Wednesday, November 24, 2010

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

கொஞ்சம் தாமதமான பதிவுதான்...ஆனால் கார்த்திகை மாதம் முழுதும் வாழ்த்தலாமே!!!!!













கார்த்திகை தீபத்துக்கு மறுநாள் பேரன் வந்திருந்தான். மாலையில் நான் கோலப்பொடி டப்பாவுடம் கிளம்பியதைப் பார்த்தவுடன், “ஆச்சி!! நான்..நான்தான் கோலம் போடுவேன்” என்று டப்பாவைப் பிடிங்கிக்கொண்டான்.

என்ன அழகாக வாசலில் உக்காந்து கொண்டு கோலமிடும் ஷன்னு.
.


உக்காந்து போடுவது வசதியாக இல்லையாம்.


அன்று அவன் போட்ட கோலத்திலேயே விளக்குகளும் சந்தோசமாக ஒளி வீசின!!!

அனைவரின் வாழ்விலும் சந்தோச ஒளி வீசி, அவ்வொளி எங்கும் பரவட்டும்
வாழ்க வளமுடன்!!!!





18 comments:

  1. சிறுகை அளாவிய கூழ் என்று சொல்வது போல்
    சிறுகை அள்ளித் தெளித்த கோலம்தான் உலகிலேயே அழகான கோலம்

    ReplyDelete
  2. இரண்டுநாள் முன்னால் பதிவிட்டிருந்தால் ஒளி போட்டிக்கு இன்னும் அதிகமான படங்கள் கிட்டியிருக்குமே

    ReplyDelete
  3. 5வது படமும் 6வது படமும் சூப்பர்

    ReplyDelete
  4. ரொமப சரிதான்...கோமா!

    ReplyDelete
  5. இயலாமை என்று சொல்லலாமா...?
    சோம்பேறித்தனம் என்னலாமா...?கோமா!!!

    ReplyDelete
  6. அதா எனக்குத்தெரியுமே....!!!!!

    ReplyDelete
  7. 'நின்று' போடலாமான்னு நான் யோசிக்கும்வேளையில் 'இருந்து' போடுவதில் சுகமில்லை எனக் 'கிடந்து' போட்ட கோலம் சூப்பர்!!!!!

    எல்லாம் பெருமாள் செயல்:-)))))0


    இனிய வாழ்த்து(க்)கள் உங்கள் அனைவருக்கும். என் இனிய பாராட்டுகள் பெரிய ஆள் ஷன்னுவுக்கு:-)

    ReplyDelete
  8. பேரன் கோலம் போடும் அழகு - அழகு!!

    ஒரு சந்தேகம்: வாசலை ஒட்டி கோலம் போட்டிருக்கீங்களே, வீட்டை விட்டு வெளியே வரும்போது கோலத்தை மிதிக்காம எப்படி வரமுடியும்? :-))))

    ReplyDelete
  9. ஒளிப்படங்கள் அருமை.

    கோலம் அழகு.

    பேரன் இட்ட கோலம் பேரழகு:)!

    ReplyDelete
  10. ஆகா அருமை.. அருமை.. ஷன்னு போட்ட கோலத்தில் விளக்குகள் மின்னத்தான் செய்கிறது.
    பதிவோ விளக்கில் மின்னுது..
    பின்னூட்டங்களோ... கூட சேர்ந்து மின்னுது :)

    ReplyDelete
  11. அன்பு துள்சி,
    நின்றும் இருந்தும் கிடந்தும்...ஷன்னு போட்ட கோலத்துக்கு உங்கள் பாராட்டுக்கு நன்றி!
    ஷன்னுகிட்ட சொன்னால், ‘ஆமா! நாந்தான் பிக் பாய் ஆயிட்டேனே!!’ என்பான்.
    நன்றி, துள்சி!!!

    ReplyDelete
  12. ஹூஸைன்னம்மா!

    //வீட்டை விட்டு வெளியே வரும்போது கோலத்தை மிதிக்காம எப்படி வரமுடியும்? :-))))//

    வெளியே வந்தாத்தானே!!!???

    வீட்டுக்கு மிக அருகில் மாடிப்படி உள்ளதால் தள்ளிப் போட்டால் மாடி ஏறுகிறவர்களுக்கு சிரமம். அதா!!!

    ReplyDelete
  13. ராமலஷ்மி,

    ரொம்ப சந்தோசம்!!

    ReplyDelete
  14. முத்துலெட்சுமி,

    ‘வாம்மா...மின்னல்!!’ன்னு கூப்பிட்ட மாதிரி மின்னத்தான் செய்யுது. அதுவும் பேரன் இட்ட கோலம்....!!

    ReplyDelete
  15. அசத்திட்டீங்க நானானி. அழகோ ஒளியோ,வண்ணமோன்னு பாட வைக்குது ஒவ்வொரு கோலமும் தீபமும். இருக்கிறதிலியே சர்க்கரைப் பந்தல் பேரந்தான். ஷன்னு உன் திருநாமத்துக்கு ஏத்த மாதிரி பிள்ளை(யார்)க்கோலம் போட்டுவிட்டாய்.அன்பு நானானி ஒளிக்கு நன்றியும் வாழ்த்துகளும்பா.

    ReplyDelete
  16. வந்ததுக்கும் வாழ்த்தியதுக்கும் நன்றிப்பா! வல்லி!
    சர்க்கரைப் பந்தலுக்கு உங்க வாழ்த்தை சொல்லிடறேன். சேரியா...?

    ReplyDelete
  17. அருமை,அழகு.தீபத்தை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. தீப ஒளி தந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...