Monday, February 2, 2009

கணநேரக் கண்ணாடிகள்...பிப்.பிட்!!!

என்னிடமிருக்கும் அசையாச் சொத்துகளில் பலவற்றை பதிவிட்டு விட்டேன். இப்போது அசையும் சொத்துக்களும் தேவை என்கிறார்கள் புகைப் படப் போட்டி அமைப்பாளர்கள். என்னிடமுள்ள அசையும் சொத்துக்களை ஓடி ஓடி தேடித்தேடி சிலவற்றைக் கொண்டு வந்திருக்கிறேன்.
அவை அசைந்து ஓடிவிடுமுன் பிடித்துக்கொள்ளுங்கள்!!!! பார்த்து விட்டு எதைப் போட்டிக்கு தேர்வு செய்யலாம் என்றுதான் சொல்லுங்களேன்!!!!

மணப்பெண்ணே! விட்டுவிடாதே!!!உன் கைகளின் பிடிக்குள்ளிருக்கும் வெள்ளித் தேங்காய்க்குள்ளிருக்கு..உன் கௌரவம், அன்பு, பண்பு, பாசம், அரவணைப்பு, கர்வமில்லா கம்பீரம், நேர்மை இன்னும் என்னவெல்லாமோ!!உன் கை வளையல்கள் குலுங்கினாலும் பிடித்தபிடியை விடாதே..பெண்ணே! இந்நாட்டின் கண்ணே!!!


சிகாகோ டவுண்டவுனிலிருக்கும் ஸ்டேடியத்தில் நடந்த கால்பந்து போட்டிக்கு போனபோது எடுத்தது.

டிஸ்னிலாண்டில் அதன் கதாபாத்திரங்களின் ஊர்வலம்

நா..ம்பளும்
ஸ்னோபௌலிங் வெளையாடுவமில்ல?

மயிலே..நீ அசைந்தாடினால்தான் பரிசு என் பயிலே!!

கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தையும் புரட்டிப் போட்டது வெள்ளம்!!!மினி சுனாமி!!!


வானத்தின் மீது..விமானமாடக் கண்டேன்!!


இன்னும் வரும். ஹுக்கும்!!!

9 comments:

  1. மயிலும் விமானமும் ரொம்பப் பிடிச்சிருந்தது! மினி சுனாமியும் கூட!
    ஆல் தி பெஸ்ட்!

    ReplyDelete
  2. மணப்பெண்ணில் வளையலுக்கும், விமான நடனத்திற்கும் கொடுத்திருக்கும் காப்ஷ்ன் சூப்பர் நானானி. அந்தப் படங்கள் ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  3. எல்லாமே அருமை. ஆனாலும் என் ஓட்டு முதல் படத்துக்கும் கமெண்டுக்கும்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா:)?

    இன்னும் வருவதை எதிர்பார்த்து...
    இருக்கிறோம் ஆவலுடன் காத்து!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சந்தனமுல்லை!
    படித்தேன் உன் சொல்லை - விட்டது இனி தொல்லை!!!
    நன்றியுடன்
    நான்

    ReplyDelete
  5. ரொம்ப சந்தோஷம்!!தென்றல்!!

    ReplyDelete
  6. இத..இத..இதைத்தான் எதிர்பார்த்தேன், ராமலக்ஷ்மி!
    முதல் படத்துக்கு உங்கள் கவிதை இன்னும் ஜொலிக்கும்.

    ReplyDelete
  7. ரொம்ப நாளா காணோமே என்று பார்த்தேன்.
    நலுங்கு படமும் மயில் படமும் சீட்டெழுதி போட்டுப்பார்த்து செலக்ட் பண்ணி போட்டிக்கு அனுப்புங்கள்.
    சகாதேவன்

    ReplyDelete
  8. அனைத்துமே கணநேரக் கண்ணாடிகள்.வெற்றியின் பிம்பம் பிரதிபலிக்கிறது .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. படங்கள் அத்தனையும் ,சிம்ப்ளி சூப்பர்.முதல் படமும் ,கடைசிபடமும் சீர்தூக்கிப் பார்க்கலாம்.

    கணநேரக் கண்ணாடியில், வெற்றியின் பிம்பம் பிரதிபலிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...