Saturday, December 4, 2010

அடிச்சுது பிசிறு போயே போச்சு உசிறு

வளவளவென்று பேசப் பிடிக்காது
ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே பேச்சு

சத்தமாகவும் பேசப் பிடிக்காது
எதிராளி எவ்வளவு தூரத்திலோ
அந்தளவேதான் வால்யூம்

பாடப் பிடிக்கும் தனிமையிலே, பாடும் போது
அத்தனை பாடகர்களும் கண்முன்னே

பின்னாளில் பேசு முன்னே பதில் வந்துவிடும்
ஆரம்பித்த வாக்கியம் முடிக்கவிடாது

பிள்ளைகள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தால்
கத்திக் கூப்பிட விருப்பமில்லை

கைகளால் ரெண்டு தட்டு
ஓடி வந்துவிட வேண்டும், அம்மா அழைக்கிறாளென்று

ஓர் ஆர்வமான நாளில் பாட முனைந்தால்..
அடிச்சுது பிசிறு
போயே போச்சு உசிறு

ஐயோ!! எங்கே என் குரல்?????

13 comments:

  1. சுக்காப்பி குடிங்க, சரியாயிடும் :-))

    ReplyDelete
  2. தொண்டையில் கிச் கிச்சோ!:-)

    கவிதை உண்மையில் அருமை!

    ReplyDelete
  3. எங்க அக்கா கூட இப்படித்தான்.
    .இதே தேடலை .உரைநடையா சொல்லிக் கேட்டிருக்கிறேன்...

    ReplyDelete
  4. \\கைகளால் ரெண்டு தட்டு
    ஓடி வந்துவிட வேண்டும், அம்மா அழைக்கிறாளென்று//
    ஏ அப்பா :)

    ReplyDelete
  5. அமைதிச்சாரல்,
    கடப்பாரையையே முழுங்கியாச்சு.....சுக்காப்பி எம்மாத்திரம்!!!

    ReplyDelete
  6. எஸ்.கே,

    //தொண்டையில் கிச் கிச்சோ!:-)//

    விக்ஸ் மாத்திரை சாப்பிடவா?

    ReplyDelete
  7. கோமா,
    இது கவித...தங்காச்சி...கவித!!!

    ReplyDelete
  8. கயல்,
    பின்னாளில் அவர்கள் என்னைக் கூப்பிட இதே ஸ்டைலைக் கடைப்பிடித்தார்கள். என்னாத்த சொல்ல!!

    ReplyDelete
  9. அருமையான குரல்வளம், பாட்டுப்பயிற்சி எல்லாம் இருந்தும் என் பாட்டியால் பாடக்கூடாது என கட்டளைப்போடப்பட்டு தன் குரலை மறைத்த அம்மாவின் நினைவு வருது நானானி.

    ReplyDelete
  10. புதுகைதென்றல்,

    ரொம்ப வருத்தமாய்தானிருக்கு. 40,50,60 களில் வாழ்ந்த பல பெண்களின் நிலை இதுதான். தங்களது தனித்துவத்தை மூடி மறைத்தே வாழும் கட்டயத்தில்
    இருந்துவிட்டார்கள்.

    இதை ஒரு சிறுகதையாகவே மூன்று பாகங்களாக பதிவிட்டிருக்கிறேன்.
    சுட்டி இதோ,
    http://9-west.blogspot.com/2009/07/blog-post.html

    ReplyDelete
  11. //பாடப் பிடிக்கும் தனிமையிலே, பாடும் போது
    அத்தனை பாடகர்களும் கண்முன்னே//
    என்ன சொன்னார்கள்?
    சகாதேவன்

    ReplyDelete
  12. //பாடப் பிடிக்கும் தனிமையிலே, பாடும் போது அத்தனை பாடகர்களும் கண்முன்னே//
    என்ன சொன்னார்கள்?

    சகாதேவன்

    ReplyDelete
  13. சகாதேவன்,

    ‘கண் முன்னே’ என்றால், அவர்களை கண் முன் நிறுத்தி அவர்களைப் போல் பாட முயல்வேன் என்று அர்த்தம். பாடியும் இருக்கிறேன். உங்களுக்குத் தெரியாதா?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...