வருடா வருடம் தீபாவளி, கிறிஸ்மஸ், ரம்ஜான், புதுவருடம் வருவது போல்.....கழுதை...மகளிர்தினமும் கடனே என்று வந்து போய்க் கொண்டிருக்கிறது.
என்ன பிரயோஜனம்? இன்னும் பெண் விடுதலை,உரிமை, அங்கீகாரம், இடஒதுக்கீடு...இத்யாதி இத்யாதி என்று பேசிக்கொண்டும் கொடி பிடித்துக்கொண்டும் ஊர்வலம் போய்க்கொண்டும் இருக்கிறது நாடு..ஏன் உலகம் கூட.
காரட்டைக் காட்டி குதிரையை ஓட்டிச்செல்வது போல் மேலே சொன்ன கோஷங்களை கூவிக் கொண்டே கூட்டிக்கொண்டு போகிறது உலகம்.
சிகாகோவில் தங்கியிருந்தபோது பக்கத்துவீட்டுப் பின்புறத்தில் ஒரு நாய்குட்டி புல்தரையில் தாவித்தாவி விளையாடிக்கொண்டிருந்தது. குறிப்பிட்ட இடங்கள் வந்ததும் பதறி துள்ளி பின்னடைந்து ஓடியது. இதுபோல் புல்தரையின் பல பக்கங்களிலும் துள்ளித் தாவி பின்னோக்கியோடியது. அவ்விடங்களைத்தாண்டி அது போகவேயில்லை. கொஞ்சநேரம் இதையே வேடிக்கை பார்த்துவிட்டு, அதன் காரணம் கேட்டபோது லானின் எல்லையோரத்தில் எல்லாம் நாயை வளர்ப்பவர்கள் குறைந்த வாட்ஸ் அளவில் கண்ணுக்குத்தெரியாத மின்வேலி(invisible fencing) அமைத்திருக்கிறார்கள். அதனால்தான் அதைத் தாண்டிப் போக முடியவில்லை.
இப்போது பெண்களின் நிலையும் இதுதானோ? உரிமைகள் கொடுப்பதுபோல் கொடுத்து கண்ணுக்குத்தெரியாத மின்வேலியையும் அமைத்து விட்டார்களோ? தாண்டி வரத்தெரியாமலும் முடியாமலும் தவித்துக்கொண்டிருக்கிறார்களோ?
இதையெல்லாம் பூசி மெழுக 'உலக மகளிர் தினம்' கொண்டாடுகிறார்களோ?
உலகம் எப்போது 'உலக ஆண்கள் தினம்' கொண்டாடுவது? ஹூம்?
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...
சிறப்பாக சொல்வதற்கு ஒன்னுமில்லை என்றுதான் ஆண்கள் தினம் இல்லை போலும்.
ReplyDeleteமின்வேலி பாதுகாப்பு என்றால் ஏற்பதும் அடிமைப் படுத்த என்றால் தகர்ப்பதும் இன்றைய மகளிர் அறிந்தே வைத்திருக்கின்றனர் நானானி
ஆனால் எத்தனை பேருக்கு அந்த தைரியம் இருக்கு...கண்மணி?
ReplyDeleteநானானி, பெண்ணுரிமை விவாதத்திற்குரிய ஒன்று. எளிதில் எழுத முடியாது. ம்ம்ம்ம்
ReplyDeleteமுன்னெல்லாம் மரியாதை வாரம் என்பார்கள். பாக்கி 51 வாரம் மரியாதை தரவேண்டாம் என்று அர்த்தமா? அந்ததினம், இந்தவாரம் என்று 365 நாளும் நாம் செய்ய வேண்டியதை ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ செய்தால் போதுமா?
ReplyDeleteசகாதேவன்
விவாதத்திலேயே காலத்தை ஓட்டுகிறோம் என்கிறீர்களா? சீனா?
ReplyDeleteஅதானே!...சகா, சரியாகச் சொன்னீர்.
ReplyDeleteவிக்கிபீடியா ஆண்கள் தினம் நவம்பர் மாதத்தில் முதல் சனிக்கிழமை என்கிறது. மேலும் விபரத்திற்கு இங்கே பார்க்கவும்:
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/International_Men's_Day
அப்படியானால் சர்தான் வாத்தியாரே!
ReplyDeleteஆனால் அதை யாரும் இந்த அளவு பெரிதாக கொண்டாடுவதில்லையே?