Sunday, March 23, 2008

சிறைச்சாலை..என்ன செய்யும்? எதுவும் செய்யாது, செய்யவும் முடியாது!

சிகாகோ நகரின் சிறைச்சாலை, நம்மூரைப்போல் ஊருக்கு வெளியே புழல் சிறையைப் போல் அமைந்திருக்கவில்லை. நட்ட நடுநகரில் போக்குவரத்து மிகுந்த சாலைகள் அருகே கம்பீரமாக எழும்பி நிற்கிறது. 'என்னை மீறி நீ எங்கே போய்விடமுடியும்?' என்று கேட்பதைப்போல்.

எப்பேர்பட்ட ஓமக்குச்சியும் இந்த இடுக்கு வழியாக நுழைந்து தப்பிக்க முடியாது என்று மிடுக்காக சொல்லிக்கொண்டு நிற்பதைப் பாருங்கள்!!!

பலமான போக்குவரத்து நிரம்பிய சாலை வழியே போகும் போதே எடுத்தது.

5 comments:

  1. தப்பிக்க முடியாதம்மா!

    ReplyDelete
  2. சிறைச்சாலை என்ன செய்யுமா? செய்யும் நானானி! நற் சிந்தனை செயலிழந்து, தடம் மாறிப் போனவர்களைச் சட்டம் தண்டித்து அனுப்புகையில் அவர்களைச் சீர் திருத்தும் சீரான பணியினைச் செய்வது அந்தச் சிறைக் கூடம்தானே!

    சிறைச்சாலை எதுவும் செய்யாது.. செய்யவும் முடியாதா?!? ஏன் முடியாது?
    நெருக்கடி மிகுந்த சாலையில், சீறிச் செல்லும் வாகனத்தினுள் இருந்து நீங்கள்
    படம் பிடித்தச் சிறைச்சாலை, "சீராக வாழ்க்கையை நடத்துங்கள், எந்த நெருக்கடியிலும் என்னிடம் வந்து சிக்கிடும் படியாய் எந்தத் தவறும் செய்திடாதீர்" என எச்சரிக்கும் விதமாய் எழுந்து நிற்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்தானே!

    ReplyDelete
  3. சீர் திருத்தப் பணி
    எச்சரிக்கை மணி
    சரிதானா நானானி?

    ReplyDelete
  4. ஆர்தி! முதல் வருகைக்கு வணக்கம்!
    சொன்னது மிகவும் சரியே! கிரண்பேடி மாதிரியான நேர்மையான அதிகாரிகளை முன் மாதிரியாகக் கொண்டு சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு யோகா,தியானம்,நல்ல சிந்தனைகளை கற்பித்து அவர்கள் மன அமைதி பெறவும் திருந்தி வாழவும் வழி செய்து கொண்டிருப்பது நல்ல முயற்சிதான்.

    ReplyDelete
  5. சர்தான்..ஆர்தி..சர்தான்!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...