Tuesday, March 6, 2007

மலர்களைப்போல் தங்கை......

படிக்கிற காலத்தில் பார்த்த ஹிந்திப்படங்களில் வரும் சகோதரபாசத்தைக்
காட்டும் ரக்ஷா பந்தன் காட்சிகளில் மனம் லயித்து நானும் அதுபோல் என்
அண்ணன்களுக்கு ராக்கி கட்டவேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவேன்.
ஆனால் ராக்கிகளை கண்டதில்லை(வெறும் ஜரிகை கயிறு போதும் என்று
பிறகு தானே தெரிந்தது! திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு
சென்னைக்கு மாற்றலாகி வந்து, ஆதம்பாக்கத்தில் குடியேறினோம்.
ஆவணிமாதத்தில் கடைகளில் அட்டைஅட்டையாக் தொங்கிக்கொண்டிருந்தது
என் கனவு 'ராக்கி'! ஆஹா! மனதில் குப்பென்று பூ பூத்தது! கண்டேன் ராக்கியை
என்று கூவிக்கொண்டே வாங்கிக்கொண்டு வீடு வந்து மூன்று அண்ணன்களுக்கும் தபாலில் அனுப்பினேன். பதிலில்லை! அவர்களுக்கும் இது போல் ஆசை இருந்திருக்கவேண்டும்-பூ பூத்திருக்கவேண்டும்,இல்லைபோலும்
ஒகே! டேக்கிட் ஈஸி பாலிசி. ஆனாலும் ஆசை விடவில்லை.
என் மகள் மூலம் நிறைவேற்றிக்கொண்டேன்....கொண்டிருக்கிறேன்!
அடுத்த வருடம் அவளை அவள் சகோதரனுக்கு கட்டவைத்து அழகு பார்த்தேன். மேலும் குடும்பத்திலுள்ள சகோதரர்கள் எல்லோருக்கும் கட்டவைத்து மகிழ்ந்தேன். வருடங்கள் ஓட...அதிர்ஷ்டவசமாக அவள்
திருமணத்துக்கு மறுநாள் 'ரக்ஷா பந்த்ன்!' சொந்தங்கள் கூடியிருக்க மணமேடையிலேயே ராக்கி கட்டியது ரம்மியமான காட்சி!
இதை ஏன் இவ்வளவு விலாவாரியாக சொல்கிறேனென்றால்
சகோதரபாசம்...சுகமானது. கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் சகோதரி-இதுவே என் பாலிசி.
'இது என்ன புதுப் பழக்கம்?' என்ற பின்னோட்டங்களும் காதில் கேட்டது.
நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம்...சரிதானே?
இதுவே சில வருடங்களுக்கு முன்னே சகோதரர்கள் சகோதரிகளுக்கு
பச்சை கலரில் புடவை எடுத்துக்கொடுக்கவேண்டும்.....என்று வதந்தி ஒன்று
பரவியது. கடைகளிலெல்லாம் பச்சை புடவைகள் தோரணங்களாக தொங்கின். யார் கொழுத்திப்போட்டதோ? நாடு முழுக்க காட்டுத்தீபோல் பரவியது. பிள்ளையார் பால் குடிக்கிறார்...என்பது போல்.
சரியோ..தவறோ..சொந்தங்களை மேலும் இறுக்கிப்பிணைக்க இதெல்லாம்
தேவைதான்.

2 comments:

  1. //ஏன் இவ்வளவு விலாவாரியாக சொல்கிறேனென்றால்
    சகோதரபாசம்...சுகமானது. கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் சகோதரி-இதுவே என் பாலிசி.//

    sariyaa sonneengga.. 100% ithukku naan oththu pokiren.. :-)

    ReplyDelete
  2. my friend!
    oththu oothinathukku nantri!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...