெண்ட் கொடுத்து சந்தோஷப் படுத்தியதும் பின்னர் எங்கள் இக்னேஷியஸ் கான்வெண்ட்
மாணவ மாணவிகள், மதர்ஸ் சிஸ்டர்ஸ் எல்லோருக்குமாகவும் ஒரு ஷோ காண்பித்ததும் வாடாத நினைவுகள்.
அந்த தியேட்டரில் சோபா சீட்டுக்கு முன் ஒரு பலகை தடுப்பு இருக்கும். அதில் ஓர் ஓட்டை...அதன் வழியாக திகிலூட்டும் காட்சிகள் வரும்போதெல்லாம் டக்கென்று குனிந்து அந்த ஓட்டை வழியாகப் பார்த்ததெல்லாம் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.
அடுத்த மறக்க முடியாத ரெண்டாவது படம்....க.ப.பி.சாரி என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்று நினைக்கிறேன். 1954-ல் வெளியானது. நெல்லை ரத்னா தியேட்டரில் முதல் படம் என்றும் நினைக்கிறேன். இனிமையான பாடல்களுக்காகவும் 'கலாட்டா கல்யாணம்' மாதிரி கலகலப்பான கதைக்காகவும் நல்லா ஓடிய படம். நான் சுமார் எட்டு முறை பார்த்திருக்கிறேன். அந்தக் கால ரிசர்வேஷன் எப்படீங்குறீங்க? போன் செய்து எத்தனை டிக்கெட் என்று தெரிவித்ததும், ஆறு டிக்கெட் என்றால் சோபா...ஆம் முதல் வகுப்பு என்றால் சோபாதான், ஆறு சீட்டிலும் முதல்சீட் ஆர்ம் ரெஸ்டிலிருந்து ஆறாவது ஆர்ம் ரெஸ்ட் வரை கயிறு கட்டி வைத்திருப்பார்கள். நாங்கள் போனதும் கயிறை அவிழ்த்து அமர வைப்பார்கள்.
1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?
'மயிலேறும் வடிவேலனே!' என்று பாடிக்கொண்டே வெளியே வந்தது.
சோபாவில் சௌகர்யமாக அமர்ந்து சிரித்து சிரித்துப் பார்த்தது.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
ம்ம்ம்ம்ம்ம்ம்..ஆங் ஞாபகம் வந்துச்சு...!சிட்டிசெண்டர் ஐநாக்ஸில் சிவாஜி பார்த்தோம்.
ஓஸி டிக்கெட் நாத்தனார் மூலம் கிடைத்தது. அவரையும் அழைத்துக்கொண்டு போனோம்.இல்லைனா ரங்கமணியாவது தியேட்டருக்கு வருவதாவது? உள்ளே ஸ்நாக்ஸெல்லாம் நாட் அலௌட். அங்கேதான் வாங்கிக் கொள்ளணுமாம். அநியாயமாயில்ல? இதில் நம்ம ஹாண்ட்பாக்கையெல்லாம் செக்கிங் வேற. சேரினு பாப்கார்னும் அட்டை டம்ளாரில் பெப்ஸியும் வாங்கிக்கொண்டோம். விலையைக் கேட்டால் மயக்கமேவரும். வழக்கமாய் வெளியே வாங்கும் பத்து ரூபாய் பாப்கார்னும் பெப்ஸியும் அங்கே நாப்பது ரூபாய்!!!!ரொம்ப டூ மச்சா இல்ல?
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
அரங்கிலன்றி...? வீட்டில் திருட்டு விசி டி? அதுக்கு நேரமேயில்லை. வெட்டவெளியில் பார்த்தது சொல்லலாமா? அப்படின்னா...எங்க பேவரைட் 'பிரார்த்தனாதான்' அங்கே என்றால் என்ன படம் என்று கூட கேட்காமல் ரங்ஸ் கிளம்பிவிடுவார். அங்கேதான் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். கடைசியாகப் பார்த்தது, சூரியா நடித்த 'வேல்'.
உணர்வதற்கென்ன? சிலுசிலுன்னு பீச் காத்து, சுகமான பாய், தலையணை, திண்டு, குஷன் இத்தியாதிகள். கொறிக்கத் தேவையான கொறிக்ஸ்! இடைவேளையில் சாப்பிட இட்லி, ரயில் சட்னி. வேறென்ன வேண்டும்?(இதெல்லாம் அங்கு கொறிக்ஸ், சாப்பாடுக்கு தடை வருமுன்)
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா.
'மக்களைப் பெற்ற மகராசி' அம்மா இறந்த சமயம் வந்த படம். படத்தில் வரும் பாடல்..'மக்களைப் பெற்ற மகராசி மஹாலஷ்மி போல் விழங்கும் முகராசி'. இந்த ரெக்கார்டை
ரேடியோகிராமில் போட்டு போட்டு எங்களை அழ வைப்பான், தானும் அழுவான் எங்கள் மூன்றாவது அண்ணன்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
ஐய! ஔவையாரிடம்,'சேரக் கூடாதது எது?' என்று கேட்டால், 'இந்த சினிமாவும் அரசியலும்' தான் என்பார். குறிப்பாக,'சிவாஜி' படம் வெளிவருமுன்பாக அரசியல்வாதிகளும் ரசிகர்களும் செய்த அலம்பல்கள் என்ன! படம் வெளியாகி ஊத்திக்கொண்டதும் எல்லோரும் ஓடி ஒளிந்தது என்ன! நடிகர்கள் தங்கள் சுயநலத்துக்காகவே ரசிகர் மன்றங்களை வைத்திருக்கிறார்கள் என்பதை எப்போது உணர்கிறார்களோ அப்போதுதான் நாடு உருப்படும்.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இப்போதையா சினிமா பத்தி வாசிப்பதில்லை. காரணம் ஒரு விபரமும் தலையில் ஏற மாட்டேங்குது. ஆனால் பழைய பேசும் படம், பொம்மை போன்ற பத்திரிகைகளை விரும்பி வாசிப்பேன். அதிலிம் பொம்மையில் வரும் நடிகைகள் படங்கள் எல்லாம் ரொம்ப அழகாயிருக்கும். புகைப்படக்கலைஞர்கள் (குறிப்பாக சாந்தாமியான்) ரசித்து எடுத்திருப்பார்கள். நடிகைகளும் கௌரவமாக போஸ் கொடுத்திருப்பார்கள். அந்த அழகுக்காகவே பொம்மையில் வரும் படங்கள் உள்ள பக்கத்தை ஸ்ட்ராப்பிளை மெதுவாக எடுத்து நோட்டுக்கு அட்டை போட்டு காலேஜுக்கு எடுத்துப்போவேன். சகமாணவிகள் மிகவும் ரசிப்பார்கள்.
7. தமிழ்ச்சினிமா இசை?
