Monday, February 28, 2011

வெண்டைக்காய் வறுத்தது - சமையல் குறிப்பு

பச்சையாகவே சாப்பிடும் காய்களில் எனக்குப் பிடித்தவைகளில் ஒன்று...வெண்டைக்காய். அதுவும் செடியிலிருந்து பறித்து உடனே கடித்து சாப்பிட்டால் அது ஒரு சுவை.

அதை வறுத்து......வித்தியாசமாக வறுத்து சாப்பிட்டால் சுவையோ சுவை!
தேவையான அளவு வெண்டைக்காய்கள், பிஞ்சாக பொறுக்கி நுனி உடைத்துப் பார்த்து வாங்கவும்.

உடைத்த பின் முத்தல் என்று கூடையிலே திருப்பிப் போட்டால்
கடைகாரர் மனம் உடைந்துவிடும். ஆகவே நிச்சயம் பிஞ்சென்று தெரிந்து உடைத்து வாங்கவும்.
அப்படி வாங்கிய வெண்டைக்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து, ரெண்ட்டிஞ்சு நீளத்தில் நறுக்கி
அதன் நடுவில் சிறு கத்தி கொண்டு அயிலயிலாகக் கீறிக்கொள்ளவும்.

அட! பத்து வெண்டைக்காய்கள் சேர்ந்து ஒரு வெண்டைக்காயை கீறுகிறதே!!!!

அப்புரம்....கடாயை அடுப்பிலேற்றி அதில் மஞ்சள்பொடி, மிளகாய்பொடி, சீரகப்பொடி, தனியாப்பொடி, மிளகுப்பொடி, உப்பு, நம்ம பருப்புபொடி...அதாங்க, பொட்டுக்கடலை, வேர்கடலை, முந்திரி, பாதாம் சேர்த்து அரைத்த பொடி!

எல்லாப் பொடிகளையும் போடவும்


சிறிது எண்ணை ஊற்றி அவற்றை நன்கு கிளறவும்.

அதில் நறுக்கி, கீறிய வெண்டைக்காய்களை போட்டு நன்கு பிரட்டவும்.

அப்பப்ப சிறிது எண்ணை ஊற்றி மொறுமொறுவென்று வரும் வரை கிளறிக்கொண்டேயிருக்கவும்.
கடைசியில் சிறிது நெய் விட்டு பருப்புப்பொடி, சர்க்கரை தூவி பிரட்டி எடுக்கவும்.

சர்க்கரை எதுக்கு? இனிப்புக்காக அல்ல, எந்த காய் வறுத்தாலும் இறுதியில் சிறிது சர்க்கரை தூவி வறுத்தால், அதிக மொறுமொறுப்பாயிருக்கும். ''நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்!!!'


இதோ..மொறு மொறு வெண்டைக்காய் வறுத்தது ,வறுத்து ரெடி!


சுவைத்துப் பார்க்க விறுவிறுவென்று வாருங்கள்!!!!!

20 comments:

  1. அருமையாக இருக்கு.

    ReplyDelete
  2. பாய்ண்ட்ஸ் நோட்டட் யுவர் ஆனர்.

    இன்னிக்கு வேண்டைக்காய் மோர்க்குழம்புன்னு இருந்தேன். இப்ப ப்ளான் மாறிப்போச்சு. வெறும் மோர்க்குழம்பும் வெண்டை வறுத்ததும் மெனு.

    டாங்கீஸ்.

    பதினோரு விரல்கள் கண்டேன்:-)))))

    ஆமாம்....உங்க சாராள்டக்கர் பதிவுக்கு பின்னூட்டம் போட முடியாம இருக்கே:(

    ReplyDelete
  3. ஓடிவந்ததில் நாக்குத் தள்ளி வேண்டைக்காய் ஆகிவிட்டது:-)

    ReplyDelete
  4. சுவையோ சுவை

    ReplyDelete
  5. //அட! பத்து வெண்டைக்காய்கள் சேர்ந்து ஒரு வெண்டைக்காயை கீறுகிறதே!!!!//

    அவங்களுக்குள்ளாவே அடிச்சுக்கிறாங்களே, அங்கயும் ஜாதிச்சண்டையோ?

    (ம்.. நீங்க கவித்துவமா எழுதுறதா நினச்சுகிட்டீங்க, எனக்கு நாடு இருக்க நெலமையில இப்பிடித்தான் தோணுது!! :-((((( )

    (ச்சும்ம்மா... )

    ReplyDelete
  6. பாய்ன்ட் நோட்டட்:)!

    நல்ல குறிப்பு. நன்றி.

    ReplyDelete
  7. அட! பத்து வெண்டைக்காய்கள் சேர்ந்து ஒரு வெண்டைக்காயை கீறுகிறதே!!!!
    சமைக்கவும் செய்கிறதே!!ஓகே.

    ReplyDelete
  8. ஆசியா ஓமர்,
    நன்றி! சமச்சும் பாருங்க.

    ReplyDelete
  9. துள்சி,
    உங்களுக்கு மிகவும் வேண்டிய காஅய் போலும் அதான் வேண்டக்காயா ஆயிடுச்சு!
    நீங்களே எழுதீட்டு, பின்னாலேயே ஓடி வந்து திருத்தீட்டீங்களே!!!சபாசு!!

    வறுத்து சாப்பிடதும் எப்படி இருந்துச்சுன்னு ஷொல்லல்லையே? காயின் விசேஷம், அதான் வழவாழ கொழகொழ!!

    ReplyDelete
  10. துள்சி
    நாந்தான் கண்டுக்கலையே...இப்படியா நாக்கு தள்ள ஓடியாரது? ஆசுவாசம்...ஆசுவாசம்!!!

    ReplyDelete
  11. துள்சி
    சாராள் தக்கர் பதிவு போட்டாச்சு. மெதுவா வந்து கமெண்டவும்.

    ReplyDelete
  12. தென்றல்,
    நல்லாருந்துச்ச?

    ReplyDelete
  13. ஹூசைன்னம்மா,
    ஒரு வகையில் நீங்க சொல்றதும் சரிதான்.
    நாடு நடக்கிற நடையிலே..நமக்கே ஒன்னும் புரியலை.

    ReplyDelete
  14. அமைதிச்சாரல்,
    வாங்க..வாங்க...சொகமாயிருக்கீகளா? சமச்சீங்களா? சாப்டீங்களா?

    ReplyDelete
  15. ராமலஷ்மி,
    நன்றி!

    ReplyDelete
  16. இராஜேஸ்வரி,

    //ஒரு வெண்டைக்காயை கீறுகிறதே!!!!
    சமைக்கவும் செய்கிறதே//

    அது நன்றாகவும் இருக்கிறதே!!!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...