Thursday, December 24, 2009

மதர் அலெக்ஸின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!!

மதர் அலெக்ஸின் நூறாவது பிறந்த நாளை வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் குதூகலமாகவும் மிகுந்த பாசத்தோடும் நேசத்தோடும் கொண்டாடினோம்.


மதர் அலெக்ஸின் தோற்றம் அறுபதுகளில்.

சென்ற 2008-ஆம் வருடம்

இன்றைய தோற்றம். அதாவது 10-12-2009-ல்



விழா மண்டபத்துக்கு வீல்சேரில் அழைத்துவரப்படுகிறார்.

கூடியிருந்தோ அனைவரும் தமது வலது கையை அவரை நோக்கித் திருப்பி வாழ்த்துக்களை வழங்குகிறோம்.

வாழ்த்துக்களை இருகரம் கூப்பி ஏற்றுக்கொள்கிறார்.

எங்கள் குழு சார்பில் கொண்டு சென்றிருந்த பிறந்தநாள் கேக்...அவர் முன்.

அவர் கைகளால் அதை வெட்ட வைத்து, அதில் ஒரு துண்டை அன்போடு ஊட்டிவிடுகிறார் அவரது உதவியாளர். மிகவும் உணர்ச்சிவசப்படுவதால் அருகில் வந்து வாழ்த்தவருபவர்களை அரை நிமிடத்துக்கு மேல் பேசவிடவில்லை. நான் உட்பட. ‘நாட்டி கல்யாணி’ என்று சொன்னவுடன் ஞாபகம் வந்து அன்போடு வருடி நெற்றியில் சிலுவையிட்டு ஆசி வழங்கினார்.

வாழ்த்த வந்த அன்பர் ஒருவர்.

ஆசி பெற்ற பதிவர் ஒருவர்.

அவருக்குப் பிடித்தமான பாடல்களைப் பாடி மகிழ்விக்கும் அவரது குடும்பத்தார்.

நன்றி நவில மேடைக்கு அழைத்துவரப் படுகிறார்.

நன்றியை தம் மழலை மொழியில் தெரிவிக்கிறார்.

மேடையில் குடும்பத்தாரோடு உல்லாச நடனம்!!

என் முந்தைய பதிவைப் படித்து தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்கச் சொன்ன சகபதிவர்களது வாழ்த்துக்களையும் எடுத்துச் சென்று மதரிடம் சேர்ப்பித்த வாழ்த்து அட்டை!!!

இன்றைய செயிண்ட் இக்னேஷியஸ் பள்ளியின் தலைமையாசிரியர் எங்களிடம் வந்து பள்ளியின் ‘ஸ்கூல் ஆந்தம்’ அசெம்பிளியில் பாடுவது, நாம் எல்லோரும் சேர்ந்து பாடலாமா? என்றார்கள். அவரவர்க்கு ஞாபகம் வந்த வரிகளை கூவினோம். வாருங்கள் சேந்து பாடலாம் என்று மேடைக்கு அழைத்தார்கள். அப்படி நாங்கள் பாடிய எங்கள் பள்ளின் பாடல்.

Once more, time-honoured halls,
Resound with youthful song:
And tell us by your ringing walls
That you and we belong!
O dearest school,to thee our youth
We do entrust to learn the truth
That VIRTUE IS OUR STRONGEST SHIELD
And we will never and we will never
And we will never never, yield!!

விழா முடிந்து அருமையான சாப்பாடு. பள்ளியிலேயே தயாரித்த உணவு அருமையாயிருந்தது. தோழி ஒருத்தி ‘டுகோ’ செய்வதைப் பார்த்து நானும் ஒரு பார்சல் எடுத்துக்கொண்டேன், ரங்கமணிக்காக. அதைப் பார்த்து, ‘என்னக்கா? கூலா பாக் பண்றீங்க? என்றாள் நான்,’யாரைக்கேக்கணும்? இது நம்ம அம்மா வீட்டு சாப்பாடு!’ என்றேன். அப்ப நாங்களும் எடுத்துக்கிறோம்....!என்றார்கள். இது எப்படியிருக்கு?

மொத்தத்தில் வெள்ளை ஜாக்கெட்டும் வெள்ளை தாவணியும் பச்சைப் பாவாடையுமாக அங்கு உலா வந்தது போல் ஒரு பிரமையிலிருந்தோம்.

மதர் அலெக்ஸ் அவர்கள் நீடூழி வாழ ஏசு அவதரித்த இந்த கிறிஸ்துமஸ் நந்நாளில் வேண்டுகிறோம்.

உலக மக்கள் அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்!!!!!!!!

Sunday, December 6, 2009

பசுமை நிறைந்த நினைவுகளே



ஓடோடி வாருங்கள் பழைய தோழிகளே!!!

நம் மதிப்பிற்கும் அன்புக்கும் உரிய ரெவ். மதர் அலெக்ஸ் அவர்களுக்கு 100-வது பிறந்தநாள்!

அதன் கொண்டாட்டங்கள் வரும் 10-12-09 அன்று ஜெமினி அருகில் உள்ள “சிறுமலர் கான்வெண்டில்(LITTLE FLOWER CONVENT) சிறப்பாக நடைபெற உள்ளது.

எனக்குத் தெரியாதே!’
தெரிந்திருந்தால் வந்திருப்பேனே!’
மிஸ் பண்ணீட்டேனே!’

என்று பிறகு யாரும் ஆவலாதி சொல்லக்கூடாது. ஆமாம்.

பாளையங்கோட்டை செயிண்ட் இக்னேஷியஸ் கான்வெண்டடில் மதர் அலெக்ஸின் அன்பிலும் அரவணைப்பிலும் படித்த அப்பள்ளியின் பழைய மாணவியர் அனைவரும் கலந்து கொண்டு
அவரின் ஆசி பெற்று செல்ல வேண்டுமென்பதே இவ்வழைப்பின் நோக்கம்.

நாங்கள் சகோதரிகள் நால்வரும் ஒரு சகோதரனும் மதரின் செல்லங்கள். எங்களைக் கண்டால்
அவரது சந்தோஷம் சொல்லி மாளாது.
குறிப்பாக நான் மதர் அலெக்ஸின் செல்லங்களுக்கெல்லாம் செல்லம். கண்டிப்பும் கருணையும் கலந்த அவரோடு சரிக்கு சமமாகப் பேசி, குறும்புகள் பல செய்து உறவாடியது எல்லாம் என்றும் ரசித்து அனுபவிக்கக் கூடியவை.

நான் சிறுசிறு தவறுகள் செய்யும் போதெல்லாம் அப்பப்ப நெழுசலெடுத்தவர். அதே நேரம் தனியாக என்னை அழைத்து அவருக்கு பரிமாறிய கேக்கை அன்போடு வாயில் ஊட்டி விட்டது எல்லாம் மறக்க முடியாதது.

இன்றுவரை டிசம்பர் 10-ஆம் தேதி மதரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கூறி ஆசி பெற்று
செல்வோம். சென்ற டிசம்பரில் போன போது என்னையே கைகளைப்பிடித்து இழுத்து அருகில் அமரச் செய்து கொஞ்சிக் குலாவியதைக் கண்ட என் தங்கையின் நண்பிகள்,

“ஆஹா! கல்யாணி அக்காவைப் பாத்ததும் மதர் நம்மையெல்லாம் மறந்திட்டாங்களே!!!!” என்று செல்லமாய் அங்கலாய்த்தார்கள்.

மதர் அலெக்ஸைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வயதிலும் சிறிது தளர்வோடு நடமாடி, கலகலப்பாக உரையாடி, வயதுக்கான மறதியோடு பெயரை மாற்றி மாற்றி கூப்பிட்டு, “மதர் நான் அவளில்லை....இவளில்லை!” என்று போராடி யார் யார் யாரென்று சொல்லி, சுவாரஸ்யமாக கழிந்த அந்நேரங்கள் இனிமையானவை.

மதர் அலெக்ஸின் தலைமையில்தான் எங்கள் கான்வெண்டில் “மாரல்க்ளாஸ்” என்று ஒரு பிரீயட் உண்டு. இப்போதைய பள்ளிகளில் அதெல்லாம் உண்டா? தெரியவில்லை. எங்களுக்கு மதரே அக்கிளாஸ் எடுப்பார்கள். நல்ல ஒழுக்கம், நல்ல நடை, செய்யக்கூடியவை கூடாதவைபற்றியெல்லாம் அழகாக பாடமெடுப்பார்கள். நாங்கள் என்று ஓரளவுக்கு நல்ல பேர் எடுத்திருக்கிறேமென்றால் அதற்கு அவரது போதனைகளும் காரணம்.

அம்மாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் நாங்கள் மதிக்கும் அம்மா அலெக்ஸ் அவரது நூறாவது பிறந்த நாளை கொண்டாடி அவர் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ என் அம்மாவையும் ஏசுபிரானையும் பிரார்த்திக்கிறேன்.ஆகவே பள்ளியின் பழைய மாணவ மாணவிகளே!!!அனைவரும் ஒன்று கூடுவோம். வாழ்த்துவோம், ஆசி பெறுவோம், நாமும் நம் மலரும் நினைவுகளில் திளைப்போம்.

Friday, December 4, 2009

அம்பிகையைக் கொண்டாடுவோம் - சிறுகதை

”அம்மா..! வரும் ஞாயற்றுக்கிழமை என் ஃப்ரண்ட் மணி அமெரிக்காவிலிருந்து வேலை விஷயமாக சென்னை வர்ரான்.” என்றான் ரகு

’அப்படியா?’

'ஆமாம்மா...இங்கு அவனுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. ஸோ...நம்ம வீட்டில்தான் ஒரு வாரம் தங்கப் போகிறான்.'

”ரொம்ப நல்லது. இவ்வளவு பெரிய வீட்டில் இடமா இல்லை? தாராளமா தங்கட்டும்.”

”உனக்கொண்ணும் பிரச்சனையில்லையே?”

”எனக்கென்னடா பிரச்சனை? பத்தோடு பதினொண்ணு!”

மாமனார் மாமியார், கணவர் ராமநாதன், ரகு, கார்த்தி-ன்னு ரெண்டு பிள்ளைகள், சித்ரா-ன்னு ஒரு பொண்ணு என்று பெரிய குடும்பம். அப்பப்போ வந்து போகும் நாத்தனார்கள். ஆக இத்தனை பேரையும் ஒருத்தியாக தாங்கும் மீனாட்சி. பேருக்கேத்தாற்போல் அம்மனாட்டம் இருப்பாள். பட்டுப்புடவை வைரத் தோடுகள்,வைர மூக்குத்தி என்று ஜொலிப்பாள். ஆனால் மனதில் மட்டும் வெளியாருக்குத் தெரியாத ஒரு ஏக்கம் உள்ளூர ஓடிக்கொண்டேயிருக்கும்.

ஆக வந்து குதித்தான் அமெரிக்க மணி...கிணிகிணி..கிணிகிணி என்று. மீனாட்சிக்கும் மற்றவர்களுக்கும் சின்னச்சின்னப் பரிசுப் பொருட்கள் அன்போடு அளித்தான். மீனாட்சிக்கு அவற்றிலெல்லாம் சுவாரஸ்யமில்லை.
கணகண என்று மணியோசை போல் வந்து விழுந்த அவன் பேச்சும் நடவடிக்கைகளும்தான் அவளைக் கவர்ந்தன. விகல்பமில்லாமல் எல்லோருடனும் நெருங்கி உறவாடியது பிடித்திருந்தது. அவளையும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தியது எல்லாம், இப்படியும் இருப்பார்களா என்று வியந்தாள். காரணம்..? அவளுக்குத் தெரிந்ததெல்லாம், "மீனாட்சி! ஆபீஸ் போய்ட்டுவரேன்." என்று சமையலறையை நோக்கி செய்தி அனுப்பிவிட்டு பதிலை எதிர்பாராமல் போகும் கணவனையும், "அம்மா! போய்ட்டு வர்ரேன்!" வீடதிர கூவி விட்டுச் செல்லும் பிள்ளைகளையும்தான் பார்த்திருக்கிறாள்.

ஆம்! அந்த வீட்டில் அவள் ஒரு அலங்கார பூஷிதையாய் வலம் வரும் கௌரவ வேலைக்காரிதான்.

வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். சமையலிலிருந்து சகலமும்.
ஒரே சமையலை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதேயில்லை. காலை 7-மணிக்கு ஒருவருக்கு பூரி உருளைக்கிழங்கு வேண்டும். 8-30க்கு அடுத்தவருக்கு இட்லி சாம்பார், அடுத்து கணவருக்கு பொங்கல் கொத்ஸ், 9-30-க்கு காலேஜ் போகும் மகளுக்கு ரொட்டி ஜாம்.
இப்படி ஒவ்வொரு வேளையும் மீனாட்சிக்கு கண்ணைக் கட்டும். ஆனால் அத்தனையையும் அசராமல் தயார் செய்து அவரவர் தேவைகளை நிறைவேற்றுவாள். வயதான மாமனார் மாமியாருக்கு சாப்பாடு அவர்கள் அறைக்கே போய்விடும்.

பத்து மணிக்கு மேற்சொன்ன மெனுவில் எது மீதமிருக்கிறதோ...ஆறி அவலாய்ப் போனதை தன் வயிற்றுக்கு ஈந்து பசியாறுவாள்.

இதே கதைதான் மதியத்துக்கும் இரவுக்கும்.
விடுமுறை நாட்களில் மதிய உணவுக்குப் பின் எல்லோருக்கும் ஜூஸ் வேண்டும். ம்யூசிக்கல் சேர் மாதிரி தேவைகளும் ருசியும் மாறும். அந்த கலாட்டாவைப் பார்க்க வேண்டுமே!!

'அம்மா! எனக்கு ஆரஞ்சு ஜூஸ்!'
'எனக்கு ஆப்பிள்!'
'மீனாட்சி! எனக்கு லைம் ஜூஸ்!'
'அம்மா! எனக்கு தக்காளி!'

நெற்றியில் முத்துமுத்தாக அரும்பிய வேர்வை வழிய, பெரிய கண்ணாடி தம்ளர்கள் வழியவழிய விதவிதமான வண்ணங்களில் ஜூஸ்களை தட்டில் ஏந்தி வரும்போது பாவமாயிருக்கும். யாருக்கு? படிக்கும் நமக்குத்தான். வீட்டிலுள்ளோர்களுக்கில்லை.

