சிறுவர் பாடும் பழைய தமிழ் பாடல்களை ஞாபகப்படுத்தி சொல்லும்படி பிள்ளைகளையும் மதினியையும் கேட்டதற்கு என்னனொரு உற்சாகம்!!!!
கொசுவத்தி ஏத்தி எனக்குக் கிடைத்த பாடல்கள்.
1) அப்பாக்குட்டி மகன் சுப்பாக்குட்டி
சுப்பாக்குட்டி மகன் சுண்டெலியாம்
சுண்டெலி ராஜனுக்கு கலியாணமாம்
கொக்கைக் கூப்பிடுங்கள் பந்தல் போட
குருவியை கூப்பிடுங்கள் பூப்போட
தவளையை கூப்பிடுங்கள் தாரை ஊத
அப்பாக்குட்டி மகன் சுப்பாக்குட்டி
சுப்பாக்குட்டி மகன் சுண்டெலியாம்.
2) ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பல வாத்துகள் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பாத்தாலும் குவாக் குவாக்
இங்கே பாத்தாலும் குவாக் குவாக்
ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பல பூனைகள் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பாத்தாலும் மியாவ் மியாவ்
இங்கே பாத்தாலும் மியாவ் மியாவ்
ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடிப்பக்கத்திலே
அங்கே பல நாய்கள் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பாத்தாலும் லொள் லொள்
இங்கே பாத்தாலும் லொள் லொள்
ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பல மாடுகள் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பாத்தாலும் ம்மா ம்மா
இங்கே பாத்தாலும் ம்மா ம்மா
சின்னச்சின்ன அபிநயனங்களோடு பாடினால் நல்லாயிருக்கும்.
ஆறு மாதக் குழந்தைக்கு கைதட்ட சொல்லிக்கொடுக்கும் பாட்டு
3) சப்பாணி கொட்டுவானாம்
தயிருஞ்சோறும் திம்பானாம்
அப்பஞ்சுட்டா திம்பானாம்
அவலிடிச்சா மொக்குவானாம்
மொக்குவானாம் மொக்குவானாம்
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...
லல்லாருக்கில்லே?
ReplyDeleteஇதுக்குப் பேர்தான்'தன்ஜாதிபைப்பிங்'
ஓல்ட் மக்டோனால்ட்
ReplyDeleteஹாட் அ ஃபார்ம்
என்ற ரைமை அழகாக
தமிழாக்கி இருக்கிறீர்களே
சகாதேவன்
ஐயோ! நான் ஒன்றும் மொழிபெயர்ப்பாளினி இல்லை.
ReplyDelete70-களில் 'எங்க வீட்டுப்பிள்ளை'களுக்கு
அவர்கள் சின்னபெரியம்மா(பெரியபெரியம்மாவும் உண்டு)சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு இன்றும் 'நினைவில் நின்றவை'
ஆஹா ஆச்சி சூப்பரா இருக்கு பாட்டு. ஆனா எப்படி ராகம் இழுத்து பாடறதுன்னு தெரியலயே?
ReplyDeleteகுரல் பதிவா போடுங்களேன் ப்ளீஸ்
'மலரும் உள்ளம்' ரெண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளது. எல்லாம் நம்ம 'குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா'தான்.
ReplyDeleteஅருமையான பாடல்கள் பிள்ளைகளுக்காவே. அதுலே இந்தப் பாட்டு மிளகாய் கடிச்சது இருந்தால் தேடிப்பார்க்கிறேன், மிச்சம் வரிகளுக்காக:-)
நிலாக்குட்டி!
ReplyDeleteகுரல் பதிவு போடப் படித்ததும் போடுகிறேன். செல்லம்!! ஓகேயா?
துள்சி!
ReplyDeleteபதிவர் நட்டு அழகாக மிச்ச வரிகளை தந்திருக்கிறாரே! பாக்கலையா? சரியா தெரியவில்லை ஆனால் பொருத்தமானது. எனினும் நீங்களும் தேடித்தாருங்கள்.
Can "Attalaingaa Putalaingaa" and "kari edu.. kari edu" be considered tamil paadals? may be not???
ReplyDeleteThey can definitely come under our homely "home games" list :)
RL!
ReplyDeleteஅட்லங்கா..புட்லங்கா, கரி எடு கரி எடு எல்லாம் ஆக்ஷனோடு பதிய முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். முடிந்ததும் பதிவேன்.
RL!
ReplyDeleteஅட்லங்கா..புட்லங்கா, கரி எடு கரி எடு எல்லாம் ஆக்ஷனோடு பதிய முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். முடிந்ததும் பதிவேன்.