Wednesday, April 22, 2009

நவகிரக சந்நிதிகள் தரிசனம் - பாகம் இரண்டு

வெள்ளிக்கிழமை இரவு அபிராமி என்றன் விழுத்துணையே! என்று அவள் மடியில் சுகமான நித்திரை. காலையில் சீக்கிரம் அம்பிகையை தரிசித்துவிட்டு கிளம்பிம்பினால்தான்
மீதி மூன்று கோவில்களையும் பார்த்துவிட்டு இரவு பத்து மணிக்குள் மதுரை சென்றடைய முடியும். எனவே அதிகாலை ஐந்து மணிக்கு குளித்து முடித்து மடியாக கீழே இறங்கி
ஹோட்டல் ரிசப்ஷனுக்கு வந்தால், அங்கு கண்ட காட்சி...!

முந்தினம் காலையில் பிள்ளையார்பட்டியில் வினாயகரின் ஆசி பெற்று கிளம்பினோமல்லவா? அதே போல் இன்று காலையும் எங்களை ஆசீர்வதிக்க அந்த ஆனைமுகத்தோன்
எங்களுக்கு முன்பாகவே ஓடோடி வந்து ரிசப்ஷனில், "குள்ளக்கத்திரிக்காய் மாதிரி கால் மேல் கால் போட்டுக் கொண்டு(என் பேரன் மாதிரி) மும்முரமாக புத்தகம்
படித்துக்கொண்டிருப்பதை பாருங்கள்!! என்ன அழகு...!என்ன அழகு...!

அம்மையப்பனை சுத்திவந்த ஐயனை நானும் சுத்தி வந்து படமெடுத்துக்கொண்டு, வாழ்வு மிகுத்துவர வேழமுகத்தானின் ஆசியையும் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
எங்களைக் கண்டுக்காமல், "போறாயே பொன்னுத்தாயீ...!" என்று தண்ணீருக்குள்ளிருந்து குமிழ் குமிழாய் குமிழியது அங்கிருந்த மீன் தொட்டிக்குள் நீந்திக் கொண்டிருந்த மீன்கள். அவைகள் ஆசையும் தீர காமேராவை அங்கேயும் திருப்பினேன். இது நம்மவல்லிக்கு.
தனம் தரும், கல்வி தரும் நல்லன எல்லாம் தரும் ஆத்தாளின் திருக்கோயில் வாசல்.

பிரகாரத்தில் இறங்கியதும் அங்கும் குளித்து முடித்து நெற்றியில் வீபூதி அணிந்து யானை வடிவில் வரவேற்றார் வினாயகர்! பழகலாம் வாங்க என்றுபழமோ அல்லது காசு கொடுத்துவிட்டு தும்பிக்கையை தலையில் ஏந்திக் கொள்ளவோ முடியாததால் கையில் ஒன்றும் இல்லையென்பதால் முகம் காட்ட மறுத்தார், படம் பிடிக்க.விடுவேனா? அப்படியே க்ளிக்கிக் கொண்டேன். நம்ம கர்ர்ர்ர்ர்ர்புர்ர்ர்ர்ர்ர்ர் கீதாவுக்கு.

துறுதுறுவென்று கால் மாற்றி மாற்றி ஆடிக் கொண்டிருந்த மாறியாடும் பெருமானின் தலைமகனையும் படமெடுத்துக் கொண்டேன்.....நம்ம துள்சிக்காக.
முதலில் சிவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தானே சக்தியை கும்பிட
வேண்டும்? அமிர்தகடேஸ்வரரை ஆனந்தமாய் கும்பிட்டுவிட்டு, பக்கத்தில் இருக்கும், ஸ்ரீபாலாம்பாள் சமேத ஸ்ரீகாலஸ்ம்ஹாரமூர்த்தியையும் வணங்க அர்ச்சகர் அழைத்துச் சென்றார். மார்க்கண்டேயனை எமதர்மனிடமிருந்து காத்தருளிய பெருமானாம்! கற்பூரம் காட்டுமுன் எமதர்மனை வதைக்கும் காட்சியை சுவாமியின் பாதத்தடியில் ஒரு ஸ்லைடிங் டோர் மாதிரி இழுத்து காட்டிவிட்டு கற்பூர ஆரத்திக்குப் பின் அந்த டோரை உடனே மூடிவிட்டார். ரொம்பநேரம் பாக்கக்கூடாதாம்!
பின் சுவாமியின் பிரகாரம் சுத்தி வரும் போழ்தில் சுமார் ஏழு அல்லது எட்டு சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடும் தம்பதிகளைப் பார்த்தோம். அவர்களுக்கு மானசீகமாக எங்கள் ஆசிர்வாதத்தை வழங்கிவிட்டு, ஆத்தாளை அண்டமெல்லாம் பூத்தாளை பாக்க அவள் சன்னதிநோக்கி நடந்தோம். (அதென்னவோ அறுபதைக் கொண்டாடும் தம்பதிகளெல்லாம் இப்போதுதான் திருமணமானவர்கள் போல் அவ்வளவு இளமையாயிருக்கிறார்கள்!!!)

