இன்றைய மெனு இதுதான் என்றும் சொன்னார்.
எனக்கும், இது நல்லாருக்கே...நல்லாவும் வரும் போலிருக்கே என்று நான் ரெடி பண்ணி வைத்திருந்த காய்கறிகளை கவரில் போட்டு ப்ரிட்ஜில் வைத்துவிட்டு, ஒரு அடுப்பில் புளிக்காய்ச்சல் தயார் செய்ய ஆரம்பித்தேன்.அப்படியே மற்றொரு அடுப்பில் பாஸ்தாவை வேக வைத்தேன்.
ஏது பாஸ்தா திடீரென்று? அதான் உடனே கடைக்குப் போய் வாங்கி வந்துட்டாரே!!!!!
வெந்த பாஸ்தா குளிர்ந்த நீரில் நன்கு அலசி வடிகட்டியில். உதிருதிராக வர வேகும் போதே தண்ணிரில் சிறிது எண்ணை அல்லது நெய் விட்டால் ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணை விட்டு காய்ந்ததும் கைப்பிடி கறிவேப்பிலை பொறித்து, தேவையான அளவு தயார் செய்த புளிக்காய்ச்சலை சேர்த்து கிளறி அதனுடன் பாஸ்தாவை போட்டு மெதுவாக கிளறி கொத்தமல்லி தூவி ரெடியாக இருக்கிறது.
நல்லாத்தாங்க இருந்துது.
புளி பாஸ்தா...சேரி...நம்ம கோடவினிலிருந்து வந்தது ஓர் ஐடியா!!!! தயிர் பாஸ்தா!!! மொத்த பாஸ்தாவில் மூன்றில் ரெண்டு பங்கு புளி பாஸ்தாவுக்கும் மீதி ஒரு பங்கு தயிர் பாஸ்தாவுக்குமாக தனித்தனியே பிரித்து வைத்திருந்தேன்.
தயிர் பாஸ்தாவுக்கான தாளிதம்....கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, மாங்காயிஞ்சி, கலர் கொடமொழகாக்கள், பச்சை தராட்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லி. உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாட!!! இப்பவே கண்ணைக் கட்டுதே!!!
அருமையாக, மேற் சொன்னவற்றையெல்லாம் தாளித்து பாஸ்தா மேல் கொட்டியாச்சு!
தயிரும் ஊத்தியாச்சு!!
குழைய கிளறிய தயிர் பாஸ்தாவும் கார சாரமாக கிளறிய புளி பாஸ்தாவும்.
எல்லோரும் கிண்ணமும் ஸ்பூனுமாக ஓடியாங்கள்......வேண்டியதை அள்ளிக்கொள்ளுங்கள். வேண்டியது என்ன வேண்டியது...? ரெண்டுமே நல்லாத்தானிருந்தது.
இப்படி திடீர்திடீரென்று செய்யும் ரெசிப்பிகள் சில சமயம் நல்லாவே அமையும்.
me the first
ReplyDeleteபாஸ்டா சாப்பிடணும்னா ஃபாஸ்டா வரணும்.....
அருமை. புதுமை.
ReplyDeleteதயிர் பாஸ்தா அதிகமா ஒரு ஸ்பூன், இல்லை கிண்ணத்தோடு எடுத்துக் கொண்டேன்:)!
சேர்ந்து சுவையூட்டுது.
ReplyDeleteஸ்ஸ்ஸ் வாய் ஊறுது! பார்த்தாலே பசி எடுக்குது
ReplyDeleteஷோபா
ஆமா. பாஸ்தான்னா என்ன?
ReplyDeleteசகாதேவன்
ஆமா. பாஸ்தான்னா என்ன?
ReplyDeleteசகாதேவன்
அன்பின் நானானி
ReplyDeleteவாய்லே ஊறுது - பாக்கும் போதே - புளியும் தயிரும் - சூப்பர் - படங்கள - ஃப்ளைட்டப் பிடிச்சிடட்டா - வந்து இறங்கிடவா
சகாதேவன்
ReplyDeleteபாஸ்தா ஃப்ரம் இத்தாலி ..
நம்ம சோனியாவை புடவையில் பார்க்றமாதிரி மாதிரி,
பாஸ்டாவை, புளிபாஸ்தா தயிர் பாஸ்தா..என்று அசத்தி ,தா.. தா.. இன்னும் கொஞ்ச தா.. தா ...என்று சொல்ல வைத்து விட்டார் நானானி
சூப்பர் நல்லா இருக்கே..
ReplyDelete