Saturday, August 13, 2011

சென்னையின் சேமிப்பு, தென்தமிழ் நாட்டுக்கு நிம்மதி பெருமூச்சு

நல்ல கொள்ளைக்காரன் பணமுதலைகளிடமிருந்து கருப்புப் பணத்தைத் திருடி ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாகிறான்.

சென்னைவாழ் மக்களாகிய நாமும் ஏன் நம்மிடமுள்ள கருப்பு மின்சாரத்தை சேமித்து தென் தமிழ்நாட்டுக்கு வாரி வழங்கக்கூடாது?



சென்னையில் மட்டும் செலவழிக்கப்படும் மின்சாரத்தில் பத்து சதவீதம் மட்டுமே சேமித்தால் அதைக் கொண்டு தெற்கே பல நகரங்களில் தினசரி ரெண்டு மணிநேரம், நாலு மணிநேரம் என்று மின்வெட்டால் அவதிப்படும் நம் சக குடும்பங்களின் அவதிகளை போக்கமுடியும்.



எப்படீன்னு பாக்கலாமா? முதலில் நம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம். சேரியா?

மின்சாரத்தேவையை நூறு சதவீதம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதில் அது தவறும் போது எடுத்துச் சொல்லியும் கண்டுக்காத போது, சப்பைக்கட்டு கட்டும் போது. மக்களாகிய நாமே, “நமக்கு நாமே!” என்று சில வழி முறைகளைப் பின் பற்றி சகமக்களுக்கும் உதவலாமே!!



’கருப்பு மின்சாரம்’ என்று நான் சொல்வது, தேவையில்லாமல் செலவாகும் மின்சாரம், ஆடம்பரத்துக்கு அநியாயமாகப் போகும் மின்சாரம், திருட்டுத்தனமாய் உறிஞ்சப் படும் மின்சாரம் போன்றவைகள்தான்.

குளிர்சாதன வசதி என்பது ஆடம்பரப் பொருள் என்ற நிலைமாறி அத்தியாவசியமானது என்ற குறியீட்டுக்குள் வந்துவிட்டது.

காரணம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததுதான்.



அதிலும் வீட்டுக்கு ஒன்று என்றிருந்தது இப்போது அறைக்கு ஒன்று என்றாகி விட்டது.



தேவை முடிந்தவுடன், மின்விளக்கு, மின்விசிறி, கேய்சர் மற்றும் பல மின் உபகரணங்களை

உடனுக்குடன் அணைத்து விடுவதும் பெரும் அளவில் மின் சேமிப்புக்கு வழி செய்யும். கொஞ்சம் கவனம் மட்டுமே தேவை.



மின் உற்பத்தியை அதிகரிக்காமல் சிக்கலாக்கிவிட்டது போல், மின் கம்பத்திலும் ஏகப்பட்ட சிக்கல்கள்! திருட்டுத்தனமாய் ஸ்ட்ரா போட்டு உறிஞ்ச வசதியான அமைப்பு.

இப்படியே விட்டுவிட்டால் அபாயம்தான்.

தேவையான முறையில் சிக்கனமாகவும் அளவாகவும் உபயோகித்தால் மின் செலவும் மட்டுப்படும். நம் குடும்ப பட்ஜெட்டில் அதற்கான தொகையும் கட்டுப் படும்.



சொன்னதெல்லாம் சரிதானே? ஹலோ! அங்கே தேவையில்லாமல் ஓடும் மின் விசிறியையும் எரியும் விளக்கையும் தயவு செய்து அணைத்து விடுங்களேன்!!!





No comments:

Post a Comment

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...