Wednesday, November 28, 2007

நின்றாலும் நடந்தாலும் சாயத்தான் வேணும்!





விஸ்கான்சின் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுமார் ஐம்பது அடி சுற்றளவுக்கு நாம் வித்தியாசமான ஓர் அனுபவத்தை உணரலாம்.எதேச்சையாக 1948-ஆம் வருடம் இங்கு வந்தவர்கள் கண்டுபிடித்த அற்புதம் இது.
புவி ஈர்ப்பு விசையின் மாறுபாட்டால் நாம் இங்கு நேராக நிற்க முடியாது. அங்கு சென்ற போது அந்த அதிசயத்தை உணர்ந்து வியந்தே போனோம்.


கைடு எங்களுக்கு தெளிவாக எல்லாவற்றையும் விளக்கினார்.அங்கு 90 டிகிரி நேராக நிற்கமுடியாது குறைந்தது 35 டிகிரி சாய்வாகவே நிற்கமுடியும். ஆனால் விழுந்துவிட மாட்டோம்.
ஏணியின் மேல் ஒரு நாற்காலி போட்டு அமரச்சொன்னார். அப்போதும் நாற்காலியோடு சாய்வாகவே இருக்கமுடிந்தது.


குறிப்பிட்ட பாயிண்டை பார்த்துக் கொண்டே கீழிருந்து மேலே போகச்சொன்னார். ஒரு பக்கமாக இழுக்கும் விசையை எதிர்த்து போவது சிரமம்.



இரும்புக் கம்பியில் கோத்த இரும்பு வளையம் கூட சாய்வாகவே தொங்கிய அதிசயத்தை என்னவென்று சொல்வது

விஸ்கான்சின் மாநிலம் முழுதும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொண்டாட்டமான இடம்.

காரோடுதான் நான் குளித்தேன், ஆனால் நனையவில்லை!!

கார் வாஷ் செய்யப்போகிறேன் என்றாள் சிகாகோ சகோதரி. எப்படி விட்டுவிட்டு வந்துவிடுவாயா? என்றேன். இல்லை நாமும் காருக்குள் இருக்கலாமென்றாள். விடுவேனா? 'நானும் வருவேன்.'என்று காம்கார்டரும் டிஜிடல் காமிராவும் கையுமாக அவளோடு கிளம்பிவிட்டேன்.
என்ன சுவாரஸ்யமான அனுபவம்!!!
காரை அங்குள்ள ட்ராக்கில் கொண்டு நிறுத்தினாள். அத்தோடு சரி! மீதி வேலைகளை இயந்திரங்களே பார்த்துக்கொண்டன.இரண்டு காமிராக்களிலும் அள்ளிக்கொண்டேன்.

ட்ராக்கில் கார் மெதுவாக நகர்ந்து மையத்தில் வந்து நின்றது. நாலாபக்கமிருந்தும் தண்ணீர் பாய்ந்தடித்தது.



நீர் காண்ணாடியில் வழிந்தோடியது.பிறகு சோப்பு நீர் வழிய காரின் ஐந்து பக்கங்களிலும் ப்ரெஷ்கள் சுகமாக வண்டியை தேய்த்துக்கொடுத்தன.


பின்னர் சோப்புநீர் மறுபடி பீச்சியடிக்கும் நீரால் வழிந்தோடியது.


அடுத்து ட்ரையர் நீரையெல்லாம் உறிஞ்சியெடுத்தது


அப்பால தலை துவட்டுமிடத்துக்கு கார் வந்தது.இந்த இடத்தில் வண்டி மிக மெதுவாக நகர்ந்த்து.


ரோலர் மாட்டிய டவல் கொண்டு மேலும் கீழும் உருட்டி நன்றாக துவட்டியது.பளபள வென்று
புத்தம் புதியதுபோல் பென்ஸ் கார் வெளியே வந்தது. என்ன...சாம்பிராணி புகை போடாத குறைத்தான்!!

கார் குளிக்கும் போது நாங்கள் உள்ளிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.அதுவும் வெட்கப்படவில்லை,நாங்களும் ஜாலியாக பேசிக்கொண்டும் படமெடுத்துக் கொண்டுமிருந்தோம்.
வித்தியாசமான அனுபவம்!!

Tuesday, November 27, 2007

வத்தக்கொழம்புப்பொடி...செய்யலாமா?