இது..இதுதான் அவள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஏக்கம்.
'மீனாட்சி! நீ சாப்பிட்டாயா? இன்று பருப்பு உசிலி நன்றாக இருந்தது.' என்றோ,
'அம்மா! நீ உக்காரு உனக்கு நான் சூடா தோசை சுட்டுத்தாரேன்.' என்றோ ஒரு நாளும் ஒருவரும் கேட்டதேயில்லை.

வந்த ரெண்டு நாட்களில் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மணி, சிறு வயதில் தன் தாயை இழந்து தாயன்புக்காக ஏங்கிக் கொண்டிருப்பவன்.

அடுத்து வந்த ஞாயற்று கிழமை. ‘ஹலோ அங்கிள்! ஆன்டி! ஹே கய்ஸ்!’ என்று எல்லோரையும் கூவி அழைத்தான். அவரவர் அறைகளிலிருந்து ‘என்ன’ என்பது போல் எட்டிப் பார்த்தார்கள்.
‘டு டே இஸ் சண்டே! ஸோ இன்று லன்ச் எல்லோரும் ஒன்றாக உக்காந்து சாப்பிடவேண்டும்.’
உத்தரவு போல் வந்து விழுந்தன வார்த்தைகள். ‘ஐயோ!, எனக்கு...,ஹய்! நான், இன்னிக்கு..’ என்று ஆளாளுக்கு மறுப்பறிக்கை சமர்ப்பிக்க ஆரம்பித்தபோது, கம்பீரமாக கை காட்டி நிறுத்தியபோது எல்லோரும் கப்பென்று அடங்கினார்கள்.

மீனாட்சியை அன்போடு அணைத்து ஹாலில் உள்ள சோபாவில் அமர வைத்து கையில் டிவி ரிமோட்டையும் கொடுத்து,”அம்மா! நாங்கள் சாப்பிடக் கூப்பிடும் வரை ரிலாஸ்டாக டிவி பார்த்துக் கொண்டிருங்கள். என்ன?” என்றான். ஏதோ சொல்ல வாயெடுத்தவளை ‘உஷ்’ என்ற வாயில் விரலை வைத்து, ‘ஒண்ணூம் பேசக் கூடாது.’ என்றான்

பிறகு மடமடவென்று உத்திரவுகள் பறந்தன. “ரகு, கார்த்தி,சித்ரா! வீ ஆர் கோயிங்க் டு ப்ரிப்பேர் லன்ஞ் டுடே!!” “ஹையோ! எனக்கு சமைக்கத் தெரியாதே!” ரெண்டு ஆண் குரல்களிலும் ஒரு பெண் குரலிலும் ஒரே போல் வார்த்தைகள் வந்து விழுந்தன.

”டோண்ட் வொரி! ஐ’ல் டீச் யூ” என்றவன், ஒருவருக்கு காய் நறுக்க சொல்லிக் கொடுத்தான். மற்றவருக்கு தேங்காய் துருவி மிக்ஸியில் அரைக்கச் சொன்னான். இன்னொருவரை தனக்கு எடுபிடியாக வைத்துக்கொண்டு மளமளவென்று சமையலை ஆரம்பித்தான். சமையலறையையே கண்டிராத ரகு, கார்த்தி, சித்ரா மூவரும் ‘ட்ரஷர் ஹண்டில்’ தேடுவது போல் உப்பு, புளி, எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, மற்றும் மசால சாமன்களையெல்லாம் தேடித்தேடி மணி கேட்க கேட்க எடுத்துக் கொடுத்தார்கள்.

ஒரு வழியாக காலை பத்து மணிக்கு ஆரம்பித்த சமையல் வேலை.....சரியாக ஒரு மணிக்கு சுடச்சுட சாதம் பருப்பு, பீன்ஸ் பொரியல், சௌசௌ கூட்டு, தயிர் பச்சடி, வெண்டைக்காய் சாம்பார், தக்காளி ரசம், கட்டித்தயிர், ஆவக்காய் ஊறுகாய் என் கன ஜோராய் அப்பளமும் ரெடி பண்ணி சாப்பாட்டு மேஜையில் அழகாகப் பரப்பினான். மூவரும், மணியை அவனது திறமையைக்கண்டு வியந்து போனார்கள்!!!

ஆறு வாழையிலை பரப்பி அதில் உப்பு, ஊறுகாய், பொரியல், கூட்டு, பச்சடி, பருப்பு என முறையாக பரிமாறி அனைவரையும் சாப்பிட அழைத்தான். முதலில் வந்து ’ஹோஸ்ட்’ இருக்கையில் அமரப்போன ராமநாதனை அன்போடு தடுத்து அடுத்த நாற்காலியில் உட்கார வைத்தான்.

பிள்ளைகள் மூவரும் அமர்ந்தவுடன் மீனாட்சியை அழைத்து வந்து ‘ஹோஸ்ட்’ நாற்காலியில் உட்காரச் சொன்னான். திகைப்பிலிருந்து மீளாத மீனாட்சி, ‘நான் பரிமாறுகிறேனே?’ என்று தயங்கிய போது, மணி, “அம்மா! இன்று உங்களுடைய நாள். தினமும் நீங்க சமைத்து பரிமாறி அனைவரும் சாப்பிட்டதுக்குப் பின் ஆறிய உணவை பசி போன பின் சாப்பிட்டதுக்கு, ஒரு மாற்றாக நாங்க சமைத்து சூடாக நீங்க சாப்பிடும் அழகைப் பார்க்க வேண்டும்.” என்றான் பரிவோடு. அவனது பரிவில் கண்கள் கலங்க அமர்ந்தாள்.

சாதம், சாம்பாரை இலையிலிட்டு அப்பளமும் வைத்துவிட்டு, மீனாட்சியின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். “ஆஹா! நமக்கு இப்படியெல்லாம் தோணவேயில்லையே!”
என்ற திகைப்பிலிருந்த அப்பாவையும் பிள்ளைகளையும் உசுப்பி சாப்பிடச் சொல்லிவிட்டு, மீனாட்சிக்கு பார்த்து பார்த்து பதார்த்தங்களை இலையிலிட்டு அவள் ரசித்து சாப்பிடுவதை பார்த்துக் கொண்டே தானும் உணவை உண்டு முடித்தான்.

“சாப்பாடு ரொம்ப நல்லாருந்துது, மணி!!” என்று கண்கள் பளபளக்க சொன்னாள் மீனாட்சி.
ஆதுரத்துடன் அவளை சூழ்ந்து கொண்டார்கள் மற்றவர்கள்.
“ஓகே! அடுத்து எல்லோரும் அவரவர்களுக்குத் தேவையான ஜூஸ்களை அவர்களே தயாரித்துக் கொள்ள வேண்டும்.”
“நாங்களேவா....?” என்று ஆரம்பித்தவர்கள் கப் என்று அடங்கினார்கள். கிச்சனை நோக்கி நடந்தவர்களை, “சித்ரா! நீ அப்பாவுக்கும் சேர்த்து கொண்டுவா! அம்மாவுக்கு நான் கொண்டு வருகிறேன்.” என்றவன், மீனாட்சியைப் பார்த்து, “அம்மா! உங்களுக்கு என்ன ஜூஸ் பிடிக்கும்?” என்று கேட்க, கண்களில் நீர் வழிய அழவாரம்பித்தாள்....ஆம்! அது ஆனந்தக்கண்ணீர்!!!!




Thursday, December 3, 2009

ஒரு காரம் ஒரு இனிப்பு....ஒரே கிழங்கிலே ஒரே பதிவிலே லலாலா..லா!

ஒரே கிழங்கைக் கொண்டு இரு வேறு சுவைகளில் சமைக்க முடியுமா? முடியும். சர்க்கரை வள்ளிக் கிழங்கு.......நாங்க செல்லமாய் அழைக்கும் சீனிக்கிழங்கு. இதை வைத்துத்தான் ரெண்டு டிஷ் தரப் போகிறேன்.
ஒன்று இனிப்பு மற்றது காரம். சேரியா?

இனிப்புக்குத் தேவையானவை:
சீனிக்கிழங்கு...........கால் கிலோ
பனங்கருப்பட்டி.....ரெண்டு சிரட்டை
சுக்குப்பொடி............ரெண்டு தேக்கரண்டி
ஏலப்பொடி...............ரெண்டு தேக்கரண்டி

எப்படி செய்வோமடி:
முதலில் சீனிக்கிழங்கை அது முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும். அளவாக வெந்ததும் குளிர்ந்த நீரில் போட்டு தோல் உறித்து வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் கருப்பட்டியை உடைத்துப் போட்டு கொதிக்க விடவும். கருப்பட்டி நன்றாக கரைந்ததும் ஒரு கடாயில் வடிகட்டி அடுப்பில் கொதிக்கவிடவும். அதில் சுக்கு, ஏலப் பொடியை சேர்க்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள சீனிக்கிழங்கை சேர்த்து
மெதுவாக கிளறவும். கருப்பட்டி பாகு இறுகி வரும் போது அடுப்பை அணைத்து பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும்.

சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும் இந்த பதார்த்தம் என் மாமியாருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவரிடமிருந்து அறிந்து கொண்டது. சுக்கு ஏலக்காய் மணமும் கருப்பட்டிப் பாகும் சேர்ந்து அருமையாயிருக்கும்.

அடடா....! படத்தில் ஒரு கருப்பட்டிச் சிரட்டையையும் வைக்க மறந்தேனே!!!!


இனி காரம் பக்கம் போவோமா? போ...வோமே!!!
இது என்னோட டிஷ். உருளைக்கிழங்கிலேதானே காரக் கறி செய்திருப்பீர்கள்?
இங்கே நான் அதையே சீனிக்கிழங்கிலே செய்திருக்கிறேன்.
எப்படின்னு பாக்கலாமா? ஒண்ணும் கம்ப சூத்திரமெல்லாம் இல்லீங்க. வெரி சிம்பிள்.
முதலில் சொன்னது போல் வேக வைத்து வட்டமாக நறுக்கிய சீனிக்கிழங்கு.
பின் ஒரு பௌலில்
மஞ்சள் பொடி..........................ரெண்டு தேக்கரண்டி
ஜிரகப்பொடி................................ஒரு தேக்கரண்டி
மல்லிப்பொடி..............................ரெண்டு தேக்கரண்டி
மிளகாய்பொடி.............................ரெண்டு தேக்கரண்டி
பொட்டுக்கடலைப் பொடி.......ரெண்டு தேக்கரண்டி
உப்பு....................................................தேவையான அளவு

மேற் சொன்ன பொடிகளை ஒரு பௌலில் போட்டு கலந்து அதோடு வேகவைத்து நறுக்கி வைத்துள்ள சீனிக்கிழங்கை கலந்து பொடிகள் ஒன்றுபோல் கிழங்கில் ’கோட்’ ஆகுமாறு நன்றாக குலுக்கி,
பின்னர் கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீனிக்கிழங்கை கடாயில் விட்டு கிளறவேண்டும். நல்ல முறுகலாக வரும் வரை பிரட்டி எடுத்து தட்டில் மாற்றிப் பரிமாறவும். இனிப்பும் காரமும் கலந்த ஒரு சுவையில் அபாரமாயிருக்கும்

இம்மாம் பெரிய மிளகாயெல்லாம் போட்டால்....படுகாரமாயிருக்கும்!!!

இரண்டு சுவையுமே எனக்குப் பிடித்தவைதான். இதைப் படிச்சவங்களும் புடிச்சவங்களும் செஞ்சு சாப்பிட்டுப் பாத்து சொல்லுங்களேன்.

Wednesday, December 2, 2009

வாழையடி வாழையாக வந்த வாழைக் கன்று...இதுவும் நன்று!!

அப்பா, தாத்தா, பூட்டன் இது ஒரு பரம்பரையின் சங்கிலி. இது போல் உறவே அல்லாத ஏழு ஸ்வரங்களால் இணைந்த ஒரு சங்கீதப் பரம்பரையின் இளம் கன்று ஒன்று சப்தஸ்வரங்களையும் பந்தாடிய அழகைப் பார்த்தேன் 19/07/09 ஞாயற்றுக்கிழமையன்று மாலை
தி-நகர் YGP அரங்கில். அந்த சங்கீதப் பரம்பரை...?

கூடலூர் நாரயணசாமி பாலசுப்ரமணியம். The one and only G.N.பாலசுப்ரமணியம்.
மதுரை லலிதாங்கி வசந்தகுமாரி. எம்.எல்.வி.
சுதா ரகுநாதன்

இதில் புதிதாக இணைந்தவர் செல்வி தீபிகா. சுதா ரகுநாதனின் சிஷ்யை. கண்களை மூடிக்கொண்டு கேட்டால் சுதாவின் டீன் ஏஜ் பிஞ்சு குரல் போலிருக்கிறது. அப்படியே ஸெராக்ஸ் காபி!

ஞாயறன்று இவர், ஜி.என்.பியின் நூற்றாண்டையும் எம்.எல்.வியின் எண்பதாவது ஆண்டையும் கொண்டாடும் விதமாக, "நினைக்காத நேரமில்லை" என்னும் தலைப்பில்
அந்தக்கால லெஜெண்ட்ஸ், ஜி.என்.பி.- எம்.எல்.வி. - எம்.எஸ்.சுப்புலஷ்மி - டி.கே.பட்டம்மாள் - மதுரை சோமு - ராதா ஜெயலஷ்மி - எம்.எஸ்.ராஜேஸ்வரி -பி.லீலா -எஸ்.ஜானகி ஆகியோரது மறக்க முடியாத என்றென்றும் நினைவில் நிற்கும் பாடல்களை தன் இனிய குரலால் தொகுத்துப் பாடி அவையோரை மகிழ்வித்தார்.

கச்சேரி ஆரம்பிக்குமுன் தூர்தர்ஷன் முன்னாள் டைரக்டர் திரு.நடராஜன் அவர்கள் தீபிகாவின் வெப்-சைட்டை திறந்து வைத்தார். www.deepikav.com இந்த சைட்டில் தீபிகாவின் முழு விபரமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

சில வருடங்கள் முன்பு கே.பாலச்சந்தரின் "கையளவு மனசு" சீரியலில் கீதாவின் கடைக் குட்டி சுட்டிப் பெண்ணாக வந்து(சுமார் நாலைந்து வயதுதானிருக்கும்) அழகாப் பாடி நம் மனதைக் கொள்ளை கொண்டவள்தான் இந்த தீபிகா!

