Saturday, March 13, 2010

சிங்கிலாய் வரும் சிங்கம் - மார்ச் பிட்

பீடு நடை போட்டு சிங்கிலாய் வரும் படங்கள் சில....போட்டிக்கு எதுவென்று முடிவாகலை. பாருங்கள்....சொல்லுங்கள்.

’தமிழுக்கும் அமுதென்று பேர்....’ இப்படிப் பாடுகிறதோ இந்த பஞ்சவர்ணக்கிளி?


சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழியும், கொவ்வைச் செவ்வாயும் குமிழ் சிரிப்பும்.


காலத்தின் கோலங்களை சகிக்கமுடியாமல் சிண்டை பிச்சிக்கலாம்போலிருக்கு.


ஆடாது அசங்காது ஓசையில்லாமல் தொங்கும் மணி.
விடாது ஓசையிடுவதே இதன் பணி


ஹாய்! நா பிடிச்ச மீனுக்கு எத்தனை கால், சொல்லுங்க?


அரவிந்த மலரோடு அனுராக நிலை காண ஆதவன் (சிங்கிலாய்) உதயமானான்.


தனியே...தன்னந்தனியே நான் மரமாக நிற்கின்றேனே.


சக்திதான் என்னை வேண்டி தவமிருக்கணுமா என்ன? நானும் அவளுக்காக காலங்காலமாக இங்கே தவமாய் தவமிருக்கிறேன்.


தலை கொள்ளா கூந்தலும் நுதல் கொள்ளா வெண்நீரும் கழுத்து கொள்ளா ரோசாப்பூ மாலையுமாய் வெண்பட்டுடுத்தி இந்த ரோசாப்பூ எங்கே போகிறது?


சுவரில் குழந்தை கிறுக்கிய கிறுக்கல் அல்ல, இச்சுவர் அலங்காரம்!!!





14 comments:

  1. அன்பின் நானானி

    அத்தனையும் அருமை - மழலை இருவரின் படம் சூப்பர் - ஆதவன் நன்று - வெற்றி கிடைக்க நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சிங்கலாய் வந்த சிங்கக்குட்டிகளில் பெரிய குட்டி படத்தை பெரிசு செய்து பார்த்தாலும் மீனே கண்ணுக்கு தெரியலையே:))? ரொம்ப ரொம்பச் சின்ன மீன் போலிருக்கு:)! சின்ன குட்டியின் கொவ்வை செவ்வாய் மனதை மட்டுமல்ல பரிசையும் அள்ளும்.

    எல்லா படங்களும் அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. சந்தேகமே இல்லை படங்கள் அத்தனையும் அசத்தல்.

    ஆனால்...பிட் போட்டி SINGLE க்குள் சிக்குமா
    இன்னும் நேரம் இருக்கிறதே....

    ReplyDelete
  4. ஆதவன் (சிங்கிலாய்) அதெப்படிங்க?
    நான் ஒரு ஆதவன் தான் பார்த்திருக்கிறேன்

    ReplyDelete
  5. கொவ்வைச் செவ்வாயும் குமிழ் சிரிப்பும் காட்டும் குழந்தை அழகு.

    மற்றவையும் அழகு.வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. குமிழ் சிரிப்பு,பரிசினை அள்ளி வரும். நானானிம்மா. மற்ற படங்களும் சளைத்தவையில்லை. அந்த ஒற்றை மரம் அழகு.

    அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சூப்பர். சிங்கிளாய் செல்ல முடியவில்லை என்றாலும் போட்டியில் சிங்கிளாய் பரிசை வெல்ல வாழ்த்துக்கள்.

    சகாதேவன் அவர்களின் கேள்விக்கு என்ன பதில் ? :)

    ReplyDelete
  8. அன்பின் சீனா,
    வாழ்த்துக்கு நன்றி!

    ReplyDelete
  9. ராமலக்ஷ்மி,

    அது ட்ரான்ஸ்பரண்ட் மீன்!

    ReplyDelete
  10. கோமா,
    சிக்குமோ சிக்காதோ....போட்டிக்குள் நுழைந்தாயிற்று.

    ReplyDelete
  11. சகாதேவன்,
    நீங்க பாத்தது சூரியா நடித்த ‘ஆதவன்’ படம்.

    ஒரே வானிலே ஒரே ஆதவன் தான்.

    ReplyDelete
  12. கோமதி அரசுவின் வாழ்த்துக்கு நன்றி!!

    ReplyDelete
  13. அமைதிச்சாரல்,
    உங்கள் நல்வாக்குக்கு நன்றிகள்.
    அந்த ஒற்றை மரத்தின் பேரே, ‘லோன் ட்ரீ’ தான்.

    ReplyDelete
  14. சதங்கா,
    சகாதேவனின் கேள்விக்கு பதில் சொல்லிட்டேன். சேரியா?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...