தனம் தரும் கல்வி தரும் நல்லன எல்லாம் தரும் அம்மையின் சன்னதி வாசல்.

சந்நிதிக்குள் நுழைந்ததும் அப்போதுதான் அபிஷேகம் அலங்காரம் முடித்து
'சித்துசிறுக்குன்னு சிகப்பு சேலையில் சின்னஞ்சிறுமி போல், அந்த "அமரர் பெருவிருந்து" எங்கள் கண்களுக்கு விருந்தாக காட்சி கொடுத்தாள்.

"வெளிநின்ற நிந்திரு மேனியைப்பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்ட தில்லைகருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே."


அங்கிருந்து திரும்பினால் கோவிலின் நந்தவனம். கண்களுக்கு குளுமையாகவெகு நேர்த்தியாக பராமரிக்கப் பட்டு யாரும் உள்ளே நுழைய முடியாதபடி கம்பிக் கதவிட்டு இருக்கிறது. குளிர்ச்சியான காட்சி!!
கொடிமர வணக்கம் செய்துவிட்டு வெளிவந்தோம்.அடுத்த கோயிலை நோக்கி விரைந்தோம்.
மங்களம் பொங்க மனம் வைக்க வேண்டிய, சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரபகவானின் திருநள்ளாறு ஸ்தலம். அதன் கோபுர வாசல்.
அன்று சனிக்கிழமையுமாதலால் கோயிலில் பெருங்கூட்டம்! அர்ச்சனை தட்டு ஏந்தியிருந்ததால் அதற்கான க்யூவில் நின்றோம். ஒவ்வொருவராக அர்ச்சனை முடிந்து வரிசை நகர வெகு நேரமாயிற்று. எங்களுக்கு முன்
கைக்குழந்தைகளோடு மூன்று பெற்றோர்கள். நேரமாக ஆக குழந்தைகள் தாகத்தால் தவித்தது. ஹையோ! நாம் தண்ணீர் பாட்டில் கொண்டு வராமல் போய்ட்டோமே!! என்று என் மனமும் தவித்தது. கடைசியில் மதிற்சுவரோரம் ஒரு குழாயில் நீர் கசிந்து கொண்டிருந்தது. ஓர் அப்பா
கம்பி வேலையைத் தாண்டிக் குதித்து ஒரு ஃபீடிங்க்பாட்டில் நிறைய தண்ணீர் பிடித்து வந்து குழந்தைகளின் தாகத்தைத் தணித்தார். சின்ன மூடியில் ஆவலோடு குடித்தைப் பார்த்தபின்தான் காஞ்சுபோன என் தொண்டையும் நனைந்தது.
வரிசையில் காத்திருந்தபோது, மதிற்சுவர் மேல் குந்தியிருந்த நந்தி என் கேமராவின் கண்ணில் பட்டார்.
சிறிது நகர்ந்த பின், இரு நந்திகளுக்கிடையே மும்மூர்த்திகளும் வெளிப்பக்கம் வேடிக்கை பார்த்தவாறு குந்தியிருந்தனர்.

