
என்ன..? சுண்டக்காய் என்றதும் முகம் சுண்டிப்போச்சு? அது உடம்புக்கு...பரவைமுனிம்மா பாஷையில்'மேலுக்கு நல்லது'. படத்தில் பார்ப்பது பச்சை பட்டாணியில்லை. அவ்வளவும் பச்சைசுண்டக்காய்!!!
சுண்டக்காயோடு கூட கத்திரிக்காய்,முருங்கக்காய் சேர்த்து கொழம்பு வைத்தால் மணம் ஊரைக்கூட்டும்.
பச்சை சுண்டக்காய் வாங்கி காம்பு கிள்ளிவிட்டு லேசாக அடித்து வாய் பிளந்தாற்போல் உடைக்கவேண்டும். பிறகு தண்ணீரில் அலசினால் உள்ளிருக்கும் விதைகள் ஓரளவு வெளியேறிவிடும். காயின் கசப்பும் சிறிது குறையும். கசப்பு கொஞ்சம் வேண்டும்.
கத்தரிக்காய்,முருங்கக்காய் இரண்டையும் நறுக்கிக்கொள்ளவேண்டும்.
மண் பானை அடுப்பிலேற்றி...ஆம் மண் பானைதான். அதில் சமைக்கும் ருசியும் மணமும் தனிதான்!
எண்ணை காயவைத்து காய்ந்ததும் அதில் சிறிது வெந்தயம் பொரித்து காய்களை கறிவேப்பிலையோடு சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் எலுமிச்சை அளவு புளி கரைத்து அதோடு வத்தல் கொழம்புப்பொடி நாலு அல்லது ஐந்து கரண்டி, மஞ்சள் பொடி இரண்டு கரண்டி சேர்த்து நன்கு கலக்கி
காகளோடு சேர்த்து வேக விடவும். கொதிக்கும்போது தேவையான உப்பு மற்றும் சாம்பார் வெங்காயம்,ஜீரகம்,கொத்தமல்லி,கறிவேப்பிலை இவெற்றை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொழம்பில் சேர்க்கவும்.
காய் நன்றாக வெந்து கொழம்பும் தேவையான அளவு கொதித்ததும் கடுகு உ.பருப்பு கறிவேப்பிலை தாளித்து பொடியாக அரிந்த வெந்தயக்கீரை தூவி இறக்கவும்.
சூடான சாதத்தில் நெய்யூற்றி அதில் இந்தக் கொழம்பையும் ஊற்றி கொழப்பி அடித்தால்...!
அதை நீங்கள்தான் செய்து பார்த்து சொல்ல வேண்டும்.
ஆங்! வத்தக்கொழம்புப்பொடி எப்படி செய்வது என்று சொல்லவில்லையே!?
அது அடுத்த பதிவில்தான்!
முகம் சுண்டுச்சா? மலர்ந்துச்சா?
ReplyDeleteஎன்னாங்க, வெரைட்டியா எழுதித் தள்றீங்க, நாக்கு சப்பு கொட்டுது..ம்..ம்..சாப்பிட்டுட்டு வந்து சொல்றேன்..
ReplyDeleteஅனானிக்கு வந்தனம்! கட்டாயம் சொல்லுங்கள்..அனானி!
ReplyDeleteபேசாம நீங்களே சமைச்சுச் சாப்பிட்டுப்பார்த்துச் சொல்லுங்க.
ReplyDeleteஇங்கே இதெல்லாம் 'நோ'
சுண்டைக்காய்ன்னு பேப்பரில் எழுதிப்போட்டுக் கொழம்பு வச்சுப் பார்க்கட்டுமா? :-))))
துள்சி!!
ReplyDeleteநான் வழக்கமாக சமைப்பதால்தான் எல்லோருக்கும் சொன்னேன்.
ஏன் குழம்பு என்றும் பேப்பரில் எழுதி
கொழம்பு வெச்சுப் பாக்கலாமே!!ஹி..ஹி..!
பரவை முனியம்மா மாதிரி ஒரு பாட்டு எடுத்து விட வேண்டாமா?
ReplyDeleteசுண்டைக்கா போட்டு வச்சு
சுண்டச் சுண்ட குழம்பு வச்சேன்...
சுண்டு விராலாலே தொட்டாலே
சுண்டி சுண்டி இழுக்குதையா...
கண்டும் காணாம போன மச்சான்
வாசனை புடிச்சு
வந்தான்யா உருண்டு உருண்டு
தானானே தானானே தந்தானே ....ஏ ஏ ஏ
எசப் பாட்டுக்கு எதிர்பாட்டு வேணாமா?கோமா?
ReplyDeleteவாசம் புடிச்சு வந்த மச்சான்
வழிச்சு வழிச்சு தின்னானே
சுண்டக் கொழம்பு வெச்ச கைக்கு
கோலார் சுரங்கமே கொண்டு தருவான்
என்றிருந்தேன்
கோலார் சுரங்கமே நீதானே தங்கமே!என்று
சுண்டிவிட்டுப் போனானே கன்னத்த
ஏங் கன்னத்த
இதுக்கு நா சொல்லுறது என்னாத்த?