எத்தனை சந்தோஷங்கள்...சோகங்கள்
எத்தனை நினைவுகள்...கனவுகள்
எத்தனை பிறப்புகள்...இறப்புகள்
எத்தனை நல்லவை...அல்லனவை
எத்தனை எதிர்பார்ப்புகள்....ஏமாற்றங்கள்
எத்தனை உல்லாசங்கள்...சல்லாபங்கள்
எத்தனை முட்கள்.....ரோஜா இதழ்கள்
எத்தனை உற்சாகங்கள்....சோர்வுகள்
எத்தனை இதங்கள்...இடிகள்
எத்தனை ஓட்டங்கள்...வாட்டங்கள்
எத்தனை ஏறுமுகங்கள்...இறங்குமுகங்கள்
எத்தனை ஆனந்தங்கள்...பரமானந்தங்கள்
எத்தனை புகழ்கள்...இகழ்கள்
எத்தனை கை கொடுப்புகள்....கை விடுப்புகள்
எத்தனை போட்டிகள்....ஜெயிப்புகள்
எத்தனை சௌகரியங்கள்....அசௌகரியங்கள்
எத்தனை ’’எஸ்’கள்....’நோ’கள்
எத்தனை ஊன்றுகோல்கள்...தள்ளாட்டங்கள்
எத்தனை ஆதரவுகள்....முக மாறுதல்கள்
எத்தனை எத்தனை உறவுகள்....நண்பர்கள்
எத்தனை ஏற்றங்கள்....தாழ்வுகள்
எத்தனை புகழ்ச்சிகள்....பொறாமைகள்
எத்தனை வரவுகள்...செலவுகள்
எத்தனை சிரிப்புகள்....அழுகைகள்
எத்தனை தட்டுகள்...குட்டுகள்
எத்தனை கற்பனைகள்...நிதர்சனங்கள்
எத்தனை நெருக்கங்கள்....விலகல்கள்
எத்தனை கிண்டல்கள்.....கேலிகள்
எத்தனை ‘அட! க்கள்...’அடடா’க்கள்
எத்தனை கை குலுக்கல்கள்....கை விடல்கள்
எத்தனை ‘கண்டு’கள்...கண்டுக்காதல்கள்
எத்தனை உணர்வுகள்....உணர்ச்சிகள்
எத்தனை பிரார்த்த்னைகள்....சாபங்கள்
எத்தனை மிதிகள்....வருடல்கள்
எத்தனை வருடங்கள்.....நாழிகைகள்
எத்தனை சப்தங்கள்.....மௌனங்கள்
எத்தனை மரியாதைகள்....அலட்சியங்கள்
எத்தனை மலர் கிரீடங்கள்......முட்கிரீடங்கள்
எத்தனை ஆனந்தங்கள்.....அற்புதங்கள்
எத்தனை காவல்கள்....கட்டுப்பாடுகள்
எத்தனை தலை நிமிர்வுகள்.....குனிவுகள்
எத்தனை திருப்திகள்....அதிருப்திகள்
நாற்பத்தியிரண்டு வருடங்கள்!!!!!! இத்தனையும் கடந்து வந்திருக்கிறோம். காலம்தான் எத்தனை நல்லாசிரியர். அது நமக்கு கற்றுக்கொடுத்தவைகளை கடைப்பிடித்து, நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தால்.....கடவுள் எங்களுக்கு ஒரு நல்ல வாழ்கையைத்தான் தந்திருக்கிறார். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!!!!
என்ன ..? புரியவில்லையா இன்றுடன் எங்களுக்குத் திருமணமாகி நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 8-11-1968 எங்கள் திருமணநாள்!!!!!
எங்கள் குடும்பத்தில் இதே 8-11- அன்று திருமணநாளைக் கொண்டாடும்
அண்ணன் மகன் சந்தர்-விஜி
இன்னொரு அண்ணன் மகள் சுந்தரி-வசந்தகுமார்
ஆகியோருக்கும் எங்களின் அன்பான மணநாள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!!!!!!