செய்வோமா? குழம்புப்பொடி!
தேவையானவை:
விதைக் கொத்தமல்லி----250 கிராம்
துவரம்பருப்பு---------- 75 கிராம்
அரிசி-------------------75 கிராம்
ஜீரகம்-------------------75 கிராம்
மிளகு-------------------75 கிராம
வெந்தயம்----------------50 கிராம்
கொத்தமல்லியை தனியாக வெறும் கடாயில் வறுத்துக்கொண்டு, பிறகு மற்றவற்றையும் அதேபோல்
வறுத்துக்கொள்ளவேண்டும். லேசாக வாசனை வரும் வரை.
காய்ந்த மிளகாய்---விருப்பத்துக்கேற்ப---150 அல்லது 200 கிராம்
கறிவேப்பிலை மிளகாய்க்கு சமமாக.
இவை இரண்டையும் கடாயில் தேவையான எண்ணையூற்றி மொறுமொறுவென்று வறுக்க வேண்டும். சிறிது ஆறியதும் மெஷினில் கொடுத்து பவுடராக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த சூடு ஆறியதும் பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தேவையான போது உபயோகிக்கலாம்.

இதுவே வத்தக்கொழம்புப்பொடி.
பெரியவர்களும் குழந்தைகளும்....சாரி..சாரி.. பழக்கதோஷம்.
வாய்க்கு வொணக்கையாக, காரமாக சாப்பிடும் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
எலுமிச்சையளவு புளி கரைத்துக்கொண்டு இந்தப்பொடி 4-5 கரண்டிகள் + மஞ்சள் பொடி 2 கரண்டிகள் + தேவையான உப்பு சேர்த்து கலக்கி அதோடு ஒன்றிரண்டாக அரைத்த சாம்பார் வெங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லியும் சேர்த்து பாத்திரத்தில் வெந்தயம் பொறித்து குழம்புக் கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
இதற்கு பொறுத்தமான காய்கள்...பூண்டு, முருங்கக்காய்-கத்தரிக்காய், ஊறவைத்து வேகவைத்த
மொச்சை இன்னும் கைக்கு கிடைத்த காய்கள் எல்லாமும். குழம்பு விரும்பி ஏற்றுக்கொள்ளும்.

இதை நான் பூண்டு போட்டு கன்டென்ஸ்டாக செய்து வைத்துக்கொள்வேன். முடியாத நேரத்தில்
கை கொடுக்கும்.

பச்சை சுண்டக்கா கொழம்பு!!



என்ன..? சுண்டக்காய் என்றதும் முகம் சுண்டிப்போச்சு? அது உடம்புக்கு...பரவைமுனிம்மா பாஷையில்'மேலுக்கு நல்லது'. படத்தில் பார்ப்பது பச்சை பட்டாணியில்லை. அவ்வளவும் பச்சைசுண்டக்காய்!!!
சுண்டக்காயோடு கூட கத்திரிக்காய்,முருங்கக்காய் சேர்த்து கொழம்பு வைத்தால் மணம் ஊரைக்கூட்டும்.

பச்சை சுண்டக்காய் வாங்கி காம்பு கிள்ளிவிட்டு லேசாக அடித்து வாய் பிளந்தாற்போல் உடைக்கவேண்டும். பிறகு தண்ணீரில் அலசினால் உள்ளிருக்கும் விதைகள் ஓரளவு வெளியேறிவிடும். காயின் கசப்பும் சிறிது குறையும். கசப்பு கொஞ்சம் வேண்டும்.

கத்தரிக்காய்,முருங்கக்காய் இரண்டையும் நறுக்கிக்கொள்ளவேண்டும்.
மண் பானை அடுப்பிலேற்றி...ஆம் மண் பானைதான். அதில் சமைக்கும் ருசியும் மணமும் தனிதான்!

எண்ணை காயவைத்து காய்ந்ததும் அதில் சிறிது வெந்தயம் பொரித்து காய்களை கறிவேப்பிலையோடு சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் எலுமிச்சை அளவு புளி கரைத்து அதோடு வத்தல் கொழம்புப்பொடி நாலு அல்லது ஐந்து கரண்டி, மஞ்சள் பொடி இரண்டு கரண்டி சேர்த்து நன்கு கலக்கி
காகளோடு சேர்த்து வேக விடவும். கொதிக்கும்போது தேவையான உப்பு மற்றும் சாம்பார் வெங்காயம்,ஜீரகம்,கொத்தமல்லி,கறிவேப்பிலை இவெற்றை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொழம்பில் சேர்க்கவும்.

காய் நன்றாக வெந்து கொழம்பும் தேவையான அளவு கொதித்ததும் கடுகு உ.பருப்பு கறிவேப்பிலை தாளித்து பொடியாக அரிந்த வெந்தயக்கீரை தூவி இறக்கவும்.

சூடான சாதத்தில் நெய்யூற்றி அதில் இந்தக் கொழம்பையும் ஊற்றி கொழப்பி அடித்தால்...!
அதை நீங்கள்தான் செய்து பார்த்து சொல்ல வேண்டும்.

ஆங்! வத்தக்கொழம்புப்பொடி எப்படி செய்வது என்று சொல்லவில்லையே!?
அது அடுத்த பதிவில்தான்!

