சுகப் பிரசவம் ஆகி தாயும் சேயும் நலமாக, பிஞ்சுக் குழந்தை தன் செம்பஞ்சுக் கால்களையும் கைகளையும் உதைத்து ஆட்டி எதையோ பிடிப்பது போல் அசைவதைப் பார்த்து ஆனந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நாம் நமது வேலையைப் பார்ப்போமா?
இதில் பிரசவம் காலையில் நிகழ்ந்தால், ஒரு மணிநேரம் கழித்து “பிடிகாயம்” என்று கொடுப்பார்கள். அது என்ன?
பெருங்காயம் - கால் ஸ்பூன்
மஞ்சள் - அரை ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
மூன்றையும் வெறும் சட்டியில் எண்ணை இல்லாமல் வறுத்து பொடி செய்து, அதனுடன் அரை ஸ்பூன் கருப்பட்டி சேர்த்து பிசைந்து உருட்டி, நன்கு மென்று சாப்பிடக் கொடுக்கவும்.
ம்றுநாள் (ஒன்றாம் நாள்) அரிசிக் கஞ்சி பால் விடாமல் கொடுக்கவும்.
இரண்டாம் நாள் இரவு உணவுக்குப் பிறகு...இஞ்சி, மேல்பொடி கொடுக்க வேண்டும்.
மேல் பொடி:
சுக்கு - 100 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 20 கிராம்
அக்கரா - 1
சித்தரத்தை - 1
நறுக்குமூலம் - 15 கிராம்
கருஞ்சீரகம் - 10 கிராம்
காயம் - 25 கிராம்
இவற்றில் வேர்களைத்தவிர மற்ற சாமான் களை சதைத்து லேசாக வறுத்து இடித்து பட்டாக சலித்து வைத்துக்கொள்ளவும். (நம்மைப் போன்று இதை தயாரிக்க சிரமப் படுவோர்க்காக நல்ல நாட்டு மருந்துக்கடைகளில் ரெடிமேடாக...பொடியாகவே பாக்கெட்டுகளில் கிடைக்கிறது)
இஞ்சி மேல் பொடி தயாரிக்க:
ஒரு துண்டு இஞ்சி, ஒரு துண்டு மாவிலங்குப் பட்டை இரண்டையும் தட்டி நூறு கிராம் அளவுக்கு சாறு எடுக்கவும். சிறிய மாங்காய் அளவு கருப்பட்டி தட்டி தேவையான அள்வு தண்ணீரில் நன்கு கொதிக்கவிட வேண்டும். பின் அதில் இஞ்சி சாறும் 1 1/2 ஸ்பூன் மேல் பொடி சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பின் அதை இறக்கி வடிகட்டி வைத்து ‘சொரசம்’ பண்ணிய தேன் 50 கிராம் விட்டு இளம் சூட்டில் குடிக்கக் கொடுக்க வேண்டும்.
தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...
நானானிம்மா.. மாவிலங்குப்பட்டைன்னா என்ன? மாதுளம்பட்டையா??.
ReplyDeleteமாவிலங்கு என்ற மரத்தின் பட்டை என்று சொன்னார்கள். மாதுளம் மெல்லிசான மரம். அதில் பட்டையை உறிப்பதெல்லாம் இயலாத காரியம்.
ReplyDelete