" பழைய ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம் !"-ன்னு விக்கிறவங்ககிட்ட போட்டு பேரீச்சம்பழம் வாங்கி தின்னு தீக்காமல். பொக்கிஷம் மாதிரி பாதுகாத்து, பழைய கருக்கழியாமல் சொந்த பாகங்களோடு உருண்டு ஓட வரிசை கட்டி காத்திருக்கும் கார்கள் கண்களுக்கு நல்விருந்து.
சனிக்கிழமை 8-1-11 காலை 8-மணிக்கு ஈ.சி.ஆர். சாலையில் உள்ள வி.ஜி.பி. கிங்டம்.
பார்கிங் லாட்டின் இருபுறமும் அழகாக, பெருமிதத்தோடு அணிவகுத்து நிற்கிறது பழம்பெருமை வாய்ந்த கார்கள். ஒவ்வொன்றாக உள்ளே நுழைந்து கம்பீரமாக காலியிடங்களை நிரப்புகிறது. என்ன அழகு!!!
சுமார் நாற்பது கார்களுக்கும் மேல் கலந்து கொண்டன.
தி ஹிந்து பத்திரிகையும் பாண்டிச்சேரி டூரிசமும் சென்னை மோட்டார் க்ளப்பும் சேர்ந்து நடத்திய ‘விண்டேஜ் கார் ராலி’.
p>

"அழகிய மிதிலை நகரினிலே..."என்று பாடத்தோன்றுகிறதா?
டூரர் 1946

ஸ்டெப்னியை எங்கே இடுக்கிக்கொண்டிருக்கிறது பாருங்கள்!!!

பழைய மிலிடிரி ஜீப்...புத்தம் புதுசாக. இதைப் பாத்ததும் இவருக்கு அவரது ஆபீஸ் ஜீப் ஞாபகம் வந்துவிட்டதாம்!!
வில்லீஸ் ஜீப் 1948
பென்ஸ் டூரர்!!கன்வர்டிபிள்....டூ சீட்டர்.
ஹிந்துஸ்தான் 14 - 1950.இதே போல் கருப்பு கலர் கார்.....நான் மாமியார் வீட்டிலிருந்து பொறந்த வீட்டுக்கு வர காருக்கு போன் செய்தால், போனை எடுக்கும் விடலைப் பருவத்து அண்ணன் மகன்கள் சந்தர், பாபு யாராவது ஒருவர்....லைஸன்ஸ் இல்லாமல் போன் செய்த பதினைந்தாவது நிமிடம் பறந்து வருவது இந்த மாடல் காரில்தான்.
வோக்ஸ்வாகன் பீட்டில் 1964. ‘ரெண்டாக உடைந்து சர்க்கஸ் வேலையெல்லாம் காட்டேன்!’ என்றேன். அதுக்கு என்ன மூடோ இந்த பாட்டி சொல்லை தட்டிவிட்டது. ரொம்பத்தான் இது!!!! எது? பீத்து!!
ஸ்டுடிபேக்கர் பிரஸிடெண்ட் 1956.
பக் பியட் டூரர் 1952.
ஆஸ்டின் 1927 மாடல். வந்ததிலேயே பழையது. நாலு வயசில் நான் காவாயில் உருட்டியது.

உள்ளே எவ்வளவு சுத்தமாகவும் புதிதாகவும் உள்ளது!!

ப்ரவுட் ஓனரம்மா!!!
’உங்க வண்டி ‘ப்ராண்ட் நியூவாக இருக்குது.’ என்றதும் சந்தோஷம்!!!! இருக்காதா பின்ன?

மோட்டர் சைக்கிளின் வீலை கழற்றி மாட்டியிருக்குதோ?

செல்ப் ஸ்டார்டர் வேலை செய்யலைன்னா.... கீ போட்டு ஒரு சுத்து சுத்தினா...டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஸ்டாட்டாயிடும்!!!

ராலியில் ஓட கிளம்பிவிட்டது, பின்னழகைக் காட்டி!!!
1948 மாடல் செவர்லெட் ஸ்டைல் லைன்!
பியட் மிலிசெண்டோ 1100.
ஆண்டிக் லுக்கோடு மற்றொரு
பேபி ஆஸ்டின். அதன் கியர் கண்ணுக்க்குள்ளேயே நிற்கிறது.

அதுக்கும் பழைய நினைவு வந்துட்டுதோ? என்னை அருகில் அழைத்து படமெடுத்துக் கொண்டது.