Saturday, November 17, 2007

மரம் வளர்ப்போம்...அதைப் பாது'ம்'காப்போம்



மரம் வளர்த்து அதைப் பாதுகாப்பது என்பது இப்படித்தான். பார்த்ததும் இந்த அக்கரை ஈங்கில்லையே என்று மனம் சங்கடப்பட்டது.
மரத்தைச் சுற்றி சுமார் இரண்டடி விட்டத்துக்கு வேர்கள் பரவ சுவாசிக்க இடம் விட்டு அதையும் இரும்பு சல்லடை கொண்டு மூடி மழை நீரோ விடும் நீரோ தாரளமாக உள்ளிறங்க வழி விட்டு
அருமையாக பாதுகாக்கும் மனம், இங்கேயா?......அட!போங்கய்யா! அடிமரத்துக்கு காலடி அளவு இடம் விட்டு மரத்தின் கழுத்தை நெருக்கி சுவாசிக்கவும் உண்ணவும் திக்கி திணறி வளரும்
நம் மரங்கள் என்ன பாவம் செய்தனவோ?

இது சிகாகோ நகரில் பிடித்தது. அந்நகர மேயர் ஒரு பெண். அவருக்கு தான் அழகாயிருப்பதைவிட தன் நகரம் அழகாயிருக்கவேண்டுமென்பதில் மிகுந்த அக்கரை காட்டுவாராம். அது அந்த நகரில் ஒவ்வொரு இடத்திலும் தெரிந்தது. ஏன்...விமானநிலையதிலும் கூட அவர் படம் போட்டு அங்கு வரும் பயணிகளை 'அன்போடு வரவேற்கும்' பானர்களை பார்க்கமுடிந்தது. இங்கோ ஒரு முனிசிபல் கவுன்சிலருக்குக்கூட கட்டவுட்,வாழைமரம்,தோரணம்,கொடி என்று ஊரையே நாறடித்துவிடுவார்கள். கேட்பாரில்லை.

மரம் வளர்ப்ப்து மட்டுமல்ல அதை முறையாக பாதுகாக்கவும் செய்வோம்.

ஆட்டுக்குட்டி..அந்த தங்கக்கட்டி...!



ஆட்டுக்குட்டி அந்த தங்ககட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குதாண்டி ஆட்டுக்குட்டி
உங்க்குத்தாண்டி ஆட்டுக்குட்டி!!!!!!!!

பாண்டிச்சேரி போகும் வழியில் பார்த்தது. போனாப்போகுது ஆட்டுக்குட்டியே தின்னட்டுமென்று
போட்டோ மட்டும் எடுத்து வந்தது.

படத்தின்மேல் க்ளிக்கினால் அரைக்கிலோ வெல்லக்கட்டி ஒரு கிலோவாகத்தெரியும்

Friday, November 16, 2007

இது எனக்கு....அது உனக்கு சேரியா?


யூஎஸ்ஸிலெங்கு போனாலும் தண்ணீர் பாட்டிலோ கைக்குட்டையோ எடுத்து செல்ல தேவையேயில்லை. பெரியவர்களும் சிறியவர்களூம் நீரருந்துமாறு உள்ள இந்த அமைப்பு வசதியாக உள்ளது.மக்களின் தேவையறிந்து எங்கே போனாலும் சுத்தமான கழிவறைகள் அதாவது REST ROOMS தாரளமாக உபயோகிக்க பேப்பர் நப்கின்கள்...என்று எங்கே போவதானாலும் கை வீசிக்கொண்டே போகலாம். வியர்வையும் இல்லை..சோ..நான் கொண்டுபோன ஒரு டஜன் கைக்குட்டைகளையும் புத்தம்புதிதாக அப்படியே திருப்பிக்கொண்டு வந்துவிட்டேன்.
இந்த ஒரு காரணத்துக்காகவே அவ்வூர் எனக்கு பிடித்துப்போயிற்று.

Thursday, November 15, 2007

செல்போனுக்கு ஐஸ் வை!!??



PUT AN 'ICE' CONTACT IN YOUR CELL PHONE IN CASE OF EMERGENCY

ஏவ்வளவு முக்கியமான, அவசியமான அறிவிப்பு இது. ஏதேனும் ஆபத்து அல்லது விபத்து சமயங்களில் பாதிக்கப்பட்டவர் சுயநினைவு இல்லாமலிருந்தால் அருகிலிருப்போர் இந்த ICE CONTACT மூலம் உறவினர்களுக்கு தகவல் அனுப்ப மிகவும் உதவியாயிருக்கும். அதற்குத்தான் செல்போன் வைத்திருப்போர் தங்கள் போனில் ICE..in-case of-emergency என்று யாருக்கு தகவல் அனுப்பணுமோ அவர்கள் எண்களை அதில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

இப்படித்தான் எங்கள் நெருங்கிய உறவினர் பிரயாணத்தின் போது திடீரென மயக்கமாகி விட்டார்.அதற்கு சில வினாடிகள் முன் யாருக்கோ பேசியிருக்கிறார்.உடனிருந்தவர்கள் அவரது செல்போனில் லாஸ்ட் கால் நம்பரைப்பிடித்து தகவல் சொல்லியிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அது அவரது மகனின் எண் தான். உடனேயே அடுத்த ஸ்டேஷனில் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்தான்.
இப்போது நலமாக இருக்கிறார்.

