Sunday, March 1, 2009

சரியான நேரத்தில் சரியாகக் கொடுத்த நெத்தியடி!!!


லேட்டஸ்ட் ஜீனியர் விகடனில் வந்த ஒரு தகவல், படித்ததும் ஆஹா! நம் மக்களவை உறுப்பினர்களுக்கும் பிரஸன்ஸ் ஆப் மைண்ட் இருக்கிறதே! என்று மனம் மகிழ்ந்தது.

பாராளுமன்றத்தில் ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டும் விதமாக தீர்மானம் கொண்டு வந்தபோது, தமிழக உறுப்பினர்கள், 'தமிழரான ரஹ்மானுக்கு பாராட்டு' என்று சொல்லியிருக்கிறார்கள்.

மற்ற வடநாட்டு எம்.பி.க்கள், 'ரஹ்மானை இந்தியர் என்று சொல்லுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த சரியான தருணத்தில் தமிழக எம்.பி.யான திருமதி வசந்தி ஸ்டான்லி சொன்னதுதான்
வெளிச்சத்துக்கு வர வேண்டிய வாக்கியங்கள்!!!

"தமிழரான ரஹ்மானை இந்தியர் என்று சொல்ல வேண்டுமென்று சொல்கிறீர்களே?
ஏன் இலங்கையில் அவதிப் படும் தமிழர்களையும் இந்தியர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது?"

ஒரு வாசகமானாலும் திருவாசகமாக சொல்லியிருக்கிறார்.

திருமதி வசந்தி ஸ்டான்லிக்கு "இந்தியர்கள்" சார்பில் பாராட்டுகள்!!!!

7 comments:

  1. மேம்போக்காக பார்க்கையில் நெத்தியடியாகத் தெரிந்தாலும், இதில் பெரிய வரலாற்றுக் குளறுபடி இருக்கிறது.

    இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து போனவர்கள் இல்லை. பெரும்பகுதியினர் தொல்குடியினர். இந்த வரலாற்று உண்மை தெரியாமல் தான் "இங்கிருந்து பிழைக்கப் போனவர்களுக்குத் தனி நாடு எதற்கு" என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. இது நெத்தியடி இல்லை.
    சரியான சுத்தியடி.

    ReplyDelete
  3. இதன் மூலமாக வரலாறே தெரியாததுகளை எல்லாம் தி.மு.க. எம்.பி.யாக்கி தில்லிக்கு அனுப்பி மானத்தை வாங்குதுனு தெரியுது.

    நேற்று ஜெயலலிதா கருணாநிதிக்கு கொடுத்த நெத்தியடிக்கும் இந்த நெத்தியடிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?

    ReplyDelete
  4. ஆமா! தமிழ்பிரியன்! படித்ததும் பிடித்தது. அதான்! நம் மக்களவை உறுப்பினர்கள், பாராளுமன்றத்துக்கு சும்மா...டூரிஸ்ட் ஸ்பாட் மாதிரி போய் வரும் இடமாயிருக்கிறதே என்ற ஆதங்கத்தை ஓரளவாவது போக்கியது.

    ReplyDelete
  5. வரலாற்று குளறுபடி ப்த்தியெல்லாம் தெரியாது, ரவிசங்கர் அவர்களே!

    வேகமாய் வந்த பந்தை அடித்த சிக்ஸர்தான் மனதில் பதிந்தது.
    இலங்கையின் வரலாற்றை எடுத்து சொன்னதுக்கு மிக்க நன்றி!!!
    பல பேருக்கு தெரியாத தகவலாகக் கூட இருக்கலாம்.

    ReplyDelete
  6. சுத்தியாலடிச்சா...நெத்தி என்னாவது?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...