Sunday, August 24, 2008

மனம் நிறைந்த பிறந்தநாள்!!


சங்கத்தின் சுவரொட்டி மூலம் என் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வலையுலக சகோதர சகோதரிகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், (இருந்தால்) கொள்ளுப்பேரப்பிள்ளைகள் கட்டாயம் இருக்கும், இப்போதுதான் பொறந்ததுமே....நண்டு நாழிகள் எல்லாம் ப்ளாக்கில் எழுதுறாங்களே!!
(இங்கு...ஆக்குன்னு). உங்கள் அனைவருக்கும் என் இதயப் பூர்வமான நன்றிகள் உரித்தாகுக.


வாழ்த்து அட்டைகள் காலம் பறந்தே...போச்சு! ஒரு போன் அல்லது ஈ-மெயில் சோலி முடிஞ்சுது!

26 comments:

  1. நாந்தான் இன்னைக்கு காலையில் முதலில் வாழ்த்து சொல்லி, நான் தான் KRS அங்கிளையும் அலுவலக நேரத்தில் தொந்தரவு செய்து பதிவு போட வைத்தேன். அதனால் அந்த கேக் எனக்குத் தான் தரணும்... :)
    (அப்பாடா,.... நிறைய நான் வந்திருச்சு)
    இங்கயும் வாழ்த்துக்கள்ம்மா!

    ReplyDelete
  2. நானானி ஆச்சிக்கு இந்த "நண்டு நாழி"யின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :P

    ஹையா ஆச்சி பேரு கல்யானியா?

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா! :))

    ReplyDelete
  4. //தமிழ் பிரியன் said...
    நாந்தான் இன்னைக்கு காலையில் முதலில் வாழ்த்து சொல்லி, நான் தான் KRS அங்கிளையும் அலுவலக நேரத்தில் தொந்தரவு செய்து பதிவு போட வைத்தேன். அதனால் அந்த கேக் எனக்குத் தான் தரணும்... :)
    (அப்பாடா,.... நிறைய நான் வந்திருச்சு)
    இங்கயும் வாழ்த்துக்கள்ம்மா!
    //


    தமிழ் சைக்கிள் கேப்ல கே.ஆர்.எஸ் அண்ணாச்சி ஆயிட்டாரா அடப்பாவிமக்கா அவுருக்கு மட்டும் தெரிஞ்சுது ரூம் போட்டு பீல் பண்ணுவாரு :))))

    ReplyDelete
  5. //நிலா said...
    நானானி ஆச்சிக்கு இந்த "நண்டு நாழி"யின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :P

    ஹையா ஆச்சி பேரு கல்யானியா?
    ///

    நண்டு குட்டி ச்சே நிலா குட்டி கரீக்டா கண்டுபிடிச்சிட்டா!

    ReplyDelete
  6. //ஆயில்யன் said...
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா! :))
    //


    என்னாடா ஆயில்யா? மீ த பர்ஸ்டு வர்லாம்ன்னு முந்திவந்தே பாரு உனக்கு முன்னாடியே ஒரு பெரியவங்க ஒரு சின்னவங்க வந்துட்ட்டாங்க !

    ReplyDelete
  7. அன்புச் சகோதரி நானானி

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - அங்கும் இங்கும் எங்கும் - நண்டு நாழிகள் உட்பட அனைவரும் சேர்ந்து வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  8. சுவையான கேக்குக்கு நன்றி நானானி!

    தமிழ் பிரியன்,
    நாந்தான் உங்களுக்கு....சரி சரி:)) நீங்க சாப்பிட்டது போக எங்களுக்கு போதும்:))!

    ReplyDelete
  9. Pirantha Naal vazhthukkal Naanaani.
    Shobha

    ReplyDelete
  10. Pirantha Naal vazhthukkal Naanaani.
    Shobha

    ReplyDelete
  11. எல்லாஞ்சரி...தமிழ்பிரியன்!!இதற்கு உங்களை தூண்டிய ராமலஷ்மியை மறந்துட்டீங்களே? ஆனாலும் சுவரொட்டியில் நீங்க கேட்டது, கருப்புதோசை, காரப்பொடி இத்யாதி..இத்யாதி..! கேக் கேட்டது புதுத்தேனீ அல்லோ! தேனீ சுவைத்தபின்
    உங்களுக்கெல்லாம்...சேரியா?
    எங்கெங்கும் வந்து வாழ்த்தும் தமிழ்பிரியனுக்கு வந்தனம்!!!

    ReplyDelete
  12. அடே! சொன்னதுக்கு ஒரு நண்டு நிலா
    வந்ததே! நிலா நிலா எங்கே போனாய்
    இத்தனை நாள்! நிலாக்குட்டிக்கு ஆஜியின்(பேரன் அப்படித்தான் அழைக்கிறான்) ஆசிகள்!!!

