ஆப்பத்துக்கான சைட் டிஷ்களில் ஒன்று இந்த பட்டாணி கொத்துக்கறி.
தேவையானவை:
கொத்துக்கறி - 2 கப்
பட்டாணி உறித்தது - 1 கப்
தக்காளி - 3 பொடியக நறுக்கியது
சின்ன வெங்காயம் - 2 கப் பொடியாக அரிந்தது
இஞ்சி-பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
பட்டை,ஏலம், கிராம்பு - தலா 2
எண்ணை - அரை கப்
கொத்தமல்லி தழை - பொடியாக அரிந்தது மேலே தூவ
மஞ்சள்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 மேஜைகரண்டி அல்லது தேவைக்கேற்ப
ஜீராதூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய்பால் - 1 கப்
பிரஷர்பானை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை,ஏலம்,கிராம்பு போட்டு பொறிந்ததும் வெங்காயம், தக்காளி, பட்டாணி, இஞ்சிப்பூண்டு சீழுது சேர்க்கவும். பிறகு சுத்தம் செய்த கொத்துக்கறியை அதில் சேர்த்து நன்கு கிளறவும். பின் மஞ்சள்,மிளகாய், ஜீரா, மல்லித்தூள்களை சேர்த்து கலந்து உப்பும் சேர்த்து நன்கு கிண்டி ரெண்டு கப் தண்ணிர் விட்டு
பிரஷர்பானை மூடிவிடவும்.
ரெண்டு விசிலுக்கு அடுப்பை அணைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து பானை திறந்து தேங்காய் பாலை விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...
ஆப்பத்துக்கு நான் செய்த முதல் கிரேவி. அப்புரம் கதை எப்படியெல்லாம் போச்சு தெரியுமா..?
ReplyDeleteகொத்துக்கறிக்குப் பதில் சோயா க்ரான்யூல்ஸ், பனீர் இப்படி.
மிக அருமை.
ReplyDeleteமிக்க நன்றி! ஆசியா ஒமர்!
ReplyDelete