இதென்ன கேள்வி? கர்னாடக இசையை காடுகழனிக்கெல்லாம் கொண்டு சென்ற பழைய பாடல்களின் ரசிகை நான். ஜி.ராமநாதன், சுப்புராமன், கே.வி.மகாதேவன்,மெல்லிசைமன்னர்கள், இளையராஜா போன்றவர்களால் தமிழ்சினிமா இசை என்றென்றும் வாழும். இன்று உள்ள இரைச்சல்களுக்கு நடுவேயும் பல நல்ல மெலோடிகளும் வருகின்றன. இன்றைய பாடல் வரிகள் காரில் போகும் போதுதான் புரிகிறது.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ் தவிர, ஹிந்தியில் 'ஜனக் ஜனக் பாயல் பாஜே, ஜிஸ்தேஷ்மேகங்காபெஹதிஹை, மொகலேஆசாம், ஆராதனா,'
குறிப்பாக 'ஜிஸ்தேஷ்மே...'இதன் பாடல்களுக்காக எங்க குடும்பம் மொத்தமுமே சொக்கிக்கிடந்தது. மொகலேஆசாம் அதன் பிரம்மாண்டத்துக்காக. ஹிந்தியில்,'ப்யாருக்கியாத்தோ டர்னாகியா'வும் தமிழில் அக்பராக வந்து,'காதல் கொண்டாலே பயமென்னா'வும் மிகவும் பிடித்த பாடல்கள். 'ஆராதனா!' ஹிந்தி தெரியாதவர்களையும் ரசித்துப் பார்க்கவைத்தது..ராஜேஷ்கன்னாவின் குறும்பான நடிப்பு.
ஆங்கிலத்தில்....'பென்ஹர், பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்,ஆப்செண்ட்மைண்டட் ப்ரொபசர், மற்றும் ஹாலிவுட்டில் பார்த்த ஒரு குறும்படம் 'SHREK'
பென்ஹர் கதை பள்ளியில் நாண்டிடெல்டில் வந்ததால் கான்வெண்டிலிருந்து மதர் அழைத்துச் சென்றார்கள். ரொம்ப ரசிச்சது ஷெரக்தான். காலடியில் ஓடிய சுண்டெலிகளும் ஷெரக் சாரட்டில் குதிக்கும் போது நாம் உக்காந்திருக்கும் நாக்காலி அதிர்ந்ததும் கழுதை ப்ர்ர்ர்ர்ர்ர்ர் என்றபோது நம்மோட மூஞ்சியிலும் தண்ணீர் தெறித்ததும் மறக்க முடியாதது.
தெலுங்கில்...சங்கராபரணம், அன்னமையா இனிமையான பாடல்களுக்காக. அன்னமையா படத்தில் அன்னமாச்சாரியா இயற்றிய பாடல்கள்...குறிப்பாக 'ப்ரம்மம் ஒக்கடே' ரொம்பப் பிடிக்கும்.
மலையாளத்தில் செம்மீன், சட்டக்காரி. செம்மீன் தகழியின் நாவலைப் படித்துவிட்டு பார்த்தது. 'மானசமைனவரு..' எல்லோரையும் முணுமுணுக்கவைத்த பாடல்.
பின்ன சட்டக்காரி ஏதோ பாத்தோம்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அதில் ஆர்வமும் இல்லை.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
தங்கள் சொந்த ரசனைக்காக ஸ்டார் வேல்யூவை பொருட்படுத்தாமல் புது முகங்களைப் போட்டு
நல்ல கதையோடு ரசித்து ரசித்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் இருக்கும் வரை
பயமில்லை. சர்தானே?!
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஹையா ஜாலிதான்!!! தமிழ்நாட்டில் மின்வெட்டு வந்ததும் எத்தனை குடியிருப்புகளில் மொட்டைமாடியில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்கிறார்கள்..கலந்துரையாடுகிறார்கள்...ஒருவருக்கொருவர் அறிந்துகொள்கிறார்கள்...புரிந்துகொள்கிறார்கள்...உதவிக்கொள்கிறார்கள்!!!!ஒரு மின்வெட்டே இத்தனையும் சாதிக்குமென்றால்...மேலே சொன்ன அத்தனையும் எவ்வளவு சாதிக்கும்!!!!யோசித்துப்பாருங்கள்!!!தமிழர்களின் ஒற்றுமை பலப்படும். வரட்டும் அத்தனையும்.
எல்லாம் ஓகேயா? துள்சி? வல்லி?
இனி நான் அழைக்கும் ஐவர்:
சந்தனமுல்லை
புதுகைத்தென்றல்
தமிழ்பிரியன்
மங்களூர் சிவா
சகாதேவன்
வாருங்கள்!!உங்கள் பதில்களைத் தாருங்கள்!!
Thursday, October 16, 2008
Wednesday, October 15, 2008
வாராய்...நீ..வாராய்...ஏறாய்..நீ..வெற்றி..ஏணி..ஏறாய்!!

'You can not be a success in any business without believing that it ia the greatest business in the world'
எந்தத் தொழிலும் உலகத்திலேயே உயர்ந்தது என்று நீ நம்பும் வரை உன்னால் எதிலும் வெற்றியடைய முடியாது.
'You have to put your heart in the business and the business in your heart'
அதற்கு...உன் இதயத்தை தொழிலில் வை. தொழிலை உன் இதயத்தில் வை.
என்ன அழகான சத்தியமான வார்த்தைகள்!!!!!
வெற்றி ஏணியில் ஏறி உச்சத்தை அடைய ஒவ்வொரு படியிலும் நாம் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டியவைகள் இங்கே அருமையாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. வாழ்கையில் வெற்றியடைய எல்லோரும் அறிந்து கொள்ள.
100: I did! வெற்றியடைந்துவிட்டேன்!!!!
90: I will நான் செய்வேன்
80: I can என்னால் முடியும்
70: Think I can என்னால் இயலுமென்று நினைக்கிறேன்
60: I might என்னால் முடியுமோ
50: I think I might என்னால் முடியுமென்று நினைக்கிறேன்
40: What is it அதென்ன
30: I wish I would செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்
20: I don't know how எப்படியென்று தெரியவில்லை
10: I can't என்னால் இயலாது
0: I won't நான் மாட்டேன்
இப்படி ஒவ்வொரு படியிலும் சொல்லிக்கொண்டே ஏறினால் 'சிங்க நடை போட்டு சிகரத்திலும் ஏறலாமே!'
வாருங்கள் செல்லங்களே! உங்களை நான் முதல் படியில் ஏற்றி விடுகிறேன். பிறகு...பிள்ளைகளே!
உங்கள் சமத்து!!! எல்லோரு வெற்றிச் சிகரத்தை தொட என் வாழ்த்துக்கள்!!!!
Sunday, October 12, 2008
அக்டோபர் மாத PiT-க்கு என்னோட மிரட்டல்!