    ReplyDelete
  13. நன்றி ரிப்பீட்டு ஆயில்யன்!!!

    ReplyDelete
  14. யாரும் பீல் பண்ணவேண்டாம் ஆயில்யன். எல்லோரும் சந்தோஷமாக இருக்கவே ஆசை!!!

    ReplyDelete
  15. மீண்டும் நன்றி! சீனா!
    ஆனால் நண்டும் நாழியும் எங்கே?
    சார்பெல்லாம் வேண்டாம். ஆமாம்!

    ReplyDelete
  16. ராமலஷ்மி!! சுவரொட்டிய அனைவருக்கும் கேக் புதுத்தேனீக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. சரிதானே?
    அடுத்த பிறந்தநாளுக்கு பெரி....ய கேக் வரும். உங்கள் அனைவருக்கும்
    என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக!!

    ReplyDelete
  17. thank Q very much for your greetings!!!!SHOBA!!!

    ReplyDelete
  18. கல்லாச்சி,
    ஹாப்பி பெர்த்டே.

    ஷிவானி, ஸ்ரீநிதி

    ReplyDelete
  19. HAPPY BIRTHDAY TO YOU!!
    -Swapna

    ReplyDelete
  20. நானானிம்மா,

    முதலில் வாழ்த்துக்கள். எனக்கு கேக் எல்லாம் வேண்டாம். அத சாப்பிடற அளவுக்கு கூட வயதில்லை ...

    //(இருந்தால்) கொள்ளுப்பேரப்பிள்ளைகள்//

    அதென்ன இருந்தால்னு சொல்லிட்டிங்க. இதோ கொள்ளுப்பேரன் வரிசையில் என்னை சேத்துக்கங்க. நானும் ஆகஸ்ட் 24த் தான் பொறந்தேன் :))

    இப்படிக்கு
    சதங்காவின் மகன்.

    ReplyDelete
  21. naanaanimmaa,

    please don't publish my earlier comment. that was started like me (for fun) and somehow i ended up like my son.

    please publish the latest one. i will be posting in few minutes.

    ReplyDelete
  22. நானானிம்மா,

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    //(இருந்தால்) கொள்ளுப்பேரப்பிள்ளைகள் கட்டாயம் இருக்கும்//

    ஆமா, ஆமா ... இதோ நீங்க 23ர்ட், என் பையன் 24த் (கொள்ளுப்பேரன்). அப்புறம் எங்க நெஜ பாட்டி பேரும் உங்களதே !!!

    ReplyDelete
  23. நானானிகிட்டே
    ஒரு பீஸ் கேக் ,
    கேக்கலாமா கூடாதா .
    இங்கேயிருந்து,கேக், கேட்டா
    அவங்களுக்குக் கேக்குமா?
    கேக்காதா?ன்னு யோசிக்காம
    கேக்க வேண்டியதுதான் ,
    கேட்டா, என்ன சொல்லுவாங்க?
    "நான் சொன்னா கேக்கணும் ,
    கேக்கலேன்னா ,கேக் கிடையாதுன்னு"
    அவங்க, சொல்லச் சொல்ல ,கேக்காம ,
    கேக் தாங்கன்னு, கேக்கலாம்னு இருக்கேன் .
    யாரெல்லாம் கேக், கேக்க வராங்க?
    கேக்கேபிக்கேன்னு நிக்காம கேக் ,கேக்கலாம் வாங்கோ.
    -----------------
    ஹைய்யா!மீ த லாஸ்ட் அண்ட் பெஸ்ட்

    MANY MORE HAPPY RETURNS OF THE DAY

    ReplyDelete
  24. நானானி, நான் தகவலைத் தந்திருந்தாலும் சிரத்தையுடன் ஒரு ஞாயிறு காலையிலும் கூட அத்தனைக்கும் அருமையாக ஏற்பாடு செய்த சந்தோஷத்தில் உரிமையாதான் தமிழ்பிரியனும் கேட்டிருக்கிறார் கேக்கை. அவருக்கில்லாததா?

    தமிழ்பிரியன், நமக்கெல்லாம் நல்ல வழிகாட்டியாக இருக்கும் நானானி அம்மாவின் பிறந்த தினத்தை இனிமையாக்கிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  25. nowadays ,not even a phone call or email..but...one missed call or a belated greetings......joli mudinjuthu.life is so fast that we forget all goody goody things...and..so much attached to unwanted un importent and unhealthy attitudes

    ReplyDelete
  26. சதங்காவின் மகனே!(உன் அப்பா உன் பேர் சொல்லலை) நானும் ஆகஸ்ட் 24தான்.ரெண்டு பேரும் சேம் டேட்!!!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...