Saturday, August 2, 2008

நான் பேச நினைப்பதெல்லாம் வேறு மாதிரி பேச வேண்டும்

ஏட்டிக்குப் போட்டி!!

மனமொத்த தம்பதியர் எப்படி இருக்க வேண்டும்?

நான் நினைத்ததை நீ செய்ய வேண்டும். நீ நினைப்பதை நான் செய்ய வேண்டும்..

ஆனால் கவிஞன் என்ன சொல்கிறான்?

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ....அப்ப ஒருவர் சுயமாக சிந்திக்கவும் பேசவும் கூடாதா?

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்....ஒருவர் பார்க்குமிடத்தைத்தான் மற்றவர்
பார்க்க வேண்டுமா? அவரவர்க்கு வேறுவேறு கண்ணொட்டங்கள் இருக்கக்கூடாதா?
என்னங்க ஞாயம்?

ஆனாலும் அவர்கள் இருமனம் கலந்து ஈருடல் ஓருயிராகத்தான் வாழ்கிறார்கள்.

இன்னொரு ஜோடியைப் பாருங்கள்!
எது சொன்னாலும் ஏட்டிக்குப்போட்டி!!

நாஞ்சொன்னதுதான் சரி....இல்லையில்லை நாஞ்சொன்னதுதான் சரி!
நாஞ்செஞ்ச பூஜையில் பலந்தான்....அஸ்க்குபுஸ்க்கு ஆசைதோசை! நாஞ்செஞ்ச பூசை பலந்தான். என்று இருவரும் ஒருவர் சொல்வதை மற்றவர் ஒத்துக்கொள்ளாமல்
ஏட்டிக்குப் போட்டியாக வாதாடிக்கொண்டே ஒற்றுமையாக வாழ்கிறார்கள்!!

ஒருவர் சொன்னதை மற்றவர் மறுத்து வேறு எதிர்மறையாக சொல்வார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அல்லவே அல்ல.

கணவன், 'ராமன் வீட்டுக்கு வந்தான்.' என்று சொன்னால்...மனைவி, 'ராமன் வீட்டுக்கு வரவில்லை.' என்றால் அது ஏட்டிக்குப் போட்டி எனலாம்.

ஆனால் அவளோ என்ன சொல்கிறாள் என்று பாருங்கள், 'வந்தான் வீட்டுக்கு ராமன்.'
இது எப்படியிருக்கு? லொள்ளுதானே!!

இப்ப இந்தப் பாடலைப் பாருங்கள் புரியும்

நான் செய்த பூஜா பலம்
நான் செய்த பூஜா பலம்

நல்வாழ்வு எனை நாட இல்வாழ்வு கைகூட

நான் செய்த பூஜா பலம்

இல்லை நான் செய்த பூஜா பலம்
நல்வாழ்வு எனை நாட இல்வாழ்வு கைகூட
நான் செய்த பூஜா பலம்

அரவிந்த மலரோடு
அனுராக நிலைகாண
ஆதவன் உதயமானான்

இல்லை
ஆதவன் ஒளியோடு
காதலின் நிலை காண
அரவிந்தன் உதயமானான்

நான் செய்த பூஜா பலம்

இல்லை
நான் செய்த பூஜா பலம்

தேன்மலர் மணம் போல
தெய்வீக நிலை காண
தென்றலும் உதயமானான்

இல்லை
தென்றலின் அலையோடு
தெவிட்டாத நிலை காண
தேன்மலர் உதயமானான்

நான் செய்த பூஜா பலம்

இல்லை 'நாம்' செய்த பூஜா பலம்

அப்பாடா! ஒரு வழியா செல்ல யசலல் முடிந்து 'நாம்' ஆகிவிட்டார்கள்.

குணசுந்தரி படத்தில் ஏ.எம்.ராஜா - பி.லீலா பாடிய எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்.

இதில் நீங்க எல்லாம் எந்த வகை ஜோடிகள்?
நாங்க ரெண்டாவது வகைங்க!!!அப்ப நீங்க?

16 comments:

  1. "குடும்ப சந்தோஷத்தைத் தாங்கும் ,நான் ஜாடி ,நீ மூடி,.."."இல்லை ,நாந்தான் ஜாடி, நீதான் மூடி .,..".நீ ஜாடி ,நான் மூடி நீ மூடி நான் ஜாடி .....ஜாடி ,மூடி, மூடி ,ஜாடி, .....[டமால்! ஜாடி மூடி ரெண்டும் தூள்]
    இது மூன்றாவது வகை[நிச்சயம் நாங்கள் இல்லை]

    ReplyDelete
  2. பழைய பாட்டுக்கு புது அர்த்தம் ரீமிக்ஸ் சூப்பர்

    ReplyDelete
  3. நாங்க எந்த வகைங்க - தெரீலீங்க

    ReplyDelete
  4. அருமையான பாட்டு நானானி.
    அன்பில் ஏட்டிக்க்ப் போட்டி இப்படித்தானிருக்க வேண்டும்.

    இந்தப் பாடலைப் பாடி உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன்:)

    நன்றிப்பா.

    ReplyDelete
  5. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பது இரண்டு வேறு கருத்துக்கள் தம்பதிகள் என்பதற்காக ஒத்துப் போவதில்லை. எந்த சூழலில் கணவன் என்ன சொல்வார் என்பதை உணர்ந்து மனைவியே அந்த விஷயத்தை செய்து விடுவது, அல்லது கணவனின் மனதில் இருக்கும் ஆனால் சொல்ல இயலாத விஷயத்தை மனைவியின் கணவனின் குறிப்பறிந்து சொல்வது.... இப்படித் தான் இருக்கும்.... இந்த ஸ்பெஷல் வகை நாங்களெல்லாம்... :)

    ReplyDelete
  6. நல்ல பாட்டு அம்மா, உங்கள மாதிரி பெரியவங்க எங்கள மாதிரி சின்னவங்களுக்கு எப்படி இருக்கணும் காட்டறீங்களே

    ReplyDelete
  7. பழைய பாட்டுக்கு புது அர்த்தம் ரீமிக்ஸ் நல்லாயிருக்கு


    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  8. வேறு மாதிரி பேசி வேறல்ல நாம் என முடிவது சூப்பர். சொல்லாமப் போனா விடுவீங்களா நாங்களும் இரண்டாவது வகையே:))!

    ReplyDelete
  9. சரி..சரி..உங்களில் யார் ஜாடி? யார் முடி? மூன்றாவது வகை நல்லாருக்கே!!

    ReplyDelete
  10. இதெல்லாம் காலத்தின் கட்டாயம் கோமா!

    ReplyDelete
  11. சீனா! இப்படிச் சொன்னா எப்படீங்க?
    கண்டுபிடிங்க...சொல்லுங்க.

    ReplyDelete
  12. கட்டாயம் நீ...நீங்களே பாடி அனுப்புங்கப்பா!!! காத்துக்கிட்டிருக்கேன் கேக்க!!சேரியா?

    ReplyDelete
  13. தமிழ்பிரியன்! ஒரு ஸ்பெஷல் வகை ஜோடியும் இருக்கா? ரொம்ப சந்தோஷம்!!!வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. சின்ன அம்மணி!!!பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க!!
    நாங்களே கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

    ReplyDelete
  15. இதுதானே இப்போ ஃபாஷன் கோவை விஜய்?

    ReplyDelete
  16. அப்படியா ராமலஷ்மி? என்றென்றும் இது போல் வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...