ஆமாம்! இதுதான் 'THE KINGKONG OF REFREGIRATORS!'
'அம்மா! நாம்பளும் இதையே வாங்கிக்கலாமா?'
ஆமா..ஆமா..வாங்கிக்க கண்ணு...!
நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும்? எனக்கு எல்லாம் செய்தது. புரியலையா?
படத்திலிருக்கும் நாளையும் கோளையும்(நேரத்தையும்) கிரகங்கள் எல்லாம் சேர்ந்து செய்த சதியால் என்னால் எடுக்க முடியவில்லை.
பிட்டின் நடுவர்களே!! விதி அதாவது ரூல்ஸ் இடம் கொடுத்தால் முதல் படம் போட்டிக்கு.இல்லயேல் பார்வைக்கு.
Thursday, September 4, 2008
பால்கோவா - AMC cookware-ல் சமையல் குறிப்பு
AMC- சமையல் பாத்திரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
'இது ஒரு ஜெர்மன் தயாரிப்பு. சர்ஜிகல்
மெட்டல், அதாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலோகத்தாலானது.
விரைவாக சூடேறும். அதே நேரம் சமையல் எண்ணையும் எரிவாயுவும் குறைவாக செலவாகும்.
என்ணையில்லா சமையலுக்கு ஏதுவானது.' இப்படியெல்லாம் வாசல் கதவைத்தட்டி, டைகட்டிய
ஸேல்ஸ் பர்சன் ஒருவர் வந்து விரிவுரை ஆற்றி கவிழாத ரங்கமணியையும் கவிழ்த்துவிட்டார்.
வழக்கமாக இப்படி வருவோரை கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓட வைப்பவர். இப்போது 'வாங்கலாமே!' என்று முடிவெடுத்துவிட்டார்.வந்தவரும் கடைசி வரை விலையைச் சொல்லாமல் பயன் பாடுகளை அழகாகச் சொல்லி 'பரவாயில்லை! இந்த விலை கொடுக்கலாம்.' என்று முடிவெடுக்க வைத்துவிட்டார். ரங்கமணியைப் பற்றித் தெரிந்ததனால் ஆரம்பத்தில் ஆர்வமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். வாங்கலாம் என்றதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.
வாங்கி உபயோகித்ததும் அவர் சொன்னது எதுவும் பொய்யில்லை என்று உணர்ந்தேன்.
அந்த AMC பாத்திரத்தில் செய்ததுதான் இந்த பால்கோவா!!

தேவையானவைகள்
பால் - இரண்டு லிட்டர்
சர்க்கரை - அரைக் கிலோ
பாம்பே ரவை - 200 கிராம்
குங்குமப்பூ - 2 பிஞ்
நெய் - 50 கிராம்
பச்சைக் கற்பூரம்
கிண்டலாமா
பாலை ஏஎம்சி பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு மூடவும். மூடியிலுள்ள
மீட்டரில் சிவப்பு பாயிண்டுக்கு வந்ததும் மூடியை எடுத்துவிட்டு கொதிக்கவிடவும். இடையிடயே
கிண்டவும். இந்த பாத்திரத்தில் மற்ற பாத்திரங்களைப்போல் அடி பிடிக்காது. ஓரங்களில் பால் சேராமல் கிண்டிக்கொண்டேயிருக்கவும். பச்சைக் கற்பூரத்தை உள்ளங்கையில் வைத்து நசுக்கி உதிர்த்து பாலோடு சேர்க்கவும்.

பால் பாதி சுண்டியதும் குங்குமப்பூவையும் ரவையையும் போட்டு கட்டி விழாமல் கிளரவும்
ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து விடாமல் கிண்டவும்
பாலும் ரவையும் சேர்ந்து சுருள, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைத்து விடவும்.

தேவையான பாத்திரத்துக்கு மாற்றி ஆறவிடவும். ரவை பால்கோவா தயார்.
இனிப்புகளில் பச்சைக் கற்பூரம் சேர்ப்பது பற்றி சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன்.
அப்பாவிடம் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஜவ்வாது, கோரசனை போன்ற பொருட்கள்
ஸ்டாக் இருக்கும் எங்களுக்குத்தேவையான போது அப்பாவிடம் போய் வாங்கிக் கொள்வோம்.
குங்குமப்பூ அளந்து தருவதே ஓர் அழகு. சின்ன தராசில் ஒரு ரூபாய் வெள்ளி நாணயத்தை
ஒரு பக்கமும் அந்த ஒரு ரூபாய் எடைக்கு குங்குமப்பூவும் நிறுத்து இன்ஜெக்ஷன் பாட்டிலில்
போட்டு தருவார்கள். கடையில் அதன் விலையும் தெரியாது. அப்பா காலத்துக்குப் பிறகுதான் குங்குமப்பூவின் விலையே தெரிந்தது. பச்சைக்கற்பூரமும் ஒரு சிறிய பாட்டிலில் தருவார்கள்.பச்சைக் கற்பூரத்தை சேர்க்கும் காரணமே தெரியாமல் அப்பா சொன்னதால் உபயோகித்துக்கொண்டிருந்தோம். காரணமும் கேட்கத் தெரியாது. அதிக இனிப்பு சாப்பிடுவதால்
ஏற்படும் சர்க்கரை நோயை மட்டுப்படுத்தவே இனிப்பில் பச்சைக் கற்பூரம் சேர்க்கிறோம்.

இந்த ரவை சேர்த்து பால்கோவா செய்யும் முறையை எனக்கு சொல்லித்தந்தவர் என் மதனியின்
சகோதரி திருமதி மணி. அவர் செய்து கொடுத்ததை ருசித்தவுடன் பக்குவம் கேட்டு தெரிந்து கொண்டேன். பால்கோவாவில் பால் தவிர என்ன சேர்ந்திருக்கிறது என்று கேட்ட போது
எங்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள்!!!
என்னாத்த கண்டுபிடிக்க..? அதான் அப்பன் குதிருக்குள் என்று தான் சொல்லிட்டயே?
'இது ஒரு ஜெர்மன் தயாரிப்பு. சர்ஜிகல்
மெட்டல், அதாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலோகத்தாலானது.
விரைவாக சூடேறும். அதே நேரம் சமையல் எண்ணையும் எரிவாயுவும் குறைவாக செலவாகும்.
என்ணையில்லா சமையலுக்கு ஏதுவானது.' இப்படியெல்லாம் வாசல் கதவைத்தட்டி, டைகட்டிய
ஸேல்ஸ் பர்சன் ஒருவர் வந்து விரிவுரை ஆற்றி கவிழாத ரங்கமணியையும் கவிழ்த்துவிட்டார்.
