Monday, December 27, 2010

பதிவுலகின் சகலகலாவல்லி ராமலக்ஷ்மிக்குப் பிறந்தநாள்

கதை, கட்டுரை, கவிதை, புகைப்படக்கலை, தத்துவம், அறிவியல் போன்ற விஷயங்களால் பதிவுலகின் எட்டு திக்குகளிலும் எதிரொலிக்கும் பெருமை பெற்ற நம்

அன்பு ராமலக்ஷ்மிக்கு இன்று (28-12-) பிறந்தநாள்!!

எங்களுக்கு ஆனந்தம்...பரமானந்தம்!!!


சின்ன வயதினிலேயே பாட்டியானாய்


தம்பி தங்களையும் எங்கள் பிள்ளைகளையும்


கூட்டி வைத்துக் கொண்டு கதைகள பல சொல்வாய்


காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு.


மாலையில் திண்ணையில்


கூடி அமர்ந்து விளையாடுவாய்


அட்லங்காய் புட்லங்காய்


ஆடி வரும் மாதுளங்காய்ன்னு


பாடிப்பாடி மாங்காயத் திருவி

மடையிலே போடச் சொல்வாய்

தேங்காயத் திருவி

தெருவிலே போடச் சொல்வாய்


ஒரு குடம் தண்ணி எடுத்து


ஒரு பூ பூக்கச் சொல்வாய்


கொலைகொலையா முந்திரிக்கான்னு


நரியை சுத்தி வரச் சொல்வாய்


இன்றும் பிள்ளைகள் அவற்றை


நினைத்து நினைத்து மகிழச் செய்திருக்கிறாய்


அந்த நாள் போனதம்மா


ஆனந்தம் போனதம்மா


அந்த நாள் இனி வருமா


ஆனந்த நிலை தருமா


சென்ற நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்


மறுபடி வாராத நாட்கள்


நெஞ்சின் மாறாத நாட்கள்



செல்லமே! இன்று உன் பிறந்தநாள்!!!


நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும்


மனம் நிறை மகிழ்ச்சியும்


பெற்று வாழ்வாங்கு வாழ


அத்தைகளின் வாழ்த்துக்கள்!!!!


மூன்று பதிவர்களின் இளமைக்கால படம்!!!


சித்தப்பாவின் வாழ்த்துக்களும்!!


குடும்பக் கும்மியில் நாலாவது நபர்!!!! இவரும் பதிவரே! யாரென்று கண்டு பிடியுங்கள்!

61 comments:

  1. ஹப்பி பர்த்டே!!!!

    ReplyDelete
  2. ராமலஷ்மிக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அன்றிலிருந்து இன்று வரை என்னை இதே போலவே தாங்கியபடி, தட்டிக் கொடுத்தபடி இருக்கும் உங்கள் இருவருக்கும் என் அன்பான நன்றிகள்:)!

    ReplyDelete
  4. நல்வாழ்த்துகள் ராமலஷ்மி

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அக்கா :)

    ReplyDelete
  7. வாழ்த்த வயதில்லை!!!!!

    எனவே இந்தப் பிறந்த நாள் இனிமையாக அமையவும், இனி வரும் நாட்கள் ஆரோக்கியம் மிகுந்த நாட்களாக இருக்க வேண்டும் என வேண்டி வணங்குகிறேன்!!!

    ReplyDelete
  8. கோமா,
    வாழ்த்துக்கு நன்றி!

    ReplyDelete
  9. ராமலக்ஷ்மி,
    ரொம்ப சந்தோசம்!!

    ReplyDelete
  10. கோவி.கண்ணன்,
    உங்கள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவிக்கிறேன். நன்றி!!

    ReplyDelete
  11. நசரேயன்,

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  12. ஈரோடு கதிர்,

    வாழ்த்த வயது தேவையில்லை. ஆசிர்வதிக்கத்தான் வயது தேவை!!
    உங்கள் அன்பான ‘வாழ்த்துக்களையும்’ வணக்கத்தையும் ராமலக்ஷ்மிக்கு தெரிவிக்கிறேன். சேரியா?

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராமலஷ்மி..

    ReplyDelete
  14. அன்பு ராமலக்ஷ்மிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!.

    நன்றாக சொன்னீர்கள்! ராமலக்ஷ்மி சகலகலாவல்லி தான்.

    வாழ்க வலமுடன்!

    ReplyDelete
  15. மூன்று பதிவர்கள்: கோமா,ராமலக்ஷ்மி,நானானியா?

    சரியா?

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  16. மூணு சொந்தக்காரங்க பதிவர்களா? சொல்லவே இல்லை? ஆமா, மூணாவது ஆரு?

    பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா.

    ReplyDelete
  17. அன்பு அத்தை நானானியின் அன்புச் செல்வம் ராமல்க்ஷ்மியின் பிறந்த நாளுக்கு வலையுலக அத்தைகள் நாங்கள் இருக்கிறோம் எங்கள் வாழ்த்துகளையும் பிடியுங்கள் ராமலக்ஷ்மி. குன்றா வளத்தோடு,ஆரோக்கியத்தோடும் சகல சௌபாக்கியங்களுடன்வளர வாத்துகள் மா.
    டான்கீஸ் நானானி.