முன் வரிசை விஐபி-களில் முதலில் வொயிட்&வொயிட்டில் அமர்ந்திருப்பவர் மறைந்தும்,மறையாமல் ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.எல்.வி. அவர்களின் புதல்வர். மற்றும் திருமதி சுதா மகேந்திரன், திருமதி வொய்.ஜி.பி., குமாரி சச்சு ஆகியோர்.

மிகமிக தாமதமான பதிவுதான். என் கணினிக்கும் அபஸ்வரம் தட்ட, குடும்ப சூழ்நிலையிலும்
கொஞ்சம் சுருதி கலைந்து போன சமையமாதலால்(ரங்கமணியின் ஆப்பரேஷன் சமயம்) சுருதி சுத்தமாக பதிவிட இப்போதுதான் நேரம் வாய்த்தது. இதுதான் சரியான நேரம்!!

டிசம்பர் மாதம் முழுதும் சென்னையில் இயற்கை வழங்கும் மழையோடு சேர்த்து எங்கும் இசை மழை இடி முழக்கத்தோடு பொழியும் நேரமில்லையா.....!!!!!

வெளியூர்வாசிகளின் கடுகடுப்பும் சிடுசிடுப்பும்தான் இங்கு இடியாய் இறங்குகிறதோ?

Sunday, November 8, 2009

சித்துசிறுக்குன்னு ஒரு கொலு - இந்த வருடம்

இந்த வருட கொலுவும் சித்துசிறுக்குத்தான், அதற்கான பதிவும் சித்துசிறுக்குத்தான். அன்னை ஆதிபராசக்தியின் உருவச் சிலையை பிரதானமாக வைத்து நான் அமைத்த இக்கொலு சித்துதானே? சிறுக்குதானே?

துர்காதேவியும் முக்கியமானதால் தேவி அவளும் வந்தமர்ந்து கொண்டாள்.

எல்லாமே ரொம்ப சிம்பிளாக இருந்துவிட்டால்....வரும் விருந்தினருக்கு வித்தியாசமாக ஏதாவது இருக்க வேண்டுமே? அதுக்காக ரூம் போட்டெல்லாம் யோசிக்கவில்லை. இருக்கும் ட்ராயிங் ரூமிலேயே
உக்கார்ந்து யோசித்ததில் கிடைத்ததுதான் இந்த ஐடியா! பழங்கள், காய்கறிகளில் கார்விங்க் செய்து விதவிதமான வடிவங்களை வடிவமைக்கும் கேட்டரிங் கம்பெனி ஒன்றிற்கு போன் செய்து ரெண்டு மூணு பீஸ்கள் செய்துதருவீர்களா என்று கேட்டதற்கு, ஒரு பீஸ் கூட செய்துதருவோம் என்ற பதில் கிடைத்தது. சும்மா விடலாமா?

மஞ்சள் பூசனிக்காயில் சரஸ்வதி.

தர்பூசனிப்பழத்தில் வெண்தாமரை, செய்துதரக் கேட்டேன்.



ஒரு நாள்தான் வாடாமல் இருக்குமென்பதால் நவராத்திரி ஒன்பதாவதுநாள் காலை வந்து சேர்ந்தது, பூசனிக்காயில் சரஸ்வதியும் தர்பூசனிக்கனியில் வெள்ளைத் தாமரையும் அழகாக வந்து சேர்ந்தது.


ஏடடுக்கி அலங்கரித்த அம்மன் பாதங்களில் கம்பீரமாக வீற்றிருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, எதிர்பார்த்த பாராட்டையும் வாங்கித்தந்தது.

துள்சியின் பதிவில் சிறப்புக் கவனத்தையும் பெற்றது.



எங்கம்மா மகராசி, என் வீட்டில் ஆட்சி செய்யும் ஆதிபராசக்தி!!!

தீப ஒளியில் அவளின் அருளாட்சி!

சங்கீத சௌபாக்யமே....என்றும் குன்றாத பெறும் பாக்யமே!!!!


பி.கு:
படங்கள் அப்லோடிங் பிரச்சனையால் சற்று தாமதமன பதிவு. பரவாயில்லைதானே?

Saturday, October 24, 2009

மண் வாசனை மணத்தது - சர்வேசன்500 ‘நச்’ சிறுகதைப் போட்டி

’என் கணவர் வாய் திறந்தால் நச்னு அவர் எந்த ஊர்காரர் என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.’ என்று பஸ்ஸில் வரும் போது தன் தோழியுடம் சொல்லிக் கொண்டே வந்தாள் சந்திரா.

’அதெப்படி? அப்ப நீ பேசும் போது மட்டும் கண்டுபிடிக்க மாட்டார்களா?’ மாலதி.

‘ஹூஹும்! நான் கூடிய மட்டும் எந்த வட்டார மொழியும் கலக்காமல் சுத்தமான தமிழில் பேசுவேனாக்கும்!’

‘ஓஹோ! செந்தமிழோ?’

‘அது செந்தமிழும் இல்லை கொச்சைத்தமிழும் இல்லை. வெறும் தமிழ், நல்ல தமிழ்.’

‘எங்கே ஓர் உதாரணம் சொல்லு பாக்கலாம்!’

‘என் கணவர், “இங்ஙன ஒரு பேப்பர் வச்சிருந்தேனே பாத்தியா? என்றால் நான் இங்க ஒரு பேப்பர் வச்சிருந்தேனே பாத்தியா? என்பேன்.
’பையப் போ’ என்றால் நான் மெதுவாப் போ என்பேன்.
‘வாரியல் என்றால் துடப்பம் என்பேன்.
இப்படியே உதாரணங்கள் சொல்லிக்கொண்டே வந்தாள் சந்திரா.

சிறிது நேரத்தில் கண்டக்டர், ‘டிக்கெட்....டிக்கெட்’ என்றவாறே அவர்களை நெருங்கி, ’டிக்கெட்’
என்றார். சரியாக அந்நேரத்தில் சந்திராவின் கண்ணில் தூசி விழுந்து கண்ணை கசக்கிக் கொண்டே இருந்தாள். கண்டக்டர்,’ என்னம்மா ஆச்சு?’ என்று கேட்டார்.


சந்திரா டக்கென்று அவளறியாமல் சொன்னாள், “கண் வலிக்கி!!!”
கண்டக்டர் நச்சென்று கேட்டார், “அம்மா நீங்க திருநெல்வேலியா?



பி.கு.
இக்கதை நச்னு இருந்தால் போட்டிக்கு, இல்லாங்காட்டி ச்சும்மா வாசிக்க. சேரியா?

Wednesday, October 21, 2009

தீபாவளி அன்று நான் ரசித்த இரு டிவி நிகழ்ச்சிகள்


வழக்கமான குத்தாட்டப் பாடல்களையும். மைக் பிடித்து மேடையில் பாடும் நிகழ்ச்சிகளையும் வெறுத்து ரிமோட்டை க்ளிக்கிக்கொண்டே வரும்போது எதேச்சையாக மதியம் ஜெயா டிவியில் கண்ட ‘வடிவேலுவோடு ’தூள்’ பாடகர் மாணிக்கவினாயகமும் டைரக்டர் மனோபாலாவும் தொகுப்பாளரும் இணைந்து நிகழ்த்திய உரையாடல் தொகுப்பு...வடிவேலு பற்றிய ஒருவரது எண்ணங்களை கட்டாயம் மாற்றியிருக்கும்.
அசந்து போனேன்!!!
தெளிவான கருத்துக்களோடு படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவங்களையும் மனோபாலாவோடு சேர்ந்து சிரிப்பு வெடிகளோடு(தீபாவளி அல்லவா?) விவரித்தவிதம் நன்றாக இருந்தது. தான் வல்கரான வசனங்களை பேசுவதை தவிர்த்து விடுவதையும் அக்கரையோடு சொன்னார்.
பாம்பாட்டி ஷூட்டிங்குக்கு கொண்டு வந்த பாம்பு பல் பிடுங்கியதுதான் என்று காட்ட தன் கையில் கொத்தவிட்டு சாய்ந்த கதையை நடித்தே காட்டியது, இன்னும் இதுபோன்ற பல காமடிகளை இருவரும் குலுங்க குலுங்க சொல்லியது எல்லாமே இன்னுமொரு படம் எடுக்கத் தேவையான சம்பவங்களைக்கொண்டது.

இது எல்லாவற்றுக்கும் மேலே.....அவர் எம்ஜியார் சிவாஜி பாடல்களைப் பாடுவார் என்பது மட்டுமே நமக்குத்தெரியும். ஆனால் இந்தளவுக்குப் பாடுவார் என்பது கண்டு கேட்டு மகிழ்ந்தே போனேன்.
மைக் பிடித்து மேடையில் பாடும் பாடகர்கள் எல்லோரும் முன்னால் ஒரு ஸ்டாண்டில் பாட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு பாடுவார்கள்.
ஆனால் இவரோ..? மந்திரவாதி வெறும் காற்றில் கைகளை மாறிமாறி வீசி ரிப்பன், பூக்கள், புறா என்று வரவழைப்பது போல், தன் நினைவுக் காற்றிலிருந்து டக்டக்கென்று சிவாஜி பாட்டு, எம்ஜியார் பாட்டு என்று சுருதி சுத்தமாகவும் அட்ஷர சுத்தமாகவும் ஆர்கெஸ்ட்ராவோடும் இணைந்து, இசைந்து பாடியது கண்டு நிஜமாகவே
அசந்துதான் போனேன்!!!!

அதிலும் குறிப்பாக ஒரு பாடல். ‘மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா..’ என்ற வரிகளைப் பாடிவிட்டு உடனே, ‘கிணுகிணு..கிணுகிணு..கிணுகிணு..’என்று அதன் பிஜியெம்மையும்(பின்ன்ணி இசை) சேர்த்து பாடினாரே பார்க்கலாம்!!
எந்த அளவுக்கு அப்பாடல்களையெல்லாம் அக்காலத்தில் ரசித்திருப்பார் என்பது, என்னைப்போல், வல்லியம்மாவைப் போல் சிறுவயதில் பள்ளிவிட்டு வந்ததும் காதுகளைப் பிய்த்து ரேடியோவின் ஸ்பீக்கரில் ஒட்டிவைத்துவிடும் பிரகஸ்பதிகளுக்கு நன்றாகவே புரியும்.

ஹைனா வல்லி?

அதுவும் அக்காலத்தில் வசதியில்லாத வடிவேலு எங்காவது ரேடியோ சத்தம் கேட்டால் அங்கு போய் நின்று கொள்வாராம். வெறும் கேள்வி ஞானத்தில்தான் வளர்ந்தது அவரது பாடும் திறமை.அவர் பாடிய பாடல்களில் நான் விரும்பிக் கேட்பது, ஒரு படத்தில் அம்மனை ஊஞ்சலில் வைத்து பாடும் தாலாட்டுப் பாடல், ‘சந்தனப் பொட்டு வச்சு...’ அழகான மெலோடி!!

தமிழ் திரையுலகம் வடிவேலுவை ஒரு நல்ல பாடகராகவும் நல்ல குணச்சித்திர நடிகராகவும் பயன் படுத்திக்கொண்டால் அவர் பல உச்சங்களைத் தொடலாம்.


மாலையில் அசத்தியது யாரு?
நடிகரும் ஓவியருமான சிவக்குமார்!!!
முழு நிகழ்ச்சியையும் ’ஒன்மேன் ஷோ’ வாக தன் பேச்சாற்றலால் நிகழ்த்திக் காட்டினார்.
திரையுலகத்திலிருந்து விலகியதும் தன்னுடைய ஓய்வு நேரத்தை எவ்வளவு உன்னதமாகவும் உபயோகமாகவும் கழித்திருக்கிறார் என்றறியும் போது அவர் மீது ஒரு மதிப்பு எழுவதை தவிர்க்க முடியாது. அவருள்ளிருந்த ஒரு தமிழன், தமிழ்காதலன், தமிழ் ஆர்வலன் வெளிவந்து, கம்பராமாயணம் என்ன, திருக்குறள் என்ன, சங்க இலக்கியங்கள் என்ன என்று அருவியாய்.....ஹூஹும்!! நயாகராவாய் பொங்கிப் பெருகி தமிழ்த் தேனாய் வழிந்தான்.
இந்தத் தலைமுறைக்கு எடுத்துரைத்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை. சட்டியில் இருந்து வழிந்த சரக்குப் போல்தான் சபையும் நிரம்பி வழிந்தது.

Monday, October 19, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு 2009

திடீரென்று என் மெயில் இன்பாக்ஸில் ஜில் ஜில் ஜில்னு ஒரே சதங்கை சத்தம் திறந்து பாத்தால்..இன்ப அதிர்ச்சியாம்..! வந்து பாருங்கோ என் அழைத்திருந்தார், நண்பர் சதங்கா. ஹூம்! எத்தனை வகையான அதிர்ச்சிகளையெல்லாம் பாத்திருக்கோம். இத்தப் பாக்க மாட்டோமா? ஆனா அங்க வெச்சிருந்தாரே ஓர் ஆப்பு! எவ்வளவோ தொடரெல்லாம் தொடர்ந்திருக்கோம்...இதையும் தொடருவோம், ஏன்னா? நம்ம மேலே இத்தனை நம்பிக்கை வச்சிருக்காரே சதங்கா...! அந்த நம்பிக்கையை சதாய்க்கலாமா? தட்டிருவோம்...! அட! கீ-போர்டைத்தானுங்க!

ஆட்டையை ஆரம்பிப்போம்.




1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

ஹம்பிள்,சிம்பிள் குடும்பத்தலைவி. என்னைச் சுற்றியிருப்பவர்களை சந்தோசப்படுத்திப் பார்க்கும் ஓர் ஆத்மா. மழலையின்பத்தில் மகிழும் ஜீவன். எதிர்காலத்தை அது எவ்விதமாயினும் ஏற்கத் தயாராயிருக்கும் ஒரு மனுஷி. போதுமா?