வழக்கமாக இப்படி வருவோரை கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓட வைப்பவர். இப்போது 'வாங்கலாமே!' என்று முடிவெடுத்துவிட்டார்.வந்தவரும் கடைசி வரை விலையைச் சொல்லாமல் பயன் பாடுகளை அழகாகச் சொல்லி 'பரவாயில்லை! இந்த விலை கொடுக்கலாம்.' என்று முடிவெடுக்க வைத்துவிட்டார். ரங்கமணியைப் பற்றித் தெரிந்ததனால் ஆரம்பத்தில் ஆர்வமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். வாங்கலாம் என்றதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.
வாங்கி உபயோகித்ததும் அவர் சொன்னது எதுவும் பொய்யில்லை என்று உணர்ந்தேன்.
அந்த AMC பாத்திரத்தில் செய்ததுதான் இந்த பால்கோவா!!
தேவையானவைகள்
பால் - இரண்டு லிட்டர்
சர்க்கரை - அரைக் கிலோ
பாம்பே ரவை - 200 கிராம்
குங்குமப்பூ - 2 பிஞ்
நெய் - 50 கிராம்
பச்சைக் கற்பூரம்
கிண்டலாமா
பாலை ஏஎம்சி பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு மூடவும். மூடியிலுள்ள
மீட்டரில் சிவப்பு பாயிண்டுக்கு வந்ததும் மூடியை எடுத்துவிட்டு கொதிக்கவிடவும். இடையிடயே
கிண்டவும். இந்த பாத்திரத்தில் மற்ற பாத்திரங்களைப்போல் அடி பிடிக்காது. ஓரங்களில் பால் சேராமல் கிண்டிக்கொண்டேயிருக்கவும். பச்சைக் கற்பூரத்தை உள்ளங்கையில் வைத்து நசுக்கி உதிர்த்து பாலோடு சேர்க்கவும்.
பால் பாதி சுண்டியதும் குங்குமப்பூவையும் ரவையையும் போட்டு கட்டி விழாமல் கிளரவும்
ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து விடாமல் கிண்டவும்
பாலும் ரவையும் சேர்ந்து சுருள, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
தேவையான பாத்திரத்துக்கு மாற்றி ஆறவிடவும். ரவை பால்கோவா தயார்.
இனிப்புகளில் பச்சைக் கற்பூரம் சேர்ப்பது பற்றி சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன்.
அப்பாவிடம் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஜவ்வாது, கோரசனை போன்ற பொருட்கள்
ஸ்டாக் இருக்கும் எங்களுக்குத்தேவையான போது அப்பாவிடம் போய் வாங்கிக் கொள்வோம்.
குங்குமப்பூ அளந்து தருவதே ஓர் அழகு. சின்ன தராசில் ஒரு ரூபாய் வெள்ளி நாணயத்தை
ஒரு பக்கமும் அந்த ஒரு ரூபாய் எடைக்கு குங்குமப்பூவும் நிறுத்து இன்ஜெக்ஷன் பாட்டிலில்
போட்டு தருவார்கள். கடையில் அதன் விலையும் தெரியாது. அப்பா காலத்துக்குப் பிறகுதான் குங்குமப்பூவின் விலையே தெரிந்தது. பச்சைக்கற்பூரமும் ஒரு சிறிய பாட்டிலில் தருவார்கள்.பச்சைக் கற்பூரத்தை சேர்க்கும் காரணமே தெரியாமல் அப்பா சொன்னதால் உபயோகித்துக்கொண்டிருந்தோம். காரணமும் கேட்கத் தெரியாது. அதிக இனிப்பு சாப்பிடுவதால்
ஏற்படும் சர்க்கரை நோயை மட்டுப்படுத்தவே இனிப்பில் பச்சைக் கற்பூரம் சேர்க்கிறோம்.
இந்த ரவை சேர்த்து பால்கோவா செய்யும் முறையை எனக்கு சொல்லித்தந்தவர் என் மதனியின்
சகோதரி திருமதி மணி. அவர் செய்து கொடுத்ததை ருசித்தவுடன் பக்குவம் கேட்டு தெரிந்து கொண்டேன். பால்கோவாவில் பால் தவிர என்ன சேர்ந்திருக்கிறது என்று கேட்ட போது
எங்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள்!!!
என்னாத்த கண்டுபிடிக்க..? அதான் அப்பன் குதிருக்குள் என்று தான் சொல்லிட்டயே?
Wednesday, September 3, 2008
பிறந்தநாள் விருந்து - சமையல் குறிப்பு
என் பிறந்த நாளுக்காக வாழ்த்துக்களும் சொல்லி, சமையல் கலை பதிவர்களை எனக்கு விருந்து வைக்க ஆளுக்கொரு பதார்த்தம் செய்து வரும்படி அன்பு வேண்டுகோளும் வைத்திருந்தார்..சகோதரி தூயா!! ஆஹா! எங்கள் குடும்பத்தில் நான்தான் அடிக்கடி விருந்து வைப்பேன். எனக்கே விருந்தா? ரொம்ப சந்தோஷமாயிருந்தது. ஆனாலும் வெறுங்கையை வீசிக்கொண்டு செல்ல மனமில்லாததால் பிறந்தநாளன்று குக்கிய ஸ்பெஷல் விருந்தை எல்லோரோடும் சேர்ந்துண்ண அவற்றை இங்கே படைக்கிறேன்.
எக் கிரேவி:

தேவையானவை:
பெரிய வெங்காயம் - நான்கு
பெங்களூரு தக்காளி - பெரியது இரண்டு...சதைப் பற்றுக்காக
நாட்டுத் தக்காளி - இரண்டு...புளிப்புக்காக
ஜிஜி பேஸ்ட் - இரண்டு ஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று, இரண்டாகக் கீறியது
மஞ்சள் பொடி - ஒரு ஸ்பூன்
மிளகாய் பொடி - இரண்டு ஸ்பூன்(அல்லது காரத்துக்கேற்ப)
ஜீராப் பொடி - அரை ஸ்பூன்
தனியா பொடி - மூன்று ஸ்பூன்
பொட்டுக்கடலை, வேர்கடலை, முந்திரி மிக்ஸியில் பொடித்தது - இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்
அளவாக அவித்து தோலுறித்த முட்டைகள் - நான்கு(இருக்கும் நபர்களுக்குத் தக்கவாறு)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணை - அரைக்கப்
கறிவேப்பிலை - தாளிக்க
பச்சைக் கொத்தமல்லி - அலங்கரிக்க
இப்ப செய்யலாமா?
வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக சாப்பிக்கொள்ளவும். கடாயில் எண்ணை ஊற்றி
முதலில் வெங்காயத்தைப் போடவும். அதோடு கறிவேப்பிலை, ஜிஜி பேஸ்ட் போடவும். நன்கு சிவக்க வறுபட்டதும் தக்காளியை சேர்க்கவும். கொஞ்சம் பிறட்டி, மஞ்சள், மிளகாய், ஜீரா, தனியா பொடிகளைப் போட்டு மறுபடியும் பிறட்டி சிறிது நேரம் மூடி வைக்கவும்.