    ReplyDelete
  18. நன்றிகள் கோவி.கண்ணன்!

    நன்றி நசரேயன்:)!

    நன்றி கதிர்:)!

    நன்றி தென்றல்:)!

    நன்றி சாரல்:)!

    மிக்க நன்றி கோமதிம்மா:)!

    ReplyDelete
  19. rathnavel.natarajan@gmail.comDecember 28, 2010 at 2:39 AM

    Happy Birthday.

    ReplyDelete
  20. புதுகைத்தென்றல்,

    Thank you!!

    ReplyDelete
  21. அமைதிச்சாரல்,

    வாழ்த்துக்கு ராஷ்மி சார்பில் நன்றி!

    ReplyDelete
  22. கோமதி அரசு,

    நன்றி!!

    ReplyDelete
  23. கோமதி அரசு,

    மூன்று பதிவர்கள்...? ரொம்ப சரி!!!

    ReplyDelete
  24. ஹூஸைன்னம்மா,

    இது வரை கண்டுபிடிக்கவில்லையா? எங்கள் பின்னோட்டங்களைப் படித்தாலே தெரிந்திருக்குமே!!!

    மூணாவது? கோமதி அரசு கண்டுபிடிச்சிட்டாங்க!

    இன்னும் நாலாவது ஒருவர் இருக்கிறார்...றார்..றார்!!!

    ReplyDelete
  25. வல்லி,

    வாருங்கள்....அத்தைகள் பட்டியலில் சேருங்கள்!!!
    ராமலக்ஷ்மி!!!எத்தனை எத்தனை அத்தைகள் கிடைத்திருக்கிறார்கள்!!!!
    ஹை....யோ!!!

    ReplyDelete
  26. ராமலஷ்மியின் பிறந்தநாள் அன்று வலைப்பூ உலகில் குடும்பமே கூடி கும்மி அடிக்கும் ரகசியம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.[ஹி ஹி குடும்ப அரசியல் மாதிரி குடும்ப பிளாக் ]

    ஆமா அந்த நாலாவது நபர் ?அவரையும் அழைத்து வாருங்கள்

    ReplyDelete
  27. பழைய புகைப்படங்கள் அழகா இருக்கிறது.. பகிர்ந்திக்கிட்டதுக்கு நன்றி..சின்னவயசுபாட்டிக்கு வாழ்த்துக்கள்..:)

    ReplyDelete
  28. கோமா,
    //ஆமா அந்த நாலாவது நபர் ?அவரையும் அழைத்து வாருங்கள்//

    நாலாவது நபரையும் அழைத்து வந்துவிட்டேன். குடும்பமே வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

    ReplyDelete
  29. பதிவில் பாருங்கள்!!!!

    ReplyDelete
  30. முத்துலெட்சுமி,

    பாட்டியிடம் சொல்லிடுறேன்.

    ReplyDelete
  31. மதிப்பிற்குரிய... அவங்களுக்கு என் வாழ்த்து.....

    உங்களுக்கு என் நன்றி.

    ReplyDelete
  32. Many many many many Happy returns of the DAY!!!!!!!!

    ReplyDelete
  33. Many many many many Happy returns of the DAY!!!!!!!!

    ReplyDelete
  34. அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    நாலாவது ச.தே ?

    ReplyDelete
  35. சி.கருணாகரசு,

    மதிப்பிற்குறியவர்க்கு வாழ்த்துக்கள் அனுப்பிவிட்டேன்.

    உங்கள் நன்றியையும் வாங்கிக்கொண்டேன். சேரியா?

    ReplyDelete
  36. துள்சி,

    thank thank thank you!!!

    ReplyDelete
  37. தமிழ்பிரியன்,

    //நாலாவது ச.தே ?//

    அதே அதே!!!

    ReplyDelete
  38. //goma said...

    ராமலஷ்மியின் பிறந்தநாள் அன்று வலைப்பூ உலகில் குடும்பமே கூடி கும்மி அடிக்கும் ரகசியம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.//

    அடடே! #இத்தினி நாளும் தெரியவே இல்லை

    குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த வணக்கங்கள் :)

    ReplyDelete
  39. என்னது, ஒரே குடும்பத்துல நாலு பதிவர்களா? இதுவும் (பதிவு)அரசியலோ? :-)))))

    ஆமா, ச.தே.ன்னா யாருங்க? சகாதேவனா? :-))) என்னைப் போலவங்களுக்கும் புரியற மாதிரி சொல்லக்கூடாதா?

    ReplyDelete
  40. ஆயில்யன்,
    உங்கள் மகிழ்ச்சி கலந்த வணக்கங்களுக்கு எங்கள் அன்பு கலந்த வந்தனங்கள்....நன்றிகள்!!!

    ReplyDelete
  41. ரா.ல.அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  42. ஹுஸைனம்மா!!

    கலக்கிட்டோம்ல?