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

சிறு வயதில் ஐந்து அண்ணன்மார்கள் மூன்று சகோதரிகளுடன் புத்தாடைகள் உடுத்தி பெற்றோர் ஆசி வாங்கி, பின் குன்னக்குடியில் குடி கொண்டு ஒரே திசையை நோக்கி வீற்றிருக்கும் நவகிரகங்கள் போல் ஒன்பது பேரும் ஒரே மாதிரி ஆளுக்கொரு கல்வெடி பாக்கெட்டுகளை(சிறிய பேப்பர் உருண்டைகள் போலிருக்கும்) எங்க வீட்டுத் திண்ணையிலிருந்து ஒரே நேரத்தில் தரையில் வீசிவீசி வெடிப்போமே அதுதான் மறக்க முடியாதது.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போகும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. தீபாவளிக்கு மட்டுமல்ல எப்போதும் இருப்பது சென்னை அடையாறில்தான்.

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

பிள்ளைகள் கூட இருந்த காலத்தில் வழக்கம் போல் அதிகாலை எழுந்து குளித்து புத்தாடைகள் அணிந்து பூஜைமுடித்து காலை உணவு இனிப்பு கார வகைகளோடு உண்டு வீட்டுக்கு வெளியில் பட்டாசுகள் வெடித்து சொந்தங்களை சந்தித்து மகிழ்ந்து கொண்டாடியது சில காலம் முன்பு. இப்போது இரு சீனியர் சிட்டிசன்கள் கொண்டாடும் தீபாவளி....வருடம் 365 நாட்களில் ஒன்று போல் கழிந்தது.

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

எப்போதும் போல் ‘ராசி சில்க்ஸ்’

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

வீட்டில் பலகாரக் கடாய் வைக்க வேண்டுமே என்று நான் செய்தது SPLENDA SWEETNER சேர்த்து செய்த பாதாம் அல்வா. ரங்கமணிக்காக. மற்றபடி வருவோர்க்கு, அக்கம் பக்கம் கொடுக்க கடையில் வாங்கினேன். மிக்ஸர், தட்டை, லட்டு, பாதுஷா, மஸ்கோத்து அல்வா. அம்புட்டுதேன்.


7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

தொலைபேசி, கைபேசி மூலம்தான். ‘வாழ்த்துஅட்டை!?’ எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்?

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

ரெண்டும் கொஞ்சம் கொஞ்சம்.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

இந்த வருடம் அப்படியேதும் இல்லை. மற்றபடி நாங்கள் வழக்கமாக உதவி செய்யும் தொண்டு நிறுவனம்....”உதவும் கரங்கள்”

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

அவர்கள் அலறாவண்ணம் நான் அழைக்கும் நால்வர்:

KVR/ராஜா http://kvraja.blogspot.com/
அபிஅப்பா http://abiappa.blogspot.com/
ஆயில்யன் http://kadagam.blogspot.com/
சீனா http: //cheenakay.blogspot.com/


வலையுலக சக்கரவர்த்திகளல்லவா? அன்போடு அழைக்கிறேன். மெல்ல வந்து பதிந்து போகவும்.

ஆவணி பௌர்ணமி - சர்வேசன்500 ‘நச்’னு ஒரு சிறுகதை

'ராஜீ! இதான் ஏ முடிவு. நா காட்டுற மாப்பிள்ளைக்குத்தான் நீ கழுத்தை நீட்டணும்.
எதாவது ஏடாகூடமா பண்ண நெனச்சே மகள்னு கூட பாக்க மாட்டேன், கொன்னுடுவேன்.'
அப்பாவின் மிரட்டலில் மிரண்டுதான் போனாள், ராஜி.

சென்னையில் பெரிய பிசினஸ் புள்ளி அவள் அப்பா தியாகராஜன். ஒரே மகள் அதுவும் தாயில்லாதவள். அவள் கேட்காத சௌகரியமெல்லாம்

கிடைத்தது. உறவென்றும், கூடப் பிறந்தவர்கள்ந்ன்றும் யாருமில்லாமல், வியாபர விஷயமாக தந்தையும் மாதத்தில் பாதி நாட்கள் வீட்டிலில்லாமல்

வேலைக்கார ஆயா துணையோடு அவ்வளவு பெரிய பங்களாவில்
தனிமையில் ஏங்கிக் கழித்தாள்.

ஒரு நாள் கல்லூரித் தோழி ஜெயா வீட்டிற்குப் போகும் சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கு போனதும் உடம்பெங்கும் புது ரத்தம் பாய்ந்தது போல் உணர்ந்தாள்.

ஜெயாவின் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி என்று அங்கு நிலவிய பந்ததையும் பாசத்தையும் ஒருவரையொருவர் செல்லமாய் சீண்டி

விளையாடிக்கொள்வதையும் பார்த்து வியந்தாள்.
இப்படியெல்லாம் கூட இருக்குமா? வாழ்கையின் ஜீவனை அங்கு கண்டாள், தனை மறந்தாள்,
தன்னையும் அக்குடும்பத்தோடு இணைத்துக்கொள்ள ஆசைப்பட்டாள்.

'ஜெயா! உங்க வீட்டில் எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்!'
'இதிலென்ன ஆச்சரியம், ராஜி?அவரவர் இயல்போடு இருக்கிறோம். உங்க வீட்டில் இது போல கலகலப்பாக இருப்பதில்லையா?'
'கலகலப்பா? அதுக்கு எனக்கு அர்த்தமே தெரியாது ஜெயா! வீடு முழுக்க வேலைக்காரர்கள், துணைக்கு ஆயா, எப்பவாவது வரும் அப்பா, நிசப்தமான

வீடு. இதுதான் எங்க இயல்பு.' என்றாள் ராஜி சலிப்போடு.
'உங்க வீட்டில் நிலவும் அன்பு, பாசம், அன்யோன்னியம் எல்லாம் ரொம்பப் பிடிச்சிருக்கு ஜெயா!
நான் அடிக்கடி இங்கே வரலாமா?' ஏக்கம் ததும்பக் கேட்டாள் ராஜி.
'ஐயோ! ராஜி என்ன சொல்லிட்ட? இது உன் வீடு நீ எப்ப வேணாலும் வரலாம்.' என்றாள் ஜெயா அவள் கைகளை ஆதுரத்துடன் பற்றிக் கொண்டு.

அந்த வீடும் அதன் சூழ்நிலையும் பிடித்துப் போக அடிக்கடி போகவாரம்பித்தாள் ராஜி. நாளடைவில் ஜெயாவின் அண்ணன் மூர்த்தியின் அழகும் குணமும்

துறுதுறுப்பும் குடும்பத்தின் மேல் அவன் கொண்ட பற்றும்அவளை வெகுவாகக் கவர அவளறியாமல் மூர்த்தியை விரும்பவாரம்பித்தாள். அவன்

நிலையும் அதுவே.
ஜெயாவின் குடும்பத்தாரும் அவர்கள் விருப்பத்தை ஆமோதித்தனர். ராஜியின் தந்தையை எண்ணி தயங்கினாலும், ராஜியின் விருப்பமே அவர்கள்

விருப்பமும்.

தெரிய வேண்டிய நேரத்தில் ஒரு நாள் தியாகராஜனுக்குத் தெரிய வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார். 'ராஜீ...! உனக்காக நான் பூனேயில் ஒரு பெரிய

பிசினஸ்மேனின் ஒரே மகனுக்கும் உனக்கும் திருமணம் பேசிவிட்டு வந்திருக்கிறேன். அம்மா இல்லை, உனக்கு மாமியார் தொந்தரவும் இருக்காது.

அங்கே நீ ராணி மாதிரி வாழலாம். அதைவிட்டு ஒரு கூட்டுக் குடும்பத்தில் போய் உழல ஆசைப் படுகிறாயே? இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்.
இதுக்குப் பிறகுதான் முதல் பாராவில் அவர் சொன்ன வார்த்தைகள்.

அன்றிரவு த்னிமையில் அப்பாவிடம் தன் மனதிலுள்ளதை வெளிப்படுத்தினாள். 'அப்பா! இங்கும் நான் நாள் முழுதும் தனிமையில்தான் கழிக்கிறேன். நீங்க

பார்த்திருக்கும் இடமும் ஏறக்குறைய அப்படித்தான் அமையப் போகிறது. மாமனார், மாமியார் நாத்தனார்,கொழுந்தன், கணவர் என்ற கூட்டுக் குடும்ப

அமைப்புத்தான் நான் விரும்புவது. அப்படி ஒரு அழகான குடும்பம்தான் என் தோழி ஜெயாவுடையது. அன்பும் பாசமும் அரவணைப்பும் கலந்து

கொஞ்சிவிளையாடும் குடும்பம். அவளுடைய அண்ணன் மூர்த்தியை நான் விரும்புகிறேன். அக்குடும்பத்தில் ஒருத்தியாக அங்கு நான் ம்கிழ்ச்சியாக

இருப்பேன். என் சந்தோஷம் அங்குதானிருக்குதப்பா!' என்றாள் தயங்கிக்கொண்டே.

'நான் வாக்குக் கொடுத்துவிட்டேன். என் மானம், கௌரவம் எல்லாம் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு. இதில் எந்த வித மாற்றமும் இல்லை.'

என்று உறுமியவாறு சொல்லிக்கொண்டே அறையை விட்டு வெளியேறினார்.

செய்வதறியாது திகைத்தாள் ராஜி. சட்டியிலிருந்து அடுப்பில் தாவிய கதையாயிற்றே என்று வெம்பினாள். ஆனாலும் அடுப்பில் வீழ்ந்து கருகக்கூடாது

என்று முடிவெடுத்தாள். ஆனால் வழிதான் புலப்படவில்லை.

மறுநாள் கல்யாண அழைப்பிதழ்கள் அச்சடித்து வந்தன. ராஜியிடம் கொடுத்து வேண்டியவர்களுக்கு அனுப்புமாறு அவளிடம் விசிறியடித்தார்

தியாகராஜன். அதில் ஒன்றை எடுத்துப்பார்த்தாள். கல்யாணத் தேதியைப் படித்ததும் அவள் மூளையில் பளிச்சென்று பல்பு எரிந்தது. மாப்பிள்ளை வட

நாட்டைச் சேர்ந்தவர். புரிந்துகொள்வார் என்று தைரியமாக ஒரு முடிவெடுத்தாள். வாழப்போவது அவளல்லவா?

சமர்த்தாக அப்பா சொன்னபடி எல்லாம் கேட்டுக் கொண்டாள். அவரும் அவள் மனம் மாறிவிட்டதாக எண்ணி கல்யாண் வேலைகளில் மூழ்கினார்.

திருமணநாள் வந்தது. அலங்காரப் பதுமையாக மணமேடையில் வந்து மாப்பிள்ளை அருகில் அமர்ந்தாள். ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க அதை வாங்கி
அவள் கழுத்தில் கட்ட வந்தான் மணமகன். 'சற்றே பொறும் பிள்ளாய்!' என்னும் விதமாக கையமர்த்தி நிறுத்தினாள் ராஜி.

"நீங்க இதைக் கட்டும் முன்னால் நான் உங்களுக்கு ஒன்றைக் கட்ட விரும்புகிறேன்...என்றவாறே இடுப்பில் மறைத்து வைத்திருந்த பளபளவென ஜொலிக்கும் ராக்கி ஒன்றை அவன் கையில் கட்டினாள்.

'இன்று ஆவணி பௌர்ணமி! ரக்க்ஷா பந்தன் நாள்! இந்த ராக்கியை உங்கள் கையில் கட்டி உங்களை என் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறேன்!’ என்றவாறே தன் விருப்பத்தை அவனிடம் சொல்லி, தான் விரும்பியவரோடு சேர்த்து வைத்து வாழ்த்த வேண்டுமாறு வேண்டினாள்.

தியாகராஜன் முகத்தில் ஈயாடவில்லை.

Friday, October 9, 2009

நீயும் பொம்மை..நானும் பொம்மை - அக்டோபர் பிட்டுக்கு

அக்டோபர் புகைப் படப் போட்டிக்கு என் பங்களிப்பு
நிமிர்த்திப் போட்டால் பூந்தொட்டி....கவுத்திப் போட்டால்....? வேறென்ன? பொம்மைதான்!!

Sunday, September 6, 2009

வந்தேன்...வந்தேன் மீண்டும் நானே வந்தேன்...!!!

குடும்பத்தில் திடீரென்று நிறைவேற்ற வேண்டிய சில கடமைகளாலும் இணையத் தொடர்பு சரிவர அமையாத காரணத்தாலும் பதிவுலகிலிருந்து சில காலம் விலகியிருக்க வேண்டியதாகி விட்டது. "நானானி காணும்...நானானி காணும்"ன்னு தேடியிருப்பீர்கள். ஆம்! அன்பு வல்லியின் பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன். உள்ளம் சிலிர்த்தது, அவ்வன்பு நெஞ்சங்களை நினைத்து.

முதற்கண் என் பிறந்த நாளை நினைவில் வைத்து வாழ்த்துக்களை பதிவு செய்த அன்புச் சகோதரி வல்லிக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!!!
அப்பதிவுக்கு வந்த பின்னோட்டங்கள், ஆஹா! நமக்கும் இத்தனை பேர் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்களே...என்று ஆனந்தமாயிருந்தது.


Monday, August 24, 2009
பிறந்த நாள் வாழ்த்துகள் நானானி!!

நைன்வெஸ்ட்
தளத்தின் உரிமையாளரும்
இனிய குணம் கொண்டவரும்,
பதிவர்களின் அன்பரும்
நண்பருமான நானானிக்கு
இன்று பிறந்த நாள்.

அன்பு நானானியும்,அவர்தம் குடும்பமும் எல்லா வளமும் பெற வாழ்த்தலாம் வாருங்கள் .

ஹாப்பி பர்த்டே நானானி .
வரும் வருடங்கள் நல்ல வருடங்களாக அமைய ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் .

வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!! வணக்கங்கள்!!!

10 Comments:
அபி அப்பா said...
ஹய் அக்காவுக்கு பர்த்டே வா??????? எனக்கு வாழ்த்த வயதில்லை!!!!!!!! ஆசி வேண்டும்!!!!!!!

என் மனமார்ந்த ஆசிகள் உங்களுக்கு என்றும் உண்டு, 'அபியும் நானும்' இல்லையில்லை அபி அப்பா!!!!!