வெங்காயம் தக்காளி அடையாளம் தெரியாதபடி குழம்பாக மாறியிருக்கும். தேவையான உப்பு
சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஒன்று சேர்ந்தவுடன் பொட்டுக்கடலைப் பொடியை தண்ணீர் விட்டு குழப்பி குழம்பில் சேர்க்கவும். கிரேவி இப்போது
திக்காக வந்திருக்கும். பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி ஊறித்து வைத்திருக்கும் முட்டைகளை
திசைக்கொன்றாக வைத்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். விரும்பினால் கிரீமும் விட்டு அலங்கரித்தால் சூப்பராயிருக்கும்.
கலர்புல் மிண்ட் ரைஸ்:
தேவையானவை:
பிரியாணி அரிசி - இரண்டு கப்
பெரிய வெங்காயம் - நீளமாக அரிந்தது.
புதினா - ஒரு கட்டு சின்னது. இலைகள் ஆய்ந்து சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்தது.
பூண்டு - 6-7 பல்
இஞ்சி - சிறு துண்டு பொடியாக அரிந்தது
பச்சை மிளகாய் - 2-3 நீளவாட்டில் கீறியது
ஏலக்காய் - இரண்டு
கிராம்பு - இரண்டு
பிரிஞ்சி இலை - ஒன்று
பிரியாணி வேக வைக்க - 3 கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால்(திக் பால் வேண்டாம். நீர்க்க இருந்தால் போதுமானது)
மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற குடமிளகாய்கள் க்யூப் க்யூபாக நறுக்கியது.
உப்பு - தேவைக்கேற்ப
ரிபைண்ட் ஆயில் அல்லது நெய்
மூன்று ஸ்பூன் நெய் விட்டு வறுத்த முந்திரி - அலங்கரிக்க
பச்சைக் கொத்தமல்லி - பொடியாக அரிந்தது அலங்கரிக்க
செய்யலாமா?
பிரியாணி அரிசியை அரை மணிநேரம் நீரில் ஊறவைக்கவும்.
பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணை ஊற்றவும். காய்ந்ததும் ஏலம், கிராம்பு, பிரிஞ்சி இலைபோட்டு பொறிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, அரைத்த புதினா விழுது சேர்த்து வதக்கவும். பிறகு ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீரில்லாமல் நன்கு வடிகட்டி அதையும் சிறிது நெய் விட்டு வதக்கவும். நல்ல வதங்கியதும் மூன்று கப் தண்ணீர் ஒரு கப் தேங்காய்பாலும் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் புதுனா வாசம் வாசல் கதவு வழியாக வெளியேறி, போவோர் வருவோரையெல்லாம் வாசம் பிடிக்கச் சொல்லும்.
அரிசி பாதி வெந்ததும் உப்பைப் போடவும். முக்கால் பதம் வெந்ததும் பாத்திரத்தை மூடி அடுப்பை அணைத்து விடவும். 'தம்மரோ தம்' என்று தம்மிலேயே உதிரி உதிரியாக வெந்துவிடும்.
பரிமாறுவதற்கு முன் கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்து உடன் க்யூபாக நறுக்கி வைத்துள்ள கலர் குடமிளகாய்களையும் லேசாக வதக்கி பிரியாணியில் சேர்த்து கலந்து பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி கொத்தமல்லித் தழை தூவி 'கேவாக்கலர், டெக்னிக்கலர், ஈஸ்ட்மன்கலர்'
போல 'கேப்ஸிக்கலர்' புலாவ் என்று சொல்லி அசத்திருங்கள்!!(அசந்துருவீங்கதானே?)
இந்த இரண்டு ஐட்டமும் நான் கொண்டு வாரேன்...பாட்லெக்குக்கு. வாருங்கள் எல்லோரும்
சேர்ந்து உண்ணலாம்...சூப்பர்..சூப்பரென்று பாடலாம்!! சேரியா? எப்படி இருந்துதுன்னும்
சொல்லிப்போடுங்க.
நல்ல சாப்பாட்டுக்குப் பிறகு இனிப்பு வேணுமில்லையா? பொறுங்க...பொறுங்க... அடுத்த பதிவில் இனிப்பும் வருது.
குடமிளகாயையும்

இன்று பிள்ளையார் சதுர்த்தி!!அனைவருக்கும் வினாயகரின் அருள் சித்திக்கட்டும்!!!!
எக் கிரேவி:
தேவையானவை:
பெரிய வெங்காயம் - நான்கு
பெங்களூரு தக்காளி - பெரியது இரண்டு...சதைப் பற்றுக்காக
நாட்டுத் தக்காளி - இரண்டு...புளிப்புக்காக
ஜிஜி பேஸ்ட் - இரண்டு ஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று, இரண்டாகக் கீறியது
மஞ்சள் பொடி - ஒரு ஸ்பூன்
மிளகாய் பொடி - இரண்டு ஸ்பூன்(அல்லது காரத்துக்கேற்ப)
ஜீராப் பொடி - அரை ஸ்பூன்
தனியா பொடி - மூன்று ஸ்பூன்
பொட்டுக்கடலை, வேர்கடலை, முந்திரி மிக்ஸியில் பொடித்தது - இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்
அளவாக அவித்து தோலுறித்த முட்டைகள் - நான்கு(இருக்கும் நபர்களுக்குத் தக்கவாறு)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணை - அரைக்கப்
கறிவேப்பிலை - தாளிக்க
பச்சைக் கொத்தமல்லி - அலங்கரிக்க
இப்ப செய்யலாமா?
வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக சாப்பிக்கொள்ளவும். கடாயில் எண்ணை ஊற்றி
முதலில் வெங்காயத்தைப் போடவும். அதோடு கறிவேப்பிலை, ஜிஜி பேஸ்ட் போடவும். நன்கு சிவக்க வறுபட்டதும் தக்காளியை சேர்க்கவும். கொஞ்சம் பிறட்டி, மஞ்சள், மிளகாய், ஜீரா, தனியா பொடிகளைப் போட்டு மறுபடியும் பிறட்டி சிறிது நேரம் மூடி வைக்கவும்.
வெங்காயம் தக்காளி அடையாளம் தெரியாதபடி குழம்பாக மாறியிருக்கும். தேவையான உப்பு
சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஒன்று சேர்ந்தவுடன் பொட்டுக்கடலைப் பொடியை தண்ணீர் விட்டு குழப்பி குழம்பில் சேர்க்கவும். கிரேவி இப்போது
திக்காக வந்திருக்கும். பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி ஊறித்து வைத்திருக்கும் முட்டைகளை
திசைக்கொன்றாக வைத்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். விரும்பினால் கிரீமும் விட்டு அலங்கரித்தால் சூப்பராயிருக்கும்.