இன்னாளில் நாங்கள் அறுவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்திக்கொண்டு,”Thank you...Wish you the same" என்று வாழ்த்துக்களையும் பதில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...
மூன்று ஜோடிகளுக்கும் இனிய மணநாள் வாழ்த்துக்கள்:)!!!
ReplyDeleteஎத்தனைகள் வாழ்வின் தத்துவங்களாய்.. அருமை!
[im]http://www.orkutpapa.com/scraps/ra-sunbird-congratulations.gif[/im]
ReplyDeleteமுதலில் உங்கள் கல்யாண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் கணக்கு போட்டேன்.
365 நாட்கள். 42 ஆண்டுகளில் 10 லீப் ஆண்டு. அதனால்
365 x 42 = 15330 + 10 = 15340. எத்தனை அனுபவங்கள்!
ரங்கமணியிடம் சொல்லுங்கள்
தாமரை, சகாதேவன்
ராமலக்ஷ்மி,
ReplyDeleteநன்றி, முதல் பின்னோட்டம் & முதல் தொலைபேசி அழைப்புக்கு.
வாழ்த்துகள் நானானி அம்மா
ReplyDeleteஆசிர்வதிக்க வேண்டுகிறேன் :)
சகாதேவன்,தாமரை,
ReplyDeleteஉங்க கணக்கு சரிதான். எதை வைத்து கணக்கிட்டீர்கள்?
கணினியா? கால்குலேட்டரா? துல்லியமாயிருக்கிறது!!!
ஆயில்யன்,
ReplyDeleteசகல நலமும் வளமும் பெற்று இனிது வாழ வாழ்த்துகிறோம்!!!!
வாழக வளமுடன்!
வாழ்த்துக்களும் வணக்கமும் நானானி அம்மா!
ReplyDeleteஆமா மூன்று ஜோடிகளுக்கும் இனிய மணநாள் வாழ்த்துக்கள்:)
ReplyDeleteவாழ்கவளமுடன்..எத்தனைகள் அடடா அற்புதம்..நானானி
வருடத்திற்கொன்றாக நாற்பத்தியிரண்டு வருடங்களுக்கு ஒரு தத்துவ முத்து!!
ReplyDeleteவாழ்த்துகள் நானானி மேடம். ஆமா, அது என்ன நானானின்னு பேரு - நாராயணியா? ப்ளாக் பேரும் நைன்வெஸ்ட்னு புதுசா இருக்கு?
வாழ்த்துக்கள்! சகல நலம் பெற்று வாழ வாழ்த்துக்கள்!
ReplyDeleteமூன்று ஜோடிகளுக்கும் இனிய மணநாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteசுந்தரா,
ReplyDeleteமுதலில் முதல் வருகைக்கு நன்றி!
அப்புரம்...வாழ்த்துக்கும் நன்றி!!!
கயல்,
ReplyDeleteவாத்துக்கும் நன்றி!
அத்தனை எத்தனைகளையும் வாசித்தீர்களா?
ஹூஸைனம்மா!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி!
பெயர் காரணம் பலமுறை சொல்லிவிட்டேன். ஆனாலும் உங்களுக்காக ஒரு முறை.
ப்ளாக் எழுத வருமுன், பிறர் பதிவுகளை மேய்ந்துவிட்டு பின்னோட்டங்கள் போட்டுக் கொண்டிருப்பேன். குறிப்பிட்ட பதிவர் ஒருவர் பதிவுகளுக்கு மட்டும் அனானி கமெண்ட்டுகளில் கடைசியில் ’நான்..நான்’ என்று போடுவேன் அவர்தான் எனக்கு நான்+அனானி= நானானி என்று பெயரிட்டார். அதையே பதிவுக்குக்கான பெயராக வைத்துக் கொண்டேன். 9-west என்பது என் பிறந்த வீட்டின் விலாசம். அமெரிக்காவில் இருந்தபோது இதே பெயரில் செருப்புக்கடை ஒன்று பாத்தேன். அந்த படம்தான் என் முகப்பு படம். சேரியா?
