

விஸ்கான்சின் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுமார் ஐம்பது அடி சுற்றளவுக்கு நாம் வித்தியாசமான ஓர் அனுபவத்தை உணரலாம்.எதேச்சையாக 1948-ஆம் வருடம் இங்கு வந்தவர்கள் கண்டுபிடித்த அற்புதம் இது.
புவி ஈர்ப்பு விசையின் மாறுபாட்டால் நாம் இங்கு நேராக நிற்க முடியாது. அங்கு சென்ற போது அந்த அதிசயத்தை உணர்ந்து வியந்தே போனோம்.

கைடு எங்களுக்கு தெளிவாக எல்லாவற்றையும் விளக்கினார்.அங்கு 90 டிகிரி நேராக நிற்கமுடியாது குறைந்தது 35 டிகிரி சாய்வாகவே நிற்கமுடியும். ஆனால் விழுந்துவிட மாட்டோம்.
ஏணியின் மேல் ஒரு நாற்காலி போட்டு அமரச்சொன்னார். அப்போதும் நாற்காலியோடு சாய்வாகவே இருக்கமுடிந்தது.

குறிப்பிட்ட பாயிண்டை பார்த்துக் கொண்டே கீழிருந்து மேலே போகச்சொன்னார். ஒரு பக்கமாக இழுக்கும் விசையை எதிர்த்து போவது சிரமம்.

இரும்புக் கம்பியில் கோத்த இரும்பு வளையம் கூட சாய்வாகவே தொங்கிய அதிசயத்தை என்னவென்று சொல்வது
விஸ்கான்சின் மாநிலம் முழுதும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொண்டாட்டமான இடம்.