Thursday, July 24, 2008

அணிலே அணிலே அழகிய அணிலே...!

அணிலே அணிலே அழகிய அணிலே!
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்

என்னவென்று கேள்
தெரிந்தால் சொல்கிறேன்

ராமர் பாலம் கட்ட வேண்டுமா? வேண்டாமா?
இரண்டு கோஷ்டியாய் பிரிந்து
நடக்குதுங்கே சர்ச்சை
பதில் சொல்ல இருக்குதுங்கே உனக்கு உரிமை
சொல்ல வேண்டியதும் உன் கடமை
இரு கோஷ்டிகளையும் இணைக்கவே
கட்ட வேண்டும் ஒரு பாலம்
பெரும் நன்றியைச் சொல்லும் உனக்கு காலம்

அணில் சொல் ஏறுமா அம்பலம்?

உனக்கே தெரியாது உன் பலம்

உரிமை உரிமை என்றாயே என்ன அந்த உரிமை

இதிகாச காலத்தில் சீதையை மீட்க ராமன் இலங்கை செல்ல
வானர சேனைகள் பெரிய பெரிய பாறைகள் எடுத்து கடலில் கொட்டி
கட்டினார்கள் சேது பாலம் - அப்போது
உன் பங்காக ஒரு சிறு கல்லெடுத்து சமுத்திரத்தில் போட்டு
நீயும் உதவினாய்
அது கண்டு மகிழ்ந்த ராமன் அன்போடு தன் விரல்களால்
உன் முதுகில் தடவினான்.
அந்த வரிகள் உன் முதுகில் இன்னுமுண்டு

அப்படி வா வழிக்கு பார் என் முதுகை
எங்கே அந்த வரிகள்
வரிகள் உள்ள அணில்களுக்குத்தான் நீ சொன்ன அந்த உரிமையுண்டு
வரிகளற்ற முதுகை உடைய எனக்கேது உரிமை
போய் வா மகளே போய் வா
வரிகளுள்ள அணிலிடம் கேள்

என்று சொல்லிவிட்டு என் கையிலிருந்த கடலையை கொறித்துக் கொண்டே
மரத்திலேறி ஓடியது....அமெரிக்க அணில்!!!!!!!!

6 comments:

  1. //அணிலே அணிலே அழகிய அணிலே//

    அழகே அழகே சிந்தனை அழகே! :-)

    கடைசீல, பதில் சொல்லாம அணிலோடு சேர்ந்து எஸ்கேப்பாயிட்டீங்களே? ;-))))

    ReplyDelete
  2. ஆகா, உங்கள் "கடலை போடு" பதிவிலே ஆர்தியாக வந்து உங்களிடம் விரும்பிக் கேட்ட படமல்லவா இது. இன்னொரு வாசகர் விருப்பம் நிறைவேறும் வாரம் தொடங்குகிறதா நானானி?

    ReplyDelete
  3. எனக்குத் தெரியாததாலேதான் அணிலைக் கேட்டேன். அது என்னைவிட புத்திசாலி....மரத்திலேறி
    எஸ்கேப்பாகிவிட்டது. என்னால்
    மரத்திலேறி அதைத் துரத்தமுடியுமா?
    நியூபீ?

    ReplyDelete
  4. ஆமாம்! ஆர்டி!
    உங்களுக்காகத்தான் இப்பதிவு.
    நீங்கள் விரும்பிக்கேட்ட அணில் படம்!
    சும்மா எப்படி போடுவது.
    கீபோர்டு முன் உக்காந்ததும் மடமடவென வந்து விழுந்தன வார்த்தைகள்.
    இது கதையா? கவிதையா?(கவுஜ) அல்லது கட்டுரையா? தெரியவில்லை.

    ReplyDelete
  5. சிரமமேற் கொண்டு படங்களைத் தேடிப் பதிவிட்டதற்கு மிக்க நன்றி நானானி!

    //இது கதையா? கவிதையா?(கவுஜ) அல்லது கட்டுரையா? தெரியவில்லை.//

    கவிதையாய் ஒரு கட்டுரை, கதை. அழகுத் தமிழில் தாங்கள் அமெரிக்க அணிலிடம் வைத்தக் கோரிக்கையை அந்நாட்டு அதிபர் போலவே கண்டு கொள்ளாமல் நழுவி விட்டது பார்த்தீர்களல்லவா:))? ராமர் கோடு போட்ட இந்திய அணிலிடமே கடலை போட்டு கடல் மேல் பாலம் பற்றிக் கேட்போம்:)!

    ReplyDelete
  6. நானும் அமெரிக்காவில் முதுகில் வரிகள் இல்லாத படம் எடுத்து முன்பு பதிவு செய்தேன்.
    உங்கள் கவிதையும், படமும் அருமை.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...