ஆயில்யன் said...
நானானி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
இனிய வாழ்த்துக்களுக்கு என் இனிப்பான நன்றிகள்!!


வல்லியம்மா, போட்டோ சூப்பர் :) அதே! அதே!!

மதுரையம்பதி said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி!

வல்லிசிம்ஹன் said...
அன்பு ஆயில்யன் நன்றி ம்மா.
நானானிக்கு இப்ப கையில் இணையத் தொடர்பு இல்லை. இல்லாவிட்டால் அவங்களே எல்லோருக்கும் நன்றி சொல்வாங்க.
அதுக்காகவே இச்சிறப்புப் பதிவு.

அன்பு அபி அப்பா உங்கள் வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்,. அவங்க கட்டாயம் ஆசிகளை அனுப்புவாங்க.
அனுப்பிட்டேனே!!!

அன்பு மௌலி கண்டிப்பா உங்க வாழ்த்துகளைச் சொல்கிறேன்
கேட்டுக் கொண்டேன்!!


துபாய் ராஜா said...
நானானி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
துபாய் ராஜாவுக்கு என் வணக்கங்கள்!!


தமிழ் பிரியன் said...
நானானிம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மகனின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டேன்.

அவங்களைக் கொஞ்ச நாளாக் காணோமே அம்மா,
எங்கிருந்தாலும் No 9, west பக்கம் அனுப்பி வைங்கம்மா.
கொஞ்சம் பிஸியாகவும் இணைய தொடர்பு துண்டிக்கப் பட்டதாலும் சொந்த வீட்டுக்கே வரமுடியவில்லை. ரொம்ப தேடீட்டயா செல்லம்?


வல்லிசிம்ஹன் said...
அன்பு துபாய் ராஜா, அன்பு தமிழ்ப்பிரியன், இணைய இணைப்பு கிடைத்ததும்
மீண்டும் எழுதுவார்கள்.
தற்காலிகமாக ஒரு தொடர்பு கிடைத்தது. எனவே இப்பதிவு.
நான் தொலைபேசியில் சொல்கிறேன்.
சொன்னாங்களே!!!


கோமதி அரசு said...
நானானியை இன்று தான் நினைத்தேன்,
அவர்களுக்கு100 வயது.
ஆஹா! நூறு வயதா..?! அம்மாடியோவ்!!
கோமதி அரசுவின் முதல் வருகை வாழ்த்துக்களோடு வருகிறது. நன்றி!!
சேரீ.....என்னை எதற்காக அன்று நினைத்தீர்கள்? அத்த சொல்லவில்லையே?
நானானிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நன்றி!! கோமதி அரசு!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...
வாழ்த்துக்கள்.. :)
நன்றிகள்!!

கவிநயா said...
நானானி அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
கவிநயாவுக்கு என் அன்பு!!!

(பூ ரொம்ப அழகா இருக்கு வல்லிம்மா! பிள்ளையார்/லக்ஷ்மி படமும் கண்ணை பறிக்குது!)
வெண்மை நிறத்தில் (என் மனசு போல்!!!!????) பளிச்சென்றிருக்குது.



மற்றும் பதிவைப் படித்துவிட்டு எனக்கு தகவலும் வாழ்த்துக்களும் போனில் சொன்ன துள்சிக்கும்

வருடாவருடம் தவறாமல் வாழ்த்துவது போல் இந்தவருடமும் வாழ்த்தி "மீ த ஃபஸ்டா?" என்று பதிவுலக மொழியில் கேட்டு உறுதி செய்து கொண்ட அன்பு மருமகள் ராமலக்ஷ்மிக்கும்

நேரில் வந்து வாழ்த்தி பரிசளித்த என் இரு சகோதரிகளுக்கும்

எதேச்சையாக பிறந்தநாள் அன்று சிகாகோவிலிருந்து என்னை போனில் அழைத்து வேறு விஷயங்கள் பேசிக்கொண்டிருந்த அன்பு சகோதரன் சகாதேவனிடம் ,"இன்று என் பிறந்தநாள்..வாழ்த்தத்தான் அழைத்தாய் என்று நினைத்தேன்." என்று அவரை திகைக்க வைத்து வாழ்த்துக்களை அவர் வாயிலிருந்து பிடுங்க வைத்த சகாதேவனுக்கும்

அழகான ஒரு புடவையை கிஃப்ட் பார்சல் செய்து, "ஆப்பி ஆப்பி ஆ தூ தூ யூ!"(ஹாப்பி பர்த்டே டூ யூ வாம்) என்று பாடி வாழ்த்தி என் கைகளில் தந்த என் செல்லப் பேரன் ஷன்னுவுக்கும்

என் மனமார்ந்த நன்றிகள்!!!!!!!!!!!!!! இந்நினைவுகள் என்றும் பசுமையானவை.

பிலேட்டட் வாழ்த்துக்கள் போல் இது பிலேட்டட் நன்றிகள்!!!!!


பிகு:
குடும்பத்தில் எதிர்பாராத கடமைகள் என்றேனே? அதை உங்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? ரங்கமணிக்கு ஒரு பை-பாஸ் சர்ஜரி போன மாதம் நடந்தது. அதனால்தான் பதிவுப் பக்கம் வரமுடியவில்லை. இப்போது நலமுடன் இருக்கிறார். இனி அப்பப்ப வருவேன்.

Monday, July 20, 2009

தேடி வந்த விருதுகள்...வழங்கிய வள்ளல்கள்

நான் கேட்கவில்லை....எதிர்பார்க்கவுமில்லை. தேமேன்னு எனக்குத்தெரிந்ததை, பார்த்ததை, ரசித்ததை, கேட்டதை....இன்னும் பலவகையான தை..தை..தைகளை உங்களோடு ஆர்வத்தோடு, தேங்கிக்கிடந்த அணை நிரம்பி மதகை திறந்து விட்டாற்போல் எனக்கும் ஒரு வடிகாலாக வந்து வாய்த்தது, 'பதிவர் உலகம்!' கப்புன்னு பிடிச்சிக்கிட்டேன். விறுவிறுவென்று மேலேறியிருக்கிறேன் போலும். அடுத்ததடுத்து கைகளில் விழுந்தன விருதுகள். என்னதான் நமக்குள்ள்ளே நாமே நம் முதுகை தட்டிக் கொடுப்பது போலென்றாலும் 'விருது' என்றாலே ஒரு விருவிருப்பு இருக்கில்ல? அந்த மகிழ்ச்சியோடு எனக்கு இவற்றை வழங்கிய சகோதரிகள், திருமதி செல்விசங்கர், என்னை பட்டாம்பூச்சியாக சிறகடிக்க வைத்தவர், அடுத்து திருமதி கோமா, சுவாரஸ்யமான பதிவர் என்ற முத்திரையை என் மேல் பதித்திருக்கிறார்.

இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!!


செல்விசங்கர் வழங்கிய பட்டாம்பூச்சி விருது!!!


கோமா முத்திரையிட்ட பதக்கம்!!!

நிறைய பதிவர்களின் பதிவுகளில் இந்த விருதுகளைப் பார்த்திருக்கிறேன். இப்ப நான் யாரைன்னு தேடுவது?

காற்று
ராஜா/KVR
வெடிவால்
அ.மு.செய்யது

இந்நால்வருக்கும் இந்த இரண்டு விருதுகளை வாரி வாரி வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Saturday, July 18, 2009

சூப்பர் சிங்கரா...? பெக்கர் சிங்கரா...? பரிதாபம்!

விஜய் டீவீயில் "சூப்பர் சிங்கர்" ஜூனியருக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் பெற்றொர்களின் அவசரமும் குழந்தைகளின் அதீத ஆர்வமும் கலந்து கட்டி நிகழ்ச்சியை ஒரு வழி பண்ணிக்கொண்டிருக்கிறது.

சிறுவன் ஒருவன் பாட வருகிறான்...பாடி முடித்ததும் சிகப்பு விளக்கு எரிய ரிஜெக்ட் செய்யப்படுகிறான். ஓகேன்னு கம்பீரமாக வெளியேறினால் வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக்கொண்டான் எனலாம். மாறாக, "மேம்..மேம்..இன்னொரு சான்ஸ் கொடுங்க..ப்ளீஸ்! இம்முறை நன்றாகப் பாடுகிறேன்" என்று கெஞ்சுகிறான். ஜட்ஜோ..."சாரிடா..கண்ணா! இன்னும் நிறைய பேர் காத்துக்கொண்டிருக்கிறார்களே!!அடுத்த முறை நல்ல ப்ராக்டீஸ் செய்துவிட்டு வா!" என்று வழியனுப்புகிறார்கள்.

அடுத்ததாக ஒரு சிறுமியும் அவளது அம்மாவுமே பாடுமிடத்துக்கு வருகிறார்கள். அம்மா இல்லாமல் பாட வராது போலும். அவளும் ரிஜெக்ட் செய்யப்பட இம்முறை அம்மாவே குய்யோ முறையோ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார். "வீட்டிலே நல்லாத்தான் பாடினாள். இப்போ மறுபடியும் பாடுவாள் பாருங்கள்...!" அனுமதியில்லாமலே மகளைப் பாடச் சொல்கிறார். என்ன...என்ன...இது? என்ன வகையான போட்டியிது?

குழந்தைகளை பாடச் சொல்லிக்கொடுக்கும் போதே வெற்றி தோல்வியைக் கண்டு மிரளாமல், அழாமல், தைரியமாக இருக்கக் கற்றுக் கொடுப்பதும் பெற்றோர் கடமைதானே? மாறாக அவர்களே துவண்டு, குழந்தைகளையும் துவளச்செய்து.....பார்க்கும் நமக்கும் கண்றாவியாய் இருக்கிறது. எங்க போய் முட்டிக் கொள்ள..?

நம் குழந்தைகளின் திறமையின் அளவுகோல் நமக்கே தெரிந்திருக்க வேண்டும். இந்த அளவில் ஏற்றுக்கொள்வார்களா...மாட்டார்களா..? என்பது நமக்கே தெரிந்திருக்க வேண்டும்.

இதை விட வேடிக்கை....பால்மணம் மாறா குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்து,

வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், "கண்ணா! மாமாக்கு "அடியே கொல்லுதே! பாடிக்காட்டு!" என்போமே அந்த ரீதியில் சில பிஞ்சுகள் பாடும்போது,அதுவும் போட்டிக்களத்தில், நமக்கு பாவமாயிருக்கும்.
பெற்றவர்களின் பேராசை, குழந்தைகளின் மனத்தை எவ்வளவு தூரம் காயப் படுத்தும் என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.

அந்தக்காலம் போல் இல்லை...இப்போது குழந்தைகளுக்கு நிறைய, விதவிதமான எக்ஸ்போஷர்கள் இருக்கின்றன. முறையான சமயத்தில் தெளிவான திறமையோடு மேடையேற்றலாமே? வேண்டும் கொஞ்சம் பொறுமை!!!!!

இதையெல்லாம் பாக்கும் போது, என் ரெண்டரை வயது பேரன், "குட்டி! கண்களிரண்டால்..பாடு!" என்றதும் "நுன்னுனி..நுன்னுனி..." என்று மழலையில் ரொம்ப ரசித்துப் பாடுவான். அவனுக்குப் பிடித்த பாட்டு.
அடுத்தவார சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிக்கு

அவனை அழைத்துப் போகட்டா.........?

Tuesday, July 14, 2009

ஜூலை பிட்- நினைவிடங்கள்.

உலகெங்கினும் நினைவிடங்களுக்காப் பஞ்சம்? எனக்கேத்த எள்ளுருண்டையாக என்னிடம் இருப்பவைகளை தந்திருக்கிறேன். பாத்துட்டு தெரிவு செய்து சொல்லுங்கோ.
அம்மையிலிருந்தே ஆரம்பிக்கலாம்..

மதுராபுரி ஆளும் மகராணி, எண்ணும் வரமெல்லாம் கடைக் கண்ணால் தரும் மீனாட்சி அம்மையின் திருக்கோயில் கோபுரமும் பொற்றாமரைக் குளமும். எட்டு அதிசயங்களுக்குள் ஒன்பதாவதாக இணைய முடியாமல் போனது. இழப்பு அதிசயங்களுக்கல்ல.


அமெரிக்காவில் விஸ்கான்சின் மாநிலத்தில் அமைந்துள்ள 'மில்வாக்கி மியூசியம்'. அற்புதமான கட்டிடக்கலைக்கொரு எடுத்துக்காட்டு.
அதன் இன்னுமொரு கோணம். பலமான காற்று வீசினால் பறவையின் ரெக்கைகள் போல் இவைகள் ஆடுமாம்.



மிசோரி மாநிலத்தில் செயிண்ட் லூயிஸ் நகரில் எழுப்பப்பட்டுள்ள வளைவு. ஆங்கிலேயர்கள் முதன்முதலில் அமெரிக்காவுக்குள் நுழைந்தது இந்நகர் வழியாகத்தான். அந்த நினைவாக வளைந்ததுதான்.


சொல்லவே வேண்டாம் சுதந்திரதேவியின் சிலை. கையும் தோளும் வலிக்காதோ?

வலிக்கும்தான். அவள் தேவியல்லவா? 33% கிடைக்கும் வரை இப்படித்தான் நிற்பாள் போலும்.


அமெரிக்காவின் பெருமை மிகும் நினைவுச் சின்னம். மிக அருகில் சென்ற போது பிடித்தது.


கலிபோர்னியாவில் பசிபிக் பெருங்கடல் மேல் அமைந்துள்ள "தங்கப்பாலம்"

Monday, July 13, 2009

House wife- ம் Computer Programmer-ம்

"ஓர் உதாரணம் சொல்றேன். அப்ப உனக்குப் புரியும்." என்றாள் விஜயா, தன் தங்கை சுதாவைப் பார்த்து. சுதா எட்டாவது படிக்கிறாள். தனியே கம்ப்யூட்டர் க்ளாஸும் போகிறாள்.
விஜயா கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கிறாள்.
பேஸிக் மொழியை விளக்கிக் கொண்டிருக்கிறாள். சுதாவும் கவனமாக கேட்டுக் கொள்கிறாள்.

