குங்குமச் சிமிழை நீட்டியதும் மோதிரவிரலை நுழைத்து அள்ளிஇட்டுக்கொள்கிறோமே.....அதைச் செய்வது எப்படி?
நினைவு தெரிந்து கடையில் குங்குமம் வாங்கியதில்லை. HOME MADE-தான்.
அப்பாவே செய்வார்.
சிறுவயது முதலே குங்குமம்தான் இட்டுக்கொள்ளவேண்டும் என்பது எங்கள்
தந்தையின் ஆசை! குங்குமம் காலியாகிவிட்டால்,'அப்பா! ' என்று போய் நிற்போம். அவரும் அவரது கோ-டவுனிலிருந்து.....பெரீரீ...ய ஹார்லிக்ஸ்
பாட்டிலிலிருந்து நிரப்பிக் கொடுப்பார்.
எங்கள் வீட்டுக் குங்குமம் மிகவும் பிரசித்தி! அப்படிப்பட்ட குங்குமம் செய்யும்
முறையை..பின்னாளில்... திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பிறகு அப்பாவிடம் போய்,'எனக்கு கற்றுக்கொடுங்கள்.' என்றேன். 'வந்தாயா! வா!'
என்று அதன் அருமை தெரிந்து வந்த மகளுக்கு ஆவலோடு கற்பித்தார்.
தேவையானவை:
1) அரிநெல்லிக்காய் சைசில் கொட்டை மஞ்சள் --ஒரு கிலோ
2) எலுமிச்சம் பழச்சாறு---------------------------------1 1/2 லிட்டர்
3)வெங்காரம்-------------170 கிராம்
4)சீனாக்காரம்------------65-70 கிராம்
5)நல்லெண்ணை--------100 கிராம்
6)ரோஜா அத்தர் அல்லது தாழம்பூ அத்தர்----------வாசனைக்கு தேவையான சில துளிகள்
கொட்டை மஞ்சளை நாலு நாலு துண்டுகளாக உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதோடு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதனுடன் கலக்கவும் .
அத்துடன் வெங்காரம், சீனாக்காரம் இரண்டையும் சேர்த்து கலக்கவும்
நன்றாகக் கலந்ததும் மெல்லிய வெள்ளைத்துணியால் மூடி தனியே வைக்கவும். தினமும் காலையும் மாலையும் நன்றாகக் கிளறிவிடவும்.
கிளறுவதற்கு மரக்கரண்டியையே உபயோகிக்கவும்
சாறு முழுவதும் மஞ்சளில் ஏறும் வரை இதே போல் கிளறிக்கொண்டே
இருக்கவேண்டும். சாறு ஏற ஏற மஞ்சள் குங்கும நிறத்துக்கு மாறியிருக்கும்.
பிறகு ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நிழலில் காயவைக்கவேண்டும்.
இப்போது கேட்டு உடனே செய்து தர முடியாது. நாளும் நேரமும் நிறைய
பொறுமையும் பிடிக்கும் வேலையிது!
நன்றாக காய்ந்த பிறகு இதற்கென்றே உள்ள இரும்பு உரல், உலக்கை
கொண்டு கைப்பிடி கைப்பிடி அளவாகப் போட்டு இடிக்கவேண்டும். சுமாராக
இடிபட்டதும் அதே பாத்திரத்தின் வாயை மெல்லிய வெள்ளைத்துணியால்
கட்டி பொடி செய்ததை அதில் கொட்டி மெதுவாக 'வஸ்தரகாயம்' செய்ய
வேண்டும். மேலிருக்கும் கப்பியை உரலிலிட்டு மீண்டும் இடிக்கவேண்டும்.
this process goes on & on till you get little கப்பி.
fine powder -ஆக கிடைத்த மஞ்சள் பொடியை....இனிமேல் 'குங்குமம்' என்றே
அழைக்கலாம். குங்மத்தோடு தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி
கிளறவும். நெற்றியில் நன்றாக அப்பிக்கொள்ள எண்ணை தேவை.