எங்கள் செல்லம்!!! ஆனால் இது வேறு மாடல். இது நம்ம காரா என்று எங்க வீட்டு
முதல் வாண்டுவைக் கேட்டால்,’ஹூஹும்!’ என்று சொல்லிவிட்டு இது எப்படியிருக்கிறது என்று செய்கையால் காண்பிப்பான்.
ஈன்னு சிரிச்சிட்டு ஆள்காட்டி விரலை வாயில் உஷ்...என்பதுபோல் வைத்துக்கொண்டு.

நானே ஓஓஓடிப் போய் அருகில் நின்று ஆசையாய் படமெடுத்துக் கொண்டேன்.
செவர்லெட் ஃப்ளீட்மாஸ்டர் 1948
வாக்சால் கார். நல்ல தெளிவாயிருக்கிறது.

கிரிக்கெட்டுக்குத்தான் சியர் கெர்ல்ஸ் தேவையா என்ன? இங்கேயும் உண்டு.
பியட் எலிகண்ட் 1957. எங்கள் ஸ்கூல் கார். முன் கதவைத் திறந்து உள்ளே உக்காருவதே ஸ்டைலாயிருக்கும். மீசைக்கார ட்ரைவர் பிள்ளைகளை ஒன்று சேர்த்து, கதைகள் சொல்லியபடி பத்திரமாக அழைத்து வருவார்.
ப்ளைமவுத் சவாய் சடான் 1956!!! அக்காலத்தில் அலட்டலின் அடையாளமாக இருந்தது.

பாயும் புலிச் சின்னத்தோடு...
ஜாகுவார் 1968!!!
பென்ஸ் டூரர் 1961! தன்னை பார்க் செய்து கொள்கிறது.

டி.ஜி.பி. லத்திகா சரண்,

கொடியசைத்து ராலியை துவக்கி வைக்க வருகிறார்.

பழைய கார்களை பாசத்தோடு பொக்கிஷம் மாதிரி பாதுகாத்து பார்வைக்கு வைக்கும் உரிமையாளர்களின் ஆர்வத்தை பாராட்டுகிறார். உண்மையில் அந்த உரிமையாளர்கள் முகங்களில்தான் எத்தனை பெருமை, மகிழ்ச்சி!!!!

அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசு.

இவ்விழாவை நடத்தும் தி ஹிந்து, சென்னை மோட்டார் க்ளப், புதுச்சேரி டூரிஸம் ஆகியோருக்குப் பாராட்டு.

டி.ஜி.பி லத்திகா சரண் ‘கொடி அசைத்ததும் முதல் வண்டி கோலாகலமாக கிளம்புகிறது.

எங்க செல்லமும்
கிளம்பிட்டான்யா.....கிளம்பிட்டான்யா!!!

உள்ளே அப்பா இருப்பது போல் ஒரு நெனப்பு.

செல்லமே! உன்னையும் நல்ல, ஓடும் நிலமையில் பாதுகாத்து வைத்திருந்தால் நீயும் இது போல் ராலியில் கம்பீரமாக சென்றிருக்கலாமல்லவா? நாங்களும் உன் மீது பெருமையோடும் பெருமிதத்தோடும் ஊர்கோலம் போயிருப்போமல்லவா?
செவர்லெட் ஃப்ளீட்மாஸ்டர் 1947!!
அன்று வி.ஜி.பி.க்கு வந்திருந்த பார்வையாளர்களில், கேமராவும் கையுமாக அலைந்தவர்களில் அறுபத்தைந்தை தாண்டிய ஒரே...ஒரு விண்டேஜ் வுமன்.......நாந்தான் நாந்தான் நானேதான்!!!!! நான் ஒருவள் மட்டும்தான்.பி.கு.
இந்த ராலியில் செவர்லெட்டிலோ அல்லது ஆஸ்டினிலோ சிறிது தூரம் ஒரு ரைட் கேட்டிருந்தால் போயிருக்கலாமோ என்று கேட்டேன். ‘அட! முதலிலேயே சொல்லியிருந்தால் போயிருக்கலாமே! ஓனர்களும் சந்தோசமாக சேரி என்றிருப்பார்களே!! என்றார் ரங்ஸ். ராலி கிளம்பிய பிறகல்லவா அந்த எண்ணம் தோன்றியது. அதுவரை கேமராவும் கையுமாக அல்லவா அலைந்து கொண்டிருந்தேன்!!!!! இதுவே சந்தோஷம்!!!! அந்த ரெண்டு கார்களையும் பார்க்கும் ஆசையில்தான் போனேன். நிறைய படங்கள் எடுத்தேன். அத்தனையும் போட்டால் பதிவும் ஒரு ராலி மாதிரி ஆகிவிடும். போரும் அடிக்கும். ஆகவே குறைந்த பட்சம் சில பல படங்கள். சேரியா?
மீதியும் வேண்டுமானால் இன்னொரு பதிவுதேன்!!!!