"இப்ப நீ கடைக்குப் போய் ஐஸ்கிரீம் வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள். அப்ப என்ன செய்வாய்?"
"ஓயிப் போய் ஐகீம் வாங்கணும்" என்று அவள் மூன்று வயது தம்பியைப் போல் மழலையில் சொன்னாள்.
விஜயா சிரித்துக் கொண்டே....'சரி..அதுக்கு முன் என்னல்லாம் செய்வாய்? யோசி!'

'ங்ஏஏஏஏஏ' என்று விழித்தாள். நானே சொல்றேன்.

முதலில் கடைக்குப் போகிறாய் அதனால்;
1) நல்ல ட்ரெஸ் பண்ணிக்கணும்.
2) ஹாண்ட் பாகில் தேவையான பணம் எடுத்துக்கணும்.
3) கடையிருக்கும் தூரத்துக்கேற்ப, காரிலோ ஆட்டோவிலோ பஸ்ஸிலோ அல்லது நடந்தோ போவது பற்றி தீர்மானிக்கணும்.
4) அவ்வளவு தூரம் போகும் போது வேறு ஏதாவது வேலைகள் உள்ளனவா?என்று யோசித்து அதுக்குத் தேவையானவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
5) வீட்டைவிட்டு கிளம்பும் போது க்யாஸ்,லைட், ஃபான், டிவி இவற்றை மறக்காமல் ஆஃப் செய்துவிடவேண்டும்.
6) பூட்டு சாவியை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டி சாவியை பையில் போட்டு காலில் செருப்பை மாட்டி கடைக்குப் போக வேண்டும்.
7) கடைக்குப் போய் தேவையான ஐஸ்கிரீம் வகையை தெரிவு செய்ய வேண்டும்.
8) உரிய பணத்தைக் கொடுத்து....ஒன்று..ஐஸ்கிரீமை அங்கேயே சாப்பிட வேண்டும். அல்லது உருகாதபடி பாக் செய்து வீடு வந்து, சாவியை வைத்துப் பூட்டைத் திறக்கணும்
9) கதவைத் திறந்து செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே போய் நிதானமாக
ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிட வேண்டும்.

ஐயோ!!!எனக்கு ஐஸ்கிரீமே வேண்டாம்!
என்று கூவினாள் காதிரெண்டையும் கைகளால் பொத்திக்கொண்டு. ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு இந்தப் பாடா?

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த அம்மா, "அட! அப்ப நானும் கூட ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர்தானோ?"

எப்படி அம்மா சொல்ற?
பின்ன? நானும் காலையில் எழுந்து ப்ரஷ் பண்ணி, முகம் கழுவி, காப்பிக்குத்தண்ணி வச்சுட்டு, அது கொதிக்கு முன் வாசல் தெளித்து கோலம் போட்டு, டிக்காஷன் போட்டு,பால் காய்ச்சி, காலை டிபன் ரெடி பண்ணி, மதியத்துக்கு உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணி, அதை டிபன் பாக்ஸில் போட்டு, தண்ணீர் பாட்டிலும் சேர்த்து கூடையில் தயாராக எடுத்து வைத்து, இடையில் உங்கள் கூவல்களுக்குப் பதில் சொல்லி,அப்பாவையும் விஜயாவையும் ஆபீஸுக்கும் சுதாவை ஸ்கூலுக்கும் அனுப்பிவிட்டுத்தானே என்னோட ப்ரோக்ராம் ரன் ஆகி எண்ட் ஆகுது?

கேட்டுக் கொண்டே வந்த அவள் தம்பி சங்கரன், "அக்கா! நீ ப்ரோக்ராமர் மட்டும் இல்லை.
அனாலிஸ்டும் நீயே! டீம் லீடும் நீயே! ஏன்? ப்ராஜெக்ட் மேனேஜரும் நீயே!!" என்றான்,
சரஸ்வதி சபதம் படப் பாடல் மாதிரி.
"நதி நீயே!"
கடல் நீயே!"

அக்கா! இனி நீ ஹவுஸ் வெய்ஃப்தான் என்று சொல்லாதே! நீதான் எல்லாம்.

உண்மைதானே? குடும்பத்தின் அச்சாணி அதன் தலைவிதானே?
ஒரு நாள்...ஒரே நாள் அவள் வேலைகளை அவள் துணையில்லாமல் பிற அங்கத்தினர்கள் யாராவது செய்து பார்க்கட்டுமே!!

"சீதா! உப்பு டப்பா எங்கிருக்கு?...பால் கார்ட் எங்க வெச்சிருக்கே? இப்படிப் பட்ட கேள்விகள்தான் பறக்கும்.

Tuesday, July 7, 2009

சரியாக கேட்கப் பட்ட கேள்வி! இப்ப பதில் சொல்லலாமா?

போன பதிவில் விளக்கமாக கேட்கப் படாமல் நான் சொதப்பியதின் விளைவு......பலர் பலவிதமாக புரிந்து கொண்டு பலவிதமான பதில்களை பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.


கேள்வி இதுதான்:


சினிமா பத்திய ஒரு கேள்வி..... கேக்கலாமா?1950-களிலிருந்து இன்று வரை படத்தின் டைட்டில்களில் தவறாமல் இடம் பெறும்....."டெக்னீஷியன்கள்" பெயர்கள், (திரை மறைவில் படம் நன்றாக ஓட, இவர்களது பணி இன்றியமையாதது) குறைந்த பட்சம் மூன்று(எனக்கு அவ்வளவுதான் தெரியும்) பேர்களைச் சொல்லமுடியுமா? இவர்களது பணியின் முக்கியத்துவம் இப்போதுதான் உணரப்படுகிறது. விருதுகளும் வழங்கப் படுகின்றன.



இதுதான் சரியான கேள்வி. இப்போது புரிகிறதா?


இன்னும் உங்களை குழப்ப மனமில்லை.


சரி, நான் மூன்று பெயர்களை சொல்கிறேன். அவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்கள், என்றாவது சொல்ல முடியுமா?


T.S. ரங்கசாமி


J.J. மாணிக்கம்


சுந்தரலிங்கம்


எனக்குத் தெரிந்தவரை இம்மூவரும் ஐம்பது வருடங்களாக அவர்தம் சார்ந்த துறைகளில் இன்றும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். படம் பார்க்கப் போனால் டைட்டிலிலிருந்தே பார்க்கப் பிடிக்கும். டைட்டிலை கவனமாகப் பார்ப்பேன். இதை வைத்து எல்லோரையும் ஒரு புரட்டு புரட்டலாமே என்று எண்ணியதன் விளைவுதான் இப்பதிவு.







Monday, July 6, 2009

அது எப்படிங்க...? இப்படி?

இப்ப எனக்கொரு உண்மை புரிஞ்சாகணும்...ஆமா!

இன்னா பிரியணும்? சொல்லுமே! பிரியவெக்கரேன்.

சில விஷயங்களை இந்த சினிமா டைரக்டர்கள் ஏன் கவனத்தில் கொள்வதில்லை? இல்லை, உதவி டைரக்டர்களும் எடுத்து சொல்வதில்லை...பயமா?

கண்ணை உறுத்தும் இம்மாதிரியான சில சமாச்சாரங்களை பகுந்துக்கிறேன்.
அறுபதுகளிலிருந்து இன்றுவரை மனதில் உறுத்திக் கொண்டும் ஓடிக்கொண்டுமிருக்கிறது.

காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையா சிலித்துக்குவாரே...."என் பணமென்ன? என் அந்தஸ்தென்ன? என்று. அப்படிப் பேசும் போது அவர் தன் பிள்ளைகளுடன் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அவ்வளவு

அந்தஸ்து உள்ளவரது சாப்பாட்டு மேஜையில் விதவிதமான பாத்திரங்களில் உணவு பாதார்த்தங்கள் இருக்குமா? இருக்காது. ஷூட்டிங்க்குக்காக ஏதோ ஒரு ஹோட்டலில் வாங்கி வந்த பெரிய டிபன் கேரியர் பாத்திரங்களே மேஜை மேல் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். அது, அப்போதே என் கண்களை உறுத்தியது. உங்கள் கண்களை...?

அடுத்து.....வீடுகள், அது பங்களாவானாலும் சரி நடுத்தர வர்க்கத்து வீடானாலும் சரி குடிசையானாலும் சரி, எது வேணானாலும் நுழையலாம் என்பது போல் திறந்தேயிருக்கும்.
வில்லன்கள் தடாலடியாக நுழைந்து கொலை செய்யவோ அல்லது தனியேயிருக்கும் ஹிரோயினை நாசம் செய்யவோ ஏதுவாயிருக்கும்.
இருவர் பேசும் ரகசியங்களை ஒட்டுக்கேக்கவும் இன்னும் எதுஎதுக்கோ வாக்காயிருக்கும். காலிங்பெல் என்பதே காலாவதியகியிருக்கும்.

குறைந்த பட்சம் நான்கு பேர் உள்ள வீடாயிருக்கும். ஆனால் நார்மலாகவோ அல்லது கொடுமைக்கார மாமியாராலோ, கிணற்றடியில் கழுவ பரத்திக் கிடக்கும்
பாத்திரங்களோ?...நம்ம கடோத்கஜன் சாப்பிட்டு முடித்த பாத்திரங்கள் போல் அண்டா குண்டாவாக இருக்கும். கொஞ்சம் லாஜிக்கை யோசித்துப் பார்த்தால் அது ஓங்கி உதைத்திருக்காது?

காதலர் இருவர் ரெஸ்டொரண்ட்க்குப் போவார்கள். ஒரு இட்லி வடையோ, சட்னி சாம்பாரோ.... ஒரு ஃபலூடாவோ அட! ஒரு சாதாரண ஐஸ்கிரீமோ ஆர்டர் செய்வார்களோ என்று பார்த்தால்...பிஸ்சாத்து, ' கூல்ட்ரிங்!' என்று கேட்பார்கள். ஃபாண்டாவோ பெப்ஸியோ பாட்டிலை உடைத்து வைக்கோலைப் போட்டுத் தருவான் சர்வர்.
அடப்பாவிகளா! இதை எந்த பெட்டிக்கடையிலும் கேட்டாலும் தருவான்களே!!

சரி வீடுகளுக்குப் போனால் உபசாரம் என்ற பேரில் காலி தம்ளாரையோ கப் ன் சாசரையோ காபி என்று நீட்டுவார்கள். அதை சிப்பிவிட்டு எடுக்கும் போது
உதடு காய்ந்தவாறு இருக்கும், தொண்டையில் ட்ரக் இறங்கிய சுவடே தெரியாது.அட்லீஸ்ட் தண்ணீரையாவது ரொப்பிக் கொடுக்கக் கூடாதா?

ஆபீஸில் வேலை செய்யும் நாயகனுக்கு நாயகியோ அல்லது வேலையாளோ ஐந்தடுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு கொண்டு போவார்கள். இது மாதிரி சமயங்களில் நாம் என்ன செய்வோம்?
கேரியரில் இருக்கும் குழம்பு, ரசம் இவைகள் சிந்தாமல் மெதுவாக தூக்கி மேஜைமேல் வைப்போம். ஆனால்...இங்கோ? அனாயாசமாக சொய்ய்ய்ய்ய்ய்ன்னு தூக்கி மேஜைமேல்
'டங்' என்று வைக்கப்படும். 'டங்' என்றால் காலிப் பாத்திரம் என்று அர்த்தம். கேலிக்கூத்து என்றால் இதுதானோ?

படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் கோபித்துக்கொண்டோ....கெட்வுட் என்று சொல்லப் பட்டோ வீட்டைவிட்டு வெளியேறுகிறது என்று வைத்துக்கொள்வோம், ஒரு சின்ன சூட்கேஸ் அல்லது ஒரு ஒரு பை எடுத்து கட்டிலில் மேல் போட்டு பீரோவில் ஹங்கரில் தொங்கும் நாலு பாண்ட் சட்டையோ அல்லது நாலு புடவையோ(ஜாக்கெட் வேண்டாம் போல) அள்ளி திணித்துக்கொண்டு ஜிங்ஜிங் என்று வெளியேறிவிடுவார்கள். மற்ற இன்னர் உடுப்புகள், பெஸ்ட் பிரஷ் மற்றும் கை செலவுக்குப் பணம் இதெல்லாம் பின்னாலேயே யாராவது கொண்டு வருவார்களோ?

வெளியூரிலிருந்து ரெண்டு மூணு லக்கேஜ்களோடு வருவார்கள். அவற்றைத் தூக்கி வரும் அழகைப் பாக்கணுமே!!! உள்ளே காற்றுதான் இருக்கும் போல. எவ்வளவு சுலபமாக எடுத்து வருவார்கள்!!!!டைரக்டர் கொஞ்சம் கவனம் செலுத்தி, கனமாக இருப்பது போல் தூக்கி வரச் சொல்லியிருக்கலாமில்ல? உதாரணம்..."புதிய வானம் புதிய பூமி...", மலையாளக் கரையோரம் தலையாட்டும் குருவி..."

இன்றைய இளம் தலைமுறை டைரக்டர்கள் இவற்றையயெல்லாம் பாத்து என்னைப் போல் நொந்து போயிருப்பர் போலும். இப்போது போலித்தனம் இல்லாமல் எல்லாம் இயல்பாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் வெளிவந்த "சுப்ரமணியபுரம்" . எழுபதுகளை கவனத்தில் கொண்டு என்ன அழகாக உடைகள், பேச்சு, சுவற்றில் ஒட்டியிருக்கும் தங்கம் தியேட்டர் போஸ்டர், இடயில் சிறுவன் ஓட்டிச் செல்லும் மூணுசக்கர சைக்கிள், கதாநாயகி அணிந்திருக்கும் டாலர் செயின் என்று பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார்கள். படம் பாத்ததும் என் மனதில் இருந்த உறுத்தல்கள் எல்லாம் போயே போச்! சினிமா இனி இயல்பாயிருக்கும் என்ற நம்பிக்கையும் வந்தாச்!

