Sunday, June 15, 2008

பத்து அவதாரம்.....எப்படி!!

தசாவதாரத்தைப் பற்றி எல்லோரும் தாளித்துக்கொண்டிருக்கிறார்கள். நாமும் சும்மாயிருந்தால் எப்படி? நம் அனுபவத்தையும் சொல்லவேண்டாமா?
எனக்கும் மும்பையிலிருக்கும் என் மகனுக்கும் இடையில் நடந்த தொலை-கை பேசி உறையாடல்

நான்: ஹலோ! நாந்தான்!

மகன்: அம்மா! 9-30க்கு மேல் கூப்பிடு. நான் வெளியிலிருக்கிறேன்.
நான்: சேரி!

சுமார் 10மணிக்கு நான் அழைத்தேன்.

நான்: இப்போது எங்கிருக்கிறாய்?

மகன்: இங்குள்ள மாலிலிருக்கும் தியேட்டரில் 'தசாவதாரம்' முதல் ஷோ பார்த்துவிட்டு
வெளியில் வந்து கொண்டிருக்கிறேன்.

நான்: முதல் ஷோவா? சூப்பர்! ஆமா படம் எப்படியிருந்தது?

மகன்: கேவலமாயிருந்துது!!!

கமல் கேட்டிருக்க வேண்டும் இதை நொந்தேபோயிருப்பார். இதற்கு என்ன செய்வது? யாரை நோவது?

சேரீஈஈஈஈ..இந்த விமர்சனம் கேட்டு போகாமலிருப்பேனா? ஹுஹூம்! மாட்டேன். ஓடுவது பிரார்த்தனாவில் அல்லோ!! படம் எப்படியிருந்தால் என்ன!
எங்க அண்ணாச்சி சொல்வார்கள்.....ஒரு படம் பார்த்துவிட்டு, நல்லால்லே என்றால் யாராவது
சமர்த்தாக, ' சரி, போகலே' என்று இருப்பார்களா? ஜில் ஜில் மனோரமா ஸ்டைலில், 'அவுஹ
என்னமாத்தான் ஆடுதாஹன்னு பாத்திட்டு வாரேன்!' என்று தானும் அந்த அறுவைப் படம்
என்னமாத்தான் இருக்குன்னு பாத்திட்டு, 'ஆமா.....நல்லாத்தான் இல்லே...!' என்று வழிவார்கள்.
ஆகவே நானும் தசாவதாரம் என்னமாத்தான் இருக்குன்னு பாத்திட்டு வாரேன்.

6 comments:

  1. இன்னும் பார்க்கவில்லையா? நான் பார்த்து என் விமர்சனம் எழுதிவிட்டேனே.
    நீங்கள் பார்த்து, விமர்சித்ததும் என்னுடையதையும் பாருங்கள்
    சகாதேவன்

    ReplyDelete
  2. உங்க பையன் மூலமா கடவுள் உங்களை காப்பாற்ற ஒரு வாய்ப்பு கொடுத்தார்..ஹ்ம் விதி வலியது இனி உங்களை அந்த நமோ நாராயனன் தான் காப்பற்றனும்.

    ReplyDelete
  3. ஆஸ்கர் ரவிச்சந்திரனை நினைத்துதான் படத்தை பார்க்க வேண்டும் .
    பாவம் அவருக்கு வந்த சோதனை !
    அன்புடன்
    அருப்புக்கோட்டை பாஸ்கர்

    ReplyDelete
  4. பதிவின் கடைசி பாராவைப் படிக்கும் முன்னரே உங்கள் முடிவு அதுவாகத்தான் இருக்கும் என நினைத்தேன். "எவ்வளவு கே..வலமாயிருக்கு" என மறுபடி பதிவிடுங்கள். அதன் பிறகு நானும் பார்த்து விடுகிறேன்:))!

    அருவை பாஸ்கர் said...//ஆஸ்கர் ரவிச்சந்திரனை நினைத்துதான் படத்தை பார்க்க வேண்டும் .
    பாவம் அவருக்கு வந்த சோதனை !//

    ஆஸ்கார் நம் போன்றோரின் புண்ணியத்தில் பிழைத்துப் போகட்டுமே:)))!

    ReplyDelete
  5. தைரியமாக பாருங்க... சிலருக்கு பிடிக்காதது பலருக்கு பிடிக்கலாம்.. :)

    ReplyDelete
  6. இன்னும் பார்க்கவில்லையா? தைரியமாக பதிவிடுங்கள்.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...