கலர்புல் மிண்ட் ரைஸ்:
தேவையானவை:
பிரியாணி அரிசி - இரண்டு கப்
பெரிய வெங்காயம் - நீளமாக அரிந்தது.
புதினா - ஒரு கட்டு சின்னது. இலைகள் ஆய்ந்து சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்தது.
பூண்டு - 6-7 பல்
இஞ்சி - சிறு துண்டு பொடியாக அரிந்தது
பச்சை மிளகாய் - 2-3 நீளவாட்டில் கீறியது
ஏலக்காய் - இரண்டு
கிராம்பு - இரண்டு
பிரிஞ்சி இலை - ஒன்று
பிரியாணி வேக வைக்க - 3 கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால்(திக் பால் வேண்டாம். நீர்க்க இருந்தால் போதுமானது)
மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற குடமிளகாய்கள் க்யூப் க்யூபாக நறுக்கியது.
உப்பு - தேவைக்கேற்ப
ரிபைண்ட் ஆயில் அல்லது நெய்
மூன்று ஸ்பூன் நெய் விட்டு வறுத்த முந்திரி - அலங்கரிக்க
பச்சைக் கொத்தமல்லி - பொடியாக அரிந்தது அலங்கரிக்க
செய்யலாமா?
பிரியாணி அரிசியை அரை மணிநேரம் நீரில் ஊறவைக்கவும்.
பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணை ஊற்றவும். காய்ந்ததும் ஏலம், கிராம்பு, பிரிஞ்சி இலைபோட்டு பொறிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, அரைத்த புதினா விழுது சேர்த்து வதக்கவும். பிறகு ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீரில்லாமல் நன்கு வடிகட்டி அதையும் சிறிது நெய் விட்டு வதக்கவும். நல்ல வதங்கியதும் மூன்று கப் தண்ணீர் ஒரு கப் தேங்காய்பாலும் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் புதுனா வாசம் வாசல் கதவு வழியாக வெளியேறி, போவோர் வருவோரையெல்லாம் வாசம் பிடிக்கச் சொல்லும்.
அரிசி பாதி வெந்ததும் உப்பைப் போடவும். முக்கால் பதம் வெந்ததும் பாத்திரத்தை மூடி அடுப்பை அணைத்து விடவும். 'தம்மரோ தம்' என்று தம்மிலேயே உதிரி உதிரியாக வெந்துவிடும்.
பரிமாறுவதற்கு முன் கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்து உடன் க்யூபாக நறுக்கி வைத்துள்ள கலர் குடமிளகாய்களையும் லேசாக வதக்கி பிரியாணியில் சேர்த்து கலந்து பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி கொத்தமல்லித் தழை தூவி 'கேவாக்கலர், டெக்னிக்கலர், ஈஸ்ட்மன்கலர்'
போல 'கேப்ஸிக்கலர்' புலாவ் என்று சொல்லி அசத்திருங்கள்!!(அசந்துருவீங்கதானே?)
இந்த இரண்டு ஐட்டமும் நான் கொண்டு வாரேன்...பாட்லெக்குக்கு. வாருங்கள் எல்லோரும்
சேர்ந்து உண்ணலாம்...சூப்பர்..சூப்பரென்று பாடலாம்!! சேரியா? எப்படி இருந்துதுன்னும்
சொல்லிப்போடுங்க.
நல்ல சாப்பாட்டுக்குப் பிறகு இனிப்பு வேணுமில்லையா? பொறுங்க...பொறுங்க... அடுத்த பதிவில் இனிப்பும் வருது.
குடமிளகாயையும்
இன்று பிள்ளையார் சதுர்த்தி!!அனைவருக்கும் வினாயகரின் அருள் சித்திக்கட்டும்!!!!
Sunday, August 24, 2008
மனம் நிறைந்த பிறந்தநாள்!!

சங்கத்தின் சுவரொட்டி மூலம் என் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வலையுலக சகோதர சகோதரிகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், (இருந்தால்) கொள்ளுப்பேரப்பிள்ளைகள் கட்டாயம் இருக்கும், இப்போதுதான் பொறந்ததுமே....நண்டு நாழிகள் எல்லாம் ப்ளாக்கில் எழுதுறாங்களே!!
(இங்கு...ஆக்குன்னு). உங்கள் அனைவருக்கும் என் இதயப் பூர்வமான நன்றிகள் உரித்தாகுக.

வாழ்த்து அட்டைகள் காலம் பறந்தே...போச்சு! ஒரு போன் அல்லது ஈ-மெயில் சோலி முடிஞ்சுது!
Thursday, August 21, 2008
எனக்குப் பிடிச்ச சொதி.
நெல்லைச்சீமைக்கு விருந்துக்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக ஒன்று கூட்டாஞ்சோறு
அல்லது இந்த சொதியை மணக்க மணக்க பரிமாறி திணறடித்துவிடுவார்கள். குறிப்பாக திருமணம் முடிந்த மறுநாள் மத்தியானச் சாப்பாடு 'சொதி சாப்பாடாகத்தானிருக்கும்'.
இப்போதெல்லாம் மாப்பிள்ளை வீட்டு, மறுவீட்டு சாப்பாடாக போட்டுவிடுவார்கள். முன்போல் மறுவீடு என்று மாப்பிள்ளை வீட்டில் பெண் வீட்டாரை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விரூந்து வைப்பதற்குப் பதில் கல்யாண மண்டபத்திலேயே மறுநாள் மத்தியான சாப்பாடாக
போட்டுகிறார்கள். அதாவது அந்த செலவு அவர்களது. இவர்களுக்கும் அலைச்சல் மிச்சம்.
சரி...சொதி செய்வதை, 'எப்படி...எடுத்துரைப்பேன்?'
இப்படித்தான்!!
சொதிக்குத் தேவையானவைகள்:
தேங்காய்- அரை மூடித் தேங்காய் இரண்டு பேருக்கு என்ற அளவில்
துருவி மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து முதல், இரண்டாம், மூன்றாம் பால்
என்று தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பு: இரண்டு கப் வேகவைத்து மசித்தது.
தேவையான காய்கறிகள்: காரட், பீன்ஸ், பட்டாணி, உருளை, பிஞ்சு கத்தரிக்காய்,
முருங்கைக்காய், இவற்றை அவியலுக்கு நறுக்குவது போல் நறுக்கிக்
கொள்ளவும், பூண்டு பெரிய பல்லாக 10 அல்லது15
அரைக்கத் தேவையானவைகள்: காரத்துக்கேற்ப பச்சைமிளகாய், இஞ்சி விரலளவு ரெண்டு
துண்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
புளிப்புக்கு: எலுமிச்சம் பழம் ரெண்டு அல்லது மூன்று, சாறு எடுத்துக்கொள்ளவும்
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில் மூன்றாவது பாலை விட்டு கொதித்ததும் பீன்ஸ்,காரட்,உருளை இவற்றை முதலில்
போட்டு அவை பாதி வெந்ததும் கத்தரிக்காய்,முருங்கைக்காய்,பட்டாணி,பூண்டு ஆகியவற்றைப் போட்டு வேகவிடவும். காய்கள் வெந்ததும் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்க்கவும். பின் அரைத்த பச்சைமிளகாய் இஞ்சியையும் சேர்க்கவும். பிறகு இரண்டாவதுபாலை ஊற்றவும்.