சினிமா பத்திய ஒரு கேள்வி..... கேக்கலாமா?
1950-களிலிருந்து இன்று வரை படத்தின் டைட்டில்களில் தவறாமல் இடம் பெறும்....."டெக்னீஷியன்கள்" பெயர்கள், (திரை மறைவில் படம் நன்றாக ஓட இவர்களது பணி இன்றியமையாதது) குறைந்த பட்சம் மூன்று(எனக்கு அவ்வளவுதான் தெரியும்) பேர்களைச் சொல்லமுடியுமா? இவர்களது பணியின் முக்கியத்துவம் இப்போதுதான் உணரப்படுகிறது. விருதுகளும் வழங்கப் படுகின்றன.

எனக்குத் தெரிந்ததை நாளை சொல்லவா?

Thursday, July 2, 2009

நலங்கெட புழுதியில்....உரையாடல் சிறுகதை பாகம் மூன்று.

ஆம்! ஜெயா அறைக்குள் என்ன செய்கிறாள் என்பது யாருக்குமே தெரியாது.

ஹிந்தோள ராகத்தில் பஞ்சமத்தை சேர்த்தாற்போல் அபசுரமாக ஒலித்த அவள் வாழ்கையில் அவளாக இருந்த நேரங்கள் அவள் தன் அறையில் அழித்த காலங்கள்தான்.



முதுமை வரவர அதற்குத்தேவையான நோய்களும் அவளை அண்ட ஆரம்பித்தன. ஆஹா! இவைகளாவது தன்னிடம் வருகிறதே என்று அற்ப சந்தோஷமடைந்தாள் ஜெயா.



ஸ்ரீனிவாசன் அந்த குறையெல்லாம் வைக்கவில்லை. முறையான வைத்திய பரிசோதனைகள் நடத்தி, தேவையான மருந்துகள் வாங்கிக்கொடுத்து கவனித்துக்கொண்டான்.

ஆனால் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருந்த அந்த இதயம் ஒரு நாள் தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது. குழந்தைகள் ராஜுவும் சித்ராவும் ஆடித்தான் போனார்கள். இழப்பிலேதானே அருமை தெரியும்!

எந்த உறுத்தலும் இல்லாமல் மகன் ராஜுவைக் கொண்டு அவள் கடைசி காரியங்களை செய்து முடித்தான்.

ஒரு வாரம் கழித்து ராஜுவையும் சித்ராவையும் அழைத்துக்கொண்டு ஜெயாவின் அறையைத் திறந்தான். படுசுத்தமாக நேர்த்தியாக அது அது இருக்கவேண்டிய இடத்தில் இருந்தது அவளது அறை.

பெரிய மேஜை, மேஜை விளக்கு, எழுதும் பாட், பேனாக்கள், கத்தை கத்தையாக எழுதாத பேப்பர்கள். மேஜை ட்ராயரைத்திறந்தார்கள்.....அங்கே அழகாக தொகுக்கப்பட்டு , ஐந்தாறு பைல்கள் இருந்தன.

தாயின் ரத்தமும் ஓடியதால் ராஜுவுக்கும் சித்ராவுக்கும் இயல்பிலேயே சங்கீத ஞானம் இழைந்து ஓடியது.

பைல்கள் ஒவ்வொன்றாக படித்துப் பார்த்தார்கள். வா...வ்!!! அத்தனையும் பொக்கிஷங்கள்!! பலவகையான ராகங்களைக் கலந்து எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை, அமிர்தவர்ஷிணி ராகத்துக்கு மழை பெய்யுமா? அது எப்படி? என்ற விளக்க உரை. சங்கீத மும்மூர்த்திகளையும் அவர்களது கீர்த்தனைகளையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட மற்றொரு ஆராய்ச்சிக் கட்டுரை...இப்படி அள்ள அள்ள குறையாத அட்க்ஷய பாத்திரம் போல் வந்து கொண்டேயிருந்தது. பிள்ளைகள் மனமெல்லாம் பொங்கிப் பூரித்தது, அம்மாவின் திறமைகளை கண்கூடாக கண்டபோது. இறுதியாக ஒரு டைரி! தனது அவல வாழ்கையையும் அணுஅணுவாக ரசித்து எழுதியிருந்தாள்.

படித்துவிட்டு முகமும் கண்களும் சிவக்க தாயின் தெய்வீகத்தை தரிசிக்க விடாமல் மறைத்த தந்தையை ஏறிட்டார்கள். அவற்றின் உஷ்ணம் தாளாமல் தலையை குனிந்து கொண்டான். இனி அவன் தலை நிமிரவே முடியாது.

வாழும் போது தாயின் அருமை பெருமை தெரிய மாட்டாமல் வளர்ந்த தங்கள் விதியை நொந்து கொண்டு குமுறி அழ ஆரம்பித்தார்கள். தேற்ற வந்த தந்தையை வெறுப்போடு உதறித் தள்ளினார்கள்.

இனி ஜெயாவின் அறை ஸ்ரீனிவாசனுக்குத்தான்.



உடலால் புழுதியில் கிடந்த தாயின் நினைவுகளை தூசிதட்டி எடுத்து கோபுரத்தில் ஏற்றி வைத்து கும்பாபிஷேகமும் நடத்தி கண்களில் கண்ணீர் வழிய அம்மாவின் ஆத்மாவுக்கு அமைதியையும் தந்து அஞ்சலி செய்தார்கள்.

நலங்கெட புழுதியில்...உரையாடல் சிறுகதை பாகம் இரண்டு

நல்ல நாள் பார்த்து, நல்ல வேளை பார்த்து, சரியான முகூர்த்தம் பார்த்து மேளதாளம் முழங்க
உற்றார் உறவினர் வாழ்த்த செல்வன் ஸ்ரீனிவாசன் செல்வி ஜெயலக்ஷ்மியின் கரம் பிடித்தான்.
பிடி சரியான கிடுக்கிப் பிடி.

திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குள் ஜெயா நுழைந்து ஒருவாரம் நன்றாகவே சென்றது.
ஒரு நாள்..

'அம்மா ஜெயா! உன்னைத் தேடி யாரோ வந்திருக்கா பார்!' மாமனார் அழைத்தார்.

'இதோ வரேன் மாமா!' என்றபடியே மாடியிலிருந்து இறங்கி வந்தாள். அன்றிலிருந்து ஆரம்பித்தது இறக்கம்.

வந்தவர் சபா செகரட்டரி. 'அம்மா! வரும் 28-ம் தேதி வாணிமகாலில் கச்சேரி இருக்குது. ஞாபகப் படுத்தான் வந்தேன்.'

'நல்ல நினைவிருக்கு ஸார்! கட்டாயம் வந்திடுவேன்.' என்று உறுதியளித்தாள் வழக்கம் போல். வழக்கம் இப்போது மாறியிருப்பதை அறியாதவளாக.

குடுகுடுவென்று மாடிக்கு ஓடினாள். ஆசையாக கணவனைப்பார்த்து, 'ஸ்ரீ!' என்றளைத்தாள் செல்லமாக. விருட்டென்று திரும்பினான். அவன் முகபாவத்தை கவனிக்காதவளாக, 'ஸ்ரீ! நாளன்னைக்கு

எனக்கு கச்சேரி இருக்கு. வழக்கமாக அம்மாதான் எனக்கு புடவை நகை செலக்ட் பண்ணித் தருவாள். இனிமே நீங்கதான் எனக்கு செலக்ட் பண்ணணும்.' என்றாள் முகமெல்லாம் மகிழ்ச்சியாக.

ஸ்ரீனிவாசன் இந்த உற்சாகத்தை உடனே உடைக்க வேண்டாம் என்று எண்ணினானோ என்னவோ?
'உனக்கு எது பிடிக்குதோ அதையே போட்டுக்கொள்.' என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.



மாலையில் ஆபீசிலிருந்து போன் செய்து, 'ஜெயா! எனக்கு நிறைய வேலையிருக்கு. நீ அப்பா அம்மா கூட கச்சேரிக்குப் போய்வா.' என்று தன்மையாக சொல்லிவிட்டான்.

'மகளே! வீட்டுக்கு வா, உனக்கு கச்சேரி அங்கிருக்கு.' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.


இரவு வீடு திரும்பியதும் அம்மா, 'சீனி! நீயும் வந்திருக்கணும். என்ன அருமையா பாடினாள் தெரியுமா!'


'சரி சரி எனக்கு தூக்கம் வருது. படுக்கப் போறேன்.' என்று ரூமுக்குள் சென்று விட்டான்.


மூவரும் சாப்பிட்டு முடித்தவுடன் ஜெயா மாடிக்குச் சென்றாள். அங்கு...தூக்கமாவது ஒண்ணாவது! கட்டிலில் கொட்டகொட்ட விழித்திருந்தான், மகா கனம் பொருந்திய ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன்!!


'ஜெயா! இப்படி வா! இந்த கச்சேரி கிச்சேரி எல்லாம் இன்றோடு விட்டுவிடு. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை. பொண்டாட்டியா லட்சணமா வீடோடு இருந்து வீட்டையும் என்னையும் கவனித்தால் போதும்! முதல் தடவையானதால் சம்மதித்தேன். இனிமேல் இதெல்லாம் வேண்டாம். கச்சேரியில் உன் பாட்டைக் கேக்க பத்து பேர் வந்தால் உன் அழகை ரசிக்க நுறு பேர் வருவான்கள்.' என்று தன் வக்கிர மனத்தையும் முகத்தையும் ஒரு சேரக் காட்டினான்.


வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென்று கடலில் விழுந்தாற்போல், பெரிய சுனாமி வந்து தன்னை சுருட்டிக் கொண்டு போனாற்போல், வானமே இடிந்து தலையில் விழுந்தாற்போல், இன்னும் என்னவெல்லாமோ போல் உணர்ந்து விக்கித்து செய்வதறியாது நின்றாள் பாடும் அந்தக் குயில்! ஆகாயத்தில் சுதந்திரமாக பறந்துகொண்டிருந்த அக்குயிலின் விரிந்த இறக்கையிலிருந்து பிடுங்கியெறியப் பட்டது முதல் இறகு.

பிறந்ததிலிருந்து அச்செல்ல மகளுக்கு நினைத்தெதெல்லாம், கேட்டெதெல்லாம் கிடைத்தது. எதையும் போராடிப் பெற வேண்டிய அவசியமில்லாமலிருந்தது. எனவே எதிர்த்துப் பேச அறியாத அப்பாவை
அடங்கினாள். அது அக்காலமாதலால் அது சாத்தியமானது. இப்போனா...? பிடி டைவோர்ஸ்! என்று பிறந்தகம் ஏகியிருப்பாள்.


அடுத்த ப்ரோக்ராம் வந்தபோது இவளே முந்திக்கொண்டு போன் செய்து, 'உடம்பு முடியவில்லை. தயவு செய்து கான்சல் செய்துவிடுங்கள்.' என்று சொல்லிவிட்டாள்.

அறைக்குள் நடந்தது தெரியாத மாமியார், ' என்னம்மா? நல்லத்தானே இருக்கே! ஏன் வரலைன்னு சொன்னாய்?' என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, அங்க வந்த ஸ்ரீனிவாசன், 'அம்மா! நாந்தான் இனிமே கச்செரிக்கெல்லாம் போகவேண்டாமென்று சொல்லிவிட்டேன்.' என்றான். முதல்முதல் அவள் கச்சேரியை கேட்ட போது அவளுக்குக் கிடைத்த பாராட்டுகளும் புகழாரங்களும் பரிசுகளும் அவன் மனதில் அசூயை அரக்கனையும் பொறாமை சாத்தானையும் வலிய வரவழைத்து இருத்திக்கொண்டான். எங்கே விட்டால் தன்னை விட பேர் வாங்கிவிடுவாளோ என்ற அகங்காரம் ஆட்டிவைத்தது. விளைவு? குயிலைப் பிடித்தான் கூட்டிலும் அடைத்தான் ஆனால் பாட மட்டும் சொல்லவில்லை.

கலையரசியை வீட்டுக்காவலில் வைத்ததுக்கு சங்கீத உலகமே அவனை சபித்தது. எதைப்பற்றியும் அவன் கவலைப் படவில்லை.

காலம் ஓடியது ஆணொன்றும் பெணொன்றுமாக குழந்தைகளும் பிறந்தன. பத்து வயது வரை 'அம்மா அம்மா!' என்று தன் காலைச் சுற்றிவந்த குழந்தைகளை 'அம்மாவுக்கு ஒண்ணூம் தெரியாது.' என்று சொல்லிச் சொல்லி அவர்கள் மனங்களிலும் விஷ விதைகளை விதைத்தான். அவள் இறக்கைகளிலிருந்து ஒவ்வொரு இறகாக விழவாரம்பித்தன. விபரமறியாத குழந்தைகள் தந்தை சொல் மந்திரமோ என்று விதைத்த விதைகளுக்கு தண்ணீர் ஊற்றின....உரமிட்டன. அன்று முதல் குழந்தைகளுக்கும் தாய்க்குமிடையே பெரும் பள்ளம் விழுந்தது. அம்மா என்றால் நமக்கு வேண்டியதைச் செய்யவும் உணவு சமைத்துத் தரவுமே படைக்கப் பட்டவள் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்தது.

ஜெயாவும் தன்னை மறந்து, தன் நாமம் கெட்டு வாழப் பழகிக்கொண்டாள். காலையில் வேலைகள் முடிந்து தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொள்வாள். மாலையிலும் அப்படியே. அங்கு அவள் என்ன செய்கிறாள் என்று யாருக்கும் தெரியாது, தெரிந்துகொள்ள அக்கறையுமில்லை.

தொடரும்

Wednesday, July 1, 2009

நலங்கெட புழுதியில்....(உரையாடல்- சிறுகதை) பாகம் ஒன்று

உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக ஆரம்பித்து முடிவு தேதிக்குள் பிரசுரிக்க இயலவில்லை.ஆனாலும் என்ன? வாசித்துத்தான் பாருங்களேன். சேரியா?

நலங்கெட புழுதியில்....

'ஜெயா! மோகன ராகத்துக்கு நிஷாதம் உண்டா? உண்டு என்கிறேன் நான், இல்லை என்கிறான் என் சிநேகிதன் முரளி. நீ சொல்லு.' என்று சமையற்கட்டிற்கு ஓடிவந்தான் ஜெயாவின் கணவன் ஸ்ரீனிவாஸ்.

