Saturday, January 26, 2008

ப்பா!!!! இவரைப் பார்த்து எத்தனை பேர் பயந்திருக்கிறீர்கள்?


சான்ப்ரான்ஸிஸ்கோ டவுன் டவுன் போயிருந்தபோது,fisherman groove அருகே நாங்கள் நின்றிருந்த இடத்துக்கு எதிரே ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் வெட்டியெடுத்த பசுஞ்செடிகளால் தன்னை மறைத்துக் கொண்டு அங்கு அவருக்கு எதிரே வருவோரையெல்லாம் அருகில் வந்தவுடன் "ப்பா!!" என்று நாம் குழந்தைகளை செல்லமாக பயங்காட்டுவது போல் பயமுருத்தி விளையாடிக்கொண்டிருந்தார். மக்கள் பயந்து..பயந்து விலகியோடியது பார்க்க வேடிக்கையாயிருந்தது. ஒரு கூட்டமும் அதை ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

நான் விடுவேனா? சாலையைக்கடந்து அந்த வழியே போய் படு உஷாராக அவரை கடக்கும் போது எனக்கும் அந்த "ப்பா" கிடைத்தது. நான் அசால்டாக "ஒ! fஒ!!". என்றவாறு கடந்து சென்று அவரை 'பொம்பி' ஆக்கினேன்.

யாரெல்லாம் பயந்திருக்கிறீர்கள்?

14 comments:

  1. காட்டாறு...அவர் ஏன் பயப்படுறார்?

    ReplyDelete
  2. நானா இருந்தா பயந்தடிச்சு 911 கூப்பிட்டிருப்பேன் :-)

    ReplyDelete
  3. அவ்ளோ! பேந்தாங்குளியா நீங்க? சேதுக்கரசி?

    ReplyDelete
  4. ஒரு வேண்டுகோள். தயவுசெய்து ஆப்ரிக்க அமெரிக்கர்களை இழிவு செய்யும் சொல்லான நீ.. யை மாற்றுங்கள்.

    ReplyDelete
  5. //அவ்ளோ! பேந்தாங்குளியா நீங்க?//

    இல்ல, நான் சொன்னது கொஞ்சம் ஓவர்தான். ஆனா வீட்டில் தனியா சில நாட்கள் இருக்க நேர்ந்தா அப்போதான் சின்னச்சின்ன சத்தமெல்லாம் பூதாகாரமா தெரியும் :-) தூங்கும்போது டார்ச்லைட்டு, தொலைபேசி செல்பேசி எல்லாம் பக்கத்தில் இருக்கும்.

    ReplyDelete
  6. குலவுசனபிரியன்!
    எனக்கும் அதி சம்மதம் இல்லைதான். ஆனால் வழக்கிலிருப்பது என்றே எழுதிவிட்டேன்.சரியான வழக்கு சொல்லை தரவும். சுட்டிக்காட்டியதற்கு நன்றி!

    ReplyDelete
  7. .//சரியான வழக்கு சொல்லை தரவும்//

    African American !

    ReplyDelete
  8. //சரியான வழக்கு சொல்லை தரவும்.//
    கொடுத்திருக்கிறேனே:
    ஆப்ரிக்க அமெரிக்கர்.
    கருப்பினத்தவர் அல்லது கருப்பர் என்பது கூட அவர்களுக்கு ஏற்புடையதுதான்.
    //ஆனால் வழக்கிலிருப்பது என்றே எழுதிவிட்டேன்.//
    அமெரிக்காவில் இல்லை. இங்கே இது தகாத சொல்.

    ReplyDelete
  9. ஆமாங்க, ஆப்பிரிக்க அமெரிக்கர்-னு மாத்திடுங்க.

    அப்புறம்ங்க.. நான் பயந்தாங்கொள்ளியெல்லாம் இல்லீங்க.. ஆனா ஓரளவுக்கு பயப்படுவேன் தானுங்க.. ஹிஹி :-)

    ReplyDelete
  10. மாத்திட்டேன்...மாத்திட்டேன்...!!!
    சேரியா?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...