கடைசி ஆனால் ஒன்று(last but one). பல சங்கீத மேதைகளை வழங்கிய
திருவெண்காடு....புதபகவானுக்கான ஸ்தலம்.
இங்கு எழுந்தருளியிருப்பது...ஸ்ரீவித்தியாம்பாள் சமேத ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர சுவாமிகள். நல்ல கல்வி பெற வேண்டிக் கொள்ளவேண்டிய ஸ்தலம்.
இங்குஅக்னிதீர்த்தம், சூரியதீர்த்தம், சந்திரதீர்த்தம் என்று மூன்று தீர்த்தக் குளங்கள் இருக்கின்றன.
அக்னிதீர்த்தம்.
சூரியதீர்த்தம்.
மூன்று குளங்களும் படு சுத்தமாக இருக்கின்றன
ஒரு தந்தை தன் குழந்தைகள் தலையில் குளத்து நீரை புனித நீராக தெளிக்கிறார். ஆம்!அப்படித்தான் இருக்கின்றன
குளிப்பதற்குத் தோதாக, பாதுகாப்பாக குழாய்களைப் பொருத்தி வசதி செய்திருக்கிறார்கள். 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்பது போல் தண்ணீர் கண்ட இடத்தில் குளிக்க ஆசை வரும். நேரங்காலம் கருதி ஆசையை அடக்கிவிட்டேன். என்ன அழகாயிருக்கு தண்ணீரும் குளமும்!!ஹூம்!!!
கொடிமர வணக்கம். அடுத்தது...ஒன்பதாவது.
கீழப்பெரும்பள்ளம்....கேதுஸ்தலம். ஒரே மழையாயிருந்ததால் வெளியே படமெடுக்க முடியவில்லை. சந்நதியில் ஏற்ற பதினோரு அகல் வாங்கிக்கொண்டோம். மழையில் நனையாமல் முந்தானையால் மூடிக் கொண்டே சந்நதி அடைந்தோம். விளக்கேற்றி கேது பகவானை வணங்கி
எங்கள் நவகிரக தல யாத்திரையை ஒன்பது பேரின் கருணையால் திருப்தியாக முடித்தோம்.
கீழப்பெரும்பள்ளத்திலிருந்து பூம்புகார் மெயின் ரோடு வழியாக குத்தாலம் என்ற ஊரைக் கடக்கும் போது ஓரிடத்தில் உயரத்தில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் பார்த்தோம். இது கார்த்திகை மாசம் கூட இல்லையே சொக்கப்பனை கொழுத்துவதுக்கு...? என்றெண்ணிய போது, "அம்மா! அது எரிவாயு!! இந்த இடத்தில் கிடைப்பதை ONGC- க்காரர்கள் கண்டு பிடித்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்." என்றார் எங்கள் ஓட்டுனர்.
அதைப் பார்த்ததும் ஒரு வேடிக்கையான யோசனை!! வீணாகும் அந்நெருப்பைச் சுற்றி சாரங்கட்டி மேலே ஒரு பெரிய.....குண்டானா வைத்து
ஊருக்கெல்லாம் சோறாக்கினால் எப்படியிருக்கும்????!!!!!!!

நவகிரக தல யாத்திரை நல்லபடி முடித்து நல்லாத்தானே இருந்தே.....???!!!!
அதுக்குள் பத்தாவதா எந்த கிரகம் உன்னைப் புடிச்சுது?

30 comments:

  1. "புள்ளையாரப்பனும் பேரப்புள்ளையும்" கம்பாரிஸன் வெகு வெகு அருமை:)).

    அத்தனை படங்களும் அசத்தல்.

    குளத்தின் முதல் படம் நீரில் மரங்களின் பிம்பங்களுடன்... அழகு.

    ReplyDelete
  2. குளங்களின் அழகும் தெளிவும் சுத்தமும் அங்கேயே என்னை சுத்திச்த்திவர வைத்துவிட்டன, ராமலக்ஷ்மி!!

    ReplyDelete
  3. ஹைய்ய் எங்க ஊரு கோவில்கள் அத்தனை படமும் வந்திருச்சு + குறிப்போட...! ஸோ நினைப்பு வரப்பெல்லாம் இங்க வந்து பார்த்துப்புட்டு கொசுவர்த்தி சுத்தலாம் சூப்பரூ :))))

    ReplyDelete
  4. மயிலாடுதுறை மையப்படுத்தி கோவில்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக மாயவரத்து மாஃபியாக்களிடம் சொல்லிவிட்டு செல்லுங்கள் ஏற்பாட்டெல்லாம் அமர்க்களப்படுத்திப்புடலாம் :))))

    ReplyDelete
  5. இங்கேயுள்ள உங்கள் கொசுவத்தியையெல்லாம் எங்களுக்கும் சொல்லுங்களேன், ஆயில்யன்!

