உலகம்மாள் பாட்டி.
என்ன அவசரம்...அவசியம்? ஒரு வாரம் அறுபடை வீடுகளுக்கு தன் தோழிகள் சிலரோடு
வேன் எடுத்துக்கொண்டு டூர் போய்விட்டு ஆ..று முகனையும் திவ்யமாக தரிசனம் செய்துவிட்டு
இன்றுதான் திரும்புகிறாள்.
வேனில் வீடு திரும்பும் வழியெல்லாம் என்னாச்சோ ஏதாச்சோ என்று மனசுக்குள் புலம்பிக்கொண்டே வந்தாள். வீட்டுக்குள் நுழைந்ததும்....மறுபடி முதல் பாராவைப் படியுங்கள்.
'கிருஷ்! கிருஷ்! என்னாச்சு சொல்லுடா! பரிமளத்துக்கு நல்லபடியா கல்யாணமாச்சா?
கோபியை போலீஸ் புடிச்சிட்டுப் போச்சே..ராஜம் மாமியார் அவளை பளார் என்று அறைந்தாளே! லஞ்சம் வாங்கி ஆபீசில் பிடிபட்ட பாஸ்கர் அப்புரம் என்னவானான்?
ஒரே மூச்சா ஒன்பது வயது சிறுவனிடம் கேள்விகளை மழையாய் பொழிந்தாள்.
அம்மாவுக்கு என்னாச்சு என்று பதறியபடியே ஓடி வந்த மகன், மருமகள் திகைத்து நின்றார்கள்!
"அம்மா! பிரயாணம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா? கிருஷ்ணாவிடம் ஏன் சம்பந்தா சம்பந்தமிலாத கேள்விகள் கேட்கிறீர்கள்? என்னாச்சு உங்களுக்கு?" என்று பதற
சிறுவன் கிருஷ்ணன், "அப்பா! பாட்டி, நான் ஊருக்குப் போய் வந்தவுடன் ஒரு வாரத்து
டிவி சீரியல்களில் என்னென்ன நடந்தது என்று பார்த்து வை, நான் வந்ததும் சொல்லவேண்டும்."
என்று என்னிடம் சொல்லிவிட்டுத்தான் போனார்கள்." என்றான் அந்த கோகுல கிருஷ்ணனின்
குறும்புச் சிரிப்போடு!!!

இந்தா..பாட்டீ!!டிவியையே கொண்டாந்து வச்சிட்டேன். நீயே பாத்துக்கோ!!!!
இது எப்படி இருக்கு?
//இது எப்படி இருக்கு?//
ReplyDeleteசூப்பரா இருக்கு:-))))!
கதைக்கேற்ற படம் அதை விட சூப்பர்!
ராமலஷ்மி.....! கதை எப்டியிருக்கு அதச் சொல்லலையே?
ReplyDeleteமுதல் 'சூப்பர்' கதைக்குச் சொன்னதுதான்.
ReplyDeleteநா(வீ)ட்டு நடப்பை நல்லாதான் புட்டு வச்சிருக்கீங்க!
ஓ..கே! ராமலஷ்மி! நன்னி!
ReplyDelete'நன்னி'யா:-(? 'சேரியா'க்கு அப்புறம் அடுத்த காப்பிரைட் இதுக்குக்தானா:-)?
ReplyDelete