'கிடையாதுங்க மோகனத்துக்கு மத்தியமும் நிஷாதமும் கிடையாது. அவர் சொல்வதுதான் சரி.' என்றாள் ஜெயா மெதுவாக. உர்ர்ர்ர்ர்ரென்று முகம் வைத்துக் கொண்டு திரும்பினான்.

மற்றொருநாள் இதேபோல் ஓடிவந்தான் சமையலறைக்குள். 'ஜெயா! தாளவகைகளில் சிரமமான தாளம் எது?' வழக்கம் போல் மெல்லிய குரலில், 'அடதாளம்ங்க.' என்று நிறுத்திக் கொண்டாள்.

இது வழக்கமாக அவர்கள் வீட்டில் நடக்கும் ஒரு நாடகம். ஆம் நாடகம்தான். வரும் விருந்தினர் முன்னிலையில் தான் ஒரு சங்கீத ரசிகன் என்று காட்டிக்கொள்ள, சங்கீத சம்பந்தமான உரையாடலில் வரும் சந்தேகங்களை கிச்சனில்....கிச்சனிலேயே இருக்கும் ஜெயாவிடம் வந்து சந்தேகம் கேட்பதும் அவளும் கிசுகிசுத்த குரலில் அவன் கேள்விக்கு மட்டும் விடையளித்து விட்டு மௌனமாவதும் அடிக்கடி நடக்கும் நாடகம்.

ஏன் ஜெயாவும் விருந்தினரோடு அமர்ந்து உரையாடவில்லை? இந்த கேள்விக்கு நாம் சுமார் இருபத்தைந்து வருடங்கள் காலச்சக்கரத்தை பின்னோக்கி உருட்ட வேண்டும்.

ஜெயா சமையலறை சுவரில் சாய்ந்து மனச்சக்கரத்தை இருபத்தைந்து வருடங்கள் பின்னோக்கி உருட்டினாள்.

'ஜெயா! இன்னிக்கி உன் கச்சேரி மேடையிலேயே நீ பாடும் போதே உன்னைப் பெண்பார்க்க வருகிறார்கள், மாப்பிள்ளையும் அவர் அப்பா அம்மாவும்.' என்று பெருமையோடு சொன்னாள் அம்மா.

'அம்மா! கச்சேரியிலா..அதுவும் பாடும் போதா....?' சிணுங்கினாள்.

'அவர்களுக்கும் நேரமில்லை...உனக்கும் நேரமில்லை. எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை'

ஜெயாவும் வேறு வழியில்லாமல் சம்மதித்தாள்.

நாரதகான சபாவில் கச்சேரி. ஜெயா அப்போது பிரபலமான கர்நாடக சங்கீத பாடகியாக பரிமளித்துக் கொண்டிருந்த நேரம். டிசம்பர் ஜனவரி விடாத ப்ரோக்ராம்கள். அது முடிந்ததும் திருவாரூர் பயணம். அது முடிந்து சிறிது ஓய்வு. பிறகு மே மாதம் முதல் ஜூலை வரை வெளிநாட்டு கச்சேரிகள். இப்படி ஒளிர்ந்து கொண்டிருந்தது அவளது கலை.

நாரதகான சபாவில் கச்சேரி ஆரம்பித்து அரைமணி நேரமாயிற்று. கரகரப்பிரியாவில் சக்கனிராஜாவை கலகலப்பாக்கிக் கொண்டிருந்தாள். அப்போது கடகடவென்று சபையில் நுழைந்து முதல் வரிசையில் ரிசர்வ் செய்திருந்த ஆசனங்களில் அமர்ந்தனர் மூவர்.
அவர்கள்தான் கச்சேரியிலேயே பாடகியைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையும் அவனது பெற்றோரும்.

'நல்லா பாத்துக்கடா...சீனி! அப்புரம் வந்து நொள்ளை சொல்லக் கூடாது.'

'நொள்ளை சொல்ல என்னம்மா இருக்கு? கண்ணுக்கு லட்சணமா இருக்கா? அப்புரமென்ன?'

'அவ சங்கீத ஞானம் எப்படி?'

'அதப் பத்தி எனக்கென்னம்மா? அழ..காருக்கா. அது போதும்.'

இந்த உரையாடலை ஜெயாவும் அவளது பெற்றோரும் கேட்டிருந்தால்...அவளது தலையெழுத்தே மாறியிருக்கும். விதி வலியது என்று சும்மாவா சொன்னார்கள்?

பையன் நல்லாயிருக்கான், நல்ல வேலை, கை நிறைய சம்பளம், நல்ல குடும்பம், ஜெயா அதிர்ஷ்டக்காரி என்று தீர்மானித்து திருமணத்தை நிச்சயம் செய்தார்கள்.

தொடரும்

Monday, June 29, 2009

என் கேள்விகளுக்கு என் பதில்கள்!! 32 கேள்விகள்.

ஏதானாலும் என்னை இழுத்துவிடுவது அன்பு சீனாவுக்கு மிகவும் பிடிக்கும். சமீப சந்திப்பில் புதுகைத் தென்றலுக்கும் சகோதர பாசத்தில் சகாதேவனுக்கும் என் ஞாபகம் வந்துவிட்டது. மூவரின் அன்பு கிடிக்கிப்பிடியில் இடுங்கிவிட்டேன். பிடி அன்புப் பிடியாதலால் விலக்க மனமில்லை. சொந்த வேலையில் சிறிது நாட்கள் பிஸியாக இருந்ததால் கணினியும் என்னைப்பார்த்து, "னீ உன் வேலையை கவனி!" என்று சொல்லிவிட்டது.

ஹப்பா! இன்றுதான் நேரம் வாய்த்தது. அதுவும் ஒரு மணி நேரம்தான். 'என்ன? நேரப்படிதான் எல்லாம் செய்வாயோ?' என்றது மனசாட்சி..தன் செவ்வாய் திறந்து. ஹி..ஹி..ச்சும்மா எல்லாம் ஒரு பில்டப்தான்.
வாருங்கள் கேள்விகளுக்குப் போவோம். கேள்வியை நீ கேட்கிறாயா..அல்லது நான் கேட்கவா?
'மடச்சி! ரெண்டுமே நீதாண்டி!' என்றது மறுபடியும் உட்குரல். சேரி...சேரீ..!


1. உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அந்தக்காலத்தில் நாமிருவர் நமக்கிருவர் தத்துவமெல்லாம் கிடையாது. முதல் ரெண்டு ஆண்பிள்ளைகளுக்கும் அப்பா தாத்தா, அம்மா தாத்தா பெயர்கள்...அடுத்து ரெண்டு பெண்பிள்ளைகளுக்கும் அப்பா ஆச்சி, அம்மா ஆச்சி பெயர்களை எழுதி வாங்கிக் கொண்டேதான் பிறப்பார்கள். அடுத்தடுத்து வரும் பிள்ளைகளுக்கு தெய்வங்களின் பெயர்கள். நம் நாட்டில் சாமி பேர்களுக்கா பஞ்சம்? அந்த வகையில் மூன்றாவதாகப் பிறந்த எனக்கு அம்மா ஊரான ஆழ்வார்குறிச்சியில்(சிவசைலம்) கோயில் கொண்டிருக்கும் பரம கல்யாணி அம்மனின் பேரைத்தான் நான் கொண்டிருக்கிறேன். ரொம்பப் பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்போது?
மூன்று வருடங்கள் முன்பு அருமை சின்னக்காவின் திடீர் மறைவின் போது. இப்போதும் இரவில் கண்மூடினால் 'ஹ..லோ!' என்று அழைத்து கண்களுக்குள் வந்து நிற்பாள்.

3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என்னக்குப் பிடிக்காம..? தலையெழுத்து எப்படியோ? கையெழுத்து நல்லாவே இருக்கும். கான்வெண்டில் ஹாண்ட்ரைட்டிங் என்று ஆங்கிலமும் தமிழும் நோட்டு நோட்டாக கை ஒடிய எழுதியது வேறு எதற்காம்?

4. பிடித்த மதிய உணவு என்ன?
பூண்டு போட்டு வத்தக் குழம்பு, சௌசௌ கூட்டு, தயிர்சாதம் பழங்கறி,சுண்டக்கீரை + மாம்பழம்!!ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

5. நீங்கள் வேறு யாருடனும் உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
மாட்டேன். அலைவரிசை ஒத்துப் போகுதா என்று கொஞ்சம் நிதானிப்பேன். காரணம் நட்பல்லவா? அது வைரம் மாதிரி பழுதோ தோஷமோ இல்லாமலிருக்கணும். என்ன நாஞ் சொல்றது?

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் முழங்கால் நனைய நிற்கத்தான் பிடிக்கும். அருவி? ஆஹா!!உச்சரிக்கும் போதே முதுகில் தொம்தொம் என்று விழுகிறதே!குற்றாலம், மணிமுத்தாறு திற்பரப்பு இந்த அருவிகளில் எல்லாம் குளிக்கப் பிடிக்கும். சீசனை மிஸ் பண்ணுகிறேனே!!

7. முதலில் ஒருவரை பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகத்தை. பின் கண்களை அவை சொல்லிவிடும் அவரது நடைஉடை பாவனைகளை.

8.உங்க கிட்டே உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காதது என்ன?
யாருக்கும் உதவி என்றால் ஓடுவது. பேசவேண்டிய நேரத்தில் பேசாமல், பிறரை எந்தவிதத்திலும் காயப்படுத்திவிடுமோ என்று நான் காக்கும் மௌனம்.

9. உங்க சரிபாதி கிட்டே உங்களுக்கு பிடித்த விஷயம் எது. பிடிக்காத விஷயம் எது?
அவர் சேர்த்து வைத்திருக்கும் நண்பர்கள் கூட்டம். வெளியே கிளம்பியதும் பர்ஸை சாவியை தேடுவது.

10. யார் பக்கத்தில் இல்லாததற்கு வருந்துகிறீர்கள்?
என் அம்மாதான்!!

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
க்ரீம் கலரில் ஆஷ் கலரில் பிரிண்ட் போட்ட புடவை. அஃகோர்ஸ்! மேட்சிங் ப்ளவுஸ்.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க?
மானிட்டரைப் பார்த்து தட்டிக் கொண்டிருக்கிறேன். இன்று வாங்கிய எம்.எல். வசந்தகுமாரியின் சினிமா பாடல்கள் அடங்கிய சிடி. பாடல், 'பத்துவிரல் மோதிரம் எத்தனை ப்ராகாசம்...'

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பச்சை நிறமே பச்சை நிறமே!!!

14. உங்களுக்கு பிடித்த மணம்
பன்னீர் ரோசாவின் நறுமணம். ஸ்ப்ரே செய்யும் பாட்டிலில் பன்னீர் கொஞ்சம் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறேன். தேவைப்படும் போது முகத்தில் ஸ்ப்ரே செய்து புத்துணர்ச்சி பெறுகிறேன்.

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? அவர்களை ஏன் பிடிக்கும்? அழைக்க காரணம் என்ன?
யாரைத்தான் சொல்லுவதோ..? அநேகமாக எனக்குத்தெரிந்த பதிவர்கள் அனைவரும் பதில் சொல்லிவிட்டார்கள். திரும்ப அழைத்தால், சத்யராஜ் மாதிரி இருந்த இடத்திலிருந்தே அடிப்பார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் பாத்து நான் அழைப்பது,
ஸ்க்கிரிபிளிங் வித்யா
செல்வி சங்கர்
தமிழ்பிரியன்
இவர்களையெல்லாம் எனக்குப் பிடிக்கும். அம்புட்டுத்தான்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் பிடித்த பதிவு எது?
சீனா அவர்கள பின்னூட்டங்கள் இட்டே பேர் வாங்கியவர்.
புதுகைத் தென்றல் ஸேம் ப்ளட்.
சகாதேவன் நல்ல தகவல்களைத் தேடித்தேடி பொறுக்கியெடுத்து பதிபவர்.

17. உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
ஃப்ரீசெல், ஸ்க்ராபிள், கார்ட்ஸ்.

18.நீங்கள் கண்ணாடி அணிபவரா?
கழற்றாமல் இருப்பவர். (கேப்பீகளே! தூங்கும் போதும் குளிக்கும் போதும் மட்டும் கழற்றுபவர்)

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சிரித்து சிரித்து கண்கள் பனித்து வயிறு வலிக்கும் படியான சுத்தமான வசனங்கள் உள்ள படங்கள்(கலாட்டா கல்யாணம், மற்றும் க்ரேஸி மோகன் வசனமெழுதிய படங்கள். இவர் படங்களில் வசனங்களை ஃபாலோ செய்யாவிட்டால் சிரிக்க முடியாது.)

20. கடைசியாக பார்த்த படம் எது?
அபியும் நானும். மனதை வருடிச் சென்ற படம்.

21. உங்களுக்கு பிடித்த பருவ காலம் எது?
தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலம்.

22. இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் எது?
நான் ஒரு கூட்டுப் புழுங்க. புத்தகப் புழு இல்லை. கேட்டதற்காக...இன்று வந்த மங்கையர்மலர்.

23. உங்கள் டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
நினைக்கும் போதெல்லாம்.

24. உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
மெல்லிய குழலோசை. ஒரு தகர துண்டை சுவற்றில் இழுக்கும் போது வரும் சத்தம். ஐயோ! உடம்பெல்லாம் அதிருமில்ல.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா, கனடா.

26.உங்களுக்கு தனித்திறமை ஏதாவது இருக்கிறதா?
கொஞ்சம் வரைவேன், கொஞ்சம் பெயிண்ட் செய்வேன், கொஞ்சம் வீணை வாசிப்பேன். ஆனா முழுசா ஒண்ணுமேயில்லையே!?

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியத ஒரு விஷயம்
நாட்டு நடப்பு

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்
வெளியேயும் அதுதானிருக்கு. அது ஒரு முரட்டு சாத்தான்.

29. பிடித்த சுற்றுலா தலம்.
கொடைக்கானல். மிதமான குளிர்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
காலம் கடந்த கேள்வி. இப்போது போல் கடைசி வரை இருந்தாலே போதும்.

31. மனைவி/கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்
ஷாப்பிங்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
கிடைத்ததில் திருப்தி, நன்றே வரினும் தீதே வரினும் இரண்டையும் ஒன்றாகப் பாவித்து மன அமைதியோடு வாழ்வதுதான் "வாழ்வு"

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...