    ReplyDelete
  6. // மாயவரத்து மாஃபியாக்களிடம் சொல்லிவிட்டு செல்லுங்கள் ஏற்பாட்டெல்லாம் அமர்க்களப்படுத்திப்புடலாம் :))))//

    கட்டாயம் ஆயில்யன்! இன்னொரு சுத்து இருக்கு. மாஃபியாக்கள்ள் அதிருவதை நானும் பாக்கணுமில்ல?

    ReplyDelete
  7. ஆசி கூற வந்தது பேரப்புள்ளையாரப்பா சரிதானே?

    ReplyDelete
  8. சொன்னாலும் சொன்னீங்க சர்ர்ர்ர்ர்ரியாச் சொன்னீங்க! கோமா!

    ReplyDelete
  9. வல்லிக்காக, கீதாவுக்காக, துளசிக்காக என்று படங்கள் எடுத்தீர்களே சகாதேவனுக்கு ஒன்று கிடையாதா.
    .
    சகாதேவன்

    ReplyDelete
  10. அந்த குளுமையான புல் தரையோடு கூடிய நந்தவனம்...சகாதேவனின் தாமரைக்காக.

    கூடையிலுள்ள தாமரை மொட்டுக்களும் அவருக்கே!!!

    சேரியா.....?

    ReplyDelete
  11. எனக்கானப் படத்தை எடுத்துக்கிட்டேன்ப்பா.

    ரொம்பவே டேங்கீஸ்.

    படிக்கும் புள்ளையார் சூப்பர். மகள் ப்ரெஸ்பேனில் இருந்து ரெண்டு பிள்ளையார் வாங்கிவந்தாள். அது ஒரு செட், புக் எண்ட்.

    முகம் கொஞ்சம் முறைச்சுப் பார்க்கறதுபோல இருக்கு. போகட்டும். சீனருக்குத் தெரிஞ்சது அவ்ளோதான்:-)

    படங்கள் எல்லாம் அட்டகாசம்.

    அந்தத் தோட்டம் சூப்பர்.

    ReplyDelete
  12. நவகிரக நாயகர்களின் ஆசி உங்கள் தொகுப்பை பார்த்து கிட்டியது. நல்ல ஒரு ஆன்மீக சுற்றுலா(உங்களுக்கும் தான்) எனக்கு ஆனா என்ன நான் காசு செலவில்லாமல் சுத்திட்டேன் உங்க புண்ணியத்தில.

    ReplyDelete
  13. //கரூர் ஊரெல்லை தாண்டியதும் பயங்கர சூறாவளி மழை. வழியில் எந்த ஊரிலும் மின்சாரம் இல்லை. மரங்கள் காற்றில் பேயாட்டம் போடுகின்றன//

    1000 கி.மீட்ட்ருன்னு தப்பா சொல்லிட்டீங்களே. கொஞ்சம் மழையும் பெய்ஞ்சுருக்குல.

    ReplyDelete
  14. நானானி, எங்களுக்குப் புண்ணியம் சேர்த்துக் கொடுத்திட்டீங்கப்பா.
    நாங்க போகும்போது வெண்காட்டுத் தீர்த்தமெல்லாம் அழுக்கா இருந்தது. இப்பச் சுத்தம் செய்துட்டாங்க போல.
    நல்ல மழை பெய்திருப்பது உங்க படங்களைப் பார்த்துத் தெரிகிறது.
    வெய்யில் அவ்வளவாகத் தெரிந்திருக்காது.
    பிள்ளையார்பட்டிப் பிள்ளையும், யானையும் ஆச்சரியம்.அழகு அற்புதம்.கோடி புண்ணியம் உங்களுக்கு.

    ReplyDelete
  15. நாங்கள் பெற்ற பேறு எல்லோரும் பெறவேண்டுமென்பதே இப்பதிவுகளின் நோக்கம். வருகைக்கு நன்றி! விஷ்ணு!

    ReplyDelete
  16. இல்லை..வல்லி! எல்லாப் புண்ணியமும் நவகிரகங்களுக்கே!!!
    உங்களுக்கு மீன் வேண்டாமா?

