’அங்கே என்னல்லாம் பாத்தே?’
‘ம்ம்பா வண்டி!’
‘அதிலே போனியா?’
‘ம்ம்!’
’ம்ம்பா வண்டி ட்ரைவர் வண்டியை எப்படி ஸ்டார்ட் பண்ணினார்?’
‘ஒரு குச்சி வெச்சு அடிச்சார்.’
‘ம்ம்பா பாவம் இல்ல? அடிக்கலாமா?’
‘ஆமா அடிக்கக் கூ!’
‘ம்..அப்புரம்?’
‘ம்..பீ-காக் டான்ஸ் பாத்தேன்.’
‘சரி..அப்புரம்?’
‘டான்ஸ் ஆடிட்டே குனிஞ்சு பீ-காக் அஞ்சு பத்து எடுத்துது!’(ரூபா நோட்டு எடுத்துச்சாம்)
‘பிக்னிக் உனக்கு பிடிச்சுதா?’
‘ம்ம்..ஜாலியா இருந்துச்சு!’
‘அப்புரம் பிஸ்கட் சாப்டுட்டு, வேனுக்குள்ளே நா ஃபர்ஸ்ட் ஏறி வீட்டுக்கு வந்துட்டேன்.’
ஷன்னுவின் ஒன்றரை மணி நேர பிக்னிக் பள்ளியிலிருந்து அழைத்துப் போனார்கள். வந்து அவன் கொடுத்த ரிப்போர்ட்தான் இது.
அப்படி எங்கே போனார்கள்?
நான் ரொம்ப காலமாக போகணும் போகணுமின்னு ஆசைப் பட்டுக்கொண்டிருக்கும்
தட்க்ஷின் சித்ரா” வுக்குத்தான்!!! “கீதாம்மா மாதிரி எனக்கு ரெண்டு காதுகளிலிருந்தும் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுன்னு புகை.
’ஆச்சி! நாமரெண்டு பேரும் இன்னொருநாள் தச்சின்சித்ரா போலாம். சேரியா?’
புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுன்னு வந்த புகையெல்லாம் திரும்ப காதுக்குள்ளே சர்ர்ர்ர்ருன்னு போயிடுச்சு!!!
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...
"ஆச்சி! நாமரெண்டு பேரும் இன்னொருநாள் தச்சின்சித்ரா போலாம். சேரியா?’
ReplyDeleteகுழந்தைகள் நமது மனநிலையை எப்படிஎல்லாம் புரிந்துகொள்கிறார்கள். கிரேட்.
உண்மைதான் மாதேவி.
ReplyDeletemalalai piknik arumai
ReplyDeleteஅதான் கூட்டிட்டுபோரேன்னு சொல்லிட்டாரே.. கவலைப்படாதீங்க...:)
ReplyDeleteகோமா,
ReplyDeleteஅருமையான பிக்னிக்தான். கூட ஒருவரும் போக முடியலையே...படம் எடுக்க வகையில்லையே...1
முத்துலெட்சுமி,
ReplyDeleteஅவர் கூட்டிட்டுப் போணும், நான் அவருக்கு ரிப்போர்ட் கொடுக்கணும், என்னென்ன பாத்தேன்னு.
//’ஆச்சி! நாமரெண்டு பேரும் இன்னொருநாள் தச்சின்சித்ரா போலாம். சேரியா?’//
ReplyDeleteஅப்புறமென்ன??.. நீங்களும் போய் பாத்துட்டுவந்து எங்களுக்கு போட்டோவெல்லாம் காட்டுவீங்களாம் சரியா :-))))))))
அமைதிச்சாரல்,
ReplyDeleteசேரீஈஈஈஈஈஈஈ!!!!!