இறுதியாக கமகமக்கும் வாசனைக்கு தாழம்பூ அத்தர், ரோஜா அத்தர் சில சொட்டுகள் விட்டு நன்றாக கலந்து காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் போது
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உபயோகிக்கலாம். விரும்பிக் கேட்பவர்க்கும்
கொடுக்கலாம்.
எல்லோரும் மஞ்சள் குங்மத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
பழைய பாட்டொன்றொடு முடிக்கிறேன்.
"கொத்து மஞ்சள் முகத்தில் பூசி கொறநாட்டு புடவை கட்டி
நெத்தியிலெ திலகமிட்டு நீண்ட சடை பின்னிவிட்டு
உத்தமி சென்ற நாளில் உலகம் கண்டு புகழ்ந்ததையா
நற்றிடும் பழமை அதை நாடுவதே நல்லதையா!"
அற்புதம் நானானி. நீங்களே குங்குமம் செய்வீர்களா.
ReplyDeleteஆதம்
அப்பா நல்ல இறையாண்மை உடையவராக இருந்திருக்கணும்.
இங்கேயே வாசனை வீசுவது போல உணர்கிறேன்.
ரொம்ப நன்றிப்பா. சுவாமிக்கும் தாயாருக்கும்,வீட்டுக்கு வருபவர்களுக்குக் கொடுப்பதற்கும் நமக்கும் இது வரப் பிரசாதம்.
நன்றி! வல்லி!
ReplyDeleteகுங்மச்சிமிழை திறக்கும் போது வீசும்
கம்மென்ற மணத்தில் அப்பாவை உணருவேன்! விரும்பிக்கேட்பவருக்கு
கொடுப்பார், ஒரு சிறிய டப்பாவில்,
அப்பா. எனக்கும் அதே கட்டளை.
ஆனால் நான் இப்போது விரும்பிக்கேட்பது அண்ணியிடம்...
ஹி..ஹி..!சோம்பேறித்தனம்!
மங்கல குங்குமம்
ReplyDeleteசெய்முறை தெய்வீகம்.
அதீத அக்கறையுடனும்
பய பக்தியுடனும்-இதனை
செய்வதே ஒரு
தியானம் போல
எனத் தோன்றுகிறது.
-Ramalakshmi
தியானம் தான் ராமலக்ஷ்மி!
ReplyDeleteகுங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்!!
ReplyDeleteஇந்த வெங்காரம் சீனாக்காரம் இதெல்லாம் எந்த கடையில் கிடைக்கும்? இதுக்கு ஆங்கிலப் பெயர்கள் தெரியுமா?
இந்த செய்முறை பற்றி அப்பா சொல்லி கேள்விபட்டு இருக்கேன். இப்ப தான் விளக்கமாக பார்க்கிறேன், தகவலுக்கு நன்றி!!
ReplyDeleteகொத்ஸ் அண்ணே,
ReplyDeleteசீனாகாரம்-ன்னா Alum, நீச்சல் குளத்தில் போட்டு வைப்பாங்களே. வீட்டுக்கு வெளியே கூட கட்டுவாங்களே..படிகாரம் அதுதான். வெங்காரம் தெரியல பார்த்து சொல்லுதேன்.
எங்க டப்பாச்செட்டி கடையில கேட்டுப் பார்க்கணும் ,நீங்க குறிப்பிட்டிருக்கிற வெங்காரம் எல்லாம் அங்கே கிடைக்கும்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஎன்றுமே நல்ல நாள்தான் கொத்ஸ்!
ReplyDeleteரெண்டு காரமும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். வல்லி சொன்னதுபோல் 'டப்பாச்செட்டி' கடையில் கண்டிப்பாகக் கிடைக்கும்.
என்ன செய்யப்போகிறீர்களா?
எனக்கும் கொஞ்சம் sample!!
குட்டிப்பிசாசுக்கு நன்றி!
ReplyDeleteகொத்ஸுக்குத் தேவையான பாதி
விளக்கத்தை தந்துவிட்டீர்கள். மீதியையும் கொடுத்துவிடுங்கள்.
