மதர் அலெக்ஸின் தோற்றம் அறுபதுகளில்.
சென்ற 2008-ஆம் வருடம்
இன்றைய தோற்றம். அதாவது 10-12-2009-ல்
விழா மண்டபத்துக்கு வீல்சேரில் அழைத்துவரப்படுகிறார்.
கூடியிருந்தோ அனைவரும் தமது வலது கையை அவரை நோக்கித் திருப்பி வாழ்த்துக்களை வழங்குகிறோம்.
வாழ்த்துக்களை இருகரம் கூப்பி ஏற்றுக்கொள்கிறார்.
எங்கள் குழு சார்பில் கொண்டு சென்றிருந்த பிறந்தநாள் கேக்...அவர் முன்.
அவர் கைகளால் அதை வெட்ட வைத்து, அதில் ஒரு துண்டை அன்போடு ஊட்டிவிடுகிறார் அவரது உதவியாளர். மிகவும் உணர்ச்சிவசப்படுவதால் அருகில் வந்து வாழ்த்தவருபவர்களை அரை நிமிடத்துக்கு மேல் பேசவிடவில்லை. நான் உட்பட. ‘நாட்டி கல்யாணி’ என்று சொன்னவுடன் ஞாபகம் வந்து அன்போடு வருடி நெற்றியில் சிலுவையிட்டு ஆசி வழங்கினார்.
வாழ்த்த வந்த அன்பர் ஒருவர்.
ஆசி பெற்ற பதிவர் ஒருவர்.
அவருக்குப் பிடித்தமான பாடல்களைப் பாடி மகிழ்விக்கும் அவரது குடும்பத்தார்.
நன்றி நவில மேடைக்கு அழைத்துவரப் படுகிறார்.
நன்றியை தம் மழலை மொழியில் தெரிவிக்கிறார்.
மேடையில் குடும்பத்தாரோடு உல்லாச நடனம்!!
என் முந்தைய பதிவைப் படித்து தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்கச் சொன்ன சகபதிவர்களது வாழ்த்துக்களையும் எடுத்துச் சென்று மதரிடம் சேர்ப்பித்த வாழ்த்து அட்டை!!!
இன்றைய செயிண்ட் இக்னேஷியஸ் பள்ளியின் தலைமையாசிரியர் எங்களிடம் வந்து பள்ளியின் ‘ஸ்கூல் ஆந்தம்’ அசெம்பிளியில் பாடுவது, நாம் எல்லோரும் சேர்ந்து பாடலாமா? என்றார்கள். அவரவர்க்கு ஞாபகம் வந்த வரிகளை கூவினோம். வாருங்கள் சேந்து பாடலாம் என்று மேடைக்கு அழைத்தார்கள். அப்படி நாங்கள் பாடிய எங்கள் பள்ளின் பாடல்.
Once more, time-honoured halls,
Resound with youthful song:
And tell us by your ringing walls
That you and we belong!
O dearest school,to thee our youth
We do entrust to learn the truth
That VIRTUE IS OUR STRONGEST SHIELD
And we will never and we will never
And we will never never, yield!!
விழா முடிந்து அருமையான சாப்பாடு. பள்ளியிலேயே தயாரித்த உணவு அருமையாயிருந்தது. தோழி ஒருத்தி ‘டுகோ’ செய்வதைப் பார்த்து நானும் ஒரு பார்சல் எடுத்துக்கொண்டேன், ரங்கமணிக்காக. அதைப் பார்த்து, ‘என்னக்கா? கூலா பாக் பண்றீங்க? என்றாள் நான்,’யாரைக்கேக்கணும்? இது நம்ம அம்மா வீட்டு சாப்பாடு!’ என்றேன். அப்ப நாங்களும் எடுத்துக்கிறோம்....!என்றார்கள். இது எப்படியிருக்கு?
மொத்தத்தில் வெள்ளை ஜாக்கெட்டும் வெள்ளை தாவணியும் பச்சைப் பாவாடையுமாக அங்கு உலா வந்தது போல் ஒரு பிரமையிலிருந்தோம்.
மதர் அலெக்ஸ் அவர்கள் நீடூழி வாழ ஏசு அவதரித்த இந்த கிறிஸ்துமஸ் நந்நாளில் வேண்டுகிறோம்.
உலக மக்கள் அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்!!!!!!!!