Sunday, August 3, 2008

மனம் கவர்ந்த பாடல் மூன்றாவது

வருந்தாதே மனமே - நீயே
வருந்தாதே மனமே
ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே..
வருந்தாதே மனமே

இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பார்
இலைகள் உதிர்ந்து மீண்டும் தோன்றும் நிலையை எண்ணிப்பார்
நிலையை எண்ணிப்பார்...

ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே..
வருந்தாதே மனமே

இன்பம் துன்பம் யாவும் ஈசன் செயலே ஆகுமே
இகழ்ந்த வாயே புகழ்ந்து பேச காலம் மாறுமே
காலம் மாறுமே...

ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே
வருந்தாதே மனமே -நீயே
வருந்தாதே மனமே


சுமைதாங்கி படத்தில் வரும் "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா" என்ற பாடல்
எப்படி மனதை இதமாக வருடிச்செல்லுமோ அதுபோல் இந்தப் பாடலும் கேட்கும் போது மனதுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.

ஹாஸ்யப் பாடல்கள் பாடும் எஸ் சி. கிருஷ்ணன் ரொம்ப மென்மையாக இப்பாடலைப் பாடியிருப்பார். படம்தான் நினைவு இல்லை.

5 comments:

  1. Naanaani,
    in this song there will be a back ground noise of a train.
    I do not know why , but when ever I feel very sad this song used to boost me up. thank you again for a good selection.

    ReplyDelete
  2. உண்மைதான், வல்லி!
    இந்தப்படலைக் கேக்கும் போதோ அல்லது நான் மனசுக்குள் பாடும் போதோ ஒஎஉ இதமான ஆறுதல் கிடைக்கும்.
    இப்பாடல் படத்தில் பின்னணியில் ஒலிக்கும் பாடல். சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்கள் ஊரைவிட்டு ரயிலில் பயணிக்கிறார்கள். அதனால்தான் அஎத
    ஜிகுஜிகுஜிகுஜிகு....சத்தம்!!!

    ReplyDelete
  3. //இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பார்
    இலைகள் உதிர்ந்து மீண்டும் தோன்றும் நிலையை எண்ணிப்பார்
    நிலையை எண்ணிப்பார்...//

    வாழ்வியல் மாற்றங்களை அருமையை சொல்லியுள்ள வரிகள்

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  4. அன்றைய பாடல் வரிகள் எல்லாம்
    பொக்கிஷப் பேழையிலிருந்து எடுக்கப்பட்ட வரிகள், இன்றைய வரிகள்.....? நான் சொல்ல மாட்டேன்.
    நன்றி! கோவை விஜய்!

    ReplyDelete
  5. அற்புதமான வரிகள் நானானி!

    ஆமாம் மயக்கமா கலக்கமா பாடல் வாழ்வில் நொந்து போன சமயங்களில் நிமிர்ந்து நிற்க உதவியிருந்ததாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த வரிசையில் இப்பாடலும்
    //இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பார்
    இலைகள் உதிர்ந்து மீண்டும் தோன்றும் நிலையை எண்ணிப்பார்
    நிலையை எண்ணிப்பார்...//

    //இன்பம் துன்பம் யாவும் ஈசன் செயலே ஆகுமே
    இகழ்ந்த வாயே புகழ்ந்து பேச காலம் மாறுமே
    காலம் மாறுமே...//
    என கலங்கிய மனதுக்குத் தைரியம் தன்னம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
    இதற்கு சுட்டி கிடைக்குமா..?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...