Monday, January 21, 2008

தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்.....!


தைத்திருநாள் அன்று நாம் அதிகாலையில் கண்விழித்ததும் காணவேண்டிய மங்கலப் பொருட்கள்.விளக்குசுவாமி படம், பிள்ளையார்,பூ, மற்றும்....

வெள்ளிக்காசு, தங்கக்காசு, மற்றும்....

மஞ்சள் கொத்து, பழங்கள், காய்கறிகள், மற்றும்...

கரும்பு, வெற்றிலைப்பாக்கு, தேங்காய்,வாழைப்பழம், நன்றி தெரிவிக்க சூரியபகவான் சூழ... FLAT வாசம் ஆரம்பித்த பிறகு நான் வழக்கமாய் கொண்டாடும்....போக்கிரிப்...ஹூஹும் நிப்போ பொங்கல்...

மைக்ரோவேவ் சர்க்கரைப்பொங்கல்!!!நெய்..முழங்கை வழிவார அள்ளி உண்ண எல்லோரும் வாருங்கள்!!! பொங்கலோ பொங்கல்!!!!!!

மிகவும் தா........மதமான இப்பதிவுக்கு என் உடல் நிலையும் கணினியின் உடல் நிலையுமே காரணம். சபதம் எடுத்தவுடனே தடங்கலைப்பாருங்கள். படங்களையும் டவுன்லோட் செய்து பதிவும் எழுதி பத்திரப்படுத்திவிட்டு(SAVE)பொங்கலுக்கு மறுநாள் வெளியிடலாம் என்று ஊருக்கு..வேறெங்கே திருநெல்வேலிக்குத்தான்..சென்றுவிட்டேன். வந்து என்னாலும் முடியவில்லை..கணினியாலும் முடியவில்லை. நான் சொன்னபடி 'விடமாட்டேனே!!' தாமதமானாலும் நண்பர்கள் பார்வைக்கு வைத்தேயாகவேண்டும் என்று பதிந்து விட்டேன்.

4 comments:

  1. அருமையான படங்கள். நானானி. தெரிந்திருந்தால் உங்க வீட்டுக்கு வந்திருப்பேனே:))

    உங்க போன் நம்பரும் இல்லை. எனினும் தாமதமான பொங்கல் வாழ்த்துகள். இதே அழகு நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. வல்லி!
    ரொம்ப நாளா காணோம்?
    சுகம்தன்னே? அடுத்த வருட பொங்கலை நாம் சேர்ந்தே கொண்டாடலாம். சேரியாப்பா?

    ReplyDelete
  3. பொங்கல் நல்வாழ்த்துக்கள்! என்று நாம் நலமாயிருக்கிறோமோ, அன்று பொங்கல் தான். :-)

    இப்போ நலம் தானே? அப்புறம் எப்போ அந்த பொங்கல் எங்க வீட்டுக்கும் அனுப்புவீங்க?

    ReplyDelete
  4. நன்றி! காட்டாறு! இபோது நலம்தான்.
    சர்கரைப்பொங்கலை எல்லோரும் வந்து நெய் வழிய அள்ளி உண்ணலாம் என்று சொல்லியிருந்தேனே!!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...