சொதி..ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு திக்கான முதல் பாலை ஊற்றி பின்
பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் து.....வி இறக்கினால்...அந்த மணம்..
ஹய்..!சொதி..சொதி..என்று குதித்தோடி வருவார்கள். யாரெல்லாம்? பெரியவர்களும் சிறியவர்களும்தான்!!
இதற்கு 'மேட்சான ஜாக்கெட்' ரிப்பன், கண்ணாடி வளையல்கள்: உருளைக்கிழங்கு காரக்கறி மற்றும் உருளக்கிழங்கு சிப்ஸ், இஞ்சிப் பச்சடி(இனிப்பு அல்லது காரம். இல்லேன்னா ரெண்டுமே!)
இவற்றையெல்லாம் பரிமாறி, 'ஊடு கட்டி ஒரு பிடி பிடித்தால்...தயிர்சாதம் பக்கமே வரமாட்டார்கள். அம்புட்டு சொதியும் காலீ.....ஆயிடும். அம்புட்டு ருசில்லா?
தேங்காய் பாலில் செய்வதால் சுலபமாக ஜீரணிக்க இஞ்சிப் பச்சடி உதவும்.
அல்லது இந்த சொதியை மணக்க மணக்க பரிமாறி திணறடித்துவிடுவார்கள். குறிப்பாக திருமணம் முடிந்த மறுநாள் மத்தியானச் சாப்பாடு 'சொதி சாப்பாடாகத்தானிருக்கும்'.
இப்போதெல்லாம் மாப்பிள்ளை வீட்டு, மறுவீட்டு சாப்பாடாக போட்டுவிடுவார்கள். முன்போல் மறுவீடு என்று மாப்பிள்ளை வீட்டில் பெண் வீட்டாரை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விரூந்து வைப்பதற்குப் பதில் கல்யாண மண்டபத்திலேயே மறுநாள் மத்தியான சாப்பாடாக
போட்டுகிறார்கள். அதாவது அந்த செலவு அவர்களது. இவர்களுக்கும் அலைச்சல் மிச்சம்.
சரி...சொதி செய்வதை, 'எப்படி...எடுத்துரைப்பேன்?'
இப்படித்தான்!!
சொதிக்குத் தேவையானவைகள்:
தேங்காய்- அரை மூடித் தேங்காய் இரண்டு பேருக்கு என்ற அளவில்
துருவி மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து முதல், இரண்டாம், மூன்றாம் பால்
என்று தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பு: இரண்டு கப் வேகவைத்து மசித்தது.
தேவையான காய்கறிகள்: காரட், பீன்ஸ், பட்டாணி, உருளை, பிஞ்சு கத்தரிக்காய்,
முருங்கைக்காய், இவற்றை அவியலுக்கு நறுக்குவது போல் நறுக்கிக்
கொள்ளவும், பூண்டு பெரிய பல்லாக 10 அல்லது15
அரைக்கத் தேவையானவைகள்: காரத்துக்கேற்ப பச்சைமிளகாய், இஞ்சி விரலளவு ரெண்டு
துண்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
புளிப்புக்கு: எலுமிச்சம் பழம் ரெண்டு அல்லது மூன்று, சாறு எடுத்துக்கொள்ளவும்
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில் மூன்றாவது பாலை விட்டு கொதித்ததும் பீன்ஸ்,காரட்,உருளை இவற்றை முதலில்
போட்டு அவை பாதி வெந்ததும் கத்தரிக்காய்,முருங்கைக்காய்,பட்டாணி,பூண்டு ஆகியவற்றைப் போட்டு வேகவிடவும். காய்கள் வெந்ததும் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்க்கவும். பின் அரைத்த பச்சைமிளகாய் இஞ்சியையும் சேர்க்கவும். பிறகு இரண்டாவதுபாலை ஊற்றவும்.
சொதி..ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு திக்கான முதல் பாலை ஊற்றி பின்
பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் து.....வி இறக்கினால்...அந்த மணம்..
ஹய்..!சொதி..சொதி..என்று குதித்தோடி வருவார்கள். யாரெல்லாம்? பெரியவர்களும் சிறியவர்களும்தான்!!
இதற்கு 'மேட்சான ஜாக்கெட்' ரிப்பன், கண்ணாடி வளையல்கள்: உருளைக்கிழங்கு காரக்கறி மற்றும் உருளக்கிழங்கு சிப்ஸ், இஞ்சிப் பச்சடி(இனிப்பு அல்லது காரம். இல்லேன்னா ரெண்டுமே!)
இவற்றையெல்லாம் பரிமாறி, 'ஊடு கட்டி ஒரு பிடி பிடித்தால்...தயிர்சாதம் பக்கமே வரமாட்டார்கள். அம்புட்டு சொதியும் காலீ.....ஆயிடும். அம்புட்டு ருசில்லா?
தேங்காய் பாலில் செய்வதால் சுலபமாக ஜீரணிக்க இஞ்சிப் பச்சடி உதவும்.
Monday, August 18, 2008
தக்காளியோதரை.....சமையல் குறிப்பு.
அதென்ன? புளியில் செய்தால் அது புளியோதரை!! அதுவே தக்காளியில் செய்தால், அது
தக்காளியோதரைதானே? சரிதானே துரைமார்களே! துரைசானிமார்களே?
நேற்று சமையலறைக்குள்...இன்று 'என்ன சமையலோ?' என்று பாடியவாறே நுழைந்தேன்.
என்னை பார்த்து கண்ணடித்தது கூடையிலிருந்த குறும்புக்கார தக்காளி ஒன்று.
ஆஹா! கண்ணா அடிக்கிறே..இன்று நீ கைமாதான். உடனே கோடவுனிலிருந்து குதித்தது ஐடியா ஒன்று. அதுதான்...தக்காளியோதரை!!