வல்லி! அதென்ன 'எங்க'? எல்லோருக்குமே டப்பாச்செட்டி தான்.
ReplyDeleteமயிலைக்கு டப்பாச்செட்டி, மற்றவர்க்கு நாட்டுமருந்துக்கடை!
எல்லா இடங்களிலும் இருக்கும்.
மேடம்! விளக்கெண்ணை திரிப்போட்டு கண் மை செய்வார்கள், புழுங்கரிசியை கறுக்க வறுத்து (செய்முறை நினைவில்லை)
ReplyDeleteகருப்பு சாந்து, தார் போல இருக்கும் -பாட்டி வீட்டில் செய்வார்கள். எல்லாம் மறைந்து வருகிறது. நமக்காவது இப்படி
ஒன்று இருந்தது என்றாவது தெரியும். இனி வரும் தலைமுறைகளுக்கு அதுக்கூட தெரியாது இல்லையா :-(
இந்த குங்குமத்தை கையில் வைத்தால் மஞ்சளாய் கறைபடியும் இல்லையா? இன்னும் சென்னை ஸ்ரீவித்யா கடை குங்குமம் இப்படிதான் செய்கிறார்கள் என்றுக் கேள்வி
அது சரி, நானானி பெயர் காரணம் என்னவோ?
முதல் வருகைக்கு வந்தனம்!! உஷா!
ReplyDeleteவிளக்கெண்ணை திரியை கற்றாழை
மடலில் காட்டி அதி படியும் கரியை
கண்ணுக்கு மையாக எழுதுவார்கள்.
சாந்து பொட்டு நான் ஜவ்வரிசியை கருக வறுத்து செய்வேன்.
பெயர் காரணமெல்லாம் பெருசா ஒன்னுமில்லீங்க. ப்ளாக் ஆரம்பிக்கும் முன் 'நான்..நான்' என்று அனானி கமெண்ட்கள் நிறைய போட்டு சக பதிவர் எனக்கு இட்ட பெயர் 'நான்+அனானி=நானானி!'
பெயர் காரணம் எல்லாம் நல்லா தான் இருக்கு!!
ReplyDeleteகொத்ஸ் அண்ணே,
ReplyDeleteவெங்காரத்தை போரக்ஸ்-னு சொல்லுவாங்க. இதுவும் உப்பு வகையைச் சார்ந்தது தான். நாட்டு மருந்து கடையில் இது கிடைக்கும்.
சரி..சரி! ஏன் எப்படி குட்டிப்பிசாசு..?
ReplyDeleteபெயர் ஆராய்ச்சி எல்லாம் முடிந்ததா?
ReplyDeleteஎப்போது செய்யப் போகிறீர்கள்
உஷா!
ReplyDeleteஇந்த குங்குமம் கையில் கறை படியாது.
துணியில் துடைத்தால்தான் படியும். அதுவும் வெயிலில் துணியை உலர்த்தினால் கறை மறைந்துவிடும்.
ம்ம்ம் அருமை அருமை - குங்கும செய்த செய்கிற விதமும் அதனைப் பற்றிய பதிவும்.
ReplyDeleteதங்கள் தந்தை உண்மையிலேயே ஐவரையுமே நன்றாக வளர்த்திருக்கிறார். நல்வாழ்த்துகள்.
பதிவின் கடைசியில் அனைவரையும் வாழ்த்திய விதம் அருமை அருமை
நல்வாழ்த்துகள்
சந்தோஷம் சீனா!
ReplyDeleteஅருமை!!!
ReplyDeleteசாந்து பொட்டு செய்யும் முறையை கொஞ்சம் எழுதுங்களேன்
ReplyDeleteகருப்பு சிகப்பு சாந்துொட்டுக்காக தயாரிப்பது எப்படி ? விவரமாகொன்னால் அழிந்து வரும் தமிழரின் சாந்து கலாசாரதை காப்பாற்ற முடியும்
ReplyDelete