Monday, December 31, 2007

இரண்டாயிரத்து எட்டாமாண்டே..வரும்போது. கொண்டு வா!!








WISH YOU A VERY HAPPY NEW YEAR

இருள் விலகி ஒளீ பரவி வசந்தம் வீசி- எங்கும்
மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி
நல்லன எல்லாம் சூழ அல்லன எல்லாம் வீழ
மங்கல வார்த்தைகள் காதினில் ஒலிக்க
சங்கடங்கள் எல்லாம் காததூரம் ஓட
இல்லங்கள் தோறும் இன்பங்கள் நிறைய
பொல்லாத துயரங்கள் ஒவ்வொன்றாய் குறைய
எதிர் வரும் இரண்டாயிரத்து எட்டாமாண்டே
இவையனைத்தையும் கைகளில் கொண்டே வா!
வரும் போது .

புவியெங்கும் பரவிக்கிடக்கும் ப்ளாக் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் குட்டீஸ்களுக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

26 comments:

  1. அக்கா,

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. குட்டிபிசாசுத் தம்பிக்கும்
    அஃதே..அஃதே..அஃதே!

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. அதிகாலை புத்துணர்ச்சி படங்கள் அருமை...


    உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நானானி அவர்களே...

    அன்புடன் ரசிகன்..

    ReplyDelete
  5. ரசிகனுக்கும் அவர் குடும்பத்தார்க்கும் என் புது வருட நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பாட்டின் பொருள், வருகின்ற நாட்களிலும் நிறையும் வண்ணம் அமையட்டும், இப்புத்தாண்டு!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. என்னத்தைப்பாக் கொண்டுவரச் சொல்றிங்க?

    உங்கள் அனைவருக்கும் இந்த ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  9. அரை பிளேடு!!
    உங்களுக்கும் அஃதே..அஃதே!

    ReplyDelete
  10. நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தரும் நெல்லை சிவாவுக்கும் குடும்பத்தாருக்கும் புது வருட வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  11. நானானி, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். படமும் அருமை - கவிதையும் அருமை. எண்ணங்கள் ஈடேறட்டும். வாழ்த்துகள்

    ReplyDelete
  12. நன்றி! சீனா!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார், பேரப்பிள்ளைகள் எல்லோருக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  13. வாழ்த்துகள் நானானி.

    ReplyDelete
  14. ஆடுமாடுக்கு நன்றி!

    ReplyDelete
  15. இங்ஙனயும் சொல்லிக்கிரேன்
    புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  16. நன்றி! கண்மணி!!
    வாழ்த்துக்கள் எங்ஙனையும் சொல்லலாம்!

    ReplyDelete
  17. டாக்டருக்கும் புது வருட வாழ்த்துக்கள்!!
    விடுமுறையெல்லாம் சுகமாக சுவாரஸ்யமாக கழிந்ததா?

    ReplyDelete
  18. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா! அது சரி.. என்ன கொண்டு வர சொல்லுறீங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன். :)

    ReplyDelete
  19. காட்டாறே!!
    தெளிந்த நீரோடையாய் ஓடினால் புரியும்.
    ஒளி, வசந்தம், மகிழ்ச்சி, நல்லவைகள், மங்கலம் மற்றும் இன்பங்கள் இவையனைத்தையும் தான் கொண்டுவரச்சொன்னேன்.

    துளசி டீச்சருக்கும் இப்போது புரிந்திருக்கும்.

    ReplyDelete
  20. புத்தாண்டு வாழ்த்துக்கள், நானானி,
    உங்களைப் புத்தாண்டு சபதம் போட அழைத்துள்ளேன், நேரம் இருக்கும்போது வந்து பார்த்துவிட்டுச் சபதம் எடுத்துப் பதிவு போடவும்.

    ReplyDelete
  21. படங்கள் சூபர்..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. தி.ரா.சா!

    மிக்க நன்றி!..முதல் வருகைக்கும் சேர்த்து.

    ReplyDelete
  23. புத்தாண்டு வாழ்த்துகள்...உங்களுக்கும் ..

    ReplyDelete
  24. பாசமலரின் வாசம் புத்தாண்டு வாழ்த்துக்களோடு வீசியதற்கு நன்றி!!

    ReplyDelete
  25. நானானிக்கு என்மேல் என்ன கோபம் எதுக்கு என்னை சாகச்சொல்லுகிறார் என்பெயர் தி ரா ச தான் திரா சா இல்லை.நான் பாட்டுக்கு ஓரமா இருந்துட்டுப்போறேனே.தங்கமணி பாவம் இல்லை.:)

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...