Saturday, October 24, 2009

மண் வாசனை மணத்தது - சர்வேசன்500 ‘நச்’ சிறுகதைப் போட்டி

’என் கணவர் வாய் திறந்தால் நச்னு அவர் எந்த ஊர்காரர் என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.’ என்று பஸ்ஸில் வரும் போது தன் தோழியுடம் சொல்லிக் கொண்டே வந்தாள் சந்திரா.

’அதெப்படி? அப்ப நீ பேசும் போது மட்டும் கண்டுபிடிக்க மாட்டார்களா?’ மாலதி.

‘ஹூஹும்! நான் கூடிய மட்டும் எந்த வட்டார மொழியும் கலக்காமல் சுத்தமான தமிழில் பேசுவேனாக்கும்!’

‘ஓஹோ! செந்தமிழோ?’

‘அது செந்தமிழும் இல்லை கொச்சைத்தமிழும் இல்லை. வெறும் தமிழ், நல்ல தமிழ்.’

‘எங்கே ஓர் உதாரணம் சொல்லு பாக்கலாம்!’

‘என் கணவர், “இங்ஙன ஒரு பேப்பர் வச்சிருந்தேனே பாத்தியா? என்றால் நான் இங்க ஒரு பேப்பர் வச்சிருந்தேனே பாத்தியா? என்பேன்.
’பையப் போ’ என்றால் நான் மெதுவாப் போ என்பேன்.
‘வாரியல் என்றால் துடப்பம் என்பேன்.
இப்படியே உதாரணங்கள் சொல்லிக்கொண்டே வந்தாள் சந்திரா.

சிறிது நேரத்தில் கண்டக்டர், ‘டிக்கெட்....டிக்கெட்’ என்றவாறே அவர்களை நெருங்கி, ’டிக்கெட்’
என்றார். சரியாக அந்நேரத்தில் சந்திராவின் கண்ணில் தூசி விழுந்து கண்ணை கசக்கிக் கொண்டே இருந்தாள். கண்டக்டர்,’ என்னம்மா ஆச்சு?’ என்று கேட்டார்.


சந்திரா டக்கென்று அவளறியாமல் சொன்னாள், “கண் வலிக்கி!!!”
கண்டக்டர் நச்சென்று கேட்டார், “அம்மா நீங்க திருநெல்வேலியா?



பி.கு.
இக்கதை நச்னு இருந்தால் போட்டிக்கு, இல்லாங்காட்டி ச்சும்மா வாசிக்க. சேரியா?

15 comments:

  1. என்ன போட்டிக்கா? ச்சும்மாவா?
    சொல்லுங்கள் நண்ப நண்பிகளே!!!

    ReplyDelete
  2. :-))))))

    கதை நல்லாயிருக்குது. ஆனா சர்வேசன் போட்டிக்கு அனுப்ப இன்னும் கொஞ்சம் யோசித்து இன்னொரு கதையை எழுதுங்கள் நானானிம்மா..

    தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நீங்க சொல்லுற சுத்தத் தமிழ் பேச்சுத்தான் கேக்க கிடைக்கும். பொதுவான மண்வாசனைக்குரிய தனித்தமிழ் பேச்சு இந்த மாவட்டத்துக்காரர்களிடம் இல்லாதது கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்குது :-)

    ReplyDelete
  3. ப‌ழ‌க்க‌ம் முழுகுமா

    ந‌ல்ல‌ இருக்கிற‌து

    ReplyDelete
  4. சென்ஷி!
    ஏற்கனவே ஒரு கதை அனுப்பியிருக்கிறேனே! அதைப் படித்து பார்த்து சொல்லுங்கள். முதல் வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  5. நகைச்சுவையும் நச்சும் கலந்த நல்ல நச்சுவைக் கதை..

    போட்டிக்கு அனுப்பவேண்டிய முடிவை எப்பொழுதும் உங்கள் கையில் வைத்திருப்பது நல்லது.

    ReplyDelete
  6. திகழ்! பழக்கம் ரத்தத்தில் ஊறியதல்லவா?

    ReplyDelete
  7. வேணாம் போட்டிக்கு வேணாம் - அம்புட்டுத்தேன்

    ReplyDelete
  8. மண் வாசனையை மறக்கமுடியுமா?

    கதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  9. மண்வாசனை கும் என மணக்கிறது
    என்றாலும்..
    ஆவணிப் பெளர்ணமிதான் அதிகமாய்
    ஒளிர்கிறது:)!

    ReplyDelete
  10. வல்லி,
    ஹி..ஹி..ஹி..!

    ReplyDelete
  11. சீனாதானா சொன்னா...இந்த கனாசனா மீறுமா?
    அப்படியே செஞ்சுபுடுதேன்.

    ReplyDelete
  12. கோமதி அரசு,
    மண்வாசனையின் மணம் உங்க வரை வந்துச்ச்சா?

    ReplyDelete
  13. ராமலஷ்மி!
    இது போட்டிப் படியேறுவத்ற்காக இல்லை. ச்சும்மா, மண்வாசனையின் மணம் பரப்ப! சேரியா?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...