Thursday, March 13, 2008

தமிழ் பாடல் பங்களிப்பு பாகம்-3

உற்சாகம் பீறிட ஓடி வந்த பாடல்கள்.

1)மாங்காய் தலை முருகன்
கட்டை வண்டியில் ஏறி
சந்தை கடை சென்றான்
விதவிதமாய் கடைகள்
சந்தையிலே கண்டான்
லட்டு கடைக்குச் சென்று
லட்டு வேண்டும் என்றான்
லட்டு கேட்ட பையா
துட்டு எங்கே என்றான்
மாங்காய்தலை முருகன்
துட்டு இல்லை என்றான்
லட்டு மிட்டாய்காரன்
லட்டும் இல்லை என்றான்

2)சின்ன விஜயராணி செல்ல விஜயராணி
வடைக்காகப் பாடுகிறாள்
வானம் பார்த்து சிரிக்கிறாள்
மிளகாய்த் துண்டு சிறு துண்டு
நறுக் என்று கடித்தாள்
தேம்பித்தேம்பி அழுகிறாள்
-----------------------
-----------------------

கோடிட்ட இடங்களை யாராவது தெரிந்தவர்கள் நிரப்புங்களேன். எனக்குத் தெரிந்தவுடன் நானும் செய்கிறேன். ஓகேவா?

5 comments:

  1. பாடல்கள் நல்லா இருக்கு. கோடிட்ட இடம் தெரியல. தெரிஞ்சவங்க யாராவது சொல்லுறாங்களான்னு அப்பப்ப வந்து பார்த்துக்கிறேன்.

    ReplyDelete
  2. //அப்பப்ப வந்து பார்த்துக்கிறேன்//
    அப்ப நிஜமாகவே நீங்க நல்லவன்தான்.

    ReplyDelete
  3. paadagal nalla irukku,

    chinna vijayarani paadal ippadi mudikalama?

    thembi thembi azhugiraal
    thaneer thaneer thedinaal
    bottle thaneer paruginaal
    parkkal theriya sirikiraal

    kallu eduthu adikumunne naan escape!:)
    -K mam(i)

    ReplyDelete
  4. கிட்டு! உங்களிடமிருந்து கிட்டிய
    ஈற்றடிகள் பிரமாதம்!
    கல்லடிகள் வேண்டாம்!

    //தண்ணீர் தண்ணீர் தேடினாள்
    பாட்டில் தண்ணீர் பருகினாள்
    பற்கள் தெரிய சிரிக்கிறாள்//

    ReplyDelete
  5. Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Smartphone, I hope you enjoy. The address is http://smartphone-brasil.blogspot.com. A hug.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...