Saturday, October 27, 2007

இது என்னான்னு சொல்லிடுங்கோ...


என்ன...என்ன...இது என்ன..?

சொல்லுங்க பாப்போம்? இருங்க..இருங்க..நான் சொல்லி முடிக்கட்டும்.

'ப்பூ!...இது 'ஓம்' எனும் ப்ரணவம். விநாயகரின் வடிவம்.' சரி!

'ஆக்கும் கடவுள் ப்ரம்மாவுக்கு, இதற்கு பொருள் தெரியாத காரணத்தால், சொல்லச்சொல்ல இனிக்கும் பன்னிருகை வேலவனால் தலையில் குட்டப்பட்டு.....ஒரு கையால்தான்..சிறையில் அடைக்கப்படக் காரணமான ப்ரணவத்தின் உருவம்.' அதுவும் சரி!

'வேத வடிவான பரமசிவன், பிள்ளைப்பிராயத்திலே பெரிய பெயர் பெற்ற அழகன் முருகனிடம்''ப்ரணவத்துக்குப் பொருள் சொல்.' எனக் கேட்க, சொல்பவன் குரு கேட்பவன் சீடன். எனவே சீடனாக கைக் கட்டி வாய் பொத்திக் கேட்டால் சொல்வதாகச் சொல்ல, சுப்பன்..அப்பனுக்குப் பாடம் சொன்ன சப்ஜெக்ட்!' இதுவும் சரி!

'இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே!'

பின்ன? நான் சொல்லி முடிக்குமுன் பறந்தால்...?

நான் கேட்டது இந்த 'ஓம்' எனும் அமைப்பு எதைக்கொண்டு உருவாக்கப்பட்டது? அப்பாடா!
ஒரு வழியாக சொல்லி முடித்து விட்டேன்.

ஹூம்! இப்ப சொல்லுங்களேன் பாப்போம்..!

விடை அடுத்த பதிவில்.

13 comments:

  1. காகித பிடிப்பானை வைத்துள்ளீர். பொறியில் வரைவுகளை....

    ReplyDelete
  2. பேப்பர் கிளிப்!!

    ReplyDelete
  3. எ+எ+எ=ஓம்
    சரியா?
    ஆமா இதை எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்கே?

    ReplyDelete
  4. கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்..
    -------------------------------
    கூர்ந்து பாருங்கள் .3 "எ"ஒட்டின மாதிரி இருக்குதுங்கோ. இறைவன் எளிமையானவன்,எல்லையில்லாதவன்,எங்கும் இருப்பவன்.அந்த மூன்று "எ" சேர்ந்தால் ஓம்தானே .சரியா நானானி.இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
    [கொஞ்சம் அல்ஜிப்ரா கொஞ்சம் ஆன்மீகம்.எ+எ+எ=ஓம்]

    ReplyDelete
  5. ப்ளாஸ்டிக்? அல்லது தெர்மாகோல்?

    ReplyDelete
  6. நானானிக்கு வாழ்த்துக்கள்.10000 பார்வையாளர்களைத் தொட்டு விட்டீர்கள்.[நான்தான் அந்த 10000 த்து வாசகி.[ஒரு ரகசியம் முதலில் நுழையும் பொழுது 9999 என்றிருந்தது...உடனே வெளி நடப்பு செய்து பிறகு நுழைந்தேன் . நான்தான் ,10000ம் ஆக்கிய 10000 த்தில் ஒருத்தி.20000த்துக்குள்ளும் வருவேன்.

    ReplyDelete
  7. பனிமலர்!
    சரியாக கண்டு 'பிடித்துள்ளீர்கள்', காகிதப் பிடிப்பான் என்று. இது மேஜை விரிப்பையும் பிடிக்கும்.
    ஒன்று உடைந்ததும் மீதி மூன்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கிடைத்த உருவம் இது.
    ஒரு மொக்கை பதிவுக்கு வேலையிலாமல் செய்து விட்டீர்கள்.
    எவ்வழியோ(anyway) வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. ஈட்டி!
    சரியாக இலக்கை நோக்கி எய்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. கோமா!
    ஈட்டியும் பனிமலரும் சரியாக கண்டுபித்துள்ளார்கள்.
    ஆனாலும் உங்கள் கற்பனை அற்புதம்!
    ஆமா! இதை எங்கேயோ பார்த்திருக்கிறீகள்தான். அதையும் கண்டு பிடியுங்களேன்!

    ReplyDelete
  10. கீதா!
    ப்ளாஸ்டிக்தான்..ஆனால் என்ன பொருள்? விடைதான் மேலே இருக்கிறதே!

    ReplyDelete
  11. கோமா!
    தத்துவம் நம்பர் 10,000 மாதிரி நீங்கள்
    பார்வையிட்டவர் நம்பர் 10,000.
    மிக்க நன்றி! 20,000க்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  12. நானானி எனக்கு இது முறுக்கு மாவினால் செய்யப் பட்ட மாதிரி தெரிந்தது:))

    பசி வேளை:))
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. பசிவேளை மட்டுமல்ல வல்லிம்மா,
    தீபாவளிவேளையும் கூட!!
    மனமார்ந்த தீப ஒளி வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...