    தமிழ்பிரியன் சொன்னது போல் ச.தே..சகாதேவன்தான். அவரது பதிவு

    //http://vedivaal.blogspot.com/2010/12/up.html//

    ReplyDelete
  43. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  44. பாலராஜன்கீதா,

    வாழ்த்துக்கு நன்றி!

    ReplyDelete
  45. காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
    மிக்க நன்றி!

    ReplyDelete
  46. ஹுசைனம்மா, தமிழ்பிரியா,
    ச..ந்..தே..கமே வேண்டாம். அந்த நாலாவது நபர் 'ச.தே' நானே.
    உங்களுடன் சேர்ந்து சித்தப்பா நானும் என் மகளை வாழ்த்துகிறேன்.

    சகாதேவன்.

    ReplyDelete
  47. சித்தப்பாவின் வாழ்த்துக்களுக்கு மகளின் நன்றிகள்:)!

    -------

    //அந்த நாள் இனி வருமா
    ஆனந்த நிலை தருமா
    சென்ற நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்
    மறுபடி வாராத நாட்கள்
    நெஞ்சின் மாறாத நாட்கள்//

    எனக்கும் அப்படியே.

    இனிமையான மலரும் நினைவுகளை எழுப்பி, அந்த பருவத்துக்கே அழைத்துச் சென்று விட்ட வாழ்த்துக் கவிதைக்கும், படங்களுக்கும் நன்றிகள் நானானி (அத்தை) :)!

    ReplyDelete
  48. நன்றிகள் கோவி. கண்ணன்:)!

    நன்றி நசரேயன்:)!

    நன்றி கதிர்:)!

    நன்றி தென்றல்:)!

    நன்றி சாரல்:)!

    நன்றிகள் கோமதிம்மா:)!

    நன்றி ஹுஸைனம்மா:)! சந்தேகம் தீர்ந்ததா:)?

    அத்தையாகி ஆசி வழங்கியிருப்பதற்கு நன்றிகள் வல்லிம்மா:)!

    நன்றிகள் ரத்னவேல்:)!

    சின்ன வயசுப் பாட்டியின் நன்றிகள் முத்துலெட்சுமி:)!

    ReplyDelete
  49. மிக்க நன்றிங்க கருணாகரசு:)!

    நன்றி துளசி மேடம்:)!

    சரியான விடை. நன்றி தமிழ் பிரியன்:)!

    @ ஆயில்யன்!
    //அடடே! #இத்தினி நாளும் தெரியவே இல்லை //

    ’நாளும்’ என சொல்லாதீர்கள்! வருடங்கள்:))!!!

    அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்? என் பிறந்ததினத்தன்று ஒன்றுகூடி வாழ்த்துகையில் கரை உடைத்து வந்து விட்டது உண்மை:)!

    நன்றிகள் பாலராஜன்கீதா! நலமா:)?

    நன்றிங்க காஞ்சனா மேடம்:)!

    ReplyDelete
  50. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகலகலாவல்லி ராமலஷ்மிக்கு.

    ReplyDelete
  51. சகாதேவன் அவர்கள் முகத்தை காமிரா மறைத்ததால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

    ReplyDelete
  52. மற்றொரு குடும்ப கும்மி அங்கத்தினர்
    http://akshayapaatthiram.blogspot.com/2008/09/protein-rich-salad.html

    இன்னொரு ராமலஷ்மி
    தங்கையை வாழ்த்துகிறார்.

    ReplyDelete
  53. அன்பின் நானானி - ராமலக்ஷ்மிக்கு வாழ்த்து அன்றே பஸ்ஸில் சொல்லி விட்டேன். இவ்விடுகை காண இவ்வளவு நாளாகி விட்டது. பதிவர் நாலவருமே எனக்கு அறிமுகமானவர்கள்தான். எனது அக்காக்கள் அண்ணன் மற்றும் அண்ணன் மகள் - ஆகா ஆகா - நாலாவது நபரை நான் எளிதில் கண்டு பிடித்து விட்டேன். ஆனால் தமிழ்பிரியன் முந்தி விட்டார். வாழ்க !

    ReplyDelete
  54. //இன்னும் நாலாவது ஒருவர் இருக்கிறார்...றார்..றார்!!!//

    இன்னிம்...இன்னும் ஐந்தாவது பதிவர், எனக்கு ‘நானானி’ என்று பேரிட்டவர் ஒருவரும் இருக்கிறார்...றார்..றார்!
    அவர் யாரென்று கண்டு பிடியுங்கள்!!!

    ReplyDelete
  55. அன்பின் நானானி

    அருமை மாப்பிள்ளை நெல்லை சிவா - சந்தித்து உரையாடினேனே - அவரா ?

    ReplyDelete
  56. அன்பு சீனா!

    அவரேதான்!!

    ReplyDelete
  57. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  58. அருமை நானானி மேம். :)

    ராமலெக்ஷ்மிக்கு வலையுலகமே வாழ்த்து சொல்லி இருக்கு. என்னுடைய வாழ்த்துகளும் :)

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...