Saturday, June 30, 2007

சீனியர் சிட்டிசனுக்கானது

ஒரு வயதுக்குமேல் தவிர்க்கவேண்டியவை என்கிற பட்டியலில், புளி, காரம்,தேங்காய்
உப்பு(இது குறைக்கவேண்டியது),எண்ணை இவையெல்லாம் வந்துவிடும்.
இவை கட்டாயமாக்கப்படுவத்ற்கு முன் நாமே தவிர்த்துவிட்டால்...?
நல்லதுதானே?

அப்படி தவிர்க்கப்பட்ட, குறைக்கப்பட்ட ஒரு குறிப்புத்தானிது!!! என்று
குறிப்பிட விரும்புகிறேன்.

ஏதாவது ஒரு கீரை ஒரு கட்டு சுத்தம் செய்து அரிந்தது. பசலைகீரை நன்றாக
இருக்கும். வெங்காயம், தக்காளி பொடியாக அரிந்தது. இஞ்சிபூண்டு நசுக்கியது
கடாய் அல்லது மண்பாத்திரம் அடுப்பில் வைத்து சிறிது எண்ணை விட்டு
காய்ந்த்தும் வெங்காயம்,தக்காளி இஞ்சிபூண்டு வதக்கி பின் அரிந்த கீரையும்
போட்டு சிறிது சுண்ணாம்பு சேர்த்து வதக்கி அளவாக நீர்விட்டு வேகவிடவும்
கீரை வெந்ததும் அளவாக உப்பு சேர்த்து இரண்டு தே.கரண்டி பொட்டுக்கடலை
மாவு அரைகப் பால் விட்டு கலக்கி கீரையில் ஊற்றி கலக்கி சிறிது கெட்டியானதும்
இறக்கவும். எந்தக் கெடுதலுமில்லாத இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும். சூடான சாதம், சப்பாத்திக்கு நன்றாக சேரும்.
சாப்பிட்டுப்பார்த்து பின்னோட்டமிடுங்களேன்!

சுண்ணாப்பு சேர்ப்பது அதன் சத்துக்காகவும் கீரையின் பச்சை நிறம் மாறாமலிருக்கவும்,

2 comments:

  1. சுண்ணாம்பு இல்லாதவங்க, ச்சும்மா ஒரு சிட்டிகை ஆப்ப சோடா( ஸோடா பை கார்ப்)
    சேர்த்துக்கலாம்.

    ஆமா......... எதுவுமே ஆகாதுன்னு மனசு சொன்னாலும்,
    இந்த நாக்கு சம்மதிக்க மாட்டேங்குதே(-:

    ReplyDelete
  2. டீச்சரே முதலில் வந்து ஆஜர் கொடுத்ததற்கு நன்றி!
    எங்கள் நாக்கு சம்மதித்துவிட்டதே!
    உங்களுக்கே யார் கற்றுக்கொடுப்பது..?
    பையப்பைய முயன்று பாருங்கள்.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...