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....இப்பவே கண்ணைக்கட்டுதே!!!
ஹூஸைனம்மா!
ReplyDeleteஇந்த பதிவுக்கு சென்று பார்க்கவும்.
http://9-west.blogspot.com/2007/04/blog-post/html
நானானி மேடம், விளக்கமான விளக்கத்திற்கு நன்றி. நீங்க கொடுத்த லிங்க் வேலை செய்யலை. பரவால்லை.
ReplyDeleteமூன்று ஜோடிகளுக்கும்
ReplyDeleteஇனிய மணநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க நலமுடன்.
மூன்று ஜோடிகளுக்கும்
ReplyDeleteஇனிய மணநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க நலமுடன்.
அருமையான அனுபவ முத்துக்கள்.எழுத்தின் உச்சம் காட்டிவிட்டீர்கள்.இனிமேல் இந்த இடத்தைத் தக்க வைக்க வேண்டும்.
ReplyDelete---------------
திருமணம் ஆகும் வரை ,உலகம்தெரியாத ,அப்’ராணி’யா இருந்திருக்கீங்கன்னு சொல்லுங்க....
சரிதானே என் கணிப்பு?
இந்த கணிப்புக்கு,கால்குலேட்டரும் வேண்டாம் கணினியும் வேண்டாம்.உங்கள் எழுத்தே போதும்.
எல்லாம் படிச்சேன் :) அதும் அந்த கண்டு’ கள் கண்டுக்காதல்கள் செம சூப்பருல்ல.:)
ReplyDeleteஎல்லாம் படிச்சேன் :) அதும் அந்த கண்டு’ கள் கண்டுக்காதல்கள் செம சூப்பருல்ல.:)
ReplyDeleteமாதேவிக்கு.....நன்றி!!!!
ReplyDeleteகோமாவுக்கும் நன்றி!!
ReplyDeleteகோமா,
ReplyDelete//இந்த இடத்தைத் தக்க வைக்க வேண்டும்.//
கஷ்டம்தான்....முயற்சிக்கிறேன். பாராட்டுக்கு நன்றி.
கோமா,
ReplyDelete//,உலகம்தெரியாத ,அப்’ராணி’யா இருந்திருக்கீங்கன்னு சொல்லுங்க....//
அப்ப, திருமணத்துக்குப் பின் டவுன்,ராணியா ஆகிட்டேனே?
வாழ்க்கைன்னாலே அப்’பும் டவுன்,னும் இருக்கத்தானே செய்யும்?
அப்ப, திருமணத்துக்குப் பின் டவுன்,ராணியா ஆகிட்டேனே?
ReplyDeleteவாழ்க்கைன்னாலே அப்’பும் டவுன்,னும் இருக்கத்தானே செய்யும்?
superungo...o...o...
நானானி
ReplyDeleteநீங்கள் இருவரும் மேலும் பல திருமண நாள்களை கொண்டாடி மகிழ எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக .
ஷோபா
:) இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பு நானானி, இந்தப் பதிவைக் கண்டுக்காமல் விட்டதுக்கு மன்னிக்கணும்.
ReplyDeleteநீங்களும் மற்ற இரண்டு ஜோடிகளும் வாழ்வினிக்க,சிறக்க பல்லாண்டுகள் சேர்ந்திருக்க வாழ்த்துகள் பா.
வல்லிம்மா..!
ReplyDelete// இந்தப் பதிவைக் கண்டுக்காமல் விட்டதுக்கு மன்னிக்கணும்.//
இதைத்தான் பதிவிலேயே பதிஞ்சிட்டேனே!
//எத்தனை ‘கண்டு’கள்...கண்டுக்காதல்கள்//
ஆனாலும் மன்னிப்பெல்லாம் வேணாம்.
ஆ...னாலும் மன்னித்தோம்..தோம்..தோம்!!!
வி.ராதாகிருஷ்ணன்,
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி!!!