    ReplyDelete
  17. //மூன்று குளங்களும் படு சுத்தமாக இருக்கின்றன//

    நல்லவேளையா திருநள்ளார், பாண்டிச்சேரியைச் சேர்ந்தது, அதனால் பிழைச்சது! :)))))

    படங்கள் ரொம்ப அருமை, இரண்டு ஆனையையும் நானே எடுத்துண்டேன். துளசி வேணும்னால் அவங்க போறச்சே வாங்கிக்கட்டும். :))))))))))))

    ReplyDelete
  18. துளசி முன்னாலே வந்து எடுத்துட்டாலும் நான் பிடுங்கிட்டேன். :P

    ReplyDelete
  19. ஹிஹிஹி, அது திருவெண்காடு இல்லை?? நான் திருநள்ளார் னு எழுதிட்டேன். திருவெண்காட்டு நங்கை நினைவில் இருக்காங்களா? :))))))) வந்ததுக்குப் பின்னூட்டங்களை மொத்தமாக் கொடுத்துடலாம்னு! :)))))

    ReplyDelete
  20. திருநள்ளாறு பாண்டிச்சேரி...சேரி...இது புதபகவானுக்குள்ளதல்லவா?ஜாக்கிரதை அவர் வந்து பிடிச்சிக்கப் போறார்.

    வேணாண்டா செல்லம்...ஆளுக்கொண்ணு தந்திருக்கேனே? அடுத்தவங்களுக்கு கொடுத்ததைப் பிடுங்கப் படாது!!

    ReplyDelete
  21. சேரி...இனிமே உங்களுக்காச்சு, துள்சிக்காச்சு! தள்ளீ நின்னு வேடிக்கைப் பாக்கப் போறேன்!

    ReplyDelete
  22. என்ன ..?தேர்தல் ஜுரத்தில் குழம்பிவிட்டீர்களா?
    மொத்தமாய் வந்து கருத்துக்களை கொட்டியமைக்கு வந்தனம்!!

    இன்று கஸ்டர்ட்சப்பாத்தி செய்து ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு சாப்பிட்டேன். நல்லாருந்துது. பேரனுக்கேற்ற 'பாப்பாப்பி' அவன் அப்படித்தான் சொல்வான். ஓடிவந்து ரிசிப்பி தந்ததுக்கும் சேத்து நன்றி!!!

    ReplyDelete
  23. Nice pictures Naananee and a good Travelogue."
    'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்பது போல் தண்ணீர் கண்ட இடத்தில் குளிக்க ஆசை வரும். "-I totally agree with you.

    ReplyDelete
  24. நானானி அக்கா,
    ரொம்ப அருமையான் பதிவு. உங்க ப்ளாக்குக்கு அடிக்கடி வருவேன். இன்னைக்குதான் பின்னூட்டம் போடறேன்.நான் பிள்ளையார் பட்டி, சூரியனார் கோவில், திருநாகேச்சுவரம் போயிருக்கேன். திருக்கடயூர் அபிராமியை தரிசிக்க ஆசை. உங்க பதிவை படிக்கும் போது நானே கோவிலில் தரிசனம் செய்தது போல் நிறைவாக உள்ளது. ஸூரியனார் கோவில் போய்விட்டு பக்கத்தில் உள்ள மங்களாம்பிகை ப்ராணநாதர் கோவிலுக்கு போக வேண்டும் என்பார்கள். நல்ல பதிவிற்க்கு நன்றி.

    ReplyDelete
  25. சூப்பரா இருக்கு, நேர்ல போகிறப்போ, உங்க குறிப்பெல்லாம் கொசுவர்த்தியாய் வருமே!

    ReplyDelete
  26. //"-I totally agree with you.//
    ரொம்ப சந்தோஷம் அனானி!!

    ReplyDelete
  27. அன்பு உமா!
    அடிக்கடி எட்டிப் பாத்துட்டுப் போனாலும் இப்போ உள்ளே வந்ததுக்கு ரொம்ப நன்றி!!!

    ReplyDelete
  28. வரணும் மனக்குதிரை!!
    என் குறிப்பெல்லாம் கொசுவத்தியாய் சுத்தி நல்ல ஊதுவத்தியாய் மணம் கமழ வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  29. http://pudugaithendral.blogspot.com/2009/06/blog-post_09.html//

    கேள்விக்கு பதில் சொல்லுங்க நானானி

    ReplyDelete
  30. http://pudugaithendral.blogspot.com/2009/05/blog-post_06.html//

    இது அப்துல்லா பாடின பாட்டுக்கான லிங்க்

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...