Thursday, December 16, 2010

எங்கும் பனி மழை பொழிகிறது - டிசம்பர் பிட் போட்டிக்கு

ஐப்பசியின் மழையே, மார்கழி பிறந்து இன்னும் விட்ட பாடில்லை. இதில் பனிக்கு எங்கே போவது?
இவ்வருடம், ‘பனியில்லாத மார்கழி’ போலும்.
ஆனாலும் விட்டுடுவோமா?


இருக்கும் கொஞ்சநஞ்ச பனியையும் கிழித்துக்கொண்டு செக்கர்வானம் சிவக்க தரிசனம் தர ஆதவன் எழுந்தான்.

மெல்ல கண் திறக்கிறான்.
காலைப் பனியில் நடை போடும் இருவர், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளோ?

எதிரே இருப்பவை கண்களுக்கு தெரியாவிட்டாலும் மெல்ல உருளும் மாருதி.

இலைகளையெல்லாம் உதிர்த்து, பனியில் குளித்து, இலைகள் துளிர்விடும் வசந்த காலத்துக்குக் காத்திருக்கும் மரம்.
அதிகாலையில் கேமராவும் கையுமாக கிளம்பிவிட்டால்......கோலம் ஆரு போடுவாக, காபி ஆரு போடுவாக.....அப்பரம் சத்தமில்லா போடுவாக!!!!!

10 comments:

  1. சத்தத்துக்கெல்லாம் பயப்படுவேளா..?

    ReplyDelete
  2. பனியில் பள்ளி செல்லும் பிள்ளைகள் பொருத்தம்.

    சூரிய உதயப் படங்கள் இரண்டுமே அருமை. எனினும் ஆதவன் மெல்ல எட்டிப்பார்க்கும் முதல் படம், முதல் ராங்கில்:)!

    ReplyDelete
  3. மாருதி அழகாருக்கு நானானிம்மா.. இடதுபக்கம் தெரியுற கொஞ்சூண்டு இலைகளை க்ராப் அடிச்சுட்டா அசத்தலான படம்.

    ReplyDelete
  4. என்னோட சாய்ஸ் பர்ஸ்ட் போட்டோ சூப்பாராக்கீது :)

    ReplyDelete
  5. க்கோமா,
    ச்சும்மா!!!

    ReplyDelete
  6. என மனதிலும் அதுவே இருக்கிறது.

    மற்ற படங்களைப் பார்த்தேன். காலைப் பனி பற்றிய படம் ஏதுமில்லை.

    ReplyDelete
  7. ஆயில்யன்,

    ஆனால் சூரியோதயக் காட்சிகள் போட்டியில் இருக்குதே!!

    ReplyDelete
  8. அமைதிச்சாரல்,

    உங்கள் கருத்தையும் கருத்தில் கொள்கிறேன். நன்றி!!

    ReplyDelete
  9. அடடா, நானானி எங்கப்பா பிடிச்சீங்க, இடம் சொல்லக் கூடாதா. அத்தனையும்
    அழகு.
    இப்படி ஒரு போட்டோக்காரரைக் கட்டியிருப்பது கணவருக்குத் தெரியுமா.
    படங்கள் பார்க்கும்போது காப்பி ஏதுக்கடி கண்ணே னு சொல்லிவிடுவார்.

    முதல் படம், அதைவிட்டால் இரண்டாவது படம் என் சாய்ஸ். வே டு கோ கேர்ள்:)

    ReplyDelete
  10. வல்லி,

    காபியை அவரே காலை நாலு மணிக்கு எழுந்து என்னை தொந்திரவு பண்ணாமல், மைக்ரோவேவில் சூடு பண்ணி எடுத்துக் கொள்வார். படு சமத்து.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...