இந்த ஐஸின் அருமை அப்போதுதான் புரிந்தது. எத்தனை பேர் செல்போனில் இந்த ICE CONTACT
உள்ளது? தேவையில்லாத SMS, PHOTOS களைத்தான் ஸ்டோர் பண்ணத்தெரியும். எந்த விஞ்ஞான
கண்டுபிடிப்பிலும் நல்லதும் கெட்டதும் உள்ளது. ஆனால் நம் கண்களில் பளிச்செனத்தெரிவது கெட்டவைகள்தாம். இது போன்ற நல்ல தகவல்களை நாமும் இப்படி கண்ணில் படும்படி விளம்பரம் செய்யலாமே!!

இது நான் சிகாகோ நகர்வலம் வந்தபோது கண்ணில் பட்டதும் க்ளிக்கினேன்.
படத்தின் மேல் க்ளிக்கினால் பெரிதாகத்தெரியும்.

Tuesday, November 13, 2007

சாச்சா நேருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ஆச்சா?


























ரோஜாவின் ராஜாவாகிய, நாம் அன்போடு அழைக்கும் நேரு மாமாவின் பிறந்த தினமான இன்று
அவர் வாழ்த்துக்களோடு அனுப்பிய ரோஜாக்களை 'குட்டீஸ் கார்னர்' சுட்டீஸ்களுக்கும் மற்றும் வலையுலக குட்டீஸ்களுக்கும் சாச்சா நேருவின் சார்பாக வழங்குகிறேன்.

பவன் குட்டி,அபிக்குட்டி, நிலா,பொடியன் இன்னும் எனக்கு அறிமுகமாகாத வலைக் குட்டீஸ்!!!!
என் வீட்டு சுட்டிகளான...ஷன்னு,விக்ரம்,சங்கர்,ஷன்னு,சம்மி,ராஜா,ஷில்பா,ஷ்ரேயா,ஷிவானி,ஸ்ரீநிதி!!!
எல்லோரும் ஓடி வந்து ரோஜாப்பூக்களை அள்ளிச்செல்லுங்கள்!!!!!!!!!!

என்ன?என்ன? மிட்டாயா? என்வீட்டுக்கு துள்ளிவந்து மிட்டாய்களையும் அள்ளிச்செல்லுங்கள்!!!
சரிதானே? குட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

நான் போடாத ரோடு....ஆனால் நான் போன ரோடு--நவம்பர் புகைப்படப்போட்டிக்கு! ---பாகம் 2


சிகாகோ டவுண்ட்வுன் வீதி


இரண்டும் மூன்றும் நம்ம ஈசிஆர் தாங்க!
இரண்டாவது படம் போட்டிக்கு.

Monday, November 12, 2007

நான் போடாத ரோடு....ஆனால் நான் போன ரோடு--நவம்பர் புகைப்படப்போட்டிக்கு!





தலைப்பிலேயே எல்லாம் ஷொல்லி விட்டேன். இந்த சாலைகளில் நீங்களும் போக டோல்கேட் இருக்கிறது. சமத்தாக பணம் கட்டி விட்டு ஷெல்லவும். ஹி..ஹி..!

Wednesday, November 7, 2007

தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!




தீபாவளித் திருநாள் இந்நாள் நன்னாள்...ஒருவரைக் கண்டு ஒருவர் ஆட உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
சிறுவர்கள் வெடிக்கும் வெடியிலும் பூப்பூவாய் சிதறும் மத்தாப்புவிலும் அவர்தம் உள்ளத்து மகிழ்ச்சியைக் காணலாம்



வகைவகையான பலகாரங்கள்...இனிப்பு,காரம்..வீட்டிலேயே செய்து...ஆங்ஆங்..அது அந்தக்காலம்..அது அந்தக்காலம். வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து..டோர்டெலிவரி செய்ய வைத்து சுகமாக சுலபமாக கொண்டாடும் பண்டிகை.



இந்த நந்நாளில் அனைவருக்கும் இனிப்போடு பூங்கொத்து வழங்கி வாழ்த்துகிறேன்...அன்பான
தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...