நன்கு பழுத்த தக்காளி....நாட்டுத்தக்காளியும்(புளிப்புக்கு) பெங்களூர் தக்காளியுமாக கால் கிலோ.வேகவைத்து தோலுறித்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்
2-ஸ்பூன் விதை தனியா
1 1/2 ஸ்பூன் வெந்தயம் இரண்டும் வெறும் கடாயில் வறுத்து பொடித்துக்கொள்ளவும்
காரத்துக்கேற்ப 8 அல்லது 10 காய்ந்த மிளகாய்...2 அல்லது 3-ஆக ஒடித்து வைத்துக்கொள்ளவும்
தாளிக்க - நல்லெண்ணை, வெந்தயம், கடுகு, உளுத்தப்பருப்பு, பெருங்காயம், ஜீரகம், பொட்டுக்கடலை,வேர்கடலை
கறிவேப்பிலை,உப்பு, வெல்லம்
அடுப்பில் கடாய் வைத்து அரைக்கப் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், அரை ஸ்பூன் வெந்தயம்,அரை ஸ்பூன் ஜீகரம், ஒரு ஸ்பூன் கடுகு, ஒன்றரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ரெண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, வேர்கடலை, காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை இவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். நன்கு வறு பட்டதும் அரைத்து வைத்துள்ள தக்காளி சாற்றையும் சேர்த்து கொதிக்கவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும். பொடித்து வைத்துள்ள மல்லி வெந்தயப் பொடியையும் சேர்த்து கொதிக்கவிடவும்.இடையிடையே நல்லெண்ணை விட்டுக்கொள்ளவும். நன்கு கொதித்து நீர் வற்றி எண்ணை வெளிவிடும்போது சிறிது வெல்லம் சேர்த்து இறக்கிவிடவும். தக்காளியோதரை மிக்ஸ் தயார்!!!!
பொலபொலவென வேகவைத்து ஆறவைத்த சாதத்தில் தேவையான அளவு தயார் செய்து வைத்துள்ள மிக்ஸை சேர்த்து கிளறி அதோடு மறுபடியும் கடுகு, உளுத்தம்பருப்பு,
பொட்டுக்கடலை வேர்கடலை, சிறிது பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் கொட்டி கலந்தபொடியாக அரிந்த பச்சைக் கொத்தமல்லி தூவினால் சுவையான மணமான தக்காளியோதரை தயார்!!
நல்லாருந்துதுங்க.....நிஜம்மா...சும்மா ஒரே ரூட்டில் போகிறோமே என்று, 'நாட்டாமை!!
ரூட்ட மாத்து!' ன்னு சொன்னா மாதிரி நான் மாத்தின ரூட்டில் கிடைத்ததுதான் இந்த
தக்காளியோதரை!!
தக்காளியோதரைதானே? சரிதானே துரைமார்களே! துரைசானிமார்களே?
நேற்று சமையலறைக்குள்...இன்று 'என்ன சமையலோ?' என்று பாடியவாறே நுழைந்தேன்.
என்னை பார்த்து கண்ணடித்தது கூடையிலிருந்த குறும்புக்கார தக்காளி ஒன்று.
ஆஹா! கண்ணா அடிக்கிறே..இன்று நீ கைமாதான். உடனே கோடவுனிலிருந்து குதித்தது ஐடியா ஒன்று. அதுதான்...தக்காளியோதரை!!
நன்கு பழுத்த தக்காளி....நாட்டுத்தக்காளியும்(புளிப்புக்கு) பெங்களூர் தக்காளியுமாக கால் கிலோ.வேகவைத்து தோலுறித்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்
2-ஸ்பூன் விதை தனியா
1 1/2 ஸ்பூன் வெந்தயம் இரண்டும் வெறும் கடாயில் வறுத்து பொடித்துக்கொள்ளவும்
காரத்துக்கேற்ப 8 அல்லது 10 காய்ந்த மிளகாய்...2 அல்லது 3-ஆக ஒடித்து வைத்துக்கொள்ளவும்
தாளிக்க - நல்லெண்ணை, வெந்தயம், கடுகு, உளுத்தப்பருப்பு, பெருங்காயம், ஜீரகம், பொட்டுக்கடலை,வேர்கடலை
கறிவேப்பிலை,உப்பு, வெல்லம்
அடுப்பில் கடாய் வைத்து அரைக்கப் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், அரை ஸ்பூன் வெந்தயம்,அரை ஸ்பூன் ஜீகரம், ஒரு ஸ்பூன் கடுகு, ஒன்றரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ரெண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, வேர்கடலை, காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை இவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். நன்கு வறு பட்டதும் அரைத்து வைத்துள்ள தக்காளி சாற்றையும் சேர்த்து கொதிக்கவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும். பொடித்து வைத்துள்ள மல்லி வெந்தயப் பொடியையும் சேர்த்து கொதிக்கவிடவும்.இடையிடையே நல்லெண்ணை விட்டுக்கொள்ளவும். நன்கு கொதித்து நீர் வற்றி எண்ணை வெளிவிடும்போது சிறிது வெல்லம் சேர்த்து இறக்கிவிடவும். தக்காளியோதரை மிக்ஸ் தயார்!!!!
பொலபொலவென வேகவைத்து ஆறவைத்த சாதத்தில் தேவையான அளவு தயார் செய்து வைத்துள்ள மிக்ஸை சேர்த்து கிளறி அதோடு மறுபடியும் கடுகு, உளுத்தம்பருப்பு,
பொட்டுக்கடலை வேர்கடலை, சிறிது பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் கொட்டி கலந்தபொடியாக அரிந்த பச்சைக் கொத்தமல்லி தூவினால் சுவையான மணமான தக்காளியோதரை தயார்!!
நல்லாருந்துதுங்க.....நிஜம்மா...சும்மா ஒரே ரூட்டில் போகிறோமே என்று, 'நாட்டாமை!!
ரூட்ட மாத்து!' ன்னு சொன்னா மாதிரி நான் மாத்தின ரூட்டில் கிடைத்ததுதான் இந்த
தக்காளியோதரை!!
Friday, August 15, 2008
ஆகஸ்ட் ரெண்டாவது PiT...
கலக்குவேன்...கலக்குவேன்...முக்கோணம் கட்டி கலக்குவேன்.
மில்வாக்கி மியூசியத்தில், மியூசியம் போகும் பாதையின் ஒரு பக்கத்தில் இது மாதிரி அயில் அயிலாக இடையில் அமர்ந்து கொள்ள பெஞ்சுகள்.இங்கிருந்து பார்த்தால் அழகான லேக் வியூ கிடைக்கும். ஒவ்வொரு அயிலின் இடையிலும் நின்று படமெடுத்த்டுக்கொண்டோம். அதில் தூ...ரத்தில் நின்று எடுத்தது.
அதே மியூசியத்தில் சென்டர் ஹால். கீழே தெரிவது பிரதிப்பலிப்புத்தான்.
மியூசியத்தைப் பற்றி பதிவாகப் போட நினைத்திருந்தேன். அதற்குள் 'தலைப்பில்லாப் படம்'
போடலாமென்றார்கள். போட்டுட்டேன்.
இரண்டு பிட்டும் பார்வைக்குத்தான், போட்டிக்கல்ல
காரணம் நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க. சேரியா?
ஆகஸ்ட் முதல் PiT...பிட்..பிட்
Thursday, August 7, 2008
Subscribe to:
Posts (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...