Tuesday, November 16, 2010

நவம்பர் புகைப்படப் போட்டி "ஒளி"

நாடங்கும் தீப ஒளி ஏற்றி தெய்வங்களை வழிபடும் நல் மாதமாம் கார்த்திகை மாதத்தில் அறிவிக்கப் பட்டிருக்கும் போட்டி.....மிகவும் பொருத்தமானது.

அதிலும் கார்த்திகை மாதப் பிறப்பன்று வெளிவரும் போட்டிக்கான என் படங்களை தெரிவு செய்ய இன்றே பதிவிடுகிறேன்.

வளைந்த கூரையில் காட்டப்படும் ஒளிக்காட்சி.....




நள்ளிரவில் செவ்வொளியில்...



மகாராணியின் கழுத்துநகை தீபாவளியன்று பளபளக்கும் மினுமினுக்கும் ஜொலிஜொலிக்கும் வைர அட்டிகை.



மேற்கூரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னும் விளக்கொளி.



பெங்களூருவில் தொங்கும் விளக்கு.



விளக்குகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்போ...? படிப்படியாய் ஒளிரும் ஒளி.




எங்க வீட்டு பிள்ளையார் விளக்கொளியில்.




பிரம்மாண்டமாய் தொங்குகிறது......அமெரிக்க ஷாண்ட்லியர்.



தொங்கும் மணி வழியே...ஒளி.



தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் 'ஒளி' மயமான எதிர்காலம் ஒளிர வாழ்த்துகிறேன்.








20 comments:

  1. தமிழ்மணமே...தமிழ்மணமே...ஏன் மறந்தாய் தமிழ்மணமே...!

    ReplyDelete
  2. அட்டிகையை அனுப்பிவையுங்க நானானிம்மா, எனக்கில்லே... பிட் போட்டிக்கு :-)))

    ReplyDelete
  3. அமைதிச்சாரல்,

    'அப்படிப் போடு..போடு..
    அட்டிகையைப்போடு...போடு'

    போட்றுவோம்!!!!

    உங்களுக்கு வேணுனாலும் போட்றுவோம்....சேரிதானே....?

    ReplyDelete
  4. மூன்று போட்டிக்கு நன்று. முதல் படம் ஒளிரும் cone-ம் நல்லாயிருக்கு.
    அடுக்குமாடி விளக்கும் பெங்களூரில் தொங்கும் விளக்கும் கூட நல்லாருக்கே:)!

    ReplyDelete
  5. வானவேடிக்கை படம் நல்லா இருக்கே..

    அந்த பிள்ளையார் மாடர்னா அழகா நல்லாருக்கார்.

    ReplyDelete
  6. அன்பு நானானி, சாரல் சொன்னது போல ராணியோட நகைதான் உசத்தி.நல்லா இருக்கு. வெளியில் வெளிச்சத்தில் உட்கார்ந்திருக்கும் படமும் நல்லா இருக்கு. வெற்றி பெறுவீர்கள்.

    ReplyDelete
  7. தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் 'ஒளி' மயமான எதிர்காலம் என் உள்ளத்திலும்
    தெரிகிறது.
    சகாதேவன்

    ReplyDelete
  8. ராமலஷ்மி,

    நீங்களும் அட்டிகைதானா?

    சேரி..சேரி..ஆனாலும் பெண்ணல்லவா?

    பெங்களூருவில் இன்னும் என்னென்னவோ இருக்கு.

    ReplyDelete
  9. முத்துலெட்சுமி,

    எனக்கும் அந்தப் பிள்ளையார் ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete
  10. வல்லி,

    நகை...அதுவும் ராணியின் நகை ஜொலிக்காமல் போகுமா?

    கட்டயம் அனுப்பிரலாம்.

    ReplyDelete
  11. ஆப்பம் வரும் வரை ஒளிவிளக்கை ரசித்துக் கொண்டிருக்கிறோம்....

    செவ்வொளியில் யாரது....சிங்கிளா நிற்கும் சிங்கம்...

    ReplyDelete
  12. பிள்ளையார் ஜோர்

    ReplyDelete
  13. * தனி மடல்*

    என்ன ஆப்பம் காணாமப்போச்சு? அதுக்குள்ளே சாப்டாச்சா!!!!!!!!!

    ReplyDelete
  14. நன்றி...சகாதேவ்ன்!!

    ReplyDelete
  15. கோமா,
    அதுக்குள் ஆப்பக்கடை விரிஞ்சிடுச்சா? விரலுக்கு அவசர்ம்!!

    செவ்வொளி மழையில் நனைவது எங்க வீட்டு சிங்கக்குட்டி.

    ReplyDelete
  16. துள்சி,

    அதென்ன...சூப்பரு?

    எது சூப்பரு..எப்படி சூப்பரு...ஏன் சூப்பரு...இப்படி விலா வாரியா சொல்லத்தாவல?

    இந்த சர்கோஸெல்லாம் என்ர கிட்ட வேணாம்!!

    ReplyDelete
  17. துள்சி,

    முதலில் சுட்ட ஆப்பங்கள்....உங்க பாஷையில் 'சூப்பரா'யிருந்துதா...நானே தின்னு தீத்துட்டேன்.

    புச்சா சுட்டு அனுப்பிருக்கேன். தின்னுட்டு'சூப்பருன்னு' சொல்லிட்டுப்போங்க...சேரியா?

    ReplyDelete
  18. queen's necklaceலிருந்து வைரங்கள் தெரித்துச் சிதறுகின்றன.....

    ReplyDelete
  19. முதல் சுற்றில் முன்னேறி பளிச்சிடும் நானானிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...