அதை வறுத்து......வித்தியாசமாக வறுத்து சாப்பிட்டால் சுவையோ சுவை!
தேவையான அளவு வெண்டைக்காய்கள், பிஞ்சாக பொறுக்கி நுனி உடைத்துப் பார்த்து வாங்கவும்.
உடைத்த பின் முத்தல் என்று கூடையிலே திருப்பிப் போட்டால்
கடைகாரர் மனம் உடைந்துவிடும். ஆகவே நிச்சயம் பிஞ்சென்று தெரிந்து உடைத்து வாங்கவும்.
அப்படி வாங்கிய வெண்டைக்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து, ரெண்ட்டிஞ்சு நீளத்தில் நறுக்கி
அதன் நடுவில் சிறு கத்தி கொண்டு அயிலயிலாகக் கீறிக்கொள்ளவும்.
அட! பத்து வெண்டைக்காய்கள் சேர்ந்து ஒரு வெண்டைக்காயை கீறுகிறதே!!!!
அப்புரம்....கடாயை அடுப்பிலேற்றி அதில் மஞ்சள்பொடி, மிளகாய்பொடி, சீரகப்பொடி, தனியாப்பொடி, மிளகுப்பொடி, உப்பு, நம்ம பருப்புபொடி...அதாங்க, பொட்டுக்கடலை, வேர்கடலை, முந்திரி, பாதாம் சேர்த்து அரைத்த பொடி!
எல்லாப் பொடிகளையும் போடவும்
சிறிது எண்ணை ஊற்றி அவற்றை நன்கு கிளறவும்.
அதில் நறுக்கி, கீறிய வெண்டைக்காய்களை போட்டு நன்கு பிரட்டவும்.
அப்பப்ப சிறிது எண்ணை ஊற்றி மொறுமொறுவென்று வரும் வரை கிளறிக்கொண்டேயிருக்கவும்.
கடைசியில் சிறிது நெய் விட்டு பருப்புப்பொடி, சர்க்கரை தூவி பிரட்டி எடுக்கவும்.
சர்க்கரை எதுக்கு? இனிப்புக்காக அல்ல, எந்த காய் வறுத்தாலும் இறுதியில் சிறிது சர்க்கரை தூவி வறுத்தால், அதிக மொறுமொறுப்பாயிருக்கும். ''நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்!!!'
அருமையாக இருக்கு.
ReplyDeleteபாய்ண்ட்ஸ் நோட்டட் யுவர் ஆனர்.
ReplyDeleteஇன்னிக்கு வேண்டைக்காய் மோர்க்குழம்புன்னு இருந்தேன். இப்ப ப்ளான் மாறிப்போச்சு. வெறும் மோர்க்குழம்பும் வெண்டை வறுத்ததும் மெனு.
டாங்கீஸ்.
பதினோரு விரல்கள் கண்டேன்:-)))))
ஆமாம்....உங்க சாராள்டக்கர் பதிவுக்கு பின்னூட்டம் போட முடியாம இருக்கே:(
ஓடிவந்ததில் நாக்குத் தள்ளி வேண்டைக்காய் ஆகிவிட்டது:-)
ReplyDeleteook done. thanks
ReplyDeleteook done. thanks
ReplyDeleteசுவையோ சுவை
ReplyDelete//அட! பத்து வெண்டைக்காய்கள் சேர்ந்து ஒரு வெண்டைக்காயை கீறுகிறதே!!!!//
ReplyDeleteஅவங்களுக்குள்ளாவே அடிச்சுக்கிறாங்களே, அங்கயும் ஜாதிச்சண்டையோ?
(ம்.. நீங்க கவித்துவமா எழுதுறதா நினச்சுகிட்டீங்க, எனக்கு நாடு இருக்க நெலமையில இப்பிடித்தான் தோணுது!! :-((((( )
(ச்சும்ம்மா... )
வந்துட்டேன்ன்ன்.....
ReplyDeleteபாய்ன்ட் நோட்டட்:)!
ReplyDeleteநல்ல குறிப்பு. நன்றி.
அட! பத்து வெண்டைக்காய்கள் சேர்ந்து ஒரு வெண்டைக்காயை கீறுகிறதே!!!!
ReplyDeleteசமைக்கவும் செய்கிறதே!!ஓகே.
ஆசியா ஓமர்,
ReplyDeleteநன்றி! சமச்சும் பாருங்க.
துள்சி,
ReplyDeleteஉங்களுக்கு மிகவும் வேண்டிய காஅய் போலும் அதான் வேண்டக்காயா ஆயிடுச்சு!
நீங்களே எழுதீட்டு, பின்னாலேயே ஓடி வந்து திருத்தீட்டீங்களே!!!சபாசு!!
வறுத்து சாப்பிடதும் எப்படி இருந்துச்சுன்னு ஷொல்லல்லையே? காயின் விசேஷம், அதான் வழவாழ கொழகொழ!!
துள்சி
ReplyDeleteநாந்தான் கண்டுக்கலையே...இப்படியா நாக்கு தள்ள ஓடியாரது? ஆசுவாசம்...ஆசுவாசம்!!!
துள்சி
ReplyDeleteசாராள் தக்கர் பதிவு போட்டாச்சு. மெதுவா வந்து கமெண்டவும்.
தென்றல்,
ReplyDeleteநல்லாருந்துச்ச?
கோமா,
ReplyDeleteநல்லது,
ஹூசைன்னம்மா,
ReplyDeleteஒரு வகையில் நீங்க சொல்றதும் சரிதான்.
நாடு நடக்கிற நடையிலே..நமக்கே ஒன்னும் புரியலை.
அமைதிச்சாரல்,
ReplyDeleteவாங்க..வாங்க...சொகமாயிருக்கீகளா? சமச்சீங்களா? சாப்டீங்களா?
ராமலஷ்மி,
ReplyDeleteநன்றி!
இராஜேஸ்வரி,
ReplyDelete//ஒரு வெண்டைக்காயை கீறுகிறதே!!!!
சமைக்கவும் செய்கிறதே//
அது நன்றாகவும் இருக்கிறதே!!!