Monday, July 20, 2009

தேடி வந்த விருதுகள்...வழங்கிய வள்ளல்கள்

நான் கேட்கவில்லை....எதிர்பார்க்கவுமில்லை. தேமேன்னு எனக்குத்தெரிந்ததை, பார்த்ததை, ரசித்ததை, கேட்டதை....இன்னும் பலவகையான தை..தை..தைகளை உங்களோடு ஆர்வத்தோடு, தேங்கிக்கிடந்த அணை நிரம்பி மதகை திறந்து விட்டாற்போல் எனக்கும் ஒரு வடிகாலாக வந்து வாய்த்தது, 'பதிவர் உலகம்!' கப்புன்னு பிடிச்சிக்கிட்டேன். விறுவிறுவென்று மேலேறியிருக்கிறேன் போலும். அடுத்ததடுத்து கைகளில் விழுந்தன விருதுகள். என்னதான் நமக்குள்ள்ளே நாமே நம் முதுகை தட்டிக் கொடுப்பது போலென்றாலும் 'விருது' என்றாலே ஒரு விருவிருப்பு இருக்கில்ல? அந்த மகிழ்ச்சியோடு எனக்கு இவற்றை வழங்கிய சகோதரிகள், திருமதி செல்விசங்கர், என்னை பட்டாம்பூச்சியாக சிறகடிக்க வைத்தவர், அடுத்து திருமதி கோமா, சுவாரஸ்யமான பதிவர் என்ற முத்திரையை என் மேல் பதித்திருக்கிறார்.

இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!!


செல்விசங்கர் வழங்கிய பட்டாம்பூச்சி விருது!!!


கோமா முத்திரையிட்ட பதக்கம்!!!

நிறைய பதிவர்களின் பதிவுகளில் இந்த விருதுகளைப் பார்த்திருக்கிறேன். இப்ப நான் யாரைன்னு தேடுவது?

காற்று
ராஜா/KVR
வெடிவால்
அ.மு.செய்யது

இந்நால்வருக்கும் இந்த இரண்டு விருதுகளை வாரி வாரி வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

9 comments:

  1. காற்று
    ராஜா/KVR
    வெடிவால்
    அ.மு.செய்யது
    விருதுபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அனைவருக்கும் வாழ்த்துகள்!!

    ///இந்நால்வருக்கும் இந்த இரண்டு விருதுகளை வாரி வாரி வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.//

    :-))

    ReplyDelete
  3. காற்று வந்ததும் பட்டம் வந்ததா பட்டம் வந்ததும் காற்று வந்ததா...ஆ..ஆ..
    நன்றி நானானி மேடம்.
    தவழும் குழந்தை கழுத்தில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம்

    ReplyDelete
  4. விருது பெற்ற உங்களுக்கும் உங்களால் வழங்கப் பட்ட மற்றவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. காற்றே!
    காற்று வந்ததால்தான் பட்டம் வந்தது.
    தவழும் குழந்தை தாங்கும் இப்பட்டங்கள். அப்படியே துள்ளியெழுந்து ஓடாதோ?

    ReplyDelete
  6. நல்லது...ராமலக்ஷ்மி!!

    ReplyDelete
  7. உங்கள் பதிவுகளைப் பார்த்த பிறகே நான் எழுத ஆரம்பித்தேன்.
    உங்க கையாலேயே விருதுகள் பெறுவது மகிழ்ச்சி.
    நன்றி, நன்றி.
    என்னுடன் வருபவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. அன்பின் நானானி

    விருது பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்ள்

    நானானி கையால் விருதெனில் அவர்க்ள் கொடுத